நமது ஆசிாியாின் பாா்வையில் நயகரா நீா் வீழ்ச்சி …
சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் 73வது இந்திய சுதந்திர தின விழா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணைத்தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி தலைமையில் தம்மாமில் நடைபெற்றது!நிகழ்ச்சியினை சிஹாத் ஹலீல் ரஹ்மான் இறைமறை ஓதி துவக்கி வைத்தார்; தமிழ் மாநில பொதுசெயலாளர் ஹபீபு ரஹ்மான் அனைவரையும் வரவேற்று பேசினார்; இந்திய இறையாண்மையை பேணும் வகையில் ஷாரே…ஜஹான்…கி அச்சா….என்னும் ஒற்றுமை கீதம் பாடப்பட்டது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிஹாத் பிளாக் கமிட்டி தலைவர் ஜாஹிர் ஹுசைன் இந்தியன் சோஷியல் ஃபோரம் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்; எம்முன்னோர்கள் பெற்று தந்த சுதந்திர நாட்டில் முழு சுதந்திரம் பெற்று வாழும் சமூகமாய் நாம் உயர்ந்து நிற்போம் என்னும் பொருள் கொண்ட சுதந்திர தின கவிதையை காயல் சாஹிபு வழங்கினார்.அல்கோபார் சொல்வேந்தர் தமிழ் மன்றத்தின் நிர்வாகி ஹைதர் அலி, இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் நிர்வாகி அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்; இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணம் தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையின் போது:- அரசியல் கட்சி தலைவர்களை வீட்டுக்காவலில் அடைத்து விட்டு, ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்து வைத்து, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போட்டு, தகவல் தொலை தொடர்புகளை துண்டித்து விட்டு தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடினோம் என்று காஷ்மீர் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு வேடிக்கையானது மட்டுமல்ல, வேதனையானதுமாகும் என்றார்.சப் கா விகாஸ் (அனைவருக்குமான வளர்ச்சி) என்னும் மோடி அரசின் அறிவிப்பு அம்பானிக்கும் அதானிகளுக்கும் மட்டுமே பயன்படுவதாகவும் ஏழை,எளிய,நடுத்தர மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தம்மாம் பிளாக் கமிட்டி துணைத்தலைவர் சுலைமான் நன்றியுரை கூறினார்; முன்னதாக வேலூர் சிப்பாய் கலகம் காணொளி தொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தம்மாம்,கோபார்,சிஹாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சுதந்திர தின வாழ்த்தினை பகிர்ந்து கொண்டனர்.
தகவல்: கீழை ஜஹாங்கீர் அரூஸி.
You must be logged in to post a comment.