இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் விவசாய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Category:
மாவட்ட செய்திகள்
4-ம் கட்ட தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குப்பதிவு..
by Askar
written by Askar
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.மாலை 5 மணி நேர நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.ஆந்திரா- 68.04 சதவீதம், பீகார்- 54.14 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 35.75 சதவீதம், ஜார்கண்ட் 63.14 சதவீதம், மத்திய பிரதேசம் 68.01 சதவீதம், மகாராஷ்டிரா 52.49 சதவீதம், ஒடிசா 62.96 சதவீதம், தெலங்கானா61.16 சதவீதம், உத்தர பிரதசேம் 56.35 சதவீதம், மேற்குவங்கம் 75.66 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.தொடர்ந்து, ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மணி நேர நிலவரப்படி 67.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்..
by Askar
written by Askar
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்..
தமிழ்நாடு கவர்னர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊட்டியை சுற்றிப் பார்க்க ‘நூறு ரூபாய்’ போதும்! போக்குவரத்து கழகத்தின் சூப்பர் திட்டம்..
by Askar
written by Askar
ஊட்டியை சுற்றிப் பார்க்க ‘நூறு ரூபாய்’ போதும்! போக்குவரத்து கழகத்தின் சூப்பர் திட்டம்..
ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது.
கோடைக்காலம் தொடங்கினால், ஊட்டியைச் சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்துவிடுவது வழக்கம். ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நீலகிரி மண்டல வணிக மேலாளர் பிரகாஷ் கூறும்போது,
“ஊட்டிக்குச் சுற்றுலா வரும் பயணிகள் ‘பாதுகாப்புடன் அதே சமயம், குறைந்தச் செலவில் ஊட்டியைச் சுற்றிப் பார்க்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நீலகிரி மண்டலம், இந்தத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தன்படி, இந்தச் சுற்றுப் பேருந்துகளானது மத்தியப் பேருந்து நிலையத்தில் தொடங்கி தண்டர்வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டீ மீயூசியம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களைக் கவர் செய்கின்றது.
இந்தச் சுற்றுப் பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் ஏறி, 100 ரூபாய் கொடுத்து நீங்கள் பயண அட்டை ஒன்றை வாங்கிக் கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நாளில் பயண அட்டை எடுக்குறீர்களோ, அந்த தேதியில் பயண அட்டையில், ‘டிக்’ அடித்துத் தருவார்கள்.
நீங்கள் அந்த டிக்கெட்டை வைத்து, அந்த நாள் முழுவதும் ஊட்டியின் முக்கியச் சுற்றுலாத் தலங்களான தண்டர் வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டீ மீயூசியம், ரோஜா பூங்கா ஆகியவற்றை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சுற்றிப் பார்க்கலாம். அதிலும் சிறுவர்களாக இருந்தால் கட்டணம் வெறும் 50 ரூபாய் தான். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.
பயணிகள் தங்கள் விருப்பப்படி, ஒரு இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம். பிறகு அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தால், முதல் சுற்றுப்பேருந்தில் எடுத்த பயண அட்டையைக் காட்டி, மற்ற சுற்றுப் பேருந்துகளில் பயணிக்கலாம்.
ஆனால், இந்த பயண அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். எனவே, மேற்சொன்ன இடங்கள் முழுவதையும் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் சுற்றுலாப் பயணிகள், அதற்கு ஏற்ப தங்களது திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டமானது ஏப்ரல் பாதியில் தொடங்கப்பட்டது. பெரும்பாலும் ஜூன் 10-ம் தேதி வரை நீடிக்கும்.” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தஞ்சாவூர் ராஜப்பா நகர் 1ஆம் தெரு அலுவலகத்தில் சத்யா நடை பயிற்சி சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கௌரவ தலைவர் செல்வம் தலைமை தாங்கினார், தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்பு உரை ஆற்றினார் .துணைத் தலைவர்கள் கண்ணாடி குமார், லயன் ஜெயபால் ,ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் ,ராஜசேகரன், முரளி, சுப்பிரமணியன், சுகுமார், நாகராஜன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .மாவட்ட பொருளாளர் பார்த்தசாரதி நன்றியுரை கூறினார் .கூட்டத்தில் சத்தியா அரங்கத்திற்கு வருபவர்கள் இரண்டு ,நான்கு சக்கர வாகனங்களை அதற்கு உரிய அதற்குரிய இடத்தில் நிறுத்த வேண்டும் ,சத்யா விளையாட்டரங்கில் உள்ளே ஆயிரம் மரக்கன்றுகள் இந்த மாதத்தில் வைப்பது எனவும், அது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகளை சந்திப்பது, முன் நுழைவு வாயிலில் அவசர ஏற்பாடுகளாக முதலுதவி பெட்டி வைப்பது ,முன் நுழைவுவாயிலில் நடை பயிற்சி வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைப்பது, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 8 கிலோ மீட்டர் நடை பயிற்சியில் அனைத்து நடைபயிற்சியாளரும் மாதம் ஒருமுறை கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமரா வைப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திப்பது, நடைபயிற்சியாளர் சங்கத்தின் பெயர் பலகை வைத்து தினமும் ஒரு திருக்குறள் எழுதுவது, என மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி சுமையா பானு, தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..
by Askar
written by Askar
பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானு ஒரு கண் பார்வை கொண்டவர், மேலும் கை விரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு அமையப்பெற்றவர். தன்னம்பிக்கை மிக்க மாணவியான சுமையா பானு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது உதவியாளர் இன்றி தானே தேர்வை எழுதினார். தேர்வில் வெற்றி பெற்று 540 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் 96, ஆங்கிலம் 59, புள்ளியல் 98, வரலாறு 94 , பொருளியல் 99, அரசியல் அறிவியல் 94 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவியைப் பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ளார் சுமையா பானு. தற்போது வெளிவந்த தேர்வு முடிவில் சட்டப் பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்று மாணவி சுமையா பானு தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு பள்ளியில் பயின்ற சுமையா பானுவிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி ஆசிரியர் சுகப்பிரியா தனிக்கவனம் செலுத்தி அளித்த பயிற்சியின் காரணமாக சுமையா பானு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானுவிற்கு தேர்வுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, தேர்வுக்கு தயாராகும் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உயரிய அரசு பதவிக்கு செல்வேன் என மாணவி சுமையா பானு தெரிவித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்று சாதித்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவி சுமையா பானுவிற்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் படிப்பு செலவுக்கான உதவிகளை வழங்க பழனியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். உடலில் உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் போராடி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எனது கையை உடைத்தது இவர் தான்:கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: கூச்சலிட்ட சவுக்கு சங்கர்..
by Askar
written by Askar
எனது கையை உடைத்தது இவர் தான்: கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: கூச்சலிட்ட சவுக்கு சங்கர்..
பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய டி யூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னை காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 6-ம் தேதி மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கிற்கான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்கள்ள லேசான எலும்புமுறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவர்கள் மாவு கட்டு போட பரிந்துரை செய்தனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போடப்பட்டது.
அங்கிருந்து வெளியே அழைத்து வரும் போது, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் தன் கையை உடைத்ததாகவும், கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்தார். பின்னர் காவல் துறையினர் சவுக்கு சங்கரை பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் நேற்று 12.05.2024 மாலை 6 மணி அளவில் KRPA club தலைவர் நைனா முகமது லாபிக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வருகை தந்த சச்சின் சுரேஷ் RRPC President, கணேஷ் ஹேமா THPA Club Thanjavur, கிருஷ்ணகுமார் THPA PresidKilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் நேற்று 12.05.2024 மாலை 6 மணி அளவில் KRPA club நைனா முகமது லாபிக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சச்சின் சுரேஷ் RRPC President, கணேஷ் ஹேமா THPA Club Thanjavur, கிருஷ்ணகுமார் THPA President, மணிகண்டன் mithran loft THPA, கார்த்தி Secretary THPA,ரூபஸ் RPC Secretary, ஆனந்த மோகன் CRHC President, ஜெகதீசன் CRHC,பகுருதீன் (HHH), சப்ருதீன், இபுனு, ஜகுபர், பஷீர், அஜீஸ், கலில், சையது(KPTC), நைனாம்சா, ஹிபாஸ் (THPC), அபு அருமான் (PRPS), தமிமுல் அன்சாரி (PRPS], இம்தியாஸ் (DPC) ஆகியோர் கலந்து கொண்டனர்.
புறா பந்தய போட்டி தஞ்சாவூர் முதல் கரீம் நகர் வரை சுமார் 170 கிலோ மீட்டர் முதல் 1030 கிலோமீட்டர் வரை 6 போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளருக்கும் பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல் overall champion விருதை Ali red giant loft உரிமையாளர் அலி வெற்றி பெற்ற அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டு சிறப்பு பரிசாக சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.
இந்த பரிசளிப்பு விழாவிற்கு ஒருங்கிணைந்து அனைத்தையும் ஏற்பாடுகளையும் செய்து தந்த இலாஹி, சேகு , லாபிக், யாசர், ரிசால், அபு, சேக் கலிஃபா , ஷஃபான், சித்திக் நஸிம், மரைக்கா, தெளஃப்பிக், மூஹ்சின் மற்றும் KRPA members அனைவருக்கும் கிளப் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பான முறையில் முடித்து தந்த கமிட்டிக்கும் மற்றும் கன்வயர் ஆகியோருக்கும் கிளப் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் கிளப்பின் அழைப்பை ஏற்று வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள், புறா கலைஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் KRPA கமிட்டியின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கப்பட்டது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதலியார்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பங்கேற்பு..
written by Abubakker Sithik
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் பங்கேற்பு..
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி பகுதியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் கலந்து கொண்டார். தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. காந்தி நகரில் உள்ள, பக்கீர் மைதீன் என்பவரின் டீக்கடையிலும், இந்திரா நகரில் உள்ள, தமீம் அன்சாரி என்பவரின் செப்பல் கடையிலும், இரண்டு நாட்கள் கழித்து திருமலையப்பபுரத்தில் உள்ள இப்ராஹிம் என்பவரின் பேன்ஸி கடையிலும், தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், ரவணசமுத்திரம் விலக்கு பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, கேமராக்கள் பொறுத்தப்பட்டன.
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு, சங்க செயலாளர் நவாஸ்கான் முன்னிலை வகித்தார், பொருளாளர் பாக்யராஜ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். துணைச் செயலாளர் மணிகண்ட ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கடையம் காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன், சங்க உறுப்பினர்கள் பிச்சையா, காதர் மைதீன், முகைதீன் பிச்சை, காமராஜ், தங்கையா, தமீம் அன்சாரி, குமார், காலித், காதர்மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காவல்துறையினரும், அப்பகுதி மக்களும், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கத்தின் இச்செயலை பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு; காவல்துறையினர் பங்கேற்பு..
தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் வருகின்ற 01.07.2024 அன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலை மடக்கி பிடித்த பழனி நகர காவல்துறையினர்..
by Askar
written by Askar
கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலை மடக்கி பிடித்த பழனி நகர காவல்துறையினர்..
பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் மற்றும் கைபேசியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட நபர் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து நகர காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அறிவுரையின்படி சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் சண்முகநதி பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும்படியாக வந்த 2 கார்களையும் நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் இருந்து கத்தி பணம் போன்ற பொருள்களை கிடைத்ததை தொடர்ந்து அதில் இருந்த 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நபர்களிடம் இருந்து 2 கைபேசி மகேந்திரா xuv கார் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விறுவிறுப்பாக தொடங்கியது 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு..
95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.
மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.
ஆந்திரத்தில் 25, தெலங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, பிகாரில் 5, ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் தலா 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் தொகுதிக்கு இன்றும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“கீழை நியூஸ்” ஆரூடம் பலித்தது! சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..
by Askar
written by Askar
சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! குண்டாஸ் போடப்படுமா? என தலைப்பிட்டு கடந்த 8 ம் தேதி செய்திகள் வெளயிட்டு இருந்தோம், இன்று அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்டம் பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் (மே 10) பதிவு செய்த நிலையில், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த ஆவணங்களை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
அவதூறு வழக்கில் யூ-டியூபா் சவுக்கு சங்கரை நேர்காணல் செய்து தனது யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சியிலும் பெண் போலீஸாா் புகார் அளித்திருந்த நிலையில், சவுக்கு சங்கரைத் தொடா்ந்து யூ-டியூபா் பெலிக்ஸ் ஜெரால்டும் நேற்று (மே 11) கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இனி யூடியூப்பில் கடுமையான பிரச்னை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இனிமேல் பேச மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் ! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரத்தில் இருந்து பாரதி நகர் பட்டணம் காத்தான் ராம்நகர் குயவன்குடி சாத்தான்குளம் வாலாந்தரவை வழுதூர் விளக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காவேரி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது இதனை தொடர்ந்து உடைச்சியார்வலசை அருகே அய்யன் கோவில் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பணி நடைபெற்ற பின்பு முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சிரமப்படும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில் இதுவரை 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அய்யன் கோவில் பேருந்து நிலையம் முக்கியமான இடமாகும் இந்தப் பகுதியின் வழியாக தான் பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது இதை கருத்தில் கொள்ளாமல் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அலட்சியப் போக்கால் வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வருகிறது. உயிர் பலி ஏற்படாமல் இருக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உள்ள பள்ளத்தை சரி செய்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன்!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் நாகூர்கனி(99). இவர் முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்(ஐஎன்ஏ). நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏ}வில் சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். பின்னர் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். இவர்ருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் அளித்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன், தலைமையில் சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து தியாகியின் உடல் பெருநாழி முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மண்டல துணை வட்டாட்சியர் சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன்.., வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் ராமலெட்சுமி, கிராம உதவியாளர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர். மேலும்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பூர் அருகே கள்ளக் காதலியை கொலை செய்து உடலை வைத்து காரில் ரவுண்ட் அடித்த கள்ளக் காதலன்: கொடை ரோடு அருகே ரவுண்டு கட்டி தூக்கிய போலீசார்..
by Askar
written by Askar
திருப்பூர் அருகே கள்ளக் காதலியை கொலை செய்து உடலை வைத்து காரில் ரவுண்ட் அடித்த கள்ளக் காதலன்: கொடை ரோடு அருகே ரவுண்டு கட்டி தூக்கிய போலீசார்..
திருப்பூர் அருகே பல்லடத்தில் கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை, கொடைரோடு அருகே உடலை புதைக்க முற்பட்டபோது இரண்டு வாலிபர்கள் பிடிபட்டனர். உடலை ஏற்றி வந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் மில்லில் பணியாற்றி வந்தவர் அருண் ஸ்டாலின் விஜய் (32) இவரது மனைவி பிரின்சி (27) இவர்களுக்கு 6 வயது மகன் உள்ளனர். இந்நிலையில் இதே கம்பெனியில் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தை சேர்ந்த திவாகர் (24) இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், ஒரு பையன் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பல்லடத்தில் தங்கி பிரின்சியுடன் ஒரே கம்பெனியில் பணியாற்றி வந்த போது, திவாகருக்கும் பிரின்சிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இதில் கள்ளக்காதலன் திவாகரிடம் கள்ளக்காதலி பிரின்சி, பணம், நகை கேட்டு தொல்லை மற்றும் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த திவாகர் பிரின்ஸ்சியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தில் உள்ள தனது உறவினர் இந்திரகுமார் (31) என்பவரை பல்லடத்திற்கு ஆம்னி கார் எடுத்து வரச்சொல்லி கூறியுள்ளார். பல்லடத்திற்கு காரில் வந்த உறவினர் இந்திரகுமார் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் பல்லடத்தில் ஒரு இடத்தில் கள்ளக்காதலி பிரின்சிக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பிரின்சியை உனக்கு கிப்ட் பரிசு பொருள்கள் வைத்திருப்பதாகவும், நீ கண்ணை மூடிக்கொள். அந்த பொருளை சஸ்பென்சாக உனக்கு கொடுக்கிறோம் எனக்கூறியுள்ளனர். மகிழ்ச்சியில் கள்ளக்காதலனிடமிருந்து பரிசு பொருளை பெறுவதற்காக, பிரின்சி கண்ணை மூடிய போது, அவரை காரில் வைத்து லைலான் கயிரால் கழுத்தை நெறித்து கொலை செய்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்ட பிரின்சி உடலை காருக்குள் வைத்து அவரை பல்லடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் செல்லும் வழியில் சாலையோரம் ஒரு இடத்தில் புதைக்க முடிவு செய்தனர். அதற்காக மண்வெட்டி மற்றும் கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரின்சி உடலை காருக்குள் வைத்து, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கொடைரோடு நான்கு வழி சாலை வழியாக மதுரை நோக்கி சென்றுள்ளனர். காரை திவாகரின் உறவினர் இந்திரகுமார் ஓட்டிச் சென்றார். காரை பின் தொடர்ந்து கள்ளக்காதலன் திவாகர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் இரவில் காரை சாலையோரம் நிறுத்தி, பிரின்சி உடலை புதைக்க திட்டமிட்டனர். அப்போது, அந்த வழியாக மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த காரை சோதனை செய்த போது, அதில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார், சடலமாக இருந்த கள்ளக்காதலி பிரின்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கள்ளக்காதலன் திவாகர் அவரது உறவினர் இந்திரகுமார் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் பெண்ணின் சடலத்தை ஏற்றி வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அக்னி நட்சத்திரம் அதாவது கத்திரி கோடை வெயில் என்பதால் மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பரமக்குடியில் சுமார் ஒரு மணி நேரம் கரு மேகங்கள் இருள் சூழ இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கு களை எரியவிட்டபடியும், மற்றொருபுறம் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கும் காட்சியையும் நம்மால் காணப்படுகிறது மேலும் இந்த ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது இதனால் பொதுமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரமக்குடியில் மக்களின் தாகத்தை நீக்கிய மருந்து நிறுவனம்! மோர் அருந்தி தாகம் தணிந்த பொதுமக்கள் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருப்பதி மொத்த மருந்து விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை நீக்கும் வகையில் 15 நாட்கள் குறிப்பாக ஒவ்வொரு நாளும், மோர், சர்பத் உள்ளிட்ட பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் மேலும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு என்பதால் அவ்வழியாகச் சென்ற மாணவர்கள்,பெற்றோர்கள், உள்ளிட்ட பலரும் தங்களின் தாகத்தை நீக்கி சென்று தங்களது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பார்க்கச் சென்றனர் அப்போது தாகத்தை நீக்கிய திருப்பதி மருந்து நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை !
by Baker BAker
written by Baker BAker
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42).காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஷர்மிளா தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்டிவிஷன் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஷர்மிளா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளிருந்த பீரோவில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுமார் 250 பவுனுக்கு மேல் நகை மற்றும் 5 லட்சம் பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எஸ்.பி முருகானந்தம்,டி.எஸ்.பி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.காவல் ஆய்வாளரின் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கை பொருளாதரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது ! இலங்கை அமைச்சர் அஹ்மத் சாதிக் பேட்டி !!
by Baker BAker
written by Baker BAker
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது என்று இலங்கை இளைஞர் பாராளுமன்றம்
வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் கூறினார்.தஞ்சை பூக்கார 1-ம் தெருவைச் சேர்ந்தவர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ். இவர் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம்
வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் நேற்று மாலை வருகை தந்தார். அப்போது அமைச்சருக்கு இன்பென்ட் ராஜ் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அமைச்சர் அஹ்மத் சாதிக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரையில் நாளை ( இன்று 11-ம் தேதி) இளைஞர்களுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராகவும், மாநாட்டு தலைவராகவும் கலந்து கொள்வதற்காக நான் வந்திருக்கிறேன். மாநாட்டில் அதிக இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தியாவில் இளைஞர்களின் அங்கீகாரம் (குரல் ) பெயரளவில் உள்ளது. அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று பேசப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அது கிடப்பில் போடப்படுகிறது.
எனவே சமூகத்தின் மத்தியில் இளைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். அரசியலை மையமாக கொண்டு நடக்கும் மாநாடு இது கிடையாது. இளைஞர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு நடக்கும் மாநாடு ஆகும்.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை யூட்யூப், சோசியல் மீடியா போன்றவைகளில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில்
இலங்கையை பொறுத்தவரை இளைஞர்கள் காண பிரச்சனைகளை தீர்க்கப்படுவதற்கு இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுடைய கருத்துக்கள் அவர்களுடைய தேவைகளை பாராளுமன்றத்தில் பேசி நிரந்தர தீர்வு காண வழிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் இளைஞர் பாராளுமன்றம் எந்த தேசங்களில் இல்லையோ, அங்கெல்லாம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமாக உள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் 360 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 95 பேர் தமிழ் பேசக்கூடிய உறுப்பினர்களாக உள்ளனர். இலங்கையில் போர் (யுத்தம்)நடக்கும் போது இளைஞர்கள் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு இளைஞர்கள் பொதுமக்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்துக்கு பிறகு பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் படிப்படியாக தரம் உயர்ந்து வருகின்றது.
எனினும் இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் பலவீனங்கள் உள்ள வரும் காலங்களில் அது சீராக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கையின் சகோதர நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் இலங்கை பொருளாதாரத்தில் சிக்கி தவித்தது. பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து இருந்து போது, இந்திய நாட்டில் இருந்து கொடுக்கப்பட்ட நிதி அதிகமாக இருந்தது. மேலும் இந்தியாவில் பல்வேறு வகையான உதவிகள் இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இந்த உதவிகள் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக சீர் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் இருந்து இந்திய அரசாங்கத்தால் பல்வேறு உதவிகள் செய்து கை கொடுத்த நாடாக இந்தியா திகழ்ந்தது. இதில் பெரும்பாலான உதவிகளை இந்தியா தான் இலங்கைக்கு வழங்கியது.
மலையாள தமிழர்களுக்கான அங்கீகாரம் தற்போது தான் கிடைத்து வருகிறது. இவர்களுக்கான வாழ்க்கை தரம் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரம் காலத்தை பொறுத்தது. தேர்தல் காலம் வரும் போது சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரம் கேள்விக்குறியாக இருக்கும். தேர்தல் காலம் இல்லாத நேரத்தில் சிறந்த சமூகமாக சிறுபான்மை இனம் இருக்கும்.
இலங்கையில் நான்கு இன மக்கள் வாழ்ந்து வருகிறோம். தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு சில இன மக்களின் உரிமைகள் கேள்விக்குறியாக கருதப்படும்.
இலங்கை கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வரும் செயல் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. இந்த செயலை சுபமுகமாக தீர்வு காண தமிழக அரசிடம் இணைந்து ஒரு சிறந்த முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
You must be logged in to post a comment.