வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரியாக பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் –
கே.எம்.வாரியார்
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரியாக பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் –
கே.எம்.வாரியார்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் அமைந்துள்ள 3223 என்ற எண் உள்ள அரசு மதுபான கடையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுபான விடுதியில் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறைக்கு புகார் வந்தது.
இதனால் அவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்௧ள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் இலவச சிறுநீர் கழிக்க வரும் பயணிகள் முகம் சுளித்துக் கொண்டு வருகிறார்கள், அந்த அளவுக்கு சுகாதார கேடாக உள்ளது. தேனி மாவட்டம என்றாலே தமிழ்நாட்டில் தெரியாத ஆட்கள் கிடையாது, ஏனென்றால் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் மக்கள் பணத்தை நகராட்சி வீணடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள். எந்த ஒரு குறையினை சுட்டி காட்டினாலும் நகராட்சி ஆணையாளர் அங்கு வேலைபார்க்கும் அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்த சிறுநீரில் நீர் கழிக்கும் இடத்தை சுத்தம் செய்து தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?? பொறுத்திருந்து பார்ப்போம். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குமுறுகிறார்கள்.
சாதிக்பாட்சா:- நிருபர் தேனி மாவட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் 4 வது வார்டில் வசித்து வரும் கார்த்திக் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த நகராட்சி மேலாளர் அழகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் கார்த்திக் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலீதீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கார்த்திக் என்பவருக்கு நகராட்சி அதிகாரிகள் 10000 ரூ அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர் அகமது கபீர், சரவணன், தூய்மை இந்திய திட்ட மேற்பார்வையாளர் பாண்டி, துப்பரவு மேற்பார்வையாளர் கணேசன், சங்கர், தனுஷ்கொடி, தூய்மை இந்திய திட்ட பரப்புரை மேற்பார்வையாளர் தங்கப்பாண்டி, சக்திவேல், கிருஷ்ண சாமி ஆகியோர் கலந்து கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து அனுப்பானடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது வருகின்ற 23ம் தேதி அன்று மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமராவதற்கு முன்பும் பொய் சொன்ன மோடி பிரதமரான பிறகும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி அளித்த வாக்குறுதியும் பொய், ஒவ்வொருவரது வாங்கிக்கணக்கிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என கூறியதும் பொய் தான். பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியின் போது அத்வானியை டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுத்து ஈ மெயிலில் அவருக்கு அனுப்பி வைத்ததாக மோடி பேசியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் கேமராவுமில்லை ஈமெயிலும் இல்லை என்றார்.பிரதமர் மோடி அதிகமாக பொய் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
கலெக்டர் ஆக விரும்புவதாக தேர்வில் பதில் எழுதிய பள்ளி மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், அந்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்தினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆங்கில பாடத்திற்கான தேர்வில், ‘நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்..? உங்கள் முன்மாதிரி மனிதர் யார்..?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு, ‘எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சியர்தான்’ என்று, 6ம் வகுப்பு மாணவி மனோபிரியா என்பவர் பதில் எழுதியுள்ளார். இந்த பதில், விடைத்தாளை திருத்திய ஆசிரியருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலை, பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி என்பவர், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த கலெக்டர், அந்த மாணவியை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரச்சொல்லியுள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் சிறந்து விளங்கி பதக்கம் பெற்ற அப்பள்ளியின் மாணவ – மாணவிகள் சிலரை அழைத்துச் சென்று மாவட்ட கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.
கலெக்டராக விரும்பிய மாணவி மனோபிரியாவை அழைத்துப் பாராட்டிய கலெக்டர் அன்பழகன், மாணவி எழுதிய விடைத்தாளையும் பார்த்தார். பின்னர் அவர், தான் அமர்ந்திருந்த இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து, “நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் கலெக்டராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
பின்னர், மாணவ – மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு, அவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து, வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.
“சென்னையில் செயல்படும் ‘ஐயமிட்டு உண்’ சேவைத் திட்டத்தின் மூலம் இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்” என்று, தி பப்ளிக் பவுண்டேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை என்னதான் அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும், உண்ணுவதற்கு ஒரு வேளை உணவு, உடுத்த ஒரு உடைக்காக ஏங்குவோர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கைகொடுப்பதற்காக தொடங்கப்பட்டதுதான் ‘ஐயமிட்டு உண்’ சேவைத் திட்டம்.
‘உண்பதற்கு முன் உதவி செய்’ என்ற நோக்கத்தில், தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை பெசன்ட் நகரில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது அண்ணாநகர், ஆலந்துார், பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்), தி.நகர் உள்ளிட்ட ஏழு இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கென தொடங்கப்பட்ட ‘பூத்’களில், உணவு மற்றும் தின்பண்டங்கள் வைக்க ஃப்ரிட்ஜ், துணி, புத்தகம், காலணி உள்ளிட்ட பொருட்கள் வைக்க தனி அடுக்கு என அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் ஒவ்வொரு பூத்திலும், தினமும் 100க்கும் அதிகமானோர் தங்களுக்கு தேவையான உணவு, துணி போன்ற பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.
அதேபோல், உதவி செய்வோரும் தங்களால் இயன்ற பொருட்களை வைத்துச் செல்கின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு பூத்திலும் ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் திட்டத்தை, ‘தி பப்ளிக் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் திட்டம், பயனாளிகள் மற்றும் உதவி செய்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து, தி பப்ளிக் பவுண்டேஷன் நிர்வாகிகள் கூறியதாவது; “உதவி செய்பவர்கள் – பயனாளிகள் இடையே ஒரு பாலமாக துவக்கப்பட்டதுதான் இந்தத் திட்டம். ஆரம்பத்தில், ‘வரவேற்பு கிடைக்குமா..?’ என்ற சந்தேகம் இருந்தது. தற்போது, பணமாகவும் பொருளாகவும் அதிகம் பேர் உதவி செய்கின்றனர்.
இதுவரை, 8.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், 21 ஆயிரம் கிலோ துணிகள் வழங்கி உள்ளோம். இரண்டு லட்சம் பேருக்கு மேல் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்த 150 தன்னார்வலர்கள் உள்ளனர். தினக்கூலி வேலை செய்வோர்தான் அதிகமாக பயன் அடைகின்றனர். தேவை அறிந்து, சென்னையில் இன்னும் பல இடங்களில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குவதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும் விதமாக, உடன்குடி பகுதி பனையேறும் தொழிலாளர்கள் புதிய வழிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலகட்டங்கள் பதநீர் சீசன் மாதங்களாகும்.
இதன்போது, பனையேறும் தொழிலாளர்கள் பனை மரத்தில் ஏறி, அங்கு வளர்ந்திருக்கும் பூம்பாளைகளை அரிவாளால் பக்குவமாக சீவி, சுண்ணாம்பு தடவிய கலசத்தில் பதநீரை வடியச் செய்கின்றனர். இவ்வாறு கிடைக்கும் பதநீரை அடுப்பில் வைத்து பக்குவமாகக் காய்ச்சி, கருப்பட்டி (பனை வெல்லம்) தயாரிக்கப்படுகிறது.
இந்த பதநீருக்காக, பனையேறும் தொழிலாளர்கள் தினசரி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் சுமார் 30 முதல் 40 மீட்டர் உயரமுள்ள பனை மரத்தில் ஏறி இறங்க வேண்டியுள்ளது. பனையேறுவதில் உள்ள இடரையும் துன்பத்தையும் போக்க இதுவரை உருப்படியான இயந்திரம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.
பனையேறும் தொழிலாளர்கள், அடி மரத்தில் ஏறுவதற்கு முறுக்கு தடி, அதற்கு அடுத்து ஏறுவதற்கு கால்களில் தளைநார், பனையில் உள்ள சொரசொரப்பான பகுதியால் நெஞ்சில் காயமோ, தழும்புகளோ ஏற்படாமல் பாதுகாக்க கனமான தோலினால் செய்யப்பட்ட நெஞ்சு பட்டை போன்ற உபகரணங்களை பயன்படுத்தி வந்தனர்.
இந்த தொழிலில் உள்ள சிரமங்களின் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாகவே பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குவதற்கு கடுமையான ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், உடன்குடி பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள், பனை ஏறும் முறையில் ஒரு மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, பனை மரத்தில் கீழிருந்து உச்சி வரை, சுமார் இரண்டு அடிக்கு ஒன்று என கம்புகளை வைத்துக் கட்டியுள்ளனர். இது, ஏணியைப் போல அமைந்திருப்பதால், இதன் மூலம், மளமளவென பனை மரத்தில் ஏறி இறங்குகின்றனர். இதனால், நெஞ்சுப் பகுதியில் காயமோ, தழும்புகளோ ஏற்படுவதில்லை.
இதுகுறித்து, பெரியபுரத்தைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி முருகராஜ் என்பவர் கூறுகையில், “பாரம்பரியமான பனைத்தொழில் ஆண்டுக்கு ஆண்டு நலிவடைந்து வருவதற்கு முதல் காரணம், பனை ஏறுவதில் உள்ள சிரமத்தையறிந்து போதிய ஆட்கள் இந்த வராததே. இதனால், புதிய முறையில் பனை ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பனை ஏறுவதற்கு ஏராளமானோர் தயாராக உள்ளனர்” என்றார்.
கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. அம்மன் சிரசு மீது பக்தர்கள் மலர், பூ மாலை தூவி வரவேற்றனர். பின்னர் கோவில் சிரசுமண்டபத்தில் சண்டாச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டது. பின்பு கூழ் வார்த்தல் நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர். ஏற்பாட்டை கோவில் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தக்கர் மாதவன் நிர்வாக அதிகாரி வடிவேல் மற்றும் குடியாத்தம் பகுதி வாழ் மக்கள் செய்து இருந்தனர். திருவிழா முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
கே.எம்.வாரியார்
விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த அரசு மதுபான கடை கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருப்பதால் அங்கு இருந்து நீக்கப்பட்டது.
பின்பு உள்ளூர் சந்தை சாலையில் உள்ள ஒரு வீட்டில் அந்த மதுபான கடை இரண்டு நாட்களில் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த கடைக்கு அருகில் அதிக குடியிருப்பு இருப்பதால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும் ஆகையால் அக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை வராமலிருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அப்பகுதி பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
நிலக்கோட்டை அருகே ஆடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் 8 ஆடுகள் மற்றும் உரிமையாளரும் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சந்தியா நகரைச் சேர்ந்த பெருமாள் வயது 54 இவர் ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய பேரனுக்கு திருமணம் நடைபெற இருப்பதையொட்டி தான் வளர்க்கும் ஆடுகளை வட மதுரையில் இருந்து நிலக்கோட்டை அருகே மெட்டூரில் உள்ள தனது மகன் பொன் வேல் வீட்டில் விட சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று வட மதுரையில் இருந்து திண்டுக்கல் மதுரை நான்குவழி சாலைகள் வழியாக மேட்டூருக்கு மேய்த்தபடி பெருமாளும் அவரிடம் வேலை பார்க்கும் அழகரும் என்பவரும் வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை கொடைரோடு அருகே மெட்டூர் ரயில் தண்டவாளத்தை ஆடுகளுடன் அவர்கள் கடக்க முயன்றபோது, கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் மோதி 8 ஆடுகள் மற்றும் பெருமாளும் உடல் சிதறி இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ நந்திபெருமாள்,ஸ்ரீ நாகம்மாள்,ஸ்ரீ தொட்டிச்சி,ஸ்ரீ கோட்டைகருப்பணசாமி,ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பக்தகோடிகள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். இக்கும்பாபிஷேகத்தை வேதஆகம முறைப்படி டாக்டர்.திருவேங்கடசாமி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இந்துக்களை பற்றி இழிவாக பேசியதாக இந்து முன்னனி மற்றும் பாஜகவின் பிரிவான அனுமன் சேனா கட்சியை சேர்ந்தவர்கள் கமல்ஹாசன் மீது செருப்பை வீசியுள்ளார்கள்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சி தலைவர் கமலஹாசன் திருப்பரங்குன்றம் 16 நகால் மண்டபம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சில நபர்கள் செருப்பை வீசியுள்ளனர்.
இது மேடையின் அருகே கீழே விழுந்தது, ஆனால் அவர் மேலே படவில்லை. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் காலணி வீசியவர்களை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உலக ரெட் கிராஸ் தினத்தை சிறப்பிக்கும் வகையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் ராமநாதபுரம் ஜவஹர் மருத்துவமனை சார்பில் இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் ராமநாதபுரம் சிஎஸ்ஐ பி .எட்., கல்லூரியில் நடந்தது.
ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலர் எம்.ராக் லாணட் மதுரம் தலைமை வகித்தார். வரவேற்றார். மதுரை- ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபை திருமண்டில சட்ட ஆலோசகரும், சி எஸ் ஐ ., பி.எட்., கல்லூரி தாளாளருமான தேவ மார்ட்டின் மனோகரன் மார்ட்டின் முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் மாவட்ட சேர்மன் எஸ்.ஹாரூன் துவக்கி வைத்தார். இணை செயலர் தி. ஜீவா வரவேற்றார். ரெட் கிராஸ் துணை தலைவர் . அஸ்மாக் அன்வர் தீன், சிஎஸ்ஐ., பி.எட்., கல்லூரி துணை முதல்வர் ஆனந்த் பேசினார். இதய துடிப்பை மீண்டும் இயக்கச் செய்ய மூச்சு பயிற்சியின் அவசியம் குறித்து மாவட்ட முதலுதவி பயிற்றுநர் எஸ்.அலெக்ஸ் செயல் விளக்கம் அளித்தார். இதயம் செயல்படும் விதம், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள், மூச்சு பயிற்சி அவசியத்தின் விழிப்புணர்வு குறித்து ஜவஹர் மருத்துவமனை மூத்த டாக்டர் எம்.ஜவஹர் பாரூக் பேசினார். முகாமில் கலந்து கொண்ட 65 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் இசிஜி பரிசோதனை செய்து உடல் நல பாதுகாப்பு குறித்து இலவச ஆலோசனை வழங்கினர்.
ரெட் கிராஸ் பொருளாளர் சி. குணசேகரன் நன்றி கூறினார். ஜவஹர் மருத்துவமனை மேலாளர் செந்தில்குமார், யூட் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளி விநாயகம், ஆயுட்கால உறுப்பினர்கள் என். கார்த்திக், அ.மலைக்கண்ணன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.
இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற சரக்கு வாகனத்திற்கு ஆய்வாளர் விஜயகாந்த் பூட்டு போட்டுள்ளார். வாகனத்தில் இறங்குமாறு டிரைவரை ஆய்வாளர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த உச்சிச்புளி துத்திவலசையை சேர்ந்த டிரைவர் கர்ணன், வாகனத்திலிருந்து இறங்கி ஆய்வாளரை கீழே தள்ளி கடுமையாக தாக்கினார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற டிரைவர் கர்ணன் ஆய்வாளர் விஜயகாந்த் கழுத்தில் கடித்துவிட்டு தப்ப முயன்றார். சக போலீசார் கர்ணனை பிடித்து பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்துப்பகுதியில் 5 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டிரைவர் கர்ணன் (எ) மாரியப்பன் 52, மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் காவல் ஆய்வாளரை, டிரைவர் ஒருவர் கீழே தள்ளி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, புலி, மான், மிளா உள்ளிட்ட பல முக்கிய வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு வனப்பகுதியில் மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள குட்டைகள், நீர்த்தேக்க தடுப்பணைகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லை.
இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள், அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் செல்கின்றன. இந்த நிலையில் புளியங்குடி டி.என்.புதுக்குடி பீட் கன்னிமார் கோவில் சரகம் வனப்பகுதியில் நேற்று காலையில் பெண் யானை இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், புளியங்குடி வனச்சரகர் அயூப்கான், வனவர் அசோக்குமார், வன காப்பாளர் செல்லத்துரை மற்றும் வனத்துறை ஊழியர் கள் விரைந்து சென்று, இறந்த யானையை பார்வையிட்ட னர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த யானையை அங்கேயே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறை யினர் கூறுகையில், ‘இறந்த யானைக்கு வயது 5 என்றும் அந்த யானை செரிமான கோளாறால் இறந்து உள்ளதாகவும், அதாவது, அந்த யானை அதிகளவில் புற்களை சாப்பிட்ட பின்னர் குட்டையில் உள்ள சூடான தண்ணீரை அதிகம் பருகி உள்ளது. இதனால் அதற்கு செரிமான கோளாறு ஏற்பட்டு இறந்து உள்ளது‘ என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியானதை தொடர்ந்து பட்டாசு ஆலை மூடப்பட்டது இன்று 10க்கும் மேற்பட்டோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய கழிவு மருந்துகள் கிடந்த இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். காயம் அடைந்த குருசாமி, அர்ஜுன், கோபால் ஆகிய 3 பேர் படுகாயத்துடன் சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெoற்று வருகின்றனர். மேலும் காமராஜ். கனகராஜ் ஆகிய இரண்டு பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை, பைபாஸ் ரோடு, டி.எஸ்.பி நகரை சேர்ந்த ராமசந்திரன் என்பவருடைய மகன் ஜெயவேல் 30/19 என்பவர் மதுரை மாநகரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தொழில் செய்துவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவுப்படி இன்று (15.05.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
சிவகாசி அருகேயுள்ள நதிக்குடி பஞ்சாய்த்துக்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில் ஜெயசங்கர் என்பவர் சொந்தமான பட்டாசு இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சிவகாசி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் தீபாவளி நேரத்தில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தி விதி மீறிய பட்டாசு கடைகளில் கைப்பற்றிய பட்டாசுகளை அங்கு இருப்பு வைத்து சில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த குடோனில் இடி, மின்னல் தாக்கியதில் அந்த குடோனிலுள்ள பட்டாசுகள் வெடித்து எரிய தொடங்கின. அருகிலுள்ள பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உடனடியாக மாரனேரி காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரியபடுத்திய பின் சிவகாசி தீயணைப்பு காவல் நிலையத்திலிருந்து இரண்டு வண்டி தீயணைப்பு வண்டியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். சம்பவம் குறித்து மாரனேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, தமிழக சிறைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் (முதன்மை மாவட்ட நீதிபதி) அறிவுறுத்தல் படி ராமநாதபுரத்தில் சிறைவாசி குடும்ப உறுப்பினர்களுக்கு சட்ட உதவி, மறுவாழ்வு பணி முகாம் நிகழ்ந்தது.
இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் வி.கதிரவன், கே.முத்து துரைச்சாமி, ஆர்.பாபு, ஆர்.தியாகராஜன், முருகேசன், சட்ட தன்னார்வ தொண்டர்கள் வினோத், பாரதி, அய்யப்பன், சமூக ஆர்வலர்கள் பவானீஸ்வரி, செல்வி, தமிழ்நாடு கிராம புனரமைப்பு இயக்கம், அவார்டு டிரஸ்ட் உள்ளிட்ட தொண்டு நிறுவன பணியாளர்கள் அடங்கிய திட்டக்குழு அமைக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட சிறைவாசிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மறுவாழ்வு திட்ட முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் துவங்கி வைத்தார். முகாம் ஏற்பாடுகளை இலவச சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் வி.ராமலிங்கம் (சார்பு நீதிபதி) செய்திருந்தார்.
You must be logged in to post a comment.