நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19, 1888ல்நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை மோகனூரில் காவல்துரையில் பணிபுரிந்து வந்தார். இவரது தயார் ஒரு பக்கதியுள்ள பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்பதூரில் பள்ளி கல்வி பயின்றார். 1909ல் பி.ஏ. திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் பயின்றார். இவர் அரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுதாளராகவும் பின்னர் தொடக்க பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.’கத்தி யின்றி ரத்த மின்றியுத்த மொன்று வருகுதுசத்தி யத்தின் நித்தி யத்தைநம்பும் யாரும் சேருவீர்’என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.புகழ்பெற்ற மேற்கோள்கள்:’கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’தமிழன் என்றோர் இனமுன்றுதனியே அதற்கோர் குணமுண்டு”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.நாமக்கல் கவிஞர் பத்ம பூஷண் வெ. இராமலிங்கம் பிள்ளைஆகஸ்ட் 24, 1972ல்தனது 83வது அகவையில், இவ்வுலகை விட்டு பிரிந்தார். கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உலக செய்திகள்
இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியம் – கணினியின் தந்தை சார்லஸ் பாப்பேஜ் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1871).
சார்லஸ் பாபேஜ்(Charles Babbage) டிசம்பர் 26, 1791ல்லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். பெஞ்சமின் பாபேஜ் மற்றும் பெட்ஸி பிளம்லீ டீப் தம்பதியரின் 4 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் சார்லஸ் பாபேஜ்.சார்லஸ் பாபேஜின் தந்தை ஒரு வங்கியாளர் மற்றும் வணிகராக பணியாற்றினார். சார்லஸ் பாபேஜ் தனது ஆரம்பக்கல்வியின் பெரும்பகுதியை தனியார் ஆசிரியர்களிடமிருந்து பெற்றார்.பின்னர் 1810ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலுள்ளகேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழத்தில் இணைந்த இவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.அங்கு அவருக்கு கணிதத்தின் மீதான பற்று அதிகரித்தது. தனது பயிற்றுவிப்பாளரைவிட கணிதத்தைப் பற்றி அதிகம் அறிந்திருந்தார்.1814ம் ஆண்டில், கேம்பிரிட்ஜிலிருந்து சார்லஸ் பாபேஜ் பட்டம் பெற்ற அதே ஆண்டு ஜார்ஜியானா விட்மோர் என்பவரை மணந்தார்.
சார்லஸ் பாப்பேஜ் பட்டம் பெற்ற பிறகு, அரசு நிறுவனத்தில் வானியல் பற்றிய விரிவுரைகள் மற்றும் 1816ல், அரசு சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது, கணிதப் பாடங்களில் ஏராளமான பிழைகள் இருப்பது கண்டு அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிழைகளைச் சரிசெய்ய ஒரு கருவியை உருவாக்க எண்ணினார். அதற்காகவே கணிதத்தில், Differential Equations தீர்வு செய்து, தானாகக் கணக்கிடும் கருவியை 1822 இல் கண்டுபிடித்தார்.மேலும் சார்லச் பாப்பேஜ்1882ல் வேறுபாட்டியல் நிகர்ப்பாடுகளை தீர்வு செய்யக்கூடிய வேறுபாட்டுப் பொறி Difference Engine என்னும் எந்திரத்தை உருவாக்கினார். இதுவே இன்றைய கணினியின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது.
வேறுபாட்டுப் பொறியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, 1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்து பகுப்பாய்வுப்பொறி Analytical Engine என்ற முதல் கணினியை சார்லஸ் உருவாக்கினார்.கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.அவருடன் ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான அடா லவ்லேஸ் வடிவமைப்பில் உதவ, ஆணைகள் அடங்கிய நிரலை (Program) உருவாக்கினார். இதன்மூலம் உலகின் முதல் கணினி நிரலர் (Computer Programmer) என்னும் பெருமையை அடா பெற்றார். ஒரு நிமிடத்திற்கு 60 வகையான கணிதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை இந்த நிரலால் தீர்க்க முடிந்தது. இந்த இயந்திரம் நவீன கணிப்பொறி போன்றே இருக்கும் என்பதுதான் அதன் சிறப்பம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும், அதிகாரப்பூர்வமாக 1948 ஆம் ஆண்டில்தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு டிரான்சிஸ்டர் (Transistor) கண்டுபிடிக்கப்பட்டு அதுவரை இருந்த வெற்றிடக் குழல் (Vacuum Tube) மாற்றப்பட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகள் உருவாகின.
மேலும் வாகனமங்களின் வேகமானி,கண் பரிசோதனைக்கருவி,புகையிரதத்தின் டைனமோ மீட்டர்,சீரான அஞ்சல் கட்டண முறை,கலங்கரை விளக்கு ஒளி,கீறிவிச் ரேகைக் குறியீடு,சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி,மணிச்சட்டம்,நேப்பியர் கருவி,பாஸ்கல் இயந்திரம்,டிபரன்ஸ் இயந்திரம்போன்றவற்றையும் கண்டுபிடித்தார்.இவர் கண்டுபிடித்த கம்ப்யூட்டரை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. அதன் எடை ஆயிரம் கிலோ. அந்தக் கம்ப்யூட்டரின் வேகமும் மிகவும் குறைவு. ஆனால், தற்போதைய சாதாரண கம்ப்யூட்டர்களில் நினைவாற்றல் அந்த முதல் கம்ப்யூட்டரின் நினைவாற்றலை விட 10 லட்சம் மடங்கு அதிகம்.என்னதான் இன்றைக்கு நாம் நவீன உலகத்தில் பயணித்துகொண்டு இருந்தாலும் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களுமே அந்த காலத்தின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது என்னும்போது அவர்களின் தொலைநோக்கு பார்வை நம்மை சிந்திக்க வைக்கிறது.
கணினியின் தந்தை சார்லஸ் பாப்பேஜ்அக்டோபர்18, 1871ல்தனது 79வது அகவையில், லண்டனில்இவ்வுலகை விட்டு பிரிந்தார்.இவரது மூளை இங்கிலாந்திலுள்ள Hunterian Museum இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியமான ஒன்றாகிவிட்டது.ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கணினி இல்லை என்றால் தற்போது உலகம் இயங்காது என்றுக்கூட சொல்லலாம் அப்படிப்பட்ட கணினியை முதலில் கண்டு பிடித்தவர் சார்லஸ் பாபேஜ்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்சுற்று விதி, நிறப்பிரிகைமற்றும் வெப்பக் கதிர்வீச்சு விதி ஆராய்ச்சி செய்தகுஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப்நினைவு தினம் இன்று (அக்டோபர் 17, 1887).
குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் (Gustav Robert Kirchhoff) மார்ச்12, 1824ல் கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோயின்க்ஸ்பேர்க்கில் கல்வி கற்றார். பிறகு அல்பெனிய பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1833 ஆம் ஆண்டில் கோனிஸ்ஸ்பெர்க் நகரில் ஒரு கணித-இயற்பியல் கருத்தரங்கை பிரான்சு நியூமன் மற்றும் ஜாகோபி ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுடன், அவர்களது மாணவர்கள் ஆராய்ச்சியின் முறைகள் அறிமுகப்படுத்தினர். கிர்ஹோஃப் 1843 முதல் 1846 வரை நியூமன்-ஜாகோபிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.1847ல் கோன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் கணித-இயற்பியலில் பட்டம் பெற்றார்.கிர்ச்சாஃப்பிரஸ்லாவ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். வேதியியல் களத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார்.கோனிஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ் பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21 வயதில் வெளியிட்டார். இது மின்னோட்டம், மின்னழுத்தம், மின்சார நெட்வொர்க்குகளில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றை கணக்கிடப் பயன்பட்டது.கிர்க்காஃபின் விதிகள் (Kirchhoff’s circuit laws) மின்சுற்றுகளில் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு:கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதிஎந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகை, வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும். [அல்லது] ஒரு மின்சுற்றில், எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும். இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதிஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகை சுழியாகும். இது ஆற்றல் அழியாமையின் விளைவாகும்.ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து நிறமாலையியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 1854-ல் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தனர். இவை மின் பொறியியல் துறைக்கு மிகவும் பயன்படும் தனிமங்களாகத் திகழ்கின்றன.மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857-ல் முதன்முதலாக கண்டறிந்து கூறினார். வெப்ப வேதியியல் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.பொருட்களில் வெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் வேதி வினை குறித்து ஆராய்ந்தவர். 1859-ல் வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். ஒரு பொருளில் இருந்து அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை விளக்கினார். இதை 1861ல் நிரூபித்தார்.தன் மீது விழும் அனைத்து மின்காந்தக் கதிர்வீச்சையும் ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடைய ‘கரும்பொருள்’, கதிர்வீச்சின் நிறமாலைக்கு ஏற்ப வெப்பத்தை உமிழ்கிறது எனக் கண்டறிந்தார். இதற்கு ‘கரும்பொருள் கதிர்வீச்சு’ என்ற பதத்தை 1862ல் முதன்முதலாக பயன்படுத்தினார். இவரது இந்த ஆய்வுகள் குவான்டம் விசையியல் துறை உருவாக வழிவகுத்தது.கணித இயற்பியல் துறையில் இவரது விரிவுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக ‘ரூம்ஃபோர்டு’ பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம், பெல்லோவ் ஆஃப் ராயல் சொசைட்டி எடின்பர்க் (1868) உள்ளிட்ட பல பரிசுகளை வென்றார்.மின்சுற்று விதி, நிறப்பிரிகைமற்றும் வெப்பக் கதிர்வீச்சு விதி ஆராய்ச்சி செய்தகுஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப்அக்டோபர் 17, 1887ல் தனது 67வது அகவையில், பெர்லினில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.சந்திரனில் உள்ள பள்ளம் கிர்க்காஃப் என்று பெயரிடப்பட்டது. சுயசரிதைகள் பட்டியலில் 90 வது இடம் பிடித்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு.உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16).
உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூற ஐக்கிய நாடுகள் இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.இத்தாலியில் ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு, விவசாய அமைப்பென அறியப்படும் ‘ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், விவசாயத்தையும், உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும், சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது. இதன் இலச்சினையிலுள்ள fiat panisஎன்பதன் பொருளானது “ரொட்டி ஆவது மனிதனுக்கு இருக்கவேண்டும்” என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் 1945 ஆம் ஆண்டு கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது. ஆண்டு தோறும் ரோமில் உணவு விவசாய நிறுவன தலைமையகத்தில் பிரதான வைபவம் இடம் பெறுவது வழமையாகும். ஏப்ரல் 11, 2006ல் 190 அங்கத்துவ நாடுகளைக் கொண்டிருந்த இவ்வமைப்பில் தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.இந்த அமைப்பின் முதன்மை இலக்குகளை நோக்குமிடத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல், இந்நாட்டு மக்களின் போஷாக்கினை அதிகரித்தல், உணவு, விவசாயம், காடுகள், மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல், இவை குறித்து அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல், உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அவை தொடர்பாக பக்க சார்பற்ற கொள்கைகளை உருவாக்குதல் போன்றனவாகும்.
உலகளாவிய ரீதியில் உணவு விவகாரம் தொடர்பிலான ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 20வது பொது மாநாட்டில் அதாவது நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இத்தினம் சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வமைப்பின் ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது இந்நாள் கொண்டாடப்படுகிறது.நிதி நெருக்கடி, தானிய நெருக்கடியைத் தீவிரமாக்கியது என்று ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகளும் நிபுணர்களும் குறிப்பிட்டிருந்தனர். குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து, நிதி நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியளித்து, நெருக்கடியைக் கூட்டாகச் சமாளிக்குமாறு பல்வேறு நாடுகளுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் விளைவாக தானியப் பாதுகாப்பு நனவாக்கப்பட முடியும் என்று அது கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளதை இவ்விடத்தில் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார்(2009) இது பற்றிக் கூறுகையில், உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும் என்றார். உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டியது காலத்தின் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.உணவு கிடைக்காமலும், போதிய போசாக்கின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் இந்த யுகத்தில் ஆச்சரியப்பட வேண்டிய ஓர் தகவலாகும். அதே நேரம் பல பில்லியன் கணக்கான டாலர்களை சந்திரனையும், வான்வெளியையும் ஆராய மேற்குலக நாடுகள் செலவளித்துக் கொண்டிருக்கிறன.உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும், கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171டாலராக அதிகரித்துள்ளதெனவும் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது எனக்கூறப்படுகிறது. ஆப்பிரிக்கா முழுவதிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய்விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் பட்டினி மற்றும் போசாக்கான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது.1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளில் இது இலேசான உயர்வைக் காட்டி நிற்கின்றது. ஆனால் போதுமானதாக இல்லை.
உணவு உற்பத்தியை அதிகரித்தால் தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.கடந்த மூன்று வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் உலகமானது அது உற்பத்தி செய்வதைவிட கூடுதலான அளவு நுகர்கிறது என்பது மட்டும் நிச்சயம்” என பான் கீமூன் குறிப்பிட்டிருந்தார். எண்ணெய் விலைகள் உயர்ந்தமை, அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, இயற்கை அனர்த்தங்கள் என்பனவே உலக உணவு விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தாரே…
-புறநானூறு சொல்லும் புறக்கணிக்கப்பட முடியாத உண்மை.
உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம்.உணவின்றி அமையாது உலகு.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
உற்பத்தியைப் பெருக்கத் தெரியாமல், நிலங்களை முழுமையாய் பயன்படுத்த அறியாமல் இருந்த சமூகங்களின் வளர்ச்சியில், உணவின் தேவைக்காக நாடுகள் அனைத்திலும் நடந்த போர்களின் செய்திகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்து கிடக்கின்றன.ஆனால் இன்று அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் விவசாயத்தில் எத்தனை எத்தனை முன்னேற்றங்கள்.இருந்தபோதும் வறுமை,பஞ்சம்,உணவுப் பற்றாக் குறை ஏன் இருக்கின்றன? அன்றாடம் அன்னத்திற்கு அலைவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதின் காரணம்? இந்த கேள்விகளுக்கு விடை கண்டறிய வேண்டியது மிக மிக அத்தியாவசியமானது-உணவைப்போலவே.இதன் காரணமாகத்தான் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இன்று ஆண்டுதோறும் உலக உணவு நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நிகழ்வுகள் என இன்று நடைபெறுவது வழக்கம்.
தற்போது காணப்படும் எரிசக்திப் பிரச்னைகளைப்போல் 2050ல் தோன்றும் உணவுப் பிரச்னை, அரசியலை நிலையற்றதாக மாற்றிவிடும் என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. இந்த நூற்றாண்டின் மத்திக்குள் மக்கள் தொகை 30 சதவிகிதம் அதிகரித்து 9 பில்லியனாக மாறும் என்பது மக்கள் தொகைக் கணக்கீட்டாளர்களின் மதிப்பீடு. அதன்படி வரும் உணவுத் தேவைகளை சமாளிக்க 70 சதவிகித உற்பத்தி அதிகரிக்கப்படவேண்டும். ஆனால் ஆண்டிற்காண்டு உணவு உற்பத்தியின் விழுக்காடு குறைந்துகொண்டே போகிறது.மேலும், விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உடல்பருமன் போன்றவை ஒன்றுடன் ஒன்று இணைந்த விஷயங்கள் ஆகும். ஏற்கனவே உலகளவில் எட்டில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களில் 75 சதவிகிதத்தினர் நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பங்களும் எளிய, சிறு விவசாயிகளைச் சென்றடைவதில்லை. இந்த முறைகள் மாற்றப்பட்டு உணவுத் தேவைகளை சமாளிக்கும் புதிய நுட்பங்களும் கண்டறியப்படுதல் வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.
Source By: வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னாடாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்பிறந்த தினம் இன்று (அக்டோபர் 15, 1931).இளைஞர் எழுச்சிநாள்.
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) அக்டோபர் 15, 1931ல்தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால், இளம் வயதிலேயே, இவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும் இருந்தார்.
இராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூயவளன் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். பின்னர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.கலாம் ஒரு உயர்தரத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து மனக்குறை ஆனதோடு, இரண்டு நாட்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வுவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லூரி தலைவரின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் “நான் உனக்கு அதிக பளு கொடுத்து எளிதில்லாத காலக்கெடுவை விதித்தேன்” என்று கூறினார்.
சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித மனக்குறையுடன் இருந்தார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ்.எல்.வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ்.எல்.வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980ல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் எஸ்.எல்.வி திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய விண்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார்.
1969ல், கலாம் அரசாங்கத்தின் இசைவு பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். 1970லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.கலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் பதிலியாக அழைக்கப்பட்டார். 1970ல், எஸ்.எல்.வி விண்வெளிக்கலனைப் பயன்படுத்தி ரோகினி-1 விண்வெளியில் ஏவப்பட்டது, இஸ்ரோவின் சாதனை ஆகும். 1970களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் தலைவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் மத்திய அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் தலைமைப்பங்கு வகித்தார்.
அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் மரியாதையால், 1980களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் முனைவர் வி.எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர். வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடுவணரசின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை, ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக பேசப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார்.
சோதனை கட்டத்தில் கலாம், ஆர். சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது.1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “கலாம், ராஜூ ஸ்டென்ட்” என பெயரிடப்பட்டது. 2012ல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி “கலாம், ராஜூ டேப்லெட்” என்று பெயரிடப்பட்டது.
அப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார். 10 ஜூன் 2002 ல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார்.கலாம் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.
அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.அறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999ல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.அவர் அவரது சொந்த வார்த்தைகளில் “நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது.இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னா ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ஜுலை 27, 2015ல்தனது 86வது அகவையில் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில்இவ்வுலகை விட்டு பிரிந்தார்.இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜுலை 30,2015ல், மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த, கலாமை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாள், தமிழகத்தில்இளைஞர் எழுச்சி நாளாக2015 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எண்ணெய் விளக்கின் (ஆர்கண்ட் விளக்கு) வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தியஅய்மே ஆர்கண்ட் நினைவு தினம் இன்று (அக்டோபர் 14, 1803).
அய்மே ஆர்கண்ட் (Aime Argand) ஜூலை 5, 1750ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர், ஃபிராங்கோயிஸ் பியேர் அமி ஆர்கண்ட். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர். அய்மே ஆர்கண்ட் ஒரு மதகுரு ஆகவேண்டும் என அவரது தந்தையார் விரும்பினார். ஆனால் இவருக்கு அறிவியல் மீதே அதிக ஆர்வம் இருந்தது. இதனால், புகழ் பெற்ற தாவரவியலாளரும், காலநிலையியலாளருமான ஹோராஸ்-பெனடிக்ட் டி சோசுரே என்பவரிடம் மாணவராகச் சேர்ந்தார். இவர் தனது இருபதுகளின் பிற்பகுதியில் பாரிசில் இருந்தபோது காலநிலையியல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பின்னர் இவர் வேதியியல் ஆசிரியராகப் பணியேற்றுக் கொண்டார். வைனிலிருந்து பிராந்தி தயாரிக்கும் முறையை மேம்படுத்திய இவர், தனது சகோதரருடன் இணைந்து வடிசாலை ஒன்றை அமைத்தார்.
1780 ஆம் ஆண்டில், வழக்கமான எண்ணெய் விளக்கில் மேம்பாடுகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார். அடிப்படை யோசனை ஒரு உருளை விக் வேண்டும், இது காற்று வழியாகவும் சுற்றிலும் பாயக்கூடும், உற்பத்தி செய்யப்படும் ஒளியின் தீவிரத்தை அதிகரிக்கும். ஒரு உருளை புகைபோக்கி காற்று ஓட்டத்தை மேம்படுத்தியது மற்றும் தொடர்ச்சியான சோதனைகள் உகந்த செயல்பாட்டிற்கான விகிதாச்சாரத்தை அளித்தன. விக்கை உயர்த்துவதற்கும் குறைப்பதற்கும் ஒரு வழிமுறை சில சரிசெய்தல் மற்றும் தேர்வுமுறை ஆகியவற்றை அனுமதித்தது. ஒளி ஒரு மெழுகுவர்த்தியை விட மிகவும் பிரகாசமாக இருந்தது. (ஐந்து முதல் பத்து காரணி மூலம்), சுத்தமாக எரிக்கப்பட்டது. மெழுகுவர்த்தியைப் பயன்படுத்துவதை விட மலிவானது. 1783 ஆம் ஆண்டில், ஆர்கண்ட் பிரான்சில் மாண்ட்கோல்பியர் சகோதரர்களான ஜாக்-எட்டியென் மற்றும் ஜோசப்-மைக்கேல் ஆகியோரைச் சந்தித்தார் மற்றும் ஒரு சூடான காற்று பலூனைத் தயாரிப்பதற்கான அவரது பரபரப்பான சோதனைகளுடன் நெருக்கமாக ஈடுபட்டார்.
அங்கு இருந்தபோது, அவரது அறிமுகமான அன்டோயின்-அரோல்ட் குயின்கெட், ஒரு ஆரம்ப முன்மாதிரியைக் காட்டியவர். சிறிய மாற்றங்களுடன் விளக்குகளை தானே தயாரிக்கத் தொடங்கினார். மேலும் காப்புரிமை மீறலுக்காக நீடித்த சட்டப் போரை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார். வணிக ரீதியான வெற்றியாக இருக்கக்கூடிய விளக்கை வெற்றிகரமாக உருவாக்க பல சிக்கல்கள் கலந்து கொண்டன. அர்காண்ட் அவர்கள் அனைவரையும் பரிசோதித்தார். நடைமுறை சமரசங்களைத் தேடினார். விக்கின் வடிவமைப்பு தயாரிப்பு ஒரு லேஸ்மேக்கரால் தீர்க்கப்பட்டது. சூடான சுடருக்கு அடுத்ததாக பயன்படுத்த வேண்டிய கண்ணாடி வகை இறுதியில் தீர்க்கப்பட்டது. பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான எண்ணெய்களும் சோதிக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்த சுத்திகரிக்கும் முறைகள் பல சோதனைகளுக்கு உட்பட்டவை.
திமிங்கல எண்ணெய் இறுதியில் குடியேறியது. இது இறுதியில் ஒரு முக்கியமான புதிய தொழிலை உருவாக்கியது. விக்கைப் பிடித்து அதை மேலும் கீழும் நகர்த்துவதற்கான வழிமுறை பல மாறுபாடுகளைக் கடந்து சென்றது. எண்ணெய் தேக்கத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சாலிடர் கூட மென்மையான சாலிடர் மூட்டுகள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விளக்கின் கண்டுபிடிப்பு ஒரே ஒரு கண்டுபிடிப்பைக் கொண்டிருக்கவில்லை, மாறாக முழுமையான பகுதிகளின் மேம்பாடு அனைத்துமே ஒன்றிணைந்து செயல்படுகின்றன. எடிசனின் மின் விளக்கு அமைப்பைக் கண்டுபிடித்ததைப் போலல்லாமல், மீண்டும் நூற்றாண்டு பின்னர் ஒரு விளக்குகளை புரட்சிகரமாக்கியது. ஆர்காண் தனது விளக்கை இங்கிலாந்தில் தயாரிக்க தீர்மானித்தார். விளக்கை தயாரிப்பதற்காக அவர் இறுதியில் வில்லியம் பார்க்கர் மற்றும் மத்தேயு போல்டன் ஆகியோருடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். 1784 ஆம் ஆண்டில், அவர் தனது வடிவமைப்பிற்கான காப்புரிமையைப் பெற்றார்.
ஆர்காண்ட் ஜேம்ஸ் வாட் உடன் நெருங்கிய உறவையும் ஏற்படுத்தினார், அவர் விளக்குகளின் செயல்திறன் குறித்து சில பரிசோதனைகளைச் செய்தார் மற்றும் அவரது நீதிமன்றப் போர்களை நடத்துவதற்கு அறிவுறுத்தினார். விளக்குகளுக்கான தேவை அதிகமாக இருந்தது, அவற்றை உற்பத்தி செய்வதில் கூட்டாளர்களுக்கு முதலில் பல சிரமங்கள் இருந்தன, ஆனால் அவை இறுதியில் வீடுகளிலும் கடைகளிலும் வெளிச்சத்தின் நிலையான ஆதாரமாக மாறியது. பல பின்பற்றுபவர்கள் மற்றும் மேம்படுத்துபவர்கள் புதிய மாறுபாடுகளை உருவாக்கினர். மேலும் அடுத்த தசாப்தங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் அவற்றைத் தயாரித்தன. இவர் புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது. 1850ல் மண்ணெண்ணெய் விளக்கு பதிலாக ஆர்கண்ட் விளக்கு பயன்படுத்தப்பட்டது. விளக்கு கண்டுபிடிப்பு, இறுதியில், ஆர்காண்டிற்கு லாபகரமானதாக இல்லை. எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்திய அய்மே ஆர்கண்ட் அக்டோபர் 14, 1803ல் தனது 53வது அகவையில், ஜெனீவாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புள்ளி-தொடர்பு டிரான்சிஸ்டர் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற வால்டர் ஹவுசர் பிராட்டேன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 13, 1987).
வால்டர் ஹவுசர் பிராட்டேன் (Walter Houser Brattain) பிப்ரவரி 10, 1902ல் அமெரிக்க பெற்றோர்களான ரோஸ் ஆர்.பிராட்டெய்ன் மற்றும் ஒட்டிலி ஆகியோருக்கு குயிங் சீனாவின் புஜியனில் உள்ள அமோய்ல் (ஜியாமென்) பிறந்தார். ரோஸ் ஆர்.பிராட்டன் டிங்-வென் நிறுவனத்தில் சீன சிறுவர்களுக்கான ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஒட்டிலி ஹவுசர் பிராட்டெய்ன் ஒரு திறமையான கணிதவியலாளர் ஆவார். இருவரும் விட்மேன் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள். ஒட்டிலி மற்றும் குழந்தை வால்டர் 1903ல் அமெரிக்காவிற்குத் திரும்பினர். ரோஸ் சிறிது காலத்திற்குப் பின் தொடர்ந்தார். இந்த குடும்பம் வாஷிங்டனின் ஸ்போகேனில் பல ஆண்டுகள் வாழ்ந்தது. 1911ல் வாஷிங்டனின் டோனாஸ்கெட் அருகே ஒரு கால்நடை பண்ணை அருகில் குடியேறினார். பிராட்டன் வாஷிங்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஒரு வருடம் சியாட்டிலிலுள்ள குயின் அன்னே உயர்நிலைப் பள்ளியிலும், இரண்டு ஆண்டுகள் டோனாஸ்கெட் உயர்நிலைப் பள்ளியிலும், ஒரு வருடம் பைன்பிரிட்ஜ் தீவில் உள்ள சிறுவர்களுக்கான மோரன் பள்ளியில் பயின்றார்.
பிராட்டன் பின்னர் வாஷிங்டனின் வல்லாவில் உள்ள விட்மேன் கல்லூரியில் பயின்றார். அங்கு பெஞ்சமின் எச்.பிரவுன் (இயற்பியல்) மற்றும் வால்டர் ஏ.பிராட்டன் (கணிதம்) ஆகியோருடன் பயின்றார். 1924 ஆம் ஆண்டில் விட்மானிடமிருந்து இளங்கலை பட்டம் பெற்றார். இயற்பியல் மற்றும் கணிதத்தில் இரட்டைப் பட்டம் பெற்றார். பிராட்டன் 1926ல் யூஜினில் உள்ள ஓரிகான் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும், 1929ல் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எச்.டி பட்டத்தையும் பெற்றார். மினசோட்டாவில், ஜான் ஹாஸ்ப்ரூக் வான் வ்லெக்கின் கீழ் குவாண்டம் இயக்கவியலின் புதிய துறையைப் படிக்க பிராட்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜான் டி.டேட் மேற்பார்வையிட்ட அவரது ஆய்வறிக்கை, மெர்குரி நீராவியில் எலக்ட்ரான் தாக்கம் மற்றும் ஒழுங்கற்ற சிதறல் ஆகியவற்றால் உற்சாகத்தின் செயல்திறன் ஆகும். வால்டர் பிராட்டன் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி வேதியியலாளர் கெரன் கில்மோர். அவர்கள் 1935 இல் திருமணம் செய்து கொண்டனர். 1943ல் வில்லியம் ஜி. பிராட்டெய்ன் என்ற மகனைப் பெற்றார். கெரன் கில்மோர் பிராட்டேன் ஏப்ரல் 10, 1957 அன்று இறந்தார். அடுத்த ஆண்டு, பிராட்டன் மூன்று குழந்தைகளின் தாயான திருமதி எம்மா ஜேன் (கிர்ச்) மில்லரை மணந்தார்.
1927 முதல் 1928 வரை பிராட்டன் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள தேசிய பணியகங்களில் பணியாற்றினார். அங்கு அவர் பைசோ எலக்ட்ரிக் அதிர்வெண் தரங்களை உருவாக்க உதவினார். ஆகஸ்ட் 1929ல் அவர் ஆராய்ச்சி இயற்பியலாளராக பெல் தொலைபேசி ஆய்வகங்களில் ஜோசப் ஏ.பெக்கருடன் சேர்ந்தார். காப்பர் ஆக்சைடு திருத்தியில் சார்ஜ் கேரியர்களின் வெப்ப-தூண்டப்பட்ட ஓட்டத்தில் இருவருமே பணியாற்றினர். அர்னால்ட் சோமர்ஃபெல்ட் ஆற்றிய சொற்பொழிவில் பிராட்டெய்ன் கலந்து கொள்ள முடிந்தது. தெர்மோனிக் உமிழ்வு குறித்த அவர்களின் அடுத்தடுத்த சோதனைகள் சில சோமர்ஃபெல்ட் கோட்பாட்டிற்கான சோதனை சரிபார்ப்பை வழங்கின. டங்ஸ்டனின் மேற்பரப்பு நிலை மற்றும் பணி செயல்பாடு மற்றும் தோரியம் அணுக்களின் உறிஞ்சுதல் ஆகியவற்றிலும் அவர்கள் வேலை செய்தனர். ஒரு குறைக்கடத்தியின் இலவச மேற்பரப்பில் பணி நோபல் பரிசுக் குழுவால் திட நிலை இயற்பியலுக்கான அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக கருதப்பட்டது. அந்த நேரத்தில், தொலைபேசி தொழில் எலக்ட்ரான் ஓட்டத்தை கட்டுப்படுத்தவும் மின்னோட்டத்தை பெருக்கவும் வெற்றிட குழாய்களைப் பயன்படுத்துவதை பெரிதும் சார்ந்தது. வெற்றிட குழாய்கள் நம்பகமானவை அல்லது திறமையானவை அல்ல.
பெல் ஆய்வகங்கள் ஒரு மாற்று தொழில்நுட்பத்தை உருவாக்க விரும்பின. 1930 களின் முற்பகுதியில், பிராட்டன் வில்லியம் பி.ஷாக்லியுடன் ஒரு செமிகண்டக்டர் பெருக்கியின் யோசனையில் பணியாற்றினார். இது காப்பர் ஆக்சைடைப் பயன்படுத்தியது. இது ஒரு கள விளைவு டிரான்சிஸ்டரை உருவாக்குவதற்கான ஆரம்ப மற்றும் தோல்வியுற்ற முயற்சி. பெல் மற்றும் பிற இடங்களில் உள்ள பிற ஆராய்ச்சியாளர்களும் ஜெர்மானியம் மற்றும் சிலிக்கான் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி குறைக்கடத்திகளில் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். ஆனால் போருக்கு முந்தைய ஆராய்ச்சி முயற்சி ஓரளவுக்கு இடையூறாக இருந்தது மற்றும் வலுவான தத்துவார்த்த அடிப்படை இல்லை. இரண்டாம் உலகப் போரின்போது, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு ஆய்வுக் குழுவுடன் நீர்மூழ்கிக் கப்பல்களைக் காந்தமாகக் கண்டறிவது குறித்த ஆராய்ச்சியில் பிராட்டேன் மற்றும் ஷாக்லி இருவரும் தனித்தனியாக ஈடுபட்டனர். நீர்மூழ்கிக் கப்பல்களால் ஏற்படும் பூமியின் காந்தப்புலத்தில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறியும் அளவுக்கு பிராட்டனின் குழு காந்த அளவீடுகளை உருவாக்கியது.
1945 ஆம் ஆண்டில், பெல் லேப்ஸ் மறுசீரமைக்கப்பட்டு, தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய திட நிலை இயற்பியலில் அடிப்படை ஆராய்ச்சி செய்ய ஒரு குழுவை உருவாக்கியது. துணைத் துறையை உருவாக்குவது துணைத் தலைவரான மெர்வின் கெல்லியால் அங்கீகரிக்கப்பட்டது. ஒரு இடைநிலைக் குழு, இது ஷாக்லி மற்றும் ஸ்டான்லி ஓ. மோர்கன் ஆகியோரால் இணைக்கப்பட்டது. புதிய குழுவில் விரைவில் ஜான் பார்டீன் இணைந்தார். 1930களில் ஜான் மற்றும் வால்டரை அறிமுகப்படுத்திய பிராட்டனின் சகோதரர் ராபர்ட்டின் நெருங்கிய நண்பர் பார்டீன். பார்டீன் ஒரு குவாண்டம் இயற்பியலாளர். பிராட்டேன் பொருள் அறிவியலில் ஒரு சிறந்த பரிசோதகர் மற்றும் அவர்களின் அணியின் தலைவரான ஷாக்லி திட-நிலை இயற்பியலில் நிபுணர். அந்தக் காலக் கோட்பாடுகளின்படி, ஷாக்லியின் புலம் விளைவு டிரான்சிஸ்டர், சிலிக்கான் மெல்லியதாக சிலிகான் பூசப்பட்டு ஒரு உலோகத் தகடுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும். அது ஏன் இல்லை என்று கண்டுபிடிக்க அவர் பிராட்டேன் மற்றும் பார்டீனுக்கு உத்தரவிட்டார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இருவரும் பலவிதமான சோதனைகளை மேற்கொண்டனர். ஷாக்லியின் சாதனம் ஏன் பெருக்காது என்பதை தீர்மானிக்க முயன்றது. பார்டீன் ஒரு புத்திசாலித்தனமான கோட்பாட்டாளர். பிராட்டேன், சமமாக முக்கியமாக, “குறைக்கடத்திகளில் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு உள்ளுணர்வு உணர்வைக் கொண்டிருந்தார்”. நடத்தத் தவறியது மேற்பரப்பில் உள்ள உள்ளூர் மாறுபாடுகளின் விளைவாக இருக்கலாம் என்று பார்டீன் கோட்பாடு செய்தார்.
பிராட்டேன் மற்றும் பார்டீன் ஆகியோர் தங்க உலோகப் புள்ளியை சிலிக்கானுக்குள் தள்ளி, வடிகட்டிய நீரில் சுற்றுவதன் மூலம் ஒரு சிறிய அளவிலான பெருக்கத்தை உருவாக்க முடிந்தது. சிலிக்கானை ஜெர்மானியத்துடன் மாற்றுவது பெருக்கத்தை மேம்படுத்தியது. ஆனால் குறைந்த அதிர்வெண் நீரோட்டங்களுக்கு மட்டுமே. டிசம்பர் 16 அன்று, பிராட்டேன் இரண்டு தங்க இலை தொடர்புகளை ஒரு ஜெர்மானியம் மேற்பரப்பில் ஒன்றாக இணைக்கும் முறையை வகுத்தார். பிராட்டேன் அறிவித்தார்: “இந்த இரட்டை புள்ளி தொடர்பைப் பயன்படுத்தி, ஒரு ஜெர்மானியம் மேற்பரப்பில் 90 வோல்ட் அனோடைஸ் செய்யப்பட்டு, எலக்ட்ரோலைட் H2O இல் கழுவப்பட்டு, அதன் மீது சில தங்க புள்ளிகள் ஆவியாகிவிட்டன. தங்க தொடர்புகள் வெற்று மேற்பரப்பில் அழுத்தப்பட்டன. மேற்பரப்புக்கான இரு தங்க தொடர்புகளும் நேர்த்தியாக சரிசெய்யப்பட்டன. ஒரு புள்ளி ஒரு கட்டமாகவும் மற்ற புள்ளி ஒரு தட்டாகவும் பயன்படுத்தப்பட்டது. கட்டத்தில் உள்ள சார்பு (டி.சி) பெருக்கத்தைப் பெறுவதற்கு நேர்மறையாக இருக்க வேண்டும்.
பார்டீன் விவரித்தபடி, “தங்க இடத்துடனான ஆரம்ப சோதனைகள் உடனடியாக ஜெர்மானியம் தொகுதிக்குள் துளைகள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், மேற்பரப்புக்கு அருகிலுள்ள துளைகளின் செறிவை அதிகரிப்பதாகவும் பரிந்துரைத்தன. இந்த நிகழ்வை விவரிக்க உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பாளர் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரே கேள்வி சேர்க்கப்பட்ட துளைகளின் கட்டணம் எவ்வாறு ஈடுசெய்யப்பட்டது. எங்கள் முதல் எண்ணம் கட்டணம் மேற்பரப்பு நிலைகள் ஈடுசெய்யப்பட்டது. ஷாக்லி பின்னர் கட்டணம் மொத்தமாக எலக்ட்ரான்களால் ஈடுசெய்யப்படுவதாக பரிந்துரைத்தார் மற்றும் சந்தி டிரான்சிஸ்டர் வடிவவியலை பரிந்துரைத்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் புள்ளி-தொடர்பு டிரான்சிஸ்டரில் இரண்டும் நிகழக்கூடும் என்று பிராட்டெய்னும் நானும் காட்டினோம். டிசம்பர் 23, 1947ல், வால்டர் பிராட்டேன், ஜான் பார்டீன் மற்றும் வில்லியம் பி. ஷாக்லி ஆகியோர் பெல் ஆய்வகங்களில் தங்கள் சகாக்களுக்கு முதல் பணிபுரியும் டிரான்சிஸ்டரை நிரூபித்தனர். சிறிய மின் சமிக்ஞைகளைப் பெருக்கி, டிஜிட்டல் தகவல்களைச் செயலாக்குவதை ஆதரிக்கும், டிரான்சிஸ்டர் “நவீன மின்னணுவியலின் முக்கிய செயல்பாட்டாளர்” ஆகும். இந்த மூன்று பேரும் “குறைக்கடத்திகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் டிரான்சிஸ்டர் விளைவைக் கண்டுபிடித்ததற்காக” 1956 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.
1947 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தால் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பெல் ஆய்வகங்கள் இப்போது மேற்பரப்பு நிலைகள் திட்டம் என்று அழைக்கப்படும் விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தியது. ஆரம்பத்தில், கடுமையான ரகசியம் காணப்பட்டது. பெல் லேப்ஸில் உள்ள கவனமாக தடைசெய்யப்பட்ட உள் மாநாடுகள் பிராட்டேன், பார்டீன், ஷாக்லி மற்றும் தொடர்புடைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள மற்றவர்களின் பணிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டன. பர்டூ பல்கலைக்கழகத்தில் ஜெர்மானியத்தில் எதிர்ப்பைப் படிக்கும் ரால்ப் ப்ரே மற்றும் சீமோர் பென்சர் இதேபோன்ற கண்டுபிடிப்பை மேற்கொண்டு பெல் ஆய்வகங்களுக்கு முன்பாக வெளியிடலாமா என்பதில் கணிசமான கவலை இருந்தது. ஜூன் 30, 1948 அன்று, பெல் ஆய்வகங்கள் தங்கள் கண்டுபிடிப்பை பகிரங்கமாக அறிவிக்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தின. புதிய அறிவு மற்ற நிறுவனங்களுடன் சுதந்திரமாகப் பகிரப்படும் திறந்த கொள்கையையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஒரு இராணுவ ரகசியமாக வேலையை வகைப்படுத்துவதைத் தவிர்த்தனர். மேலும் டிரான்சிஸ்டர் தொழில்நுட்பத்தின் பரவலான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை சாத்தியமாக்கினர். பெல் ஆய்வகங்கள் பல்கலைக்கழகம், தொழில் மற்றும் இராணுவ பங்கேற்பாளர்களுக்கு திறந்த பல சிம்போசியாக்களை ஏற்பாடு செய்தன. அவை செப்டம்பர் 1951, ஏப்ரல் 1952 மற்றும் 1956ல் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கலந்து கொண்டன. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிராட்டேன் 1970 களில் சியாட்டலுக்கு குடிபெயர்ந்தார். டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்ததற்கான அனைத்து வரவுகளையும் அவர் பெற்றிருக்க வேண்டும் என்று ஷாக்லி நம்பினார் பிராட்டன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மேற்பரப்பு மின்னணு நிலைகளின் ஆய்வுகளுக்காக அர்ப்பணித்தார். புள்ளி-தொடர்பு டிரான்சிஸ்டர் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற வால்டர் ஹவுசர் பிராட்டேன் அக்டோபர் 13, 1987ல் தனது 85வது அகவையில், வாஷிங்டன் அமெரிக்காவில் அல்சைமர் நோயால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். வாஷிங்டனின் பொமரோய் நகர கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சி ( C ) நிரலாக்க மொழியை உருவாக்கிய டென்னிஸ் மெக்காலிசிட்டர் ரிட்ச்சி நினைவு தினம் இன்று (அக்டோபர் 12, 2011).
டென்னிஸ் மெக்காலிசிட்டர் ரிட்ச்சி (Dennis MacAlistair Ritchie) செப்டம்பர் 9, 1941 நியூயார்க்கின் பிராங்க்ஸ்வில்லில் பிறந்தார். அவரது தந்தை அலிஸ்டர் ஈ. ரிட்ச்சி, நீண்டகால பெல் லேப்ஸ் விஞ்ஞானி மற்றும் சுவிட்ச் சர்க்யூட் கோட்பாட்டில் தி டிசைன் ஆஃப் ஸ்விட்சிங் சர்க்யூட்ஸ் இன் இணை ஆசிரியர். ஒரு குழந்தையாக, டென்னிஸ் தனது குடும்பத்தினருடன் நியூ ஜெர்சியிலுள்ள உச்சிமாநாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் உச்சி மாநாடு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார் மற்றும் கணிதத்தைப் பயன்படுத்தினார். இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு இயற்பியலாளராக இருப்பதற்கு போதுமான புத்திசாலி இல்லை என்று வழக்கமான அடக்கத்துடன் முடிவு செய்தார். 1967 ஆம் ஆண்டில், ரிட்ச்சி பெல் லேப்ஸ் கம்ப்யூட்டிங் சயின்ஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார். மேலும் 1968 ஆம் ஆண்டில், பேட்ரிக் சி. பிஷ்ஷரின் மேற்பார்வையில் ஹார்வர்டில் “நிரல் கட்டமைப்பு மற்றும் கணக்கீட்டு சிக்கலானது” குறித்த தனது பிஎச்டி ஆய்வறிக்கையை தயாரித்தார்.
இருப்பினும், ரிட்ச்சி தனது பிஎச்டி பட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் பெறவில்லை. ஏனெனில் அவர் தனது ஆய்வுக் கட்டுரையின் ஒரு நகலை ஹார்வர்ட் நூலகத்தில் சமர்ப்பிக்கவில்லை, இது பட்டத்திற்கான தேவை. 2020 ஆம் ஆண்டில், கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம் ரிட்ச்சியின் குடும்பத்தினருடனும் பிஷ்ஷரின் குடும்பத்தினருடனும் இணைந்து பணியாற்றியது மற்றும் இழந்த ஆய்வுக் கட்டுரையின் நகலைக் கண்டறிந்தது. 1960களில், ரிச்சி மற்றும் கென் தாம்சன் பெல் லேப்ஸில் மல்டிக்ஸ் இயக்க முறைமையில் பணியாற்றினர். தாம்சன் பின்னர் ஒரு பழைய பி.டி.பி-7 இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ரிட்ச்சி மற்றும் பிறரின் உதவியுடன் புதிதாக தனது சொந்த பயன்பாட்டுத் திட்டங்களையும் இயக்க முறைமையையும் உருவாக்கினார். 1970 ஆம் ஆண்டில், பிரையன் கெர்னிகன் “யுனிக்ஸ்” என்ற பெயரை பரிந்துரைத்தார். இது “மல்டிக்ஸ்” என்ற பெயரில் ஒரு பன். அசெம்பிளி மொழியை ஒரு கணினி அளவிலான நிரலாக்க மொழியுடன் சேர்த்தார்.
1970களில், ரிட்ச்சி ஜேம்ஸ் ரீட்ஸ் மற்றும் ராபர்ட் மோரிஸுடன் இணைந்து எம் -209 யு.எஸ் சைபர் மெஷின் மீது சைஃபெர்டெக்ஸ்ட்-மட்டும் தாக்குதலில் ஒத்துழைத்தார். இது குறைந்தது 2000-2500 கடிதங்களின் செய்திகளை தீர்க்க முடியும். ரிட்ச்சி குறிப்பிடுகையில், NSA உடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஆசிரியர்கள் அதை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தனர். ஏனெனில் இந்த கொள்கை வெளிநாட்டு அரசாங்கங்களால் இன்னும் பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டது. பிளான் 9 மற்றும் இன்ஃபெர்னோ இயக்க முறைமைகள் மற்றும் நிரலாக்க மொழி லிம்போ ஆகியவற்றின் வளர்ச்சியிலும் ரிட்ச்சி ஈடுபட்டிருந்தார். 1990 களின் நடுப்பகுதியில் AT&T மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ரிச்சி லூசண்ட் டெக்னாலஜிஸுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் 2007ல் கணினி மென்பொருள் ஆராய்ச்சி துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.
ரிட்ச்சி சி நிரலாக்க மொழியை உருவாக்கி வளர்த்தெடுத்தார். ஏனைய நிரலாக்க மொழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தினார், கென் தாம்ப்சன், பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா போன்ற பெல் ஆய்வுகூட பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கினார். இதன் பயனாக பெரும் புகழ் ஈட்டினார். 1983 ஆம் ஆண்டில் கணிப்பொறி குழுமம் (ACM) வழங்கும் டூரிங் விருதும், 1990ல் ஐஇஇஇ வழங்கும் ஆமிங் பதக்கமும் (Hamming Medal), 1998 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்துக்கான அமெரிக்காவின் உயர் தேசிய விருதும் ஆகிய விருதுகள் இவருக்குக் கிடைத்தன. ரிட்ச்சி பெல் ஆய்வுகூடங்களில் இலூசெண்ட் டெக்னாலாச்சீசு ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
சி ( C ) நிரலாக்க மொழியை உருவாக்கிய டென்னிஸ் மெக்காலிசிட்டர் ரிட்ச்சி அக்டோபர் 12, 2011ல் தனது 70வது அகவையில், நியூ ஜெர்சியிலுள்ள பெர்க்லி ஹைட்ஸில் உள்ள அவரது வீட்டில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது மரணத்தின் முதல் செய்தி அவரது முன்னாள் சகாவான ராப் பைக்கிலிருந்து வந்தது. மரணத்திற்கான காரணமும் சரியான நேரமும் வெளியிடப்படவில்லை. புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கான சிகிச்சையைத் தொடர்ந்து அவர் பல ஆண்டுகளாக பலவீனமான ஆரோக்கியத்தில் இருந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி அர்கீபவிச் லியோனோவ் நினைவு தினம் இன்று (அக்டோபர் 11, 2019).
அலெக்ஸி அர்கீபவிச் லியோனோவ் (Alexey Arkhipovich Leonov) மே 30, 1934ல் மேற்கு மேற்கு சைபீரியன் கிராய், லிஸ்ட்வாங்காவில் பிறந்தார். 1905ல் ரஷ்ய புரட்சியில் அவரது தாத்தா சைபீரியாவுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யெவ்டோகியா நீ சோட்னிகோவா மற்றும் ஆர்க்கிப்பிறகு பிறந்த ஒன்பது குழந்தைகளில் எட்டாவது குழந்தை அலெக்ஸி ஆவார். அவரது தந்தை ஒரு எலக்ட்ரீஷியன் மற்றும் சுரங்கத் தொழிலாளி. 1936 ஆம் ஆண்டில், அவரது தந்தை கைது செய்யப்பட்டு “மக்களின் எதிரி” என்று அறிவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது தந்தை கெமரோவோவில் மீண்டும் குடும்பத்தில் சேர்ந்தார். அவர் தவறாக சிறையில் அடைக்கப்பட்டதற்காக அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. லியோனோவ் குடும்பத்திற்கு அதிக உணவை வழங்குவதற்கான ஒரு வழியாக கலையைப் பயன்படுத்தினார். அடுப்புகளில் பூக்கள் வரைந்து தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் கேன்வாஸ்களில் நிலப்பரப்புகளை வரைந்தார்.
சோவியத் அரசாங்கம் தனது குடிமக்களை சோவியத் ஆக்கிரமித்த பிரஸ்ஸியாவுக்கு செல்ல ஊக்குவித்தது. எனவே 1948ல் அவரது குடும்பம் கலினின்கிராட் நகருக்கு இடம் பெயர்ந்தது. லியோனோவ் 1953ல் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். லாட்வியாவின் ரிகாவில் உள்ள அகாடமி ஆஃப் ஆர்ட்ஸில் அவர் விண்ணப்பித்தார். ஆனால் அதிக கல்வி செலவு காரணமாக கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார். கிரெமென்சுக்கில் உள்ள உக்ரேனிய தயாரிப்பு பறக்கும் பள்ளியில் சேர லியோனோவ் முடிவு செய்தார். மே 1955ல் அவர் தனது முதல் தனி விமானத்தை மேற்கொண்டார். ரிகாவில் பகுதிநேர படிப்பதன் மூலம் கலை மீதான ஆர்வத்தில் ஈடுபட்டிருந்தபோது, லியோனோவ் உக்ரேனிய எஸ்.எஸ்.ஆரில் உள்ள சுகுவேவ் உயர் விமானப்படை விமானிகள் பள்ளியில் போர் விமானியாக ஆக மேம்பட்ட இரண்டு ஆண்டு படிப்பைத் தொடங்கினார்.
அக்டோபர் 30, 1957ல், லியோனோவ் கவுரவ பட்டம் பெற்றார். கெய்வில் 69வது விமானப்படையின் 10வது பொறியியல் விமானப் பிரிவின் ஒரு பகுதியாக 113 வது பாராசூட் ஏவியேஷன் ரெஜிமென்ட்டில் லெப்டினெண்டாக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 13, 1959ல், அவர் 24 வது விமானப்படையின் 294வது மறுமலர்ச்சி படைப்பிரிவுடன் தனது புதிய பணிக்கு கிழக்கு ஜெர்மனிக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்பு ஸ்வெட்லானா பாவ்லோவ்னா டோஸென்கோவை மணந்தார். 1960ல் முதல் விண்வெளி பயிற்சி குழுவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சோவியத் விமானப்படை விமானிகளில் இவரும் ஒருவர். பெரும்பாலான விண்வெளி வீரர்களாக, லியோனோவ் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். விண்வெளியில் அவரது நடை முதலில் வோஸ்கோட் 1 பயணத்தில் நடந்ததாக இருந்தது. ஆனால் இது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக வோஸ்கோட் 2 விமானத்தில் வரலாற்று நிகழ்வு நடந்தது. அவர் மார்ச் 18, 1965 அன்று விண்கலத்திற்கு வெளியே 12 நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகள் இருந்தார். 4.8 மீட்டர் (16 அடி) டெதர் மூலம் கைவினைப்பொருளுடன் இணைக்கப்பட்டார்.
விண்வெளியின் முடிவில், லியோனோவின் விண்வெளி சூட் விண்வெளியின் வெற்றிடத்தில் அவர் மீண்டும் விமானத்தில் நுழைய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சூட்டின் சில அழுத்தங்களை இரத்தம் வர அனுமதிக்க அவர் ஒரு வால்வைத் திறந்தார். மேலும் காப்ஸ்யூலுக்குள் திரும்பி வர முடியவில்லை. லியோனோவ் பதினெட்டு மாதங்கள் எடை குறைப்பு பயிற்சிக்கு செலவிட்டார். 1968 ஆம் ஆண்டில், லியோனோவ் ஒரு சுற்றறிக்கை சோயுஸ் 7 கே-எல் 1 விமானத்தின் தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நம்பகமான சுற்றறிக்கை விமானத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டதால் இது ரத்து செய்யப்பட்டது. பின்னர் வந்த சோண்ட் 7 மற்றும் ஸோண்ட் 8 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிகரமாக இருந்தனர். அப்பல்லோ 8 பணி ஏற்கனவே விண்வெளி பந்தயத்தில் அந்த படியை அடைந்தது. LOK / N1 விண்கலத்தில் சந்திரனில் தரையிறங்கிய முதல் சோவியத் நபராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டது. உறுப்பினர்களில், விண்வெளி வீரர் வலேரி குபசோவ், காசநோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
லியோனோவ் சாலியட் 1 க்கு அடுத்த பணிக்கு கட்டளையிட்டிருக்க வேண்டும். ஆனால் சோயுஸ் 11 குழு உறுப்பினர்கள் இறந்த பின்னர் இது கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு சாலியட்ஸ் (உண்மையில் இராணுவ அல்மாஸ் நிலையம்) ஏவப்பட்டபோது விரைவில் தோல்வியடைந்தது. லியோனோவின் குழுவினர் உடன் நின்றனர். சாலியட் 4 சுற்றுப்பாதையை அடைந்த நேரத்தில், லியோனோவ் மிகவும் மதிப்புமிக்க திட்டத்திற்கு மாற்றப்பட்டார். லியோனோவின் விண்வெளியில் இரண்டாவது பயணம் 1975 ஆம் ஆண்டு அப்பல்லோ-சோயுஸ் பணியின் சோவியத் பாதியான சோயுஸ் 19ன் தளபதியாக இருந்தது. இது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதல் கூட்டு விண்வெளி பணி. 1976 முதல் 1982 வரை, லியோனோவ் விண்வெளி அணியின் தளபதியாகவும், யூரி ககாரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தின் துணை இயக்குநராகவும் இருந்தார். அங்கு அவர் குழுப் பயிற்சியை மேற்பார்வையிட்டார். அவர் நெப்டியூன் என்ற விண்வெளி செய்திமடலையும் திருத்தியுள்ளார். லியோனோவ் 1992ல் ஓய்வு பெற்றார்.
அலெக்ஸி அர்கீபவிச் லியோனோவ் 1965 இலும் 1975 இலும் இரண்டு முறை சோவியத் ஒன்றியத்தின் நாயகர் (hero) என்ற விருதைப் பெற்றார். 1965 மார்ச் 18ல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். லெனின் விருது பெற்றவர். விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி அர்கீபவிச் லியோனோவ் அக்டோபர் 11, 2019ல் தனது 85வது அகவையில், மாஸ்கோ, ரஷ்யாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அலெக்சேய் லியோனவ் 1965 இலும் 1975 இலும் இரண்டு முறை சோவியத் ஒன்றியத்தின் நாயகர் (hero) என்ற விருதைப் பெற்றார். லெனின் விருது பெற்றவர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5, 1882).
இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. ஒரு இளைய மகன், ரிச்சர்ட் ஹென்றி, முதுகெலும்பு குறைபாட்டுடன் பிறந்தார், அவரது முதல் பிறந்தநாளுக்கு முன்பு இறந்தார். நஹூம் உற்பத்தியாளரக பல பயனுள்ள கருவிகளைக் கண்டுபிடித்தார். கோடார்ட் பிறந்த சிறிது நேரத்திலேயே, குடும்பம் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தது. இயற்கையைப் பற்றிய ஆர்வத்துடன், அவர் தனது தந்தையிடமிருந்து ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானத்தைப் மற்றும் பறவைகள் பறப்பதைக் கவனித்தார். 1880களில் அமெரிக்க நகரங்களின் மின்மயமாக்கலுடன், இளம் கோடார்ட் அறிவியலில்-குறிப்பாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். குடும்பத்தின் கம்பளத்தில் நிலையான மின்சாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அவரது தந்தை அவருக்குக் காட்டியபோது, ஐந்து வயது குழந்தையின் கற்பனை தூண்டப்பட்டது.
வொர்செஸ்டர் பாலிடெக்னில் 1908ல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். படிப்பிற்குப் பின், அங்கேயே ஓராண்டு காலம் பயிற்றுநராகப் பணியாற்றினார். பின், வொர்செஸ்டர் நகரிலேயே க்ளார்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பயின்று 1910ல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1911இல் தனது அறிவியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஓராண்டு காலம் க்ளார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபின், 1912இல் தொடர் ஆய்வுகளுக்காக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பால்மர் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்தார். சரளை நடைப்பயணத்தில் கால்களைத் துடைப்பதன் மூலம் ஒரு பேட்டரியிலிருந்து துத்தநாகம் வசூலிக்கப்படுமானால் அவர் உயரத்திற்கு முன்னேற முடியும் என்று நம்பி ராபர்ட் பரிசோதனை செய்தார். ஆனால், துத்தநாகத்தைப் பிடித்துக் கொண்டால், அவர் வழக்கத்தை விட உயரமுடியாது. அவர் ரசாயனங்களை பரிசோதித்து, வீட்டில் ஒரு புகை மேகத்தையும் வெடிப்பையும் உருவாக்கினார். கோடார்ட் தனது தாயின் எச்சரிக்கையின் பின்னர் சோதனைகளை நிறுத்தினார்.
இந்த ஆர்வங்கள் 16 வயதில் ஒன்றிணைந்தன. கோடார்ட் அலுமினியத்திலிருந்து ஒரு பலூனைக் கட்ட முயற்சித்தபோது, தனது வீட்டுப் பட்டறையில் மூல உலோகத்தை வடிவமைத்து, அதை ஹைட்ரஜனில் நிரப்பினார். ஏறக்குறைய ஐந்து வார முறையான, ஆவணப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அவர் இறுதியாக திட்டத்தை கைவிட்டார் அலுமினியம் மிகவும் கனமானது. எவ்வாறாயினும், இந்த தோல்வியின் படிப்பினை கோடார்ட்டின் வளர்ந்து வரும் உறுதியையும் தன்னுடைய படைப்பின் மீதான நம்பிக்கையையும் தடுக்கவில்லை. 1910 ஆம் ஆண்டுகளில் சுமார் பல தசாப்தங்களில், வானொலி ஒரு புதிய தொழில்நுட்பமாகும், இது புதுமைக்கு வளமானது. 1912 ஆம் ஆண்டில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, கோடார்ட் மின்கடத்திகளில் ரேடியோ அலைகளின் தாக்கங்களை ஆராய்ந்தார்.
ரேடியோ-அதிர்வெண் சக்தியை உருவாக்குவதற்காக, அவர் ஒரு பீம் விலகலுடன் ஒரு வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார். இது கேத்தோடு-ரே ஆஸிலேட்டர் குழாய் போல இயங்குகிறது. லீ டி ஃபாரெஸ்ட்டுக்கு முந்தைய இந்த குழாயின் காப்புரிமை, ஆர்தர் ஏ. காலின்ஸுக்கு இடையிலான வழக்கில் மையமாக மாறியது. அதன் சிறிய நிறுவனம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் குழாய்களை உருவாக்கியது. மேலும் வெற்றிட குழாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக AT&T மற்றும் RCA. கோடார்ட் வழக்கு கைவிடப்பட்டபோது கொலின்ஸிடமிருந்து ஒரு ஆலோசகர் கட்டணத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டார். இறுதியில் இரண்டு பெரிய நிறுவனங்களும் நாட்டின் வளர்ந்து வரும் மின்னணுத் தொழிலுக்கு டி ஃபாரஸ்ட் காப்புரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதித்தன.
1912 வாக்கில், அவர் தனது ஓய்வு நேரத்தில், கால்குலஸைப் பயன்படுத்தி, கணிதத்தை உருவாக்கினார். ராக்கெட்டின் எடை மற்றும் உந்துசக்தியின் எடை மற்றும் திசைவேகம் ஆகியவற்றைக் வெளியேற்ற வாயுக்களின் கருத்தில் கொண்டு செங்குத்து விமானத்தில் ஒரு ராக்கெட்டின் நிலை மற்றும் வேகத்தை கணக்கிட அனுமதித்தது. இதன் விளைவாக, ரஷ்யாவில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட சியோல்கோவ்ஸ்கி ராக்கெட் சமன்பாட்டை அவர் சுயாதீனமாக உருவாக்கினார். செங்குத்து விமானத்திற்காக அவர் ஈர்ப்பு மற்றும் ஏரோடைனமிக் இழுவின் விளைவுகளை உள்ளடக்கியது. அவரது முதல் குறிக்கோள் வளிமண்டலத்தைப் படிப்பதற்காக ஒலிக்கும் ராக்கெட்டை உருவாக்குவதாகும். இத்தகைய விசாரணை வானிலை ஆய்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், திறமையான விண்வெளி ஏவுதள வாகனங்களை வடிவமைக்க வெப்பநிலை, அடர்த்தி மற்றும் காற்றின் வேகத்தை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலான விஞ்ஞானிகள், குறிப்பாக அமெரிக்காவில், அத்தகைய இலக்கை ஒரு யதார்த்தமான அல்லது நடைமுறை விஞ்ஞான நோக்கமாக கருதவில்லை என்பதால், விண்வெளியில் விமானங்களுக்கான வாகனத்தை உருவாக்குவதே தனது இறுதி குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்ள அவர் மிகவும் தயக்கம் காட்டினார். இதுபோன்ற யோசனைகளை தீவிரமாக பரிசீலிக்க பொதுமக்கள் இன்னும் தயாராக உள்ளனர். பின்னர், 1933 ஆம் ஆண்டில், கோடார்ட் “விண்வெளிப் பயணத்தின் சாதனை, சோதனை மூலம் சோதனை மற்றும் படிப்படியாக, ஒரு நாள் நாம் வெற்றிபெறும் வரை, அதைத் தடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார்.
இன்றைய ராக்கெட் அறிவியல் பங்களிப்பாளர்களில் இவர் மிக முக்கியமானவர். ராக்கெட் அறிவியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இன்றைய உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் (Liquid Fueled Rockets) கண்டுபிடித்த பெருமைக்குரியவர் இவர். இவரது ஆராய்ச்சியின் பகுதியாக, 1926 மார்ச் 16 அன்று இவரது குழுவினர் செலுத்திய ராக்கெட்டே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டாகும். காடர்ட் மற்றும் அவரது குழுவினர் 1926க்கும் 1941க்கும் இடையிலாக மொத்தம் 34 ராக்கெட்டுகளை செலுத்தியுள்ளனர். அவற்றில் சில அதிக உயரமாக 2.6 கி.மீ (1.6 மைல்) -க்கும், அதிக வேகமாக 885 கி.மீ/மணிக்கும் (550 மைல்) பறக்கக்கூடியனவாக இருந்தன. ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் ஆகஸ்ட் 10,1945ல்ல் தனது 62வது அகவையில், பால்டிமோர், மேரிலாந்துஅமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். மேரிலாந்து மாநிலத்தின் கிரீன்பெல்ட் நகரத்திலுள்ள நாசாவின் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிக்கூடமான காடர்ட் விண்வெளி ஊர்தி மையம் (The Goddard Space Flight Center GSFC), ராபர்ட் காடர்ட்டின் நினைவாக அவரின் பெயரிலேயே இயங்குகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நிலையை மேம்படுத்தும் உலக விலங்கு நாள் இன்று (World Animal Day) (அக்டோபர் 4).
உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4ற்குக் கிட்டவாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. உலக விலங்கு தினத்தின் நோக்கம், உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நிலையை மேம்படுத்துவதற்காக, அவற்றிற்காக உலகெங்கிலும் இருக்கின்ற விலங்கு நலன்புரி அமைப்பின் தரங்களை உயர்த்துவதாகும். உலக விலங்கு தின கொண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலமாக விலங்கு நல இயக்கத்தை ஒன்றிணைத்து, உலகளாவிய சக்தியாக அணிதிரட்டி உலகத்தை அனைத்து விலங்குகளுக்கும் ஏற்ற சிறந்த இடமாக மாற்றுவதே ஆகும். இது தேசியம், மதம், நம்பிக்கை அல்லது அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போது விலங்குகளின் மீது அதிகரித்துள்ள விழிப்புணர்வு மற்றும் கல்வியின் மூலம் விலங்குகளை எப்போதும் உணர்வுள்ள மனிதர்களாக அங்கீகரிக்கும் ஒரு உலகத்தை நாம் உருவாக்க முடியும், மேலும் அவைகளின் நலனுக்கு முழு மரியாதை எப்போதும் செலுத்தப்படுகிறது.
உலக விலங்கு தினத்தை சைனாலஜிஸ்ட் ஹென்ரிச் ஜிம்மர்மேன் உருவாக்கினார். அவர் முதல் உலக விலங்கு தினத்தை மார்ச் 24, 1925 அன்று ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அரண்மனை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்தார். இந்த முதல் நிகழ்வில் 5,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் நிகழ்வின் புரவலர் புனித அசிசியின், புனித பிரான்சிஸின் பண்டிகை நாளோடு இணைவதற்காக இந்த நிகழ்வு முதலில் அக்டோபர் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டது. இருப்பினும் அந்த இடம் அந்த நாளில் கிடைக்கவில்லை. இந்த நிகழ்வு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் முறையாக 1929ல் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் அவர் ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் மட்டுமே பின்பற்றுவதைக் கண்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜிம்மர்மேன் உலக விலங்கு தினத்தை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார். இறுதியாக, மே 1931ல் புளோரன்ஸ் இத்தாலியில் நடந்த சர்வதேச விலங்கு பாதுகாப்பு காங்கிரஸின் மாநாட்டில், அக்டோபர் 4 உலக விலங்கு தினத்தை உலகளாவியதாக மாற்றுவதற்கான அவரது முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆபத்தான உயிரினங்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்த விரும்பிய இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் சூழலியல் நிபுணர்களின் மாநாட்டில் 1931 ஆம் ஆண்டில் உலக விலங்கு தினம் தொடங்கியது என்று சில நேரங்களில் தவறாகக் குறிப்பிடப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், உலக விலங்கு தின விழா கொண்டாட்டங்கள் முன்பு ஆர்.எஸ்.பி.சி.ஏ (RSPCA) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டன. 2002 ஆம் ஆண்டு முதல் பின்லாந்தில், பின்னிஷ் விலங்கு பாதுகாப்பு சங்கங்கள் (SEY) விலங்கு தினமான அக்டோபர் நான்கு வருகின்ற அம்மாதத்தின் முதல் வாரத்தில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, விலங்குகளின் நலன் குறித்து குழந்தைகள் தெரிந்து கொள்வதற்காக, பள்ளிகளுக்குப் பல்வேறு பொருட்களை விநியோகிக்கின்றன.
உலக விலங்கு தினம் 2003 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தை தளமாகக் கொண்ட விலங்கு நல தொண்டு நிறுவனமான நேச்சர்வாட்ச் அறக்கட்டளையின் தலைமையில் மற்றும் நிதியுதவி அளிக்கும் விலங்கு பாதுகாப்பு இயக்கத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய நிகழ்வாக வளர்ந்து வருகிறது. அக்டோபர் 27, 2006 அன்று போலந்து பாராளுமன்றம் அக்டோபர் 4 விலங்கு தினமாக நிறுவுவது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அர்ஜென்டினாவில், விலங்கியல் தினம் 1908 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது விலங்குப் பண்ணையின் இயக்குநரும் புவெனஸ் அயர்ஸின் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான இக்னாசியோ லூகாஸ் அல்பராசின் தலைமையில் இருந்தது. ஆரம்பத்தில் இந்த நாள் ஏப்ரல் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. பின்னர், 1926 ஏப்ரல் 29 ஆம் தேதி அல்பாரிகான் இறந்த பிறகு, அவரின் நினைவாக அன்றைய தினமே விலங்கியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டீசல் என்ஜின்கள் கண்டுபிடித்த, ஜெர்மன் கண்டுபிடிப்பாளர், ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 29, 1913).
ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) மார்ச் 18, 1858 ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். அவரது பெற்றோர் தியோடர் டீசல் பாரிஸில் வசிக்கும் பவேரிய குடியேறியவர்கள். வர்த்தக அடிப்படையில் ஒரு புத்தக விற்பனையாளர். 1848ல் தனது சொந்த ஊரான பவேரியாவின் ஆக்ஸ்பர்க் நகரிலிருந்து வெளியேறினார். டீசல் பிறந்த சில வாரங்களிலேயே, ஒரு வின்சென்ஸ் விவசாயி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அங்கு அவர் தனது முதல் ஒன்பது மாதங்களை கழித்தார். அவர் தனது குடும்பத்தினரிடம் திரும்பியபோது, டீசல் குடும்பம் நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்டது. இதனால் இளம் ருடால்ப் டீசல் தனது தந்தையின் பட்டறையில் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஒரு பரோவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தோல் பொருட்களை வழங்க வேண்டியிருந்தது. அவர் ஒரு புராட்டஸ்டன்ட்-பிரெஞ்சு பள்ளியில் பயின்றார். விரைவில் சமூக கேள்விகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். ஒரு நல்ல மாணவராக இருந்ததால், 12 வயதான டீசல் சொசைட்டி பர்.எல் இன்ஸ்ட்ரக்ஷன் எல்மென்டேர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
அதே ஆண்டு பிராங்கோ-ப்ருஷியப் போர் வெடித்தபோது, அவரது குடும்பத்தினர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் இங்கிலாந்தின் லண்டனில் குடியேறினர். அங்கு டீசல் ஒரு ஆங்கிலப் பள்ளியில் பயின்றார். எவ்வாறாயினும், யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், டீசலின் தாய் 12 வயது ருடால்பை தனது அத்தை மற்றும் மாமா பார்பரா மற்றும் கிறிஸ்டோஃப் பார்னிகல் ஆகியோருடன் சேர்ந்து ஜெர்மன் மொழியில் சரளமாகவும் பேச மற்றும் அங்கு அவரது மாமா கணிதம் கற்பித்தார். தனது 14 வயதில், ஒரு பொறியியலாளர் ஆக விரும்புவதாக டீசல் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். 1873 ஆம் ஆண்டில் தனது அடிப்படைக் கல்வியை முடித்த பின்னர், புதிதாக நிறுவப்பட்ட ஆக்ஸ்பர்க் தொழில்துறை பள்ளியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் முனிச்சின் ராயல் பவேரியன் பாலிடெக்னிக் நிறுவனத்திடமிருந்து ஒரு தகுதி உதவித்தொகையைப் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு குளிர்சாதன பெட்டிகள் தயாரித்தல், உயர் அழுத்த இயந்திரங்கள் மற்றும் வெப்ப இயந்திரங்கள் குறித்த ஆராய்ச்சி தொழிற்சாலையில் பணியாற்றினார். பாரில் உள்ள விண்டோ ஜஸ் இயந்திர ருடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1885 ஆம் ஆண்டு வெளியிட்டார். 1890ல் பெர்லினில் சென்றார், உள் எரிப்பு இயந்திரங்கள் குறித்த ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதியாக 1897 இல் டீசல் என்ஜின்கள் கண்டுபிடித்தார். அப்போதிருந்து டீசல் என்ஜின்கள் கப்பல் என்ஜின்களாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. மேதும் என்ஜின்களின் எடை ஆராய்ச்சியாளர்களால் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அவை வாகனங்கள் மற்றும் பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. டீசல் என்ஜின் இயந்திரத்தில் கடலை எண்ணெய் பயன்படுத்தி வெற்றிகரமாக இயக்கினர்.
1913 ஆம் ஆண்டில் வெற்றியின் உச்சியில் உச்சத்தில் டிரஸ்டன் டெக் திடீரென இங்கிலாந்து செல்லும் வழியில் காணாமல் போனது. 1901ல் எல்லியட் கிரொசான் பதக்கம் வழங்கப்பட்டது. புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த ஜெர்மன் கண்டுபிடிப்பாளர், ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் செப்டம்பர் 29, 1913 தனது 55வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த, நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்ச்சர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 28, 1895).
லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur) டிசம்பர் 27, 1822 கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் பிறந்தார். ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி ரெளகியினதும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவரது குடும்பம் 1826 ஆம் ஆண்டில் மார்ன்சுக்கும் 1827 ஆம் ஆண்டில் அர்பாய்சுக்கும் இடம்பெயர்ந்தது. பாஸ்ச்சர் 1831ல் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தார். ஆரம்ப பள்ளி காலங்களில் ஆர்வம் மீன் பிடித்தல், வரைதல் போன்றவற்றில் இருந்ததுடன், அவர் ஒரு சராசரி மாணவராக இருந்தார். அவர் பல வண்ணங்களில் தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் உருவப்படங்களை வரைந்திருந்தார். டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். 1838 ஆம் ஆண்டு அக்டோபரில், பென்சியன் போர்பட்டுவில் இணைவதற்காக பாரிசை விட்டு சென்றார். ஆனால் வீட்டை பிரிந்த துயரத்தினால் மீண்டும் நவம்பரில் திரும்பினார்.
1839 ஆம் ஆண்டில், அவர் மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்றார். அத்துடன் தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ல் பெற்றார். சிறப்புப் பாடமாகக் கணிதவியலைக் கொண்ட அறிவியல் பட்டத்திற்கான கல்வியைத் தொடர்ந்த வேளையில் அவர் பெசன்கான் கல்லூரியில் ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றினார். 1841ல் தனது முதல் தேர்வில் தோல்வியடைந்த அவர், பின்னர் 1842ல் டிசோனில் பொது அறிவியல் பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் வேதியியலில் சாதாரண தகுதியையே பெற்றார். பின்னர் 1842ல், பாஸ்ச்சர் Ecole Normale Superieure நுழைவுத் தேர்வு எடுத்தார். அவர் முதலாவது சோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவரது தரவரிசை குறைவாக இருந்ததனால், பாஸ்ச்சர் தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வதில்லை என முடிவெடுத்தார். அவர் சோதனைக்காகத் தயார் செய்வதற்காக மீண்டும் பென்சியன் பார்பெட் சென்றார். அவர் லைசி செயிண்ட்-லூயிஸ் இல் வகுப்புகளுக்கு சென்றதுடன், சோபோர்னில் உள்ள ஜீன்-பாப்டிஸ்ட் டுமாஸ் இல் விரிவுரைகளுக்கும் சென்றார்.
1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Superieure இடம்பெற்றனர். 1845 ஆம் ஆண்டில் அவர் licencie ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார். 1846 இல் அவர் Ardeche யிலுள்ள, கல்லூரி டி டோர்னனில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் வேதியியலாளர் அண்டோனே ஜெரோம் பாலார்ட், பாய்ச்சர் மீண்டும் Ecole Normale Superieure க்கு ஒரு பட்டதாரி ஆய்வக உதவியாளராக வரவேண்டும் என்று விரும்பினார். அவர் Balard உடன் இணைந்துகொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847ல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். டிஜோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக சேவை முடிந்த பின், 1848ல், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் கடமையாற்றினார். அங்கு பல்கலைக்கழகத்தின் இயக்குநரின் மகளான மேரி லாரண்ட் ஐச் சந்தித்து திருமண ஒப்பன்ந்தம் செய்து கொண்டார். அவர்களிருவரும் 1849 மே 29 அன்று திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மூவர் குடற்காய்ச்சலினால் இறந்துவிட, இருவர் மட்டுமே வளர்ந்து பெரியவர்களானார்கள்.
பாலும், வைனும் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினால் கெட்டுப்போகின்றன. அப்படிக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக லூயி பாஸ்ச்சர் முன்வைத்த முறை இன்று பாச்சர்முறை என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளின் பெரும்பகுதியைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. கிருமியழித்தலில் போன்று, இங்கு அனைத்து நோய்க்காரணிகளும் அழிக்கப்படுவதில்லை. பதிலாக, அவற்றின் எண்ணிக்கை ஒரு கட்டுப்பாடான அளவிற்குக் கொண்டு வரப்படுவதனால், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம். இம்முறையில் பாலானது 60 and 100 °C வெப்பநிலை வரைக் காய்ச்சி அதே வெப்பநிலையில் அரை மணி நேரம் வைத்த பின்பு வேகமாக குளிரச்செய்யப்படுகிறது.
நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர். தன்னிச்சை உருவாக்கக் கோட்பாடு (spontaneous generation) மறுக்கப்பட்டதற்கு இவர் காரணமாக இருந்தார். கலப்படமில்லாமல் நுண்ணுயிரிகள் உருவாக முடியாது என்பதை இவரது சோதனைகள் உணர்த்தின. “பிரெஞ்சு அறிவியல் அகாடெமி”யின் துணைகொண்டு இவர், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட (sterilized) மற்றும் உறையிடப்பட்ட (sealed) குடுவைகளில் எதுவும் உருவாக இல்லை எனவும், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட ஆனால் திறந்த குடுவைகளில் நுண்ணுயிரி வளர முடியும் என நிரூபித்தார். கிருமிக் கோட்பாட்டை (germ theory) இவர் முன்மொழியா விட்டாலும், அவரது சோதனைகள் அதன் உண்மைத்தன்மையைக் குறிப்பிட்டு, பெரும்பாலான ஐரோப்பாவுக்கு அது உண்மை என உணர்த்தின. இன்று அவரும் “கிருமிக் கோட்பாட்டின்” தந்தை என வழங்கப்படுகிறார். பாஸ்ச்சர் வேதியியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமைவின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன்முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது. கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது.
பாஸ்ச்சருக்கு முன்னரே வேறு விஞ்ஞானிகள் நொதித்தல் பற்றி ஆய்ந்து அறிந்திருந்தனர். 1830 ஆம் ஆண்டில், சார்லசு காக்னியர்டு-லாட்டூர் (Charles Cagniard de la Tour), பிரெடெரிக் டிராகாட் குட்சிங் (Friedrich Traugott Kutzing), தியோடர் சுவான் (Theodor Schwann) ஆகியோர் நுண்ணோக்கி மூலம் மதுவத்தை (yeast) ஆராய்ந்து, அவை வாழும் உயிரினங்கள் என்று கூறியுள்ளனர். 1839ல், ஜசுடசு வான் லீபிக் (Justus von Liebig), பிரெடெரிக் வோக்லர் (Friedrich Wohler) மற்றும் சோன்ஸ் சேக்கப் பெர்சிலியசு (Jöns Jacob Berzelius) ஆகியோர் மதுவம் ஒரு உயிரினம் இல்லை என்றும் அவை தாவர சாறுகள் காற்றுடன் செயல்படும் போது உருவாகின்றன என்றும் அறிக்கைவிட்டனர். 1855ல் மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஆண்டனி பிசாம்ப் (Antoine Bechamp), சுக்ரோசு கரைசலில் பரிசோதனைகளை மேற்கொண்டு நீர், நொதித்தலுக்குப் காரணியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் 1858ல், அவர் தனது முடிவை மாற்றி, நொதித்தலுக்குக் காரணம் Mould என்னும் ஒரு வகை பூஞ்சையே என்றும், அவற்றின் வளர்ச்சிக்கு காற்று தேவைப்படுகிறது என்றும் கூறினார். நொதித்தலில் நுண்ணுயிர்களின் பங்கினை முதலாவதாக எடுத்து காண்பித்தவர் தானே என்று இவர் கூறினார்.
பாஸ்ச்சர் 1857ல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார். ஆனால் பிசாம்ப்னுடைய ஆய்வறிக்கை ஜனவரியிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. இருந்தாலும், பாஸ்சரின் 1857 ஆம் ஆண்டு ஆரம்ப ஆய்வுகளைப்பற்றி பிசாம்ப் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரினதும் முரண்பாடுகள் அவர்களது வாழ்வுக்காலம் முழுமைக்கும் நீண்டது. அடுத்து வெறிநாய்க்கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார் பாஸ்ச்சர். அவரது ஆராய்ச்சின் பலனாக அந்த கொடூரமான நோய்க்கான தடுப்பூசி மனுகுலத்திற்கு கிடைத்தது. அந்த ஆராய்ச்சிகளின்போது அவர் அச்சமின்றி பல வெறிநாய்களை வைத்து சோதனை நடத்தினார். வெறிநாய்களின் எச்சிலில்தான் கிருமிகள் இருக்கின்றன என்பது தெரிந்தும் ஆராய்ச்சிக்காக ஒருமுறை அவர் ஒரு நாயின் வாயில் குழாய் வைத்து தான் வாயால் அதன் எச்சிலை உரிஞ்சு எடுத்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. தப்பித்தவறி அந்த எச்சில் அவர் வாய்க்குள் சென்றிருந்தால் அவரது நிலமை என்னவாகியிருக்கும்? அப்படி அச்சமின்றி தன் உயிரை துச்சமாக மதித்து போராடியதால்தான் பல உயிர்களை காக்கும் மருந்துகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. வெறி நாய்க்கான மருந்தை கண்டுபிடித்த போது 1888-ஆம் ஆண்டு பாரிசில் Pasteur institute என்ற கழகம் அவரது பெயராலேயே அமைக்கப்பட்டது.
பாஸ்ச்சர் தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தார். தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாஸ்ச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர். நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது. அவரது கண்டுபிடிப்பு அன்றிலிருந்து பல உயிர்களைக் காத்து வருகிறது.
பிரசவத்திற்குப் பிந்தைய தொற்றுகளினால் ஏற்படும் இறப்பு வீதத்தைக் குறைத்ததுடன், வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார். அவரது மருத்துவக் கண்டுபிடிப்புகள் நோய்க் கிருமிக் கோட்பாட்டை (germ theory) நேரடியாக ஆதரிப்பதுடன், இந்தக் கோட்பாட்டின் மருத்துவத் துறைப் பயன்பாட்டுக்கும் உதவின. பால் மற்றும் வைன் ஆகியவற்றில் பாக்டீரியா கலப்படத்தைத் தவிர்ப்பதற்கான இவரது கண்டுபிடிப்பு பாஸ்ச்சர் முறை (pasteurization) என்று தற்போது அழைக்கப்படுகிறது. இவர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர். நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த, நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்ச்சர் செப்டம்பர் 28, 1895ல் தனது 72வது அகவையில் கோக்கெட், பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவர் நினைவாக உலக வெறிநாய்க்கடி நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்த, நோபல் பரிசு பெற்ற பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28, 1852).
பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) செப்டம்பர் 28, 1852ல் பாரிசு, பிரான்சில் கிழக்குத் இரயில்வே துறையில் பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தார். 1864ல் மொ (Meaux) என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்குப் பள்ளியில் கல்வி பெற்றார். ஆனால் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெறும் தகுதிச் சான்றிதழ் (“grade universitaire” ) பெறாமலே பள்ளியில் இருந்து சென்றுவிட்டார். பின்னர் பாரிசில் ஒரு வேதியியலாளராகப் பணிபுரியத்தொடங்கினார். அங்கு ஆர்சனிக்கு (arsenic) கலந்ததைக் குடித்து உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்றினார். அதன்பின் வேதியியலை முறையாகப் பயில முடிவு செய்து எடுமான் ஃவிரெமி (Edmond Frémy) அவர்களின் செய்முறைச் சாலையில் சேர்ந்தார். அதன் பின் பியர் பால் துரியான் (Pierre Paul Dehérain) அவர்களின் செய்முறைச்சாலையில் சேர்ந்தார். அங்கு துரியான் அவர்களின் வலியுறுத்தலால் கல்விசார் பணியைப் பின் தொடர ஒப்புக்கொண்டார்.பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தகுதி பெறும் பாக்குலோரியா (baccalauréat) என அழைக்கப்பட்ட இளநிலை பட்டத்தைப் பெறுவதில் முதலில் தோல்வி அடைந்து, பின்னர் 1874ல் வெற்றி பெற்றார். அவர் பாரிசில் இருந்த பொழுது வேதியியலாளர் அலெக்ஃசாந்திரே லியோன் எட்டார் (Alexandre Léon Étard) என்னும் வேதியலாளரோடும், வாசுக்கு (Vasque) என்னும் செடியியலாளருடனும் நண்பராக இருந்தார். முவாசான் முதன் முதலாக 1874ல் தாவரத்தில் கார்பன்-டை-ஆக்சைடும், ஆக்சிசனும் நிகழ்த்தும் மாற்றங்களைப் பற்றி அறிவியல் கட்டுரை ஒன்றை, துரியானுடன் சேர்ந்து எழுதினார். அதன் பின்னர் தாவரவியலை விட்டுவிட்டு, கரிமமற்ற வேதியியல் துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினார். குறிப்பாக தீப்பிடிக்கும் இரும்பு பற்றிய வேதியியலில் ஈடுபட்டார். இவருடைய கருத்துகளை அக்காலத்தில் முன்னணியில் இருந்த கரிமமற்ற வேதியியல் அறிவியலாளர்கள் இருவர் வரவேறனர். இவர்கள் ஆன்றி துவ்யெல் (Henri Etienne Sainte-Claire Deville) என்பாரும் துபாய் (Debray) என்பாரும் ஆவர். முசாசான் 1880 இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் அவருடைய நண்பர் இலாண்டுறீன் (Landrine) அவருக்கு பகுப்பாய்வு வேதியியலில் பணிபுரிய வாய்ப்புத் தந்தார்.முவாசான் 1882ல் இலியோனீ இலியுகோன் (Leonie Lugan) என்பாரை மணந்தார். இவர்களுக்கு 1885ல் ஒரு மகன் பிறந்தார். 1880களில் இவர் ஃவுளூரின் ஆய்விலும், அதனைப் பெரிய அளவில் விளைவிப்பதிலும் ஆழ்ந்து இருந்தார். ஆனால் இவருக்கான தனி ஆய்வகம் ஏதும் இல்லை. அங்கு அருகில் இருந்த பற்பல ஆய்வகங்களைப் பயன்படுத்தினார். அங்கே இவருக்கு 90 புன்சென் மின்கலங்கள் (Bunsen cell) கிடைத்தன. இவற்றை இணைத்து உருகிய ஆர்சனிக்கு டிரைக்குளோரைடு மின்பகுப்பாய்வு செய்யும் பொழுது, அங்கே வெளிப்பட்ட வளிமத்தைக் கூர்ந்து அறிந்தார். இவ்வளிமம், மீண்டும் ஆர்சனிக்கு டிரைக்குளோரைடால் உள்வாங்கப்பெற்றது. பின்னர் ஐதரச புளூரைடு மின்பகுப்பாய்வு செய்த பொழுது ஜூன் 26, 1886 அன்று புளூரின் வளிமம் கிடைத்தது. உண்மையை உறுதி செய்யும் முகமாக, பிரான்சிய அறிவியல் உயர்கல்வி மன்றம் (French academy of science) மூன்று பேரை, மார்சிலென் பெர்த்திலோ (Marcellin Berthelot), ஆன்றி துபாய், எடுமான் ஃவிரெமி ஆகியோரை, அவர்களின் சார்பாளர்களாக அனுப்பியது.முவாசானால் மீண்டும் அந்த விளைவைச் செய்து காட்ட இயலவில்லை, காரணம் ஐதரச புளூரைடில், முன்பு செய்த ஆய்வில் கலந்திருந்தவாறு சிறிதளவு பொட்டாசிய புளூரைடு கலந்து இருக்கவில்லை. இதனை பகுத்தறிந்து, திருத்திப் பின்னர் பலமுறை செய்து காட்டினார். இதற்குப் பரிசாக 10,000 பிரான்சிய வெள்ளியாகிய “பிராங்கு” தந்தனர். அடுத்து வந்த ஆண்டுகளில், அதாவது 1891 ஆம் ஆண்டு வரை, இவர் புளூரின் வேதியியல் ஆய்வில் ஆழ்ந்து இருந்தார். இவர், புளூரின் கூறாக உள்ள பல வேதியியல் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தார். பால் இலெபோ (Paul Lebeau) என்பவரோடு சேர்ந்து 1901ல் கந்தக ஃகெக்சாபுளூரைடு (SF6) கண்டுபிடித்தார். இவருடைய ஆய்வின் பயனாய் போரான், செயற்கை வைரம் முதலான்வற்றைப் விளைவிப்பதில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. மின்சாரத்தால் சூடாக்கப்பட்ட அடுப்புகள் 3500°C வரை வெப்பநிலை எய்தும்படியாக செய்ய முடிந்தது. இதற்காக 80 வோல்ட்டு அழுத்தத்தில் 2200 ஆம்பியர் மின்னோட்டம் பாய்ச்ச வேண்டி இருந்தது.பெர்டினாண்டு புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்துக் கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு 1906 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிப்ரவரி 20, 1907ல் தனது 54வது அகவையில் பாரிசு, பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோள்களின் அகச்சிவப்புக்கதிர் கதிர் வானியலின் முன்னோடி ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 2014).
ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் (Gerald Gerry Neugebauer) செப்டம்பர் 3, 1932ல் ஜெர்மனி குடியரசில் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆஸ்த்திரிய அமெரிக்க கணிதவியலாளரும் அறிவியல் வரலாற்றாசிரியரும் ஆகிய ஆட்டோ ந்யுகெபவுவேர் ஆவார். தாயார் கிரேட்டே பிரக் ஆவார். தன் ஏழாம் அகவையில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தன் இளவல் பட்டம் 1954ல் பெற்றார். 1960ல் இயற்பியலில் தன் முனைவர் பட்ட்த்தை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு இருநீரகத்தின் நேர்மின்னணுகளின் நேர், எதிர் ஒளிநகல்கள் எடுத்தலாகும். இவர் அமெரிக்கப் படையில் பணிபுரிந்தபோது தாரைச் செலுத்த ஆய்வகத்தில் தங்கினார். அங்கே 1952 வரை அமெரிக்கப் படைதுறைக்காக பணிபுரிந்தார். 1952ல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் புல உறுப்பினராக, அதாவது உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து 1970ல் முழுநிலைப் பேராசிரியரானார்.1985ல் ஓவார்டு அகுசு பேராசிரியாக அமர்த்தப்பட்டார். 1988ல் இயற்பியல், கணிதவியல், வானியல் பிரிவின் தலைவரும் ஆனார். இவர் அண்மையில் இராபர்ட் ஆந்திரூசு மில்லிகன் தகைமை இயற்பியல் பேராசிரியர் ஆனார். இவர் 1980 முதல் 1994 வரை பலோமார் வான்காணக இயக்குநராக விளங்கினார். ஜெரால்டு அகச்சிவப்புக்கதிர் வானியலின் முன்னோடியாக உலகமெலாம் அறியப்பட்டுள்ளார். இவர் கோள்களின் அகச்சிவப்புக்கதிர் ஆய்வில் பெரும்பங்கு வகித்துள்ளார். இதோடு இவர் அகச்சிவப்புக்கதிர் வானியல் செயற்கைக்கோளையும் (IRAS) அகச்சிவப்புக்கதிர் செயல்முறை, பகுப்பாய்வு மையத்தையும் (IAPC) பயன்படுத்தி புவியிலும் விண்வெளியிலும் விண்மீன்களையும் பால்வழியையும் பிற பால்வெளிகளையும் அகச்சிவப்புக்கதிர் ஆய்வுகள் வழியாக மவுண்ட் வில்சன் பலோமார் பணியாளருடன் இணைந்து நோக்கீடுகள் செய்து, வான்வெளியில் நிலவும் பல்லாயிரக் கணக்கான அகச்சிவப்புக்கதிர் வாயிகளைக் கண்டுபிடித்தார். மேலும் முதன்முதலாக பால்வெளி மையத்தின் அகச்சிவப்புக்கதிர் காட்சியையும் வெளிப்படுத்தினார்.ஜெரால்டு, இராபர்ட் பி.இலைட்டனுடன் இணைந்து இருமைக்ரான் வானளக்கையை முடித்தார். இதுதான் முதல் வானின் அகச்சிவப்புக்கதிர் அலக்கையாகும். இந்த அலக்கை வழியாக 5000க்கும் மேற்பட்ட அகச்சிவப்புக்கதிர் வாயிகளின் அட்டவணை உருவாக்கப்பட்டது. இவர் எரிக் பெக்லினுடன் இணைந்து பெக்லிந்நியூகெபௌவேர் வான்பொருளைக் கண்டுபிடித்தார். இது ஓரியான் ஒண்முகிலில் உள்ள உயர்செறிவான அகச்சிவப்புக்கதிரை உமிழும் வான்பொருள் ஆகும். இது 10 மைக்ரான் அலைநீளத்தினும் குறைந்த கதிர்வீச்சுப் பொருள்களிலேயே மிகப்பொலிவான பெரும்பொருளாகும். இவர் அவாயில் உள்ள கெக் வான்காணக வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் பெரும்பாத்திர்ம் வகித்தார். இவர் இரண்டு நாசா அறிவியல் சாதனைப் பதக்கங்களை 1972 இலும் 1984 இலும் பெற்றார். இவர் 1985 இல் அமெரிக்க வான், விண்வெளி ஊர்தியியல் நிறுவனத்தின் விண்வெளி அறிவியல் விருதைப் பெற்றார். இரிச்மியர் விரிவுரை விருதையும் 1985ல் பெற்றுள்ளார். 1986ல் இரம்போர்டு பரிசையும் 1996ல்என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமையையும், 1998ல் எர்ழ்செல் பதக்கத்தையும் 2010ல் புரூசு பதக்கத்தையும் பெற்றார்.கலிபோர்னியா அறிவியல், தொழிலக அருங்காட்சியகம் இவரை 1986 ஆம் ஆண்டின் கலிபோர்னியா அறிவியலாளராக அறிவித்தது. இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்துக்கும் அமெரிக்க மெய்யியல் கழகத்துக்கும் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்துக்கும் அரசு வானியல் கழகத்துக்கும் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நியூகெபவுவேர் புவி இயற்பியலாளரான மார்சியா நியூகெபவுவேரை மணந்துகொண்டார். மார்சியா தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரிந்த சூரியக் காற்று ஆய்வ்யின் முன்னோடியாவார். இவர்கள் அரிசோனாவில் உள்ல தக்சனில் வாழ்ந்தனர். அகச்சிவப்புக் கதிர் வானியலின் முன்னோடி ஆய்வால் பெயர் பெற்ற ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் செப்டம்பர் 26, 2014ல் தனது 82வது அகவையில் தக்சனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25, 1644).
ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Romer) செப்டம்பர் 25, 1644ல் ஆர்ஹஸ், டென்மார்க்கில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார். ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும். 1662ல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் (கால்சைட்டு) ஏற்படும் இரட்டை ஒளிவிலகலை ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த ராசுமசு பார்த்தோலின் 1668ல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் டைக்கோ பிராவின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.
ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது. லூயி XIV மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் வெர்சாய் அரண்மனையின் அழகான நீர்த்தாரைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்றார். 1681ல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார். பல்கலைக்கழகத்தில் இருந்த ருண்டெடாம், வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துவிட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.
அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683ல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698ல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே. 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ). 1700ல் ரோமர் டென்மார்க்கு, நோர்வேயில் கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார். முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக டைக்கோ பிரா எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன. ரோமர் முதலில் இயற்றப்பட்ட வெப்பநிலை ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708ல் இவரைச் சந்தித்த டேனியல் பாரன்ஃகைட் இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள பாரன்ஃகைட் வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.
டென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705ல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார். காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார். கோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார். நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.
நிலப்படவியலிலும் கடல்வழிகாட்டுதலிலும் நிலநிரைக்கோட்டை தீர்மானிப்பதில் செயல்முறைச் சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாண நிலத்திலிருந்து தள்ளி உள்ள கப்பலில் இருந்து நிலநிரைக்கோட்டை தீர்மானிக்கும் வழிமுறையொன்றை கண்டுபிடிப்பவருக்கு எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப் பரிசுகள் அறிவித்தார். இதன் எதிர்வினையாக 1616-17ல் கலீலியோ ஒரு கப்பலில் இருந்து நேரத்தையும் நிலநிரைக்கோட்டையும் அறிய வியாழக்கோளின் துணைக்கோள்களின் ஒளிமறைப்புக்களைப் பயன்படுத்தும் முறையை நிறுவினார். இருப்பினும் துல்லியமான நேர அட்டவணைகள் 18வது நூற்றாண்டு வரை கணிக்கப்படாததாலும் கப்பல்களிலிருந்து வியாழனின் துணைக்கோள்களை கவனிப்பதில் சிக்கல்கள் நிலவியதாலும் இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. 1676ஆம் ஆண்டு ரோமர் விரிவுரைத்த கட்டுரையில் உள்ள படம் ரோமர் ஐஓ துணைக்கோளின் சுற்றுப்பாதைகளின் நேரங்களை புவி வியாழனை நோக்கி நகரும்போதும் (F – G) புவி வியாழனிலிருந்து வெளியே நகரும்போதும் (L – K) ஒப்பிட்டார்.
இருப்பினும் வியாழனின் துணைக்கோள்களை நேரம் தீர்மானிக்கப் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. 1671ல் பல மாதங்களாக யான் பிக்கார்டும் ரோமரும் வியாழனின் ஐஓ சந்திரனின் 140 கிரகணங்களை கவனித்து பதிந்தனர். அதே காலகட்டத்தில் பாரிசில் கியோவன்னி டொமெனிகோ காசினி என்ற பிரெஞ்சு அறிவியலரும் இந்த கிரகணங்களை பதிந்து வந்துள்ளார். இருவரது நேரங்களையும் ஒப்பிட்டு பாரிசுக்கும் ரோமர் பணிபுரிந்த யுரானியன்போர்க்குக்கும் இடையேயான நிலநிரைக்கோட்டு இடைவெளி கணக்கிடப்பட்டது. 1666க்கும் 1668க்கும் இடையே காசினி வியாழக்கோள்களின் சந்திரன்களைக் கவனித்து தமது அளவீடுகளில் பிழைகள் நேர்வதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருப்பதாலேயே இருக்க வேண்டும் என எண்ணினார். 1672ல் ரோமர் காசினியிடம் உதவியாளராக இணைந்து இவற்றைக் கவனிப்பதைத் தொடர்ந்தார். காசினியின் அறிதல்களுடன் தன்னுடைய கவனிப்புக்களையும் இணைத்து ஆய்ந்தார். புவி வியாழனின் அருகாமையில் செல்லும்போது ஐஓ துணைக்கோளின் கிரணங்களுக்கு இடையேயான நேரங்கள் புவி வியாழனிடமிருந்து தள்ளி இருக்கும் போது ஏற்படுவதைவிட குறைவாக இருந்தது.
காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676ல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்: இந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன. ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார். ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார். ரோமரின் தரவுகளைக் கொண்டு பலரும் ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டனர். இவர்களில் முதலாமவராக கிறித்தியான் ஐகன்சு விளங்கினார். ரோமரின் தரவுகளையும் தமது கவனிப்புக்களையும் கொண்டு ஒளி வினாடிக்கு 16 2⁄3 புவியின் விட்டத் தொலைவு செல்வதாக கணக்கிட்டார். ஒளிக்கு அளவிடக்கூடிய வேகம் உள்ளது என்ற ரோமரின் கருதுகோள் 1727ல் ஜேம்ஸ் பிராட்லி தனது அளவீடுகள் மூலம் நிருபிக்கும்வரை அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1809ல் ஐஓ துணைக்கோளின் கவனிப்புக்களைக் கொண்டு, இம்முறை நூறாண்டுகளுக்கும் மேலான துல்லிய அளவீடுகளைக் கொண்டு, யான் பாப்டிசுட்டு யோசஃப் டெலம்பர் சூரியனில் இருந்து ஒளி புவியை அடைய 8 நிமிடங்களும் 12 வினாடிகளும் ஆவதாகக் கணக்கிட்டார். இதனைக்கொண்டு ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீட்டர்களை கணக்கிட்டார். தற்போது இது திருத்தப்பட்டு சூரியொளி புவியை அடைய 8 நிமி 19 வினாடிகளாவதாகவும் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792.458 ஆகவும் கணகிடப்பட்டுள்ளது. ரோமர் பணிபுரிந்த பாரிசிலுள்ள வான்வெளி ஆய்வகத்தில் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்தவராக ரோமருக்கு நினைவுப்பட்டயம் வைக்கப்பட்டுள்ளது. ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் செப்டம்பர் 19, 1710ல் தனது 65வது அகவையில் கோபன்ஹேகன், டென்மார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்திய, இந்திய அணுக்கரு உலையின் தந்தை, பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004).
இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி.ராமண்ணா நீதியரசாரப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார். இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர் இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் அறிவு வளர்ச்சிக்கும் வழிகோலினார். இராமண்ணாவின் பெயரிலுள்ள இராஜா என்பது இராஜம்மா என்ற பெயரின் பகுதியாகும். இராமண்ணாவின் தொடக்கக் கல்வி மைசூரில் அமைந்தது. இவரின் குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததால் அங்கு பிஷப் காட்டன் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். இது ஆதரவற்ற ஆங்கிலோ இந்தியக் குழந்தைகளுக்கான பள்ளியாகும்.
சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டியதுடன் அதை முறையாகவும் பயின்றார். ஆங்கில வழிப்பள்ளியில் பயின்றதால் மேலைநாட்டுச் சங்கீதமும் இவரை ஈர்த்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூருவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இன்டர் மீடியட் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பிற்காகச் சேர்ந்தார். அங்கு இயற்பியல் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின், டாடா கல்வி உதவித் தொகை பெற்று இங்கிலாந்து சென்று லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அணுக்கரு இயற்பியல் (Nuclear Physics), அணுவுலை இயற்பியல் (Reactor Physics), வடிவமைப்பு, மேற்கத்திய இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார். 1948ல் முனைவர் பட்டத்தையும், ராயல் இசைப் பள்ளியின் L.R.S.M பட்டயப் படிப்பையும் (Licentiate in Royal School of Music) பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.
இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். டிசம்பர் 1, 1949ல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார். மும்பையில் கும்பாலா குன்று என்ற இடத்தில் அமைந்திருந்த அந்நிறுவனம் அப்போதுதான் யாட்கிளப் பகுதிக்கு மாறி, புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.
இசையில் இவருக்கிருந்த ஆர்வத்தை உணர்ந்த பாபா தங்கும் விடுதியில் இவருக்கு என்று ஓர் அறை இவருடைய பியானோ இசைக்கருவியை வைக்க ஓர் அறை என இரண்டு அடுத்தடுத்த அறையை ஒதுக்கித் தந்தார். விடுதியில் தரைதளம் இவர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வறையாக அமைந்தது. இங்கு அணுக்கருப் பிளவு மற்றும்ம் சிதறல் பற்றிய ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் சேரும்போது இந்நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. அப்பொழுது பாபாவின் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பாபாவின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட அணுக்கரு ஆய்வுக்குழு குறிப்பிடதக்க வகையில் பணியாற்றிய பெருமையுடையதாகும். தொழில்நுட்ப நடவடிக்கைகளும், அணுஆற்றல் திட்டங்களும் இந்தியாவில் தழைத்தோங்கி வளர இக்குழு மிகவும் கடுமையாக உழைத்தது. இதன் செயல்பாடுகளுக்கு மின்னணுவியல் துறையின் தலைவரான ‘ஏ.எஸ். ராவ்’ அவர்களும் ஒரு காரணமாக விளங்கினார். பல்வேறு இன்னல்களுக்கிடையேயும் இக்குழுவின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தன.
நியூட்ரான், அணுக்கரு, அணுக்கரு உலை இயற்பியல் ஆகிய துறைகளில் இராமண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாபா அணு ஆய்வு மையத்தில் ஹோமி பாபாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இராமண்ணா ஓரு இளைய ஆய்வாளராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான ‘அப்சரா’ இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே.எஸ்.சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ.எஸ்.ராவும் பங்களித்தனர். அணுக்கரு உலையில் அமைக்கப்படும் எரிபொருளுக்கான துளைகள் அமைப்பு உருவாக்கத்திற்கு எந்திரப் பொறியாளர் வி.டி.கிருஷ்ணன் பொறுப்பேற்றார். இராமண்ணா துடிப்புமிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் விரலைத் திர்மாணித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது.
யுரேனியம்-235ல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றாவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்ற இந்த துகள்கள் அவற்றின் வெளியேற்றம் பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின. அணுக்கரு ஆய்வுகளில் ஈடுபட்ட இராமண்ணா, இந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட பல இளம் அறிவியலறிஞர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக 1975ல் இவர் தலைமையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தது, இவர் எடுத்த முதல் முக்கியமான முயற்சியாகும். இங்கு பல அறிவியல் அறிஞர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் அணு ஆற்றல் மற்ரும் விண்வெளி ஆய்வு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர், பல்வேறு ஆய்வகங்களின் இயக்குநர்கள், இந்திய அரசாங்கத்தின் அறிவியல் துறைச் செயலர்கள் என்று இந்திய நாட்டிற்குள் பல்வேறு வகைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.
1967-68ல் சான்ட பார்பராவில், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு உதவி ஆசிரியராகவும், 1971-73ல் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு ஆசிரியராகவும் 1984ல் ஆம்ஸ்டர்டாமில் பயிற்சி ஆசிரியராகவும், 1987ல் சாந்திநிகேதனில் நடைபெற்ற உயர் ஆற்றல் இயற்பியல் குறித்த கோடைக்கலப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியராகவும், கணித அறிவியல் பயிற்சி நிறுவனத்தில் வகையீட்டு வடிவஇயல், குவைய எந்திரவியல், குவைய புலக்கோட்பாடு, அடிப்படைத் துகள் இயற்பியல் ஆகியவற்றில் பல வகுப்புகளையும் நடத்தியுள்ளார். சென்னையில் கணிதப் பயிற்சி நிறுவனத்திலும் அவ்வப்போது ஆசிரியராகப் பணிபுரிந்து வகுப்புகள் நடத்தியிருக்கிறார். இந்தியாவிலும் உலகில் உள்ள பலகைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது நாட்டில் பல பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் உருவாக இவர் காரணமாக இருந்துள்ளார். இந்தூரில் முன்னேறிய தொழில்நுட்பமையம் (முன்னேற்றம் பெற்ற முடுக்கிகளை உருவாக்கும் பணி), முன்னேறிய படிப்புகளுக்கான தேசியப் பயிற்சி சிறுவனம் ஆகியவற்றை டாடாவின் உதவியால் தொடங்கி அதன் இயக்குநராகப் பெங்களூருவில் பொறுப்பேற்றார்.
1972 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், 1977-78களில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணுஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும், 1986ல் அதன் முப்பதாவது பொது மாநாட்டின் தலைவராகவும் செயல்பட்டார். 1977-79ல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநராக 10 ஆண்டுகளுக்கும் (1972-1978, 1981-1983) மேலாகப் பணியாற்றினார். முதல் ஆறாண்டுகளை இராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம். அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட ‘சிரிக்கும் புத்தர்’ (Smiling Buddha) என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது. மே 18, 1974 ஆம் தேதி இராஜஸ்தானிலுள்ள பொக்ரான் பாலைவனத்தில் நிலத்தடி குண்டு வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது.
டாக்டர் ஹோமி ஜெ.பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என்.சேத்னா ஆகியோருக்குப் பின்பு தலைவராக, அணுசக்திப் பேரவைக்குத் (Atomic Energy Commission) டாக்டர் ராஜா ராமண்ணா 1983ல் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 1990ல் வி.பி.சிங் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1997ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிபுரிந்தார். பெங்களூருவில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research), இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை (Indian Academy of Sciences (1977)), மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் (Indian Institute of Technology, Bombay (1972)) ஆகியவற்றின் தலைவராகவும் இராமண்ணா பணியாற்றினார். இவருடைய பணிகளைப் பாராட்டி 1963ல் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது, 1968ல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது, 1973ல் பத்ம விபூஷண் விருது, 1984ல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் மேக்நாத் சாகா பதக்கம், 1985ல் ஓம்பிரகாஷ் பாசின் விருது, 1985-86ல் ஆர். டி. பிர்லா நினைவு விருது, 1996ல் அசுதோஷ் முகர்ஜி தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கின.இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இராமண்ணாவின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகி யுள்ளன. இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை இராஜா இராமண்ணா செப்டம்பர் 24, 2004ல் தனது 79வது அகவையில் மும்பையில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீ கடத்து நிலை (super conductivity) மற்றும் தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853).
ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’ என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார் ‘அன்னா ஜெர்டினா கொயர்ஸ்’. இவருடைய பெற்றோர் அனைத்து வகையிலும் கண்டிப்பானவர்களாக இருந்ததால் இவரும் இவருடைய சகோதரர்களும் கடின உழைப்பின் வலிமையை உணர்ந்தே வளர்ந்தனர். ‘ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்’ 1887ல் ‘மரியாஅட்ரியானா வில்ஹெல்மினா எலிசபெத் பிஸ்லாவெல்ட்’ என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். இவர் பிறந்த ஊரிலேயே இருந்த ஹூஜெர்பர்ஜர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அங்கு மொழிப்பாடம் கற்பிக்கப்படவில்லை. எனவே பள்ளி நேரம் போக, பிற நேரங்களில், அப்பள்ளியின் இயக்குநர், பின்னாளில் வேதியல் பேராசிரியராகப் புகழ்பெற்ற ஜே.எம்.லெய்டன்வான் பெம்மலென் என்பவரிடம், கிரேக்க லத்தீன் மொழிப்பாடங்களைத் தனியே பயின்றார்.
1870ல் குரோனின்ஜென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு பயின்ற போது உட்க்ரெட் பல்கலைக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ஆவி அடர்த்தி என்பது பற்றி எழுதி முதல் பரிசைப் பெற்றார். அங்கு பட்டம் பெற்ற பின் 1871ல் ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருடைய ஆசிரியர்களாக விளங்கியவர்கள் புன்சன் மற்றும் கிர்க்கார்ப் என்ற அறிவியலறிஞர்கள் ஆவர். ராபர்ட் கிர்க்கார்ப் என்ற ஜெர்மனிய இயற்பியலறிஞரின் தனிப்பட்ட ஆய்வுச் சாலையில் அவருடைய உதவியாளராகவும் காமர்லிங்க் பணி புரிந்தார். தன் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பிய பின் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் 1878ல் முதுகலைப் பட்டமும், பின்னர் 1879ல் முனைவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘ புவியியல் சுழற்சிக்கான புதிய நிரூபணங்கள் (New proofs for the rotation of the earth) என்பதாகும்.
1878ல் லெப்ட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பாஸ்சா என்ற அறிவியல் அறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். அதே நிலையில் 1881-1882 ஆம் ஆண்டுகளில் விரிவுரையாற்றுகின்ற வாய்ப்பும் கிடைக்கப்பெற்றார். இங்கு இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் பாய்பொருள்களின் பொதுக் கோட்பாடு (General Theory of the nature of fluids from the perspective of Kinetic theory) என்ற ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார். பாய்பொருள்களின் பொதுக் கோட்பாட்டை உருவாக்க அவற்றின் பருமனளவு, அழுத்தம், வெப்பநிலை ஆகிய அளவுகளின் சரியான அளவீடுகள் அவசியம் என்பதை உணர்ந்தார். அப்பொழுதுதான் தாழ்ந்த வெப்ப நிலைகளை அறிந்து செயல்படுவதில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். 1882ல் இவருக்கு 29 அகவை இருக்கும்போது லெய்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியல் (experimental physics) துறையில் பேராசிரியராகவும், அங்குள்ள ஆய்வுச்சாலையின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இங்கு தாழ்ந்த வெப்பநிலைகளைப் பற்றிய ஆய்வுகளை மீண்டும் தொடங்கினார். இதற்கு தாழ்வெப்பநிலையியல் என்று பெயர். கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் (1882-1923) இதே லெய்டன் ஆய்வுச்சாலையில் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தார்.
அக்காலத்தில் தாழ்ந்த வெப்பநிலையியல் என்பது புதிய துறையாகும். இவருக்கு முன்பு வாயுக்களைத் தாழ்ந்த வெப்ப நிலையில் திரவமாக்குவது என்பது நடைமுறைப் படுத்தப் படவில்லை. காமர்லிங்க் இந்த ஆய்வினை மேற்கொண்ட போது, பொருளின் அணுத்தன்மையின் முழு ஆய்வுச் சான்றை அறிய விரும்பினார். ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் முதலிய வாயுக்களை மிக அதிக அளவு தாழ்ந்த வெப்ப நிலைக்கு உட்படுத்தும் ஆய்வை மேற்கொண்டார். இக்கால கட்டத்தில், திரவம் ஆவியாகும் போது அங்கு ஒரு குளிர்ச்சி விளைவு ஏற்படுகிறது என்பதை ஸ்வீடன் நாட்டு அறிவியலறிஞர் ஆர்.பி.ஃபிக்டெட் என்பவர் கண்டறிந்த்தார். அதே வருடத்தில் பிரெஞ்சு இயற்பியலாளர் எல்.பி கெயிட்லெட் என்பவர் அதிக அழுத்தத்திற்கு ஆக்ஸிஜனை உட்படுத்தியபோது அங்கு தாழ்ந்த வெப்ப நிலை உருவானதைக் கண்டறிந்தார். இறுதியாக, ஜே.பி. ஜூல்ஸ் மற்றும் வில்லியம் தாம்சன் (லார்டு கெல்வின்) ஒரு வாயுவை அதிக அழுத்தத்தில் மிகச் சிறிய திறப்பின் வழியே வாயுவின் தன்மைக்கேற்பக் குறிப்பிட்ட அளவு செலுத்தும்போது அதனுடைய வெப்பநிலை குறைவதைக் கண்டறிந்தார். 1895 இல் முனிச்சில் கார்ல் லிண்டே என்பவர் ஜூல்-தாம்சன் விளைவின் அடிப்படையில் வாயுவைத் திரவமாக்கும் கருவியை உருவாககினார்.
பிக்டெட், லிண்டே ஆகியோரின் முறைகளை ஒருங்கிணைத்து காமர்லிங்க் ஒரு புதிய முறையைக் கண்டறிந்தார். இதன் படி மற்ற வாயுக்களைத் திரவமாக்கும் ஆக்சிஜனை, திரவமாக்கும் முறையில் வெற்றிகண்டார். ஒரு மணி நேரத்தில் 14 லிட்டர் அளவு ஆக்சிஜனைத் திரவமாக்கினார். 1904ல் மிகப்பெரிய தாழ்ந்த வெப்பநிலை உருவாக்கத்திற்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். 1908 -ல் ஹாம்ப்சன்-லிண்டே சுழற்சி முறைப்படி ஜூல்- தாம்சன் விளைவைப் பயன்படுத்தி வெப்பநிலையை 1 டிகிரிக்கும் குறைவாக்கும் (-273°) கருவியை வடிவைமைத்தார். இது லெய்டனில் உள்ள ‘பொயர்ஹால் அருங்காட்சியகத்தில்’ வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1913ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1911ல் பாதரசம், வெள்ளீயம், காரீயம் போன்ற தூய்மையான உலோகங்களின் மீள்தன்மை பற்றி ஆராய்ந்தார். 4.2 கெல்வின் அளவு வெப்ப நிலையில் மின்தடை சுழியாகும் என்பதை காமர்லிங்க்கும் அவரது உதவியாளர்களும் கண்டறிந்தனர். பாதரசம் இந்தப் புதிய நிலையை அடைந்து அதனுடைய மின் கடத்தும் தன்மை மிகச் சிறப்பாக அமைகிறது. இது மீ கடத்து நிலை (super conductivity) எனக் குறிப்பிடப்பட்டது.
லெய்டன் பல்கலைக் கழகத்தின் தாழ்ந்த வெப்பநிலை ஆய்வுக்கூடத்திற்கு காமர்லிங்க் ஆன்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1910ல் மத்யூக்கி பதக்கம், 1912ல் ரம்போர்டு பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன. சந்திரனில் உள்ள ஒரு குழிப்பகுதிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமின் ராயல் அறிவியல் கழகத்தில் தனது 30 வயதிலேயே இவர் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். அனைத்துலக சங்கம் ஒன்றையும் இவர் நிறுவினார். நெதர்லாந்து அரிமா அணி, நெதர்லாந்து ஆரஞ்சு-நஸ்ஸாவ் அணி, நார்வே புனித ஆலாஃப் அணி, போலந்தின் போலேனியா ரெஸ்டிட்யூபா அணி ஆகியவற்றின் ஆணை அலுவலராகப் பணியாற்றினார். பெர்லின் பல்கலைக் கழகம் மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. பவும்கார்டன் பரிசு, ஃப்ராங்க்ளின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
மாஸ்கோவில் உள்ள அறிவியல் நண்பர்கள் சங்கத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோம், லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களில் அயல்நாட்டு உறுப்பினராகவும் ஸ்டாக்ஹோமில் இயற்பியல் சங்கத்தில் மதிப்பியல் உறுப்பினராகவும் அமர்த்தப்பட்டார். அறிவியல் அறிஞராக இருப்பினும் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் அதிக கவனம் செலுத்தினார். உதவிகள் தேவைப் பட்டவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தார். முதல் உலகப் போருக்கு முன்பும், பின்பும் அறிவியலறிஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேறுபாடுகளைக் களைய உதவினார். தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிப்ரவரி 21, 1926ல் தனது 72வது அகவையில் நெதர்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும் – உலக அமைதி தினம் (International Day of Peace) இன்று (செப்டம்பர் 21).
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து.
மேலும் உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காலி செய்திருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நம்மால் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. அதே சமயம் உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உலக சமாதான முயற்சி ஒன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தது கொடுமையிலும் கொடுமையாகும். அவர் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையில் மரணம் அடைந்தார். அந்தத் தினமே உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா சபையும், ஐ.நா சாசனமும் இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்த முக்கியமாக தேவைப்படுவது சமாதானமாக இருக்கிறது. அதாவது, குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்டம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானமாக இருக்கிறது. சமாதானம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று உருதுணைபுரிபவையாக இருக்கின்றன. அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.
உலகில் அணு ஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுறுத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்கிற போர்வையில் அணு ஆயுத பலத்தை பெருக்குகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இந்தியாவில், பல மாநிலங்கள், பல மொழி பேசுபவர்கள் மற்றும் பல மதத்தினர் இருந்தாலும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கைதான், இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது. இதனால் உலக அரங்கில் இந்தியா, தலை நிமிர்ந்து நின்று, மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. 1956 – ஆம் ஆண்டு ஐநா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பது, இந்த அமைதி தினத்தில் நாம் அனைவரும் எண்ணி பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
உலக அரங்கில் அமைதியை தொடர்ந்து காத்து வருவதில் இந்தியாவிற்கு நிகர் இந்தியா தான். மற்ற நாடுகள் எல்லாம் சுதந்திரம் பெற போர் போன்ற தீவரவாத செயல்களில் ஈடுபட்ட போதே அஹிம்சை என்ற அமைதியின் வழியில் சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா. உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும். வரும்காலங்களில் ஒவ்வொரு நாளுமே, உலக அமைதிநாள்தான் என்ற மனநிறைவோடும், நிம்மதியோடும் கொண்டாட வேண்டும். இதுவே நம்மை வாழவைக்கும் இந்த உலகத்தை, நாம் வாழவைக்கும் முறை. ஓவ்வொரு மனமும் மாறும்போது, உலகமும் மாறும் என்ற நம்பிக்கையோடு நாமும் இந்த அமைதி நாளில் உலக அமைதிக்கு வழிவகுப்போம்.
Source By: Dailyhunt, Newsj
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கணிதத்தில் நாம் பயன்படுத்தும் அநேகக் குறியீடுகளை அறிமுகம் செய்த புகழ் பெற்ற கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர் லியோனார்டு ஆய்லர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 18, 1783).
லியோனார்டு ஆய்லர் (Leonhard Euler) ஏப்ரல் 15, 1707ல் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு மதகுரு. தாயாரும் ஒரு குருவானவரின் மகளே. ஆய்லர்க்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். ஆய்லர் பிறந்ததுமே ஆய்லர் குடும்பத்தினர் பாசெல்லிலிருந்து ரீஹென் என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். பவுல் ஆய்லர், அக்காலத்தில் ஐரோப்பாவில் பெயர் பெற்ற கணிதவியலாளரான ஜொஹான் பர்னோலி என்பவரின் குடும்பத்துக்கு நண்பராக இருந்தார். இது இளம் ஆய்லரின் கணித ஆர்வத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்தது. இளம் வயதிலேயே அதீத ஆற்றல் கொண்ட ஆய்லர், தாம் படித்த புத்தகங்களில் தோன்றும் குறிப்புகளை ஒரு வார்த்தைகூடப் பிறழாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றல் பெற்று விளங்கினார். இளம் வயதிலேயே தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
ஆய்லர் படித்த பள்ளியில் கணிதம் பாடமாகவே இல்லை. அதனால் கணிதத்தில் ஆர்வமுடைய இவருடைய தந்தை இவரை ஜான் பெர்னோவிலி என்ற ஒரு புகழ் பெற்ற கணிதப் பேராசிரியரிடம் தனி மாணவனாகப் பாடம் கற்றுக் கொள்ள அனுப்பித்தார். ஆனால் பெர்னோவிலி இவரை சனிக்கிழமைகளில் மாத்திரம் வரச்சொல்லி உன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள் என்று சொல்லிவிட்டார். அதுவே ஆய்லருக்கு ஒரு வரப் பிரசாதமாகியது. ஏனென்றால் கணிதம் கற்றுக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழி கிடையாது என்று ஆய்லரே பிற்காலத்தில் சொல்லியிருக்கிறர். அவருடைய உழைப்பையும் கத்திமுனை புத்தியையும் பார்த்த இன்னும் இரு பெர்னோவிலிகள்தான் (டேனியல் பெர்னோவிலி, நிக்கொலாஸ் பெர்னோவிலி இருவரும்) இவன் பெரிய கணித மேதையாவான் என்று கண்டுகொண்டு, மதப் படிப்பில் இவரை ஈடுபடுத்த முயன்ற தந்தையின் மனதை மாற்றினார்கள்.
இன்று கணிதத்தில் இவர் பெயர் கொண்ட கருத்துக்கள், சூத்திரங்கள் மற்றும் தேற்றங்கள் நூற்றுக்கும் மேல் உள்ளன. அந்த அளவுக்கு அனைத்துக் கணித உட்பிரிவுகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி மாபெரும் மேதையாக ஆய்லர் கணித உலகில் சஞ்சரிக்கிறார். கணிதத்தில் இன்று நாம் பயன்படுத்தும் அநேகக் குறியீடுகளை இவரே அறிமுகம் செய்தார். உதாரணமாக, சார்புகளைக் குறிக்கும் ƒ(x) குறியீடு, கூடுதல் மதிப்புக்கான Σ குறியீடு, முக்கோணவியல் சார்புகளான sin x, cos x போன்ற பெயர்கள், மடக்கை அடிமானமான e என்ற குறியீடு, கலப்பு எண்ணின் i என்ற கற்பனை அலகு போன்றவை குறிப்பிடத் தக்கவையாகும். கணித உலகில் இரு எண்களைத் தன் பெயரில் கொண்ட ஒரே கணித மேதை ஆய்லர். மடக்கை சார்புகளின் அடிமானமான e என்ற எண்ணைக் கண்டறிந்து அதன் தோராய மதிப்பை 2.718 என வழங்கினார். இன்று இதை ‘ஆய்லர் எண்’ என அழைக்கிறோம். அதேபோல் காமா (ϒ) எனும் மாறிலியையும் இன்று ‘ஆய்லர் மாறிலி’ என அழைக்கிறோம். இதன் மதிப்பு 0.57721 என தோராயமாக அமைகிறது. காமா எனும் ஆய்லர் மாறிலி விகிதமுறு எண்ணா, அல்லது விகிதமுறா எண்ணா என இன்றுவரை கூற இயலவில்லை.
இன்று கணிதத்தில் மிகச் சிறப்பான சூத்திரமாகக் கருதப்படும் eiπ+1= 0 என்ற சமன்பாடை இவர் வழங்கிய eiθ= cos θ + i sin θ சூத்திரத்திலிருந்து θ = π எனப் பிரதியிட்டுப் பெறலாம். கோநிஸ்பெர்க் பாலக் கணக்கு எனும் கணிதப் புதிருக்கு இவர் வழங்கிய தீர்வு மூலம் Graph Theory எனும் கணித உட்பிரிவு உருவானது. அதேபோல், ν-e + ƒ=2 என்ற பன்முகி சூத்திரம் Topology எனும் கணித உட்பிரிவு தோன்ற வழிவகுத்தது. மேலும், பொருட்களின் தொடர்புகளைப் படங்கள் மூலம் வெளிப்படுத்தும் பண்பை வரைபடங்கள் மூலம் ஆய்லர் வெளிபடுத்தினார். இன்று இவ்வரைபடங்களை நாம் ஆய்லர் வரைபடங்கள் என அழைக்கிறோம். இவையே இன்று நாம் கணங்களில் தற்சமயம் பயன்படுத்தும் வெண் வரைபடங்களின் மாதிரியாகத் திகழ்கின்றன.
1736ல் ஆய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பிரச்சினையை விளையாட்டுப்போல் எளிதில் விடுவித்தார். அந்த பிரச்சினையும் அதன் நிறுவலில் இருந்த தத்துவமும் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இடவியல், கோலக்கோட்பாடு என்ற இரண்டு தற்காலக் கணிதப் பிரிவுகளுக்கு அடிக்கோலிட்டது. ஒரு ஆறு, அதில் இரண்டு பெரிய தீவுகள். ஆற்றின் குறுக்கே ஏழு பாலங்கள். ஏழு பாலங்களையும் ஒரு நடையில் கடக்கவேண்டும். போன பாலத்திலேயே இரண்டாம் முறை போகக்கூடாது. இது முடியுமா? இதுதான் பிரச்சினை. கோனிக்ஸ்பர்க் மக்களுக்கு இது உண்மைப் பிரச்சினை. ஏனென்றால் அவர்கள் ஊரில் தான் இத்தீவுகளும் பாலங்களும். மக்கள் நடந்து நடந்து சோதனை செய்தே அயர்ந்தனர். ஆய்லர் இதை நுண்பியப்படுத்தி கணித முறைத் தர்க்கத்தினால் விடுவித்தார். அவருடைய தீர்ப்பு ஏழு பாலங்களையும் ஒரு நடையில் கடக்கமுடியாது.
ஆய்லர் கணித மரபுப்படி பிரச்சினையிலிருந்த சம்பந்தமில்லாத விஷயங்களை ஒதுக்கிவிட்டு, அதன் அடித்தளத்திலிருந்த உயிர் நாடிப்பிரச்சினையை வெளிக்கொணர்வதற்காக, பாலங்கள் பிரச்சினையை கோலம் மூலமாக எளிதாக்கினார். நிலப்பரப்புகள் ஒவ்வொன்றையும் ஒரு புள்ளியாகவும், பாலங்களை அவைகளை இணைக்கும் கோடுகளாகவும் (அவை நேர் கோடாக இருக்கவேண்டிய தேவையில்லை) செய்ததில் ஒரு கோலமாகியது. 4 கோணப்புள்ளிகளும் 7 இணைக்கும் கோடுகளும் உள்ள இந்தக் கோலத்தில், ஒருபுள்ளியிலிருந்து 5 கோடுகளும் மற்ற 3 புள்ளிகளில் ஒவ்வொன்றிலிருந்தும் 3 கோடுகளும் செல்கின்றன. இந்த சூழ்நிலைக்கு ஆய்லர் ஒரு கணிதத் தேற்றத்தையே நிறுவினார். அதாவது, எல்லா கோடுகளையும் கடக்கக்கூடிய ஒரு நடை இருக்க வேண்டுமென்றால், ஒன்று, எந்தப் புள்ளியிலிருந்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள் கோடுகள் செல்லக்கூடாது, அல்லது, இரண்டே புள்ளிகளிலிருந்து ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள கோடுகள் செல்லவேண்டும்.
இந்த கோனிக்ச்பெர்க் பாலப்பிரச்சினையில், 4 புள்ளிகளிலிருந்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள கோடுகள் செல்வதால், நடை சாத்தியமில்லை. இதற்கும் இடவியலுக்கும் என்ன சம்பந்தமென்றால், இந்தப்பிரச்சினையில் புள்ளிகளிலிருந்து செல்லும் கோடுகள் எத்தனை என்ற ஒரே கேள்விதான் பிரச்சினையின் வேர். இந்த வேர் பிரச்சினையில் வேறு வடிவியல் விவகாரம் இல்லை. புள்ளிகளிலிருந்து எத்தனை கோடுகள் செல்கின்றது என்பது கோலத்தை எவ்வளவு கோணலாக்கினாலும் அதாவது, கோடுகளை நீட்டி, மடக்கி, வளைத்தாலும் மாறாமலிருக்கும் ஒரு எண். இந்த மாதிரி கருத்துகளைத்தான் இயற்கணித இடவியல் ஆய்வு செய்கிறது. கணிதத்தில் மிக அதிகமான படைப்புகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பல அழகு பொருந்திய சூத்திரங்களை ஏற்படுத்தி, கணிதத்துக்குப் பொலிவூட்டியவர் ஆய்லர். மேலும், பல நவீன கணித உட்பிரிவுகளுக்கு இவரது சிந்தனைகளே அடித்தளமாக அமைந்தன. இவரது படைப்புகள் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீள்பவை. இவர் கண்டறிந்த செய்திகளின் பட்டியலை நூற்றாண்டுகளுக்கு மேல் சேகரித்து அப்படைப்புகளின் சிறுகுறிப்புகளை நூறு தொகுதிகளுக்கு மேல் வழங்கியுள்ளனர். இதிலிருந்து இவரது படைப்பாக்கத்தின் பிரம்மாண்டத்தை நாம் உணரலாம்.
முப்பது வயதில் தனது வலது கண்ணை இழந்த ஆய்லர், தனது அறுபதாவது வயதில் மற்றொரு கண்ணையும் இழந்தார். இருப்பினும் அதன் பிறகு அவர் வாழ்ந்த 16 ஆண்டுகளில் வாரத்துக்கு ஓர் கண்டுபிடிப்பை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தினமும் காலை முதல் மாலை வரை தனது கண்டுபிடிப்புகளைக் குறிப்பதற்கென ஓர் நபரை நியமனம் செய்து அவர் மூலம் பதிவு செய்ததாக அறியப்படுகிறது. முதல் அறுபது ஆண்டுகளில் உருவாக்கிய கணிதப் படைப்புகளுக்கு இணையான கணிதப் படைப்புகளை பிற்காலத்திலும் அவர் உருவாக்கினார் என்பது அவரது அற்புத நினைவாற்றல், விடாமுயற்சி, உழைப்பு போன்றவற்றின் வெளிப்பாடே. கணித உலகத்தில் இவையெல்லாம் புது முன்மாதிரிகளாக அமைந்தன.
கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், வானியல், திரவ இயக்கவியல், ஒளியியல், இசைக் கோட்பாடு போன்ற பல்வேறு துறைகளிலும் கருத்துகளை வழங்கியுள்ளார். இவரது பெருமையை, பிற்காலத்தில் தோன்றிய பிரெஞ்சு கணித அறிஞரான லாப்லாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஆய்லரைப் படியுங்கள், ஆய்லரைப் படியுங்கள், அவர்தான் நம் அனைவருக்கும் ஆசான்”. கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர் லியோனார்டு ஆய்லர் செப்டம்பர் 18, 1783ல் தனது 76வது அகவையில் இரஸ்சியா, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.