முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அவரது பிறாந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும் பல்வேறு வகைகளில் மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இதனை தொடர்ந்து
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் சென்னன் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவில் கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி ஊராட்சி செயலாளர் முருகையன் கழக நிர்வாகிகள் வெங்கடேசன் துரைப்பாண்டி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் இந்நிகழ்வில் கலைஞர் வாழ்க, கலைஞர் புகழ் வாழ்க, என்ற வீர முழக்கம் இட்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து ஒன்றிய திமுக சார்பில் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமத்தில் கொரானா வைரஸ் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தமிழ் பாரதி தலைமையில் நடைபெற்றது.கலசப்பாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மருத்துவ குழுவினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இதை தொடர்ந்து கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் உத்தரவின் பேரில் மருத்துவர் தேன்மொழி தலைமையில் மற்றும் மருத்துவ குழுவினர் சுகாதாரத்துறையினர் முகாம் பணிகளை மேற்கொண்டனர் சோழவரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நிகழ்வில், கலசப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஆலோசனையின்படி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தமிழ் பாரதி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாலதி விக்ரம், ஊராட்சி செயலாளர் கிராம நிர்வாக அலுவலர் நித்தியா விடுதலை ெ சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழரசன் , விலியர் கிரிஜா மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை ஆலோசனை பிரிவு மையம் மற்றும் கொரோனா தகவல் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் ஆகியோர் 02.06.21 புதன்கிழமை துவக்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவிக்கையில்,
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தகவல் மையம் (HELP TESK) மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஆலோசனை பிரிவினை (POST COVID OP) தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உரிய சிகிச்சைகள் வழங்கப்படும். பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற் கொள்பவர்களிடம் அவர்களது உறவினர்கள் உடல்நிலை பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக கொரோனா தகவல் மையம் 6374711850, 6374711851 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோயாளிகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.நெடுமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லீன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா பாதித்தோருக்கு உற்சாகமூட்டி உதவிகள் வழங்கும் ‘ வார் ரூம் ‘ …… பொதுமக்கள் வரவேற்பு..
கொரோனா தொற்றினை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . பேரிடரான இக்கால கட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நோயாளி களுக்கு,தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் , மருத்துவ வசதிகள் , வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிக்கு தேவையான மருத்துவம் , உணவு வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி , பலசரக்கு , பொது சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க கலெக்டர் அலுவலகத்தில் ‘ வார் ரூம் ‘ திறக்கப்பட்டுள்ளது . மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த வார் ரூமிற்கு கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமை யில் , டி.ஆர்.ஓ ராஜசேகர் , தாசில்தார் பாண்டி கீர்த்தி, மற்றும் டாக்டர்கள் , வருவாய்த்துறை ஊழியர்கள் , செவிலியர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இரவு , பகல் என 3 ஷிப்டாக பணியாற்றி வருகின்றனர் . கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்த ஒரு அணியும் , மருத்துவ மனையில் சிகிச்சை யில் இருப்போருக்கு தேவையான உதவி கள் , ஆக்சிஜன் தேவைப் படுவோருக்கு உடனடியாக கிடைக்கவும் , அதனை நிவர்த்தி செய்ய ஒரு அணியும், சிகிச்சை யில் இருக்கும் நோயாளின் நிலை குறித்து உறவினர் கள் கேட்கும்போது , அதற்கான தகவலை உடனே பெற்று , அவர்களுக்கு தெரிவிக்க ஒரு அணியும் , சமூக வலைதளத்தில் கொரோனா தொடர்பான வரும் தகவலுக்கு உடனுக்குடன் பதில் கூறுதலுக்கு என ஒரு அணியும், பொது மக்களுக்கு காய் கறி , பலசரக்கு வேண்டும் என வார்ரூமுக்கு தகவல் வந்தால் , உடனே அதற்கான ஏற்பாடு செய்தல் , வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட நோயாளிக ளுக்கு தேவையான உணவு , அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய ஒரு அணி யும் , செவிலியர்கள் , ஆசி ரியர்கள் சேர்ந்து மாவட் டத்தில் 14 நாளுக்கு தனிமைப்படுத்தி கொண்ட நோயாளிகளை தினசரி அவர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் என்ன சாப்பிட் டீர்கள் , மருந்து மாத்திரை எடுத்து கொண்டீர்களா , உங்களுக்கு என்ன தேவை , வீட்டில் தனியாக இ ல் லாமல் , டிவி பாருங்கள் , நல்ல புத்தகம் படியுங்கள் , வீடியோ கேம் விளையா டுங்கள் , தேவையானால்எங்களிடம் பேசுங்கள் . காலை , மாலையில் உடற்ப யிற்சி மேற்கொள்ளுங்கள் என தன்னம்பிக்கையூட்டும் வகையில் ஊக்கப்படுத்தி இவர்களுடன் நெருக்கமாக உறையாடி , நோய் குறித்த பதட்டமே இல்லாமல் , சாதாரண நபராக இருப்ப தாக கருதும் வகையில் , கவுன்சிலிங் கொடுக்க ஒரு அணி என இப்படி 9 அணி கள் பிரிக்கப்பட்டு பணிகள் வேகமடைந்துள்ளன . கொரோனா நோயா ளிகளுக்கு நல்ல ஊக்கத் தையும் , நோய்க்கு அப்பால் உற்சகத்தையும் கொடுத்து வரும் இந்த அணி பணியா ளர்களுக்கு மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது….. போனில் அழைத்தால் உதவி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ‘ வார் ரூம் ‘ உதவிகளை பெற , டோல் ப்ரீ எண் அறிவிக்கப்பட்டுள் ளது . இதன்படி ‘ 1077 ‘ என்ற எண்ணை அழைக்கலாம் . அல்லது வாட்ஸ்அப் எண் , ‘ 95971 76061 ‘ என்ற எண்ணி லும் தொடர்பு கொள்ளலாம் . பொது போனில் , ‘ 0452 -2530104 , 2530106 , 2530107 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது . முன்பு கட்டுப்பாட்டு அறை என இருக்கும் . அதில் ஒன் றிரண்டு பேர் அமர்ந்து வரும் தகவலை பதிவு செய்யம் பணியையே செய்வர் . இப்படி அணி அணியாக அமர்ந்து , தேவையான உதவிகள் செய்ததில்லை . ஆனால் , புதிய அரசு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு துறை ஊழியர்களை கொண்ட இந்த 9 அணிகள் , தேவையான அனைத்து உத விகளையும் உடனுக்குடன் இரவு பகல் பாராது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது . இங்கு நடைபெறும் அனைத்து பணிகளும் உடனுக்குடன் தமிழக அரசின் தலைமை ‘ வார் ரூம் ‘ அனுப்பி வைக்கப்படுவதால் , தொய்வின்றி மக்களுக்கு சேவை கிடைக்கிறது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் பகுதியில் முல்லை பெரியாறு பாசன கால்வாய் சுத்தம் செய்வதில் பொதுப்பணித்துறையினர் மெத்தனம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற 4ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி பாசன வசதி பெறும் அலங்காநல்லூர் பகுதியில் பிரதான கால்வாய்கள் மற்றும் துணை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பாசன வசதி பெறும் விவசாயிகள் ஒருபுறம் துணை கால்வாய்களை சுத்தம் செய்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் பாசன வசதி பெரும் துணை கால்வாய் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட கழிவுகள் தேங்கி கிடப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் மன வேதனை தெரிவித்தனர். எனவே பொதுப்பணித்துறையினர் முறையாக சுத்தம் செய்து கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது :நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் மற்றும் நிதி நிலை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வார காலம் சென்னையில் இருந்தேன்.அப்போது மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொடர் கண்காணிப்பில் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தார்.நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று மூன்று வாரங்கள் ஆகிறது.எங்கள் தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் தெளிவான ஒரு கட்டளையையிட்டு கொரோனா கட்டுப்பாட்டில் அனைவரும் கவனம் செலுத்தும் படி அறிவுறுத்தினார் .அதன் அடிப்படையில் பதவி ஏற்பு முடிந்து மதுரைக்கு வந்த முதல் நாளில் இருந்து நானும் அமைச்சர் மூர்த்தியும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.அன்றே சித்த மருத்துவ வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தோம்.இன்றைக்கு மதுரையில் மூன்று வாரத்திற்கு முன்னர் இருந்த சூழல் மிகவும் சிறப்பாக மாறி முன்னேற்றம் அடைந்துள்ளது.ஒரு காலத்தில் படுக்கை வசதிகள் இல்லை,ஐ சி யு படுக்கை பற்றாக்குறை ,ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவகையிலும் பிரச்னை இருந்தது.கண்காணிப்பு அலுவலர் சந்திர மோகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகிய இரு ஐ ஏ எஸ் அதிகாரிகளும் மருத்துவர்கள்.மதுரையை நன்கு அறிந்தவர்கள் .அதே போல் மாநகராட்சி ஆணையர் விசாகன் அமைச்சர் மூர்த்தி மற்றும் என்னுடைய அறிவுரைகளை ஏற்று விஞ்ஞான முறையில் நடவடிக்கை எடுத்ததால் குறுகிய காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .இன்றைக்கு இருக்க கூடிய சூழ்நிலையில் படுக்கை வசதி ,ஆக்சிஜன் வசதி ,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறைகள் இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறோம்.மத்திய அரசின் உத்தரவில்லாமல் கொண்டு வர இயலாத கருப்பு பூஞ்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து வகையிலும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையே இதற்கு காரணம் .தகவல்களை திரட்டி செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் ,வெளி மாநிலங்களில் இருந்து ஆக்ஜிசன் கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. திட்டமிட்டு படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.இது மட்டுமல்லாமல் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அவர்களின் அறிவுரைகள் கேட்டு படிப்படியாக பணிகள் மேற்கொண்டோம்.மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை அறை ஏற்படுத்தப்பட்டு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை தாண்டி கிராமங்கள் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு ஆங்காங்கு நடைபெற்ற செயல்பாடுகளால் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைத்திட வழி வகை செய்யப்பட்டது.கூடுதல் மருத்துவர்கள் 3500 ற்கும் மேற்பட்ட கூடுதல் முன் கள பணியாளர்களை நியமனம் செய்து வீடுகள் தோறும் தேடி சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் நாங்கள் அளித்த வாக்குறுதியை முதல்வரின் வழிகாட்டுதலில் காப்பாற்ற முடிந்துள்ளது.13 ஆம் தேதி இருந்த நிலையை மாற்றி புது புது இடங்களில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தோப்பூரில் மட்டும் 400 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கினோம்.அரசு,அமைச்சர்கள் ,ஆட்சியர் உள்ளிட அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நிலையை எட்டி உள்ளோம்.தற்போதும் இந்த முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் இன்னும் சீக்கிரமாகவே இரண்டாவது அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டி உள்ளாரே?
மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இதற்கான தகவல் இருந்தால் அளிக்கட்டும்.கொரோனா இறப்பை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள அடிப்படை வித்யாசத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன்.இது குறித்து நான் வழக்கே தொடர்ந்துள்ளேன்.கடந்த ஜூலை ஆகஸ்டில் அவர்கள் கொரோனா இறப்பை 200 என கணக்கு காண்பித்தார்கள் .அன்றைக்கு இரண்டே இரண்டு மயானத்தில் 1400 பேருக்கு இறுதி சடங்கு நடந்தது .நான் அப்போதே தகவல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மறுப்பு தெரிவித்தேன்.வழக்கும் தொடர்ந்து அரசாங்கத்தை நீதிமன்றம் தட்டி கேட்டது.அத்திவாசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே ?
பொதுவாகவே இயல்பான ஊரடங்கு காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அதில் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும் .அமைச்சர் மூர்த்தி இதில் தனிக்கவனம் செலுத்தி அதிகாரிகளிடம் நாங்கள் ஆலோசனை நடத்தி பொருட்கள் வழங்குவதில் பற்றாக்குறையும் விலை ஏற்றமும் இல்லாதவகையில் நடவடிக்கை எடுத்தோம்.சில விஷயங்கள் தவறு நடந்த பிறகு தான் திருத்திட முடியும்.அந்த வகையில் தான் சமீபத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்றவருக்கு 64000 ரூபாய் பணம் திரும்ப பெற்று தரப்பட்டுள்ள்ளது.இந்த தவறுகள் மறுபடியும் நடைபெறாத வகையில் அமைச்சர் தலைமையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆலோசனை கூட்டமும் நடத்தி உள்ளோம்.கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளோம் .இத்தனையும் தாண்டி தனிப்பட்ட முறையில் தவறுகள் நடந்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறித்து ?
தமிழ் நாட்டிலேயே தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி கிடைத்தது மதுரை மாவட்டத்தில் தான்.இங்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொழிற்சாலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது .அரசியல் பாகுபாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மதுரை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.மாநில அளவில் நமக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதற்கு காரணம் மத்திய அரசு சொல்கிறது மருந்துகளை மாநில அரசு வாங்கிட கூடாது என்கிறது .ஆனால் தடுப்பு ஊசிகளை வாங்கி கொள்ளுங்கள் என்பது எப்படி நியாயமாக இருக்கும்.உலக அளவில் தடுப்பூசி குறைபாடு இருக்கிறது .எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 8 கோடி தடுப்பு ஊசிகள் கூடுதலாக வைத்து உள்ளார்கள் .அதனை தமிழ்நாட்டின் அனைவரும் சேர்ந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் நானும் பங்கெடுத்தேன்.நாட்டின் அளவில் உலகத்தியிலேயே அதிக உற்பத்தி மருத்துவ துறையில் வைத்துள்ள இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை ஊக்குவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது .திட்டமிடாமல் சில மாதங்களுக்கு ஏற்றுமதி ஏன் செய்தார்கள் ஒன்றிய அரசு என்பது மேலாண்மை குறையை தான் காட்டுகிறது.ஆனாலும் தமிழகத்திற்கும் மதுரைக்கும் கருப்பு பூஞ்சை மருந்து உள்ளிட்டவற்றை கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது .தடுப்பூசியை பொறுத்தவரையில் தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது .தொலை நோக்கு பார்வையோடு இதனை அணுகி தொழிலதிபர்கள் சி எஸ் ஆர் மூலம் 5000 முதல் 8000 லிட்டர் ஆக்ஜிசன் உற்பத்தியை இங்கு இருந்தே செய்திடும் திட்டமும் உள்ளது.அதே போல் தடுப்பூசி உற்பத்தியில் கவனம் செலுத்துவோம் இதனை பாடமாக எடுத்துக்கொண்டு தடுப்பூசி உற்பத்தியை கொண்டு வருவதற்கான அம்சங்கள் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட்டில் இடம்பெறும்.மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் மாநில அரசு திட்டங்களை பெற முடியவில்லையா ?
ஜனநாயக நாட்டில் மத்திய மாநில அரசின் இணக்கம் என்பதெல்லாம் தனி நபர் விருப்பம் அல்ல .இணக்கமாக இருந்துதான் செயல்பட வேண்டும் .மாநிலம் இல்லாமல் ஒன்றியம் இல்லை .அதனை விடுத்து அரசியல் செய்யவா ஒன்றிய அரசு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் உடன் இருந்து கவனித்து கொள்பவர்களுக்கும் தரமான உணவு வழங்கப்படுகிறது இதில் ஏதேனும் குறை இருந்தாலும் எங்கு குறை உள்ளது என தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட வலையங்குளம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சோதனை செய்த போலீசார் வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனன் மகன் கார்த்திக் (37) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.எனவே கார்த்திகை கைது செய்த பெருங்குடி போலீஸார் சாராயம் காய்ச்சுவதற்கான தேவையான பொருட்களை பறிமுதல் செய்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி:
மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது எனவும், மதுரை மாவட்டத்தில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.கிராமபுறங்களில் அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது, கிராம புறங்களில் வீடு வாரியாக பரிசோதனை மற்றும் கொரோனா அறிகுறி தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் -கலைஞர் சேவை மையம் சார்பாக பார்வையற்றோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆடை வழங்குதல்.
டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நாளை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் கலைஞர் சேவை மையம் சார்பாக பார்வையற்றோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் ஆடைகள் வழங்கினர்
.இதில் கலைஞர் சேவை மைய தலைவர் வெங்கடேஷ், மற்றும் மாநில தொழிற்சங்க துணை தலைவர் லெக்ஷ்மணன் ஆகிபோர் பார்வையற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 40 பேருக்கு ஆடைகள் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் தொற்றுபாதிக்கப்பட்டவரா போன் செய்தால் போதும் வீட்டிற்கே இலவசமாக உணவு கொடுத்து வரும் தன்னார்வலர்: குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாவட்டத்தில குரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கடந்த நான்கு தினங்களாக குறைந்து வந்தாலும் வந்தாலும் வீட்டில் 7047 பேர் தனிமைப்படுத்தி கொண்டனர். அவர்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவை என்பது உணவுதான். அதுவும் சத்தான சுகாதாரமான உணவு தேவை என்பதை கருத்தில் கொண்டு
மதுரை அண்ணாநகர் பகுதியில் சக்கரா ரெஸ்டாரண்ட் நடத்திவரும் அறிவழகன் தொற்று பாதிக்கப்பட்ட மற்றும் உடன் இருப்பவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று இலவசமாக மூன்று வேளையும் உணவுகளை வழங்கி வருகிறார்.உணவே நோய்க்கு அருமருந்து என்பதால் அறிவழகன் – லட்சுமி தம்பதியினர் தங்களது செல்போன் நம்பரை வாட்ஸ் அப் குழுக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார்.அதன்படி மதுரை வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, கேகே நகர், விரகனூர், முனிச்சாலை, ஐயர் பங்களா பிபி குளம் என பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உடன் இருப்பவர்கள் இலவசமாக உணவுகளை பெற்று வருகின்றனர்.இதற்காக பிரத்தியோக சமையலர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார்.இதுகுறித்து அறிவழகன் கூறும்போது தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்கள் போன் செய்தாலே போதும் அடுத்த நொடியே உணவை எடுத்துக்கொண்டு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று உணவை இலவசமாக வழங்கி வருகிறோம் என்றும், மூன்று வேளையும் உணவு வழங்கி வருவதாகவும், தற்போது ஒரு நாளைக்கு 300 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 10 நாட்களாக இந்த பணியை செய்து வருவதாகவும் மதுரை மாவட்டத்தில் ஒருவரும் கூட குரோனா தொற்று இல்லை என்று சொல்லும் வரை இந்த பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.இவரது இந்த சேவையை மதுரை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டிலுள்ளவர்களும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மதுரை மாநகர காவல்துறை
மதுரை விளாச்சேரியில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக கொரானா இரண்டாம் அலையால் மதுரையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் உதவி கேட்டதால் 200 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நமது அறக்கட்டளைக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் உதவியுடனும், கலெக்டர் அனுமதியுடனும் 4 இடங்களில் (s s காலணி, செல்லூர், பீ பீ குளம், மதிச்சியம் )சமூக இடைவெளியை பின்பற்றியும் வழங்கப்பட்டது.
இதில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக இயக்குனர் மரு.ரா.பாலகுருசாமி . மணிக்குமார் காவல்துறை உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மளிகை பொருட்களை அனைவருக்கும் வழங்கினர்.அதை பெற்றுக்கொண்டு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , நமது அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி- காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வினோத் கண்ணன், நகர தலைவர் மகேந்திரன், தெற்கு வட்டார தலைவர் வெஸ்டன் முருகன், வடக்கு வட்டார தலைவர் ரெங்கமலை மற்றும் தவமணி மாவட்ட துணைத் தலைவர் விஜயகாந்தன் , சரவணபவன், மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 15-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் உள்ளனர்.. முன்கள பணியாளருக்கான செய்தியாளர்கள் கொரோனா காலத்திலும் தங்களது பணியை அயராது மேற்கொண்டு வருகின்றனர்..
அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சித்தா மருந்தை உசிலம்பட்டி அரிமா சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.. அதில் தலைவர் வினுபாலன் செயலாளர் பிரேம்குமார் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் உசிலம்பட்டி பகுதியில் செய்தியாளர்களுக்கு வழங்கினார்.. இதேபோன்று முன்கள பணியாளர்களான போலீசார் உட்பட சுமார் 200 பேருக்கு வழங்கப்பட்டது..
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி 58கிராமகால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 68 அடி நிறைந்துள்ள நிலையில் 58கிராமகால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.வைகை அணையின் நீர்மட்டம் 68 அடி நிரம்பும் போது அதிலிருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் நிரம்பி பாசன வசதி பெறும் வகையில் 58 கிராமகால்வாய்ததிட்டம் ரூ120 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் உசிலம்;;;;;;பட்டிப் பகுதியிலுள்ள சுமார் 15000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.கிராம நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.கடந்த அதிமுக ஆட்சிpயின் போது திட்டம் நிறைவேற்றப்பட்டு 3 முறை சோதனை ஓட்டம் நடைபெற்ற போதிலும் வைகை அணையில் நீர்மட்டம் குறைந்ததால் 33 கண்மாயில் 19 கண்மாய்களுக்குத்தான் நீர் சென்றடைந்தது
. திட்டம் முழுமையாக நிறைவுபெறாததால் 58 கிராம கால்வாய் திட்;டத்திற்கு நிரந்தர அரசாணை வழங்கப்படவில்லை.இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் நிரம்பி வருவதால்; வைகை அணையின் நீhமட்டமும உயர்ந்து வருகின்றது.தற்போது வைகை அணையின் நீர் மட்டம் 68அடிக்கு மேல் நிரம்பிவருவாதல் வருகின்ற ஜீன் 4ம் தேதி குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதே போல் 58 கிராம கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டுமென உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை தற்போது பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளதால் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனால் இன்னும் சில மாதங்களுக்கு வைகை அணையில் நீர் நிரம்பிக் காணப்படும்.இதனால் 58 கிராம கால்வாயில் குறைந்தபட்சம் 50 கனஅடி தண்ணீராவது 2 மாதங்களுக்கு திறந்து விட்டால் அனைத்து கண்மாய்களும் நிரம்ப ஏதுவாக இருக்கும்.மேலும் நிரந்தர அரசாணையும் வழஙகப்பட வேண்டுமென என 58 கிராம இளைஞர்கள் குழுவின் சார்பாக சௌந்திரபாண்டியன் தெரிவித்தார்
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேகமாக பரவி வரும் கொரானா என்ற கொடிய நோய் காரணமாக தொடர் ஊரடங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் வீட்டிலுள்ள பொதுமக்கள் வீட்டிலிருந்தே மளிகை பொருட்களை பெறுவதற்காக நடமாடும் மளிகை பொருட்கள் கடை வியாபாரத்தை அம்மைய நாயக்கனூர்பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் வீடுவீடாகச் சென்று வியாபாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சரவணபாண்டியன் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேகமாக பரவி வரும் கொரானா என்ற கொடிய நோய் காரணமாக தொடர் ஊரடங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் வீட்டிலுள்ள பொதுமக்கள் வீட்டிலிருந்தே மளிகை பொருட்களை பெறுவதற்காக நடமாடும் மளிகை பொருட்கள் கடை வியாபாரத்தை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா, நிலக்கோட்டை துணை சூப் போலீஸ் சூப்பிரண்டு முருகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம் நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15 மாடுகளுக்கும் வீடுவீடாகச் சென்று வியாபாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் கதிரேசன், பேரூராட்சி அலுவலக தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடை மூடப்பட்டு உள்ளது இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கர்நாடகா மாநிலத்திலிருந்து பாக்கெட் மதுபானங்கள் அதிக அளவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அதிக லாபம் ஈட்டி வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆனந்தவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டாட்டா ஏசி 1 அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அதனை தடுத்து ஓட்டுநரிடம் விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின்னாக ஓட்டுனரின் பதில் இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வாகனத்தை தீவிரமாக சோதனை செய்தனர் அப்போது டாட்டா ஏசி வாகனத்தின் மேற்கூரையில் சுமார் 816 கர்நாடக மாநில பாக்கெட் மதுபானங்கள் இருந்ததை கண்ட காவல்துறையினர் மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்தனர் அதன்பிறகு கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்த மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சங்கமம் கொள்ளை பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மது பான பாக்கெட்டுகளை கொண்டு சென்று அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய எடுத்த வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அஜித் மீது வழக்குப்பதிவு செய்து மேல்செங்கம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சோதனைச் சாவடியில் இதுபோன்று மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தது இதுவே முதல் ஆகும்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் மின்விசிறி கீழே விழுந்து பெண் நோயாளி தலையில் காயம்
கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி முதல் மதுரை பேரையூர் மள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவர் படுக்கைக்கு அருகே இருந்த மின்விசிறி திடீரென பழுதாகி படுக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாள் தலையில் விழுந்தது. அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஏற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதப் பகுபாடுள்ள குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி, மதுரை தெற்குவாசல் மஞ்சனக்காரத் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய த.மு.மு.கவினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் சீனி அகமது, மாநிலத் தலைவர் அப்துல் ரகுமான் தாஹீத், மாவட்டத் தலைவர் இபுனு, செய்யது ராஜா என்ற பாபு, முபாரக் அலி, பாபு பாட்ஷா, தாகை மைதீன், தாவூத்சேக் பரீத் உள்ளிட்ட தமுமுகவினர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருநகரை அடுத்த மொட்டமலை பகுதியில் திருநங்கைகள், முதியவர்கள், குழந்தைகள் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி பசியால் உணவின்றி தவிப்பதாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் குணாவிற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உடனடியாக மாவட்ட செயலாளர் குமார், எலக்டிரிசீயன் வடிவேல் , ஹார்விபட்டி ஆர்.வி.நண்பர்கள் குழுவினருடன் மொட்டமலை பகுதிக்கு விரைந்து நேரில் சென்று விசாரித்த போது உணவின்றி தவித்த குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். அதன் பின்பு வெஜ் பிரியாணி பொட்டலம், தண்ணீர் பாட்டில் , முககவசம் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. சுமார் 106 பேருக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. முககவசம் இன்றி வந்த குழந்தைகளுக்கு மாவட்ட தலைவர் குணா முககவங்களை முகத்தில் அணிவித்தார். மேலும் உதவிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஆர்.வி.நண்பரகள் தெரிவித்தனர். தங்களின் உதவிக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதாக கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.