இராமநாதபுரம் ஓம்சக்தி நகர் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் இராமநாதபுரம் சைல்டு லைன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். சைல்டு லைன் இயக்குநர் கருப்பசாமி பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி(மண்டபம்), இராமநாதபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். ராபர்ட் ஜெயராஜ், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், கிராம சுகாதார செவிலியர் குரு நாகராணி, ஊராட்சி செயலர் நாகேந்திரன், அங்கன்வாடி பணியாளர் எஸ்.மகேஷ் மலர் மரக்கன்றுகள் நட்டனர் . கலந்து கொண்டனர். சைல்டுலைன் பணியாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.