இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவுஅதுவரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தல்- நீதிபதி ரீமா ஓமர்.
Category:
உலக செய்திகள்
லாகூர்: பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று மோதியது.இதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உள்பட 11 பயணிகள் பலியாகினர் எனவும், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர் எனவும் போலீசார் முதல் கட்டமாக தெரிவித்தனர்.இந்நிலையில், மருத்துவமனைகளில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் சிகிச்சை பலனின்ரி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை – மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்திற்கும் பணம் வேண்டாம்… மனம் போதும் என்பதற்கு ஒரு உதாரணம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தானத்திற்கும், தர்மத்தற்கும் பெயர் பெற்ற சீதக்காதி வாழ்ந்த கீழக்கரையில் பல தொண்டு அமைப்புகள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் என பல அமைப்புகள் இருந்தாலும் தனி மனிதன் செய்யும் சமூக நற்காரியங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த முகைதீன் அப்துல்காதர் என்ற சாமானிய மனிதனின் செயல் அனைவரையும் சிந்திக்கவும், ஆச்சரியப்படவும் வைத்துள்ளது. சென்னை மைலாப்பூரை சேர்ந்த 96 வயது முதியவர் சந்திர சேகரன் ஜெயலெட்சுமி தம்பதியினர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் சிகிச்சை செய்ய வந்துள்ளனர்.
அதே சமயம் முகைதீன் அப்துல் காதர் சிகிச்சை காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக மதுரை அரவிந்த் மருத்துவமனை சென்றுள்ளார்.
அச்சமயம டாக்டரிடம் காண்பித்து செல்லும் நேரம் முதியவர் சந்திர சேகர் இவரிடம் தனியாக வந்து நலம் விசாரித்து விட்டு வந்த இடத்திடல் செல் போன் பணம் முக்கிய பொருட்கள் களவு கொடுத்து விட்டதாகவும், எங்களது ஒரே மகன் கப்பல் விபத்தில் இறந்து விட்ட பின் யாருமில்லாதவர்களாய் நிற்கிறோம், இப்போ நாங்கள் இருவரும் சாப்பிட்டு ஒரு வாரம் ஆவதாகவும் கூறியுள்ளனர். இதை கேட்ட முகைதீன் அப்துல் காதர் அந்த இருவருக்கும் சாப்பாடு வாங்கி தந்து போன் நம்பரை கொடுத்து வந்துள்ளார்.
இரு தினங்கள் கழித்து அவர்கள் இருவரும் போனில் தொடர்பு கொண்டு தாங்கள் ஊருக்கு வருவதாகவும், தங்களுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்கவும் வேண்டுகோள் விடுத்தனர். கடந்த 20 நாட்களாக கீழக்கரையில் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்த நிலையில் நேற்று (05/07/219) மதியம் 01.00 மணி அளவில் சந்திர சேகரன் மரணம் அடைந்து விட்டார். உடனே அப்துல்காதர் கீழக்கரை காவல் நிலையம் சென்று தகவல் கொடுத்துள்ளார். இவரின் நல்லெண்ணத்தை பார்த்து கீழக்கரை உளவுத்துறை Si ஜேம்ஸ் அவர்கள், முதியவரின் ஈமச் சடங்கு செலவுகள் அனைத்தையும் ஏற்று, அடக்கம் செய்வதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று கீழக்கரை சுடுகாட்டில் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உடலை நல்லடக்கம் செய்தனர்.
கீழக்கரையில் சாமானிய மனிதனான அப்துல்காதரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இவரை நீங்கள் வாழ்த்த விரும்பினால் 9677978809 என்ற எண்ணில் அழைக்கலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சவூதி அரேபியா சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த அஜ்மல்கான் உடல் இன்று(05.07.2019) ஜும்ஆவுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது!
கடந்த 25.06.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் சவூதிஅரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு அருகே குரைஷி ஏரியாவில் பிக்அப் மீது டிரைலர் என்னும் கனரக வாகனம் மோதியது. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர் அஜ்மல்கான்(வயது 25) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த அல்ஹஸ்ஸா சகோதரர் யூசுப் மற்றும் தம்மாம் சகோதரர் இஸ்மாயில் ஆகியோர் உடனே இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில நிர்வாகம் அல்ஹஸ்ஸா பகுதி பொறுப்பாளர் ஜின்னாவை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தலைமையின் உத்தரவை ஏற்று விபத்தில் பலியான அஜ்மல்கான் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை சென்று ஜனாஸாவை பார்த்து விட்டு நல்லடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தினார்.
விபத்து தொடர்பான காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை சான்றுகளை பெற்று இந்திய தூதரகத்தின் உதவியோடு இறந்தவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து விசயத்திலும் இறந்தவர் பணியாற்றிய அவரது கம்பெனி மற்றும் இந்திய தூதரகம் முழுமையாக தங்களின் ஒத்துழைப்பை கொடுத்தது நினைவு கூறத்தக்கதாகும்.
இறந்தவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, இறந்தவரை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து முடித்த இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா பொறுப்பாளர் சகோதரர் ஜின்னா பாய் மற்றும் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகிகளுக்கு இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய,மாநில நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
தகவல்: கீழை அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆத்தூர் தாலுகாவில் களை கட்டும் மாம்பழ சீசன்… வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள், தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவாரம் உள் கோம்பை பகுதிகள், சித்தையன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் உள்ளன.
தற்போது, கோடைக்கால மாங்காய் சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வழக்கமாக கோடை மாம்பழ சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டிற்கான கோடை சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கியது. அப்பகுதியை சேர்ந்த 80 சதவீத மா விவசாயிகள், தங்களது மாந்தோப்புகளை வியாபாரிகளிடம் குத்தகைக்கு விட்டுள்ளனர்.
ஆண்டு தோறும் பிப்ரவரி மாத இறுதியில் மாமரங்கள் பூ பூக்கும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சீசன் களைகட்டும். அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காசா லட்டு, கல்லாமை, செந்தூரம், காளபாடி, கிரேப், மல்கோவா, இமாம்பசந்த் ரக மாம்பழங்கள் அதிகமாக விளைகின்றன.
கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை, பருவ மாற்றம் மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் மாமரங்களில் மகசூல் குறைந்தது. ஆனால் இந்த மா சீசனில் நாட்டு ரக உயர்ரக மாம்பழங்கள் போதிய விளைச்சல் இன்றி காய்க்கவில்லை. காசா லட்டு, கல்லாமை, நாடு, செந்தூரம் ஆகிய ரகங்களை சேர்ந்த மாம்பழங்கள் மட்டுமே தற்போது வரத்து உள்ளது.
மாம்பழங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக, அதே பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரிகள் ஆங்காங்கே தற்காலிகமாக கூரையால் வேயப்பட்ட குடோன்களை அமைத்துள்ளனர்.
மேலும் தாங்கள் கொள்முதல் செய்யும் மாம்பழங்களை புதுச்சேரி, கேரளா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கும், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் 70 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான மாங்காய்கள் சிறுத்து போய் உள்ளன. குடோன்களின் குவிந்து கிடக்கும் மாங்காய்களை தரம் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. இதனால் போதிய விலை கிடைக்காமல் மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு மாம்பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (19/06/2019) அமீரக காங்கிரஸ் கமிட்டி இந்திய எழுச்சி தினமாக கடைப்பிடித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் அமீரக காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொதுச் செயலாளர் அபூபக்கர், பொருளாளர் கீழை ஜமீல், சிறுபான்மைத் துறை தலைவர் ஜுனைத் ஆகியோர் சாக்லெட், பழச்சாறு பக்கெட்களை தமிழக, கேரள, வட இந்திய மக்களுக்கு மகிழ்வுடன் வழங்கினர்.
இந்த நிகழ்வை சாதாரணமாக கொண்டாடும் நிகழ்ச்சியாக இல்லாமல் அனைவரும் பயன்தரும் வகையில், பெரும்பாலும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று பொருட்கள் வழங்குவதை அனைவரும் வரவேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பசிபிக் ஏசியன் சர்வதேச அளவிலான யோகா போட்டி.. வெற்றி பெற்ற தமிழக வீரரகள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கடந்த 18.05.2019 மற்றும் 19.05.2019 ஆகிய இருநாட்கள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கைநான் ஸ்டேடியத்தில் பசுபிக் ஏசியன் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 137 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் நாட்டின் இந்தியா பயிற்சி கழகத்தின் சார்பாக கோவில்பட்டியிலிருந்து இப்போட்டியில் 15 முதல் 17 வயதுடைய பிரிவில் கலந்து கொண்ட கயத்தாறு பள்ளியில் பயிலும் 10வது வகுப்பு மாணவி மதுபாலா என்பவர் தடகள யோகாவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார்.
12 முதல் 15 வயதுடைய பிரிவில் கலந்து கொண்ட கோயில்பட்டியில் 7வது வகுப்பு பயிலும் மாணவர் சவுரி ராஜன் நடன யோகாவில் முதல் இடத்தை பிடித்து தங்கமும், தடகள யோகா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
10 முதல் 12 வயதுடைய பிரிவில் கலந்துகொண்ட கயத்தாறு பள்ளியில் 7வது வகுப்பில் பயிலும் மாணவர் கௌசிக் தடகள யோகாவில் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கமும், மாணவர் சுபாஷ் என்பவர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
₹.100/- மண் பானைக்கு பேரம் பேசும் மக்கள்…. 80 (₹.1600/-)திர்ஹமுக்கு கௌரவமாக வாங்கும் காட்சி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழகத்தில் பாரம்பரியம் மற்றும் தொன்மையான தொழில்களில் ஒன்று மண் பானை மற்றும் சார்ந்த தொழில், இன்றளவும் குடிசை தொழிலாக சாலையோரத்தில் வியாபாரம் செய்வதையும், அம்மக்களிடம் 5க்கும் 10க்கும் பேரம் பேசுவதை காண முடியும்.
ஆனால் அதே தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் அமீரகம் மற்றும் சவுதியில் உள்ள பல் பொருள் அங்காடிகள் ஊரில் ₹.100/- மதிப்புள்ள பொருளை இந்திய மதிப்பு 1000க்கும் கூடுதலாக அழகுபடுத்தி விற்பதை காண முடியும். அதுவும் மக்கள் அதை மிகவும் ஆர்வத்துடனும் எந்த பேரம் பேசும் சிந்தனையும் இல்லாமல் வாங்கி செல்வதை காண முடியும். இதே போன்று நம் தாய் நாட்டிலும் நலிவடைந்து வரும் தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் தொழிலாளிக்கு நல்ல லாபம் தரும் வகையில் வாங்கி உதவினால், நலிவடைந்த தொழிலும் உயிர் பெரும், இத்தொழில் செய்பவர்களின் வாழ்வும் வளம் பெரும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புனித ரமலான் மாதம் நேற்றோடு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதமான முதல் நாளான இன்று (04/05/2019) ஈகைப் பெருநாள் சிறப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மற்றும் பல வளைகுடா நாடுகளில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து சிறப்பு பிரசங்கமும் நடைபெற்றது. அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகாலை 5.15 மணி முதலே பெருநாள் தொழுகை ஆரம்பம் ஆகி விட்டது.
அப்பெருநாள் தொழுகையில் உள்நாட்டு மக்கள் முதல் வெளிநாட்டு மக்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தொழுகையின் நிறைவில் ஓருவருக்கொருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பெரியவர்கள் குழந்தைகளுக்கு மிட்டாய்களும், காசுகளும் கொடுத்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இந்த வருடம் சவுதி அரேபியா ரியாத் நகரில் பத்ஹா அழைப்பு மையம் சார்பாக தமிழ் பயானுடன் பெருநாள் தொழுகை சுலை எனும் பகுதியில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொழுகையில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் சவுதி அரேபியா புனித நகரான மதினாவில் ஈகை பெருநாளை முன்னிட்டு ஏராளமான கீழக்கரை சகோதரர்கள் ஒன்றுகூடி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமீரகத்தில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் இஃப்தார் நிகழ்வு..அமீரக காங்கிரஸ் சார்பாக பாராட்டு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று (17/05/2019) மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் அமீரக காங்கிரஸ் சார்பாக பொருளாளர் கீழை ஜமீல் முஹம்மது, செயலாளர் ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றிக்காக ஆதரவு வழங்கிய மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுள் அன்ஸாரிக்கு அமீரக காங்கிரஸ் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது மஜக பொதுச் செயலாளர் தமீம், இணைப் பொதுச் செயலாளர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாய் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
மஜக சார்பாக அமீரக காங்கிரஸ் செயலாளர் ஜெய்லானிக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சவுதி அரேபியா ஜித்தாவில் தமுமுக நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சவுதி அரேபியா மேற்கு மண்டலம் ஜித்தா மாநகரத்தில்சமுதாய சொந்தங்களுடன் தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி லக்கி தர்பார் உணவகத்தில் மௌலவி அப்துல் காதர் கிராத் ஓத,மாநகர துணை செயலாளர் இலியாஸ் தலைமையில், மண்டல பொறுப்பாளர் அப்துல் மஜித்,மாநகர செயலாளர் ராஜா முஹம்மத், பரக்கத் அலி, அப்துல் அலீம், ஜலால் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கீழை இர்பாஃன், கஸ்ஸாலி ஆகியோரின் சிற்றுரையை தொடர்ந்து தாயகத்திலிருந்து காணொளி வழியாக, அண்ணல் நபி (ஸல்) வழிகாட்டலில் முஸ்லிம் முஸ்லிமல்லாதார் உறவுகள் என்ற தலைப்பில் தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார்..
இந்த நிகழ்ச்சியில் 150க்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டார்கள். இறுதியாக பொறியாளர் ரிள்வான் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாடகர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக, மீண்டும் தமிழக தொலைக்காட்சியில் களம் இறங்குகிறார் அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது.
இலங்கையின் தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் செய்தி வாசிப்பாளர், நேர்முக வர்ணணையாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக கலைஞர் என, பல்லாண்டுகளாக பணியாற்றினார். அத்துடன், ‘பாட்டுக்கு பாட்டு’ என்பது போன்ற நிகழ்ச்சிகளை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் ஹமீதுவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், கணீரென்ற குரலும், கடல் கடந்துவந்து தமிழக மக்களின் காதுகளில் தேனாக பாய்ந்தது. ஹமீதுவின் குரலை மட்டுமே வானொலி வாயிலாகக் கேட்டு குதூகலம் அடைந்த நேயர்கள், அவர் முகத்தை ஒரு முறையேனும் பார்த்து விட மாட்டோமா என ஏங்கிக் கிடந்த காலமெல்லாம் உண்டு.
ஒரு காலகட்டத்தில், அப்துல் ஹமீதுவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, வீடியோ கேசட் பிளேயர் மற்றும் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளின் வீடியோ கேசட் போன்றவைகளை வாடகைக்கு எடுத்து, அப்துல் ஹமீதையும் அவர் பேசும் தமிழ் அழகையும் ரசித்த நேயர்களும் உண்டு.
இந்நிலையில், தனியார் சேட்டிலைட் சேனல் தமிழில் அறிமுகமான புதிதில், ‘சன் டிவி’யில் ஒளிபரப்பான ‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு’ என்ற வேடிக்கை வினோத இசைநிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்துல் ஹமீது. இதன் மூலம், ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே பிரபலமானார்.
இவருடைய தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் வெண்கலக் குரலுக்காகவே தமிழக தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்துல் ஹமீதுவை போட்டி போட்டுக்கொண்டு அழைத்தன. இதையடுத்து, ‘ராஜ் டிவி’, ‘கலைஞர் டிவி’ என ஒரு ரவுண்ட் வந்ததுடன், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இது தவிர, பல்வேறு தொலைக்காட்சி சேனல்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறை பிரபலங்களையும் இவரே பேட்டிகளும் கண்டுள்ளார். அத்துடன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘தெனாலி’, மணிரத்தினத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதன் பிறகு, இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக உலக நாடுகள் பலவற்றுக்கும் பறந்தபடியே இருந்ததால், தமிழக தொலைக்காட்சிகளில் அப்துல் ஹமீதுவை பார்க்க முடியவில்லை. இந்நிலையில், ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் இந்த மாதம் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் -2 இசை நிகழ்ச்சியில் அப்துல் ஹமீது கலந்து கொள்ள இருக்கிறார்.
வழக்கம்போல் தொகுப்பாளராக இல்லாமல், பங்குபெறும் போட்டியாளர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக அப்துல் ஹமீது களம் இறங்குகிறார். ‘சரிகமப’ சீனியர் சீசன் -2 இசை நிகழ்ச்சியின் தூதுவராக, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாருங்கள் அப்துல் ஹமீது அவர்களே… தங்கள் முகத்தைப் பார்க்கவும் வெண்கலக் குரலைக் கேட்கவும் தமிழக நேயர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“நோன்பு கஞ்சி”.. கடல் கடந்து அமீரகத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி வரும் ஈமான் அமைப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நோன்பு என்றாலே பொதுவாக தமிழக மக்களின் மனதில் எழுவது நோன்பு திறக்க பள்ளிகளின் வழங்கப்படும் நோன்பு கஞ்சிதான். பல நூறு ஆண்டு காலமாக இது ஒரு பாரம்பரியமாகவே அனைத்து தொழுகை பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு பாரம்பரியம் என்பதை விட வறுமையில் உள்ள மக்களுக்கு நோன்பு காலமான 30 நாட்களுக்கும் நல்ல உணவாகவும் அமைந்திருக்கும் என்றால் மிகையாது.
காலங்கள் மாறி மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு, அதுவும் முக்கியமாக வளைகுடா நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்ற பிறகு நோன்பு காலங்களில் நோன்பு கஞ்சியின் தேவையை அறிந்து கீழக்கரையை சார்ந்த தனியார் தொழில் நிறுவனத்தை சார்ந்தவார்கள் துபாய் தேரா பகுதியில் உள்ள தொழுகை பள்ளியில் நோன்பு கஞ்சி வழங்க ஆரம்பித்தது இன்று மிகப்பொிய நிகழ்வாக நடைபெறுகிறது என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.. அன்று சிறிய அளவில் தொடங்கிய அப்பணி இன்று வருடந்தோறும் ரமலான் மாதங்களில் நோன்பு திறக்கும் சமயத்தில் சுமார் 6000 பேருக்கு நோன்பு கஞ்சி மற்றும் நோன்பு திறக்கும் திண்பண்டங்களும் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது..
சாதாரண நபராக வெளியில் இருந்து பார்க்கும் பொழுது நோன்பு கஞ்சி வினியோகமாக தொிந்தாலும் இதற்கு பின்னால் பெரும் குழுவே இப்பணியை சிறப்பாக செயல்படுத்த இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் சில தனிநபர்களால் செய்யப்பட்டு வந்த இப்பணி பின்னர் ஈமான் என்ற அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ அமைப்பின் மூலம் இப்பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் இவ்வமைப்புக்கு கீழக்கரையைச் சார்நத பி.எஸ.எம் ஹபீபுல்லாஹ் தலைவராகவும், பொதுச் செயலாளராக ஹமீது யாசீன் மற்றும் இன்ன பிற உறுப்பினர்களை உள்ளடக்கி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த நோன்பு கஞ்சி வினியோகம் செய்வதற்கான பணி நோன்பு தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே தொடங்கி, அதற்கான பிரத்யேக நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டு செய்யப்பட்டு வருகிதறது. மேலும் இப்பணியில் மாற்று நம்பிக்கை கொண்ட சகோதரர்களும் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பான விசயமாகும்.
மேலும் ஈமான் அமைப்பு நோன்பு கஞ்சி வழங்குவதுடன் மற்றும் நிறுத்திவிடாமல் நோன்பு காலம் முழுவதும் துபாய் தேராவில் உள்ள குவைத் பள்ளி என அழைக்கப்ப?டும் லூத்தா பள்ளியில் தினம்தோறும் இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருப்பது சிறப்பம்சமாகும்.
இவ்வமைப்பின் சீரிய பணி சிறக்க வாழ்த்துவதில் கீழைநியூஸ் – சத்தியபாதை இதழ் நிர்வாகம் மகிழ்ச்சி அடைகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சவுதி அரேபியாவில் பல் வேறு பகுதிகளில் கீழக்கரை மக்கள் பரந்து விரிந்து கிடந்தாலும், வர்த்தக தலைநகரான ஜிந்தாவில் அதிகமான கீழக்கரை சகோதரர்கள் வசித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் அனைவரும் சந்திக்கும் விதமாக ஜித்தா ஆர்யா உணவகம், சீனி அலி முதல் நோன்பு அன்றே இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்வது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் கீழக்கரை ஆண்கள் மற்றும் கீழக்கரையை சார்ந்த குடும்பத்தினருக்கு இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஜான்சன் என்பவரது விசைப்படகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகியோர் 1996 மே 4ல் கடலுக்குச் சென்றனர். மே 5ல் கரை திரும்ப வேண்டிய படகு கரை திரும்பவில்லை. விசாரணையில், படகு கடலில் மூழ்கியதில் பரதன் உள்பட 4 பேரை தேடி வருவதாக தகவல் தெரிவித்தனர்.
மாயமான மீனவர்களை பல நாட்களாக தேடிய நிலையில் மாயமானவர்கள் பட்டியலில் பரதன் உள்பட 4 பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்வளத்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்.9 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யூடியூப் சானலில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக என தகவல் வெளியானது. அதில் தனது தந்தை பரதன் பிச்சை எடுக்கும் கும்பலுடன் பரிதாபமான நிலையில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பதை பரதன் குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
இந்நிலையில் பரதன் குடும்பத்தினரை சந்தித்து மீன்வளத்துறை அதிகாரிகள் பரதன் மாயமானது குறித்து எழுத்து பூர்வ மனு பெற்று கொண்டனர். 23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் பரதனை இலங்கையில் இருந்து மீட்டு ஒப்படைக்க வேண்டும். பரதன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரதன் மகள் சரவண சுந்தரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று இரவு (05/05/2019) ரமலான் மாதம் தொடக்கம்… இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் நாளை(06/05/2019) இரவு துவங்குகிறது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இஸ்லாமிய மாதத்தின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம், முஸ்லிம் சமுதாய மக்களின் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகும். இம்மாதத்தில் இஸ்லாமிய மக்கள் முப்பது நாட்கள் நோன்பு இருந்து, ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் வழங்கி, தீய காரியங்களில் இருந்து முற்றுமாக விலகி தூய்மைபடுத்த கூடிய மாதமாக ஏற்று நடப்பார்கள்.
இந்த முப்பது நாட்கள் கழிந்த பின்பு வரும் மாதத்தின் முதல் நாளே “ஈகை திருநாள்” எனப்படும் நோன்பு பெருநாளாகும். நோன்பின் முதல் நாள் பிறையை பார்த்து தொடங்கப்படும், அதன் அடிப்படையில் ஷவ்வால் மாதம் 30 நாட்கள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து இன்று (05/05/2019) சவுதி அரேபியா, மத்திய கிழக்கு நாடுகளில் ரமலான் மாதம் தொடங்கியது. ஆனால் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் ஷவ்வால் மாதம் 29ம் நாளான இன்று (05/05/2019) பிறை தென்படாததால் நாளை (06/05/2019) இரவு முதல் ரமலான் தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களிடையே தமிழ் கலைகளின் அடையாளம் பேணும் விதமாகவும், பள்ளிக்கூட வளர்ச்சி நிதிக்காகவும், ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் ஐக்கிய ராஜ்ஜியம் சார்பில், புலம்பெயர்ந்துள்ளவர்களின் வாழ்வில் தமிழ் அடையாளம் பேணும் கலைகளின் உயர்ச்சிக்காக, ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘பூபாள ராகங்கள்’ எனும் கலைநிகழ்ச்சி லண்டனில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 27ம் தேதி லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்டரில், யாழ்ப்பாணம் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயத்தின் வளர்ச்சி நிதிக்காகவும், தமிழர்களின் கலைகளைப் பேணும் வகையிலும், ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொண்ட ‘பூபாள ராகங்கள் – 10’ கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் செல்வா செல்வராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இலங்கை கல்வித்துறையின் முன்னாள் கூடுதல் செயலர் உடுவை எஸ்.தில்லைநடராஜா, வடகிழக்கு மாகாண முன்னாள் உதவிக் கல்வி இயக்குனர் வல்வை ந.ஆனந்தராஜ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழர்களின் பாரம்பரிய மங்கல வாத்தியங்களான நாதஸ்வரம் மற்றும் தவில் இசை முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து மற்றும் வித்தியாலய கீதம் பாடப்பட்டது.
கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் ரகுநாதன், தலைமையுரை நிகழ்த்தினார். விழாவின் ஒழுங்கமைப்பாளரும், சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான மகாலிங்கம் சுதாகரன் அனைவரையும் வரவேற்று பேசும்போது, “எமது கலைஞர்களுக்கான அரங்காக ‘பூபாள ராகங்கள்’ அமையவேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவை முன்னிட்டு, விழா ஒழுங்கமைப்பாளர் மகாலிங்கம் சுதாகரனால் தொகுக்கப்பட்ட ‘லண்டன் பூபாள ராகங்கள்-10’ எனும் விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதையடுத்து, திருமதி மாதவி சிவலீலன் மலர் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்கினார். தொடர்ந்து ஆசிரியை ராகினி ராஜகோபாலின் நாட்டியாலயா மாணவிகளின் பங்குபெற்ற வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
‘லண்டன் பூபாள ராகங்கள்-10’ எனும் சிறப்பு மலருக்கு, இங்கிலாந்து மகாராணி, ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான இங்கிலாந்து அமைச்சர் மார்க் ஃபீல்ட் மற்றும் கல்வியாளர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடக அதிபர்கள், பிரபல ஊடகவியலாளர்கள் ‘விழா வெற்றியடைய வேண்டும்’ என்று, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ‘ஐரோப்பாவின் முதல் தமிழ்ப் பெண் கீபோர்ட் கலைஞர்கள்’ என்ற பெருமையை பெற்றுள்ள துஷி – தனு சகோதரிகள் நண்பர்களுடன் இணைந்து வழங்கிய ‘கானமழை’ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த ‘பாப்பிசைப் பிதா’ நித்தி கனகரத்தினம், இலங்கையில் இருந்து வந்திருந்த சங்கீத ரத்தினம் என்.ரகுநாதன், கனடாவில் இருந்து வந்திருந்த ‘சூப்பர் சிங்கர்’ புகழ் சரிகா நவநாதன் ஆகியோர் சிறப்பு பாடகர்களாக கலந்து கொண்டனர்.
இவர்களுடன், கம்பர்மலை வித்தியாலயத்தின் பழைய மாணவி மஞ்சுளா சத்தியேந்திரன், லண்டன் இளம் பாடகிகள் நவீனா பிரணவரூபன், அபிநயா மதனராஜா, சந்தோஷ் ராஜநாதன், திசாந்தன் குகதாசன், சேயோன் ராஜநாதன் ஆகியோர் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சிகளை, ‘ஆதவன் டிவி’ மற்றும் ‘ஆதவன் நியூஸ்’ நிறுவனத்தின் தலைமை அதிகாரி எஸ்.கே குணா, ஆனந்த ராணி பாலேந்திரா, மகாலிங்கம் சுதாகரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரருக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய சிறுமி..!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் பாட்டில் வழங்கிய போட்டோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 300க்கும் அதிகமானோர் பலியாகினர்.
தொடர்ந்தும் இலங்கையில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகின்றன.
அதன்படி 29ம் தேதி அன்று, கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி கடற்கரை வீதி தொடங்கி, சாய்ந்தமருது வரையான பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்முனை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் பாட்டில் வழங்குகிறார். அதைப் பெற்றுக்கொண்ட அவர், அந்த சிறுமியின் தலையை அன்புடன் வருடிக்கொடுக்கிறார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த புகைப்படம், வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழை நியூஸ் – சத்தியபாதை மாத இதழ் அறிமுக விழா.. சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை பரிசளிப்பு விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை உசைனியா மஹாலில் 27.04.19 அன்று மாலை சத்தியபாதை கல்வி அறக்கட்டளை சார்பாக சத்திய பாதை மாத இதழின் அறிமுக விழாவும்,+2வில் அதிக மதிப்பெண் எடுத்த கீழக்கரை பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியரை கௌரவப்படுத்தும் விதமாக சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வை மக்கள் நல பாதுகாப்பு கழகம் முகைதீன் இப்ராஹிம் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை ரோட்டரி உறுப்பினர் செல்வநாராயணன் வழங்கினார். அதைத் தொடர்ந்து கீழக்கடாரம் ஜமாஅத் தலைவர் வாழ்த்து வழங்கினார். பின்னர் சத்தியபாதை மாத இதழை அதன் நிறுவனர் செய்யது ஆப்தீன் வெளியிட கீழக்கரை வர்த்தக சங்க தலைவர் சாகுநீ பெற்றுக் கொண்டார்.
பின்னர் சத்தியபாதை இதழின் ஆசிரியர் மற்றும் சத்தியபாதை அறக்கட்டளையின் நிர்வாக செய்யது ஆப்தீன் கூறுகையில் “என் தந்தையின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சத்திய பாதை அறக்கட்டளையின் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் நோக்கில் செயல்படும். மேலும் வரும் காலங்களில் வருடம் +2மாணவர்கள் மட்டுமின்றி 10ம் வகுப்பு மாணவ மாணவியரையும் கௌரவிக்கும் நிகழ்வு வருடந்தோறும் நடைபெறும்” என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியை ஆபிதா, வில் மெடல்ஸ் கலைவாணி, வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக், சத்தியபாதை இதழ் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் சத்தியபாதை அறக்கட்டளையின் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றினர்.
நிகழ்வின் தொடர்ச்சியாக கீழக்கரையில் படித்த 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர் மூலமாக பரிசு, நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகளின் விபரங்கள் கீழே வருமாறு:-
N.ஃபத்தையா பேகம், 577/600, ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளி,
S.ஆமினத் நிஸ்ஃபா, 563/600 ஹமீதிய்யா ஆங்கில வழி மேல் நிலைப்பள்ளி
K.ரிஃபத் ஹசினா, 562/600, இஸ்லாமியா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி
M.சுவாதி, 533/600, ஹைரத்துன் ஜலாலியா மேல் நிலைப்பள்ளி
B.செய்யது ரசியம்மாள், 519/600 மக்தூமியா மேல்
நிலைப்பள்ளி
R.தருண் சாய்ராம், 509/600 ப்யர்ல் ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி
A.ஆதித்யன்., 496/600, ஹமீதியா ஆண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி
M.ஃபாத்திமா ஃபவுமினா, 492/600, முகைதீனியா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி
ஹைருன் இபாதா, 458/600, தீனிய்யா ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி
அத்துடன் கீழக்கரையில் சமூக அக்கறை கொண்டு சமூக பணி செய்து வரும் இரட்டை சகோதரர்களான கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை ஆம்புலன்ஸ் (மற்றும்) நாசா அறக்கட்டளை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுகள் நசுரூதீன், அசாருதீன், மற்றும் பிரவின் மூவரும் பரிசு, நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியாக கீழக்கரை கிழக்கு தெரு ஜமா அத் துணை தலைவர் அஜிஹர் நன்றியுரை வழங்கினார்.
மேலும் இத்தருணத்தில் இந்நிகழ்வின் வெற்றிக்கு அரும்பாடு பட்ட மக்கள் டீம் காதர் மற்றும் மக்கள் தல கழகம் முகைதீன் இபுராஹிம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதில் கீழை நியூஸ் சத்தியபாதை நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“பயங்கரவாதிகள் தமிழகம் வழியாக இலங்கைக்குள் ஊடுருவவில்லை..!” – ஏ.டி.ஜி.பி. தகவல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
“தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகள், தமிழக கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவவில்லை” என்று, கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் கூறினார்.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழக கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தமிழக கடல் பகுதி வழியாக தப்பிவிடாமல் இருக்கவும், தமிழகத்தில் புகுந்து விடாமல் இருக்கவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். 4 கப்பல்களில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, கடலோர பாதுகாப்பு போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடல் பகுதியின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள் நேற்று (25ம் தேதி) ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளுக்குச் சென்றார்.
அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது; “மரைன் உளவுத்துறை போலீஸாரின் தகவலால் தற்போது கடத்தல், அந்நியர் ஊடுருவல் தடுக்கப்பட்டு கடல் பாதுகாப்பு பலமாகி உள்ளது. மரைன் போலீஸாரிடம் உள்ள 24 ரோந்து படகுகள் 3.5 கோடி ரூபாயில் பராமரிப்பு செய்யப்பட உள்ளன.
தமிழக கடல் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு 20 மீட்டர் நீளமுள்ள 19 ரோந்து படகுகளை வழங்கவுள்ளது. தமிழக கடல் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இல்லை. இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் தமிழக கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவவில்லை” என தெரிவித்தார்.
You must be logged in to post a comment.