சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) நவம்பர் 7, 1888ல் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா.சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B.A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M.A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.ஐரோப்பாவில் 1928ம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சி.வி.ராமன்கப்பல் பயணம் மேற்கொண்டார். மத்திய கடல் பகுதியில் சென்று கொண்டுஇருந்தபோது, கப்பலின் திறந்தவெளி தளத்தில், ராமன் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். இதற்கிடையே, ஆகாயத்தை பார்த்த ராமனுக்கு ஒரு வித்தியாச மான உணர்வு ஏற்பட்டது. மத்திய தரைக் கடல் பகுதியின் வானம், ஏன் அடர்த்தியான நீல நிறமாககாட்சி அளிக்கிறது என்று சிந்திக்க தொடங்கினார். அப்போது, அவருக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், அந்த சந்தேகம் மனதில் ஆழப்பதிந்தது. ஐரோப்பா பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியராமன், வானத்தின் நிறம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக ஒளி ஊடுருவக் கூடிய ஊடகம் திடப் பொருளாகவோ, திரவப் பொருளாகவோ அல்லதுவாயுப் பொருளாகவோ இருக்கலாம்.அந்த ஊடகங்களில் ஒளி செல்லும் போது அதன் இயல்பில் ஏற்படும்மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்’ (molecular scattering light ) ஏற்படுகிறது என்ற வரலாற்று உண்மையைக் கண்டறிந்தார்.ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார். இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறுஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்’ தோன்றுவதை அவர் கண்டார். நாம் வானவில் காண்கிறோம் அல்லவா. அது எப்படி உருவாகிறது என்பதையும் ராமன்தான் கண்டுபிடித்தார். இதனை பின் நாளில் ‘ராமன் வரிகள்’என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு’ (Raman effect) என்றும் அழைக்கப்படத் தொடங்கியது.சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார். இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் பிப்ரவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.இவருக்கு இலண்டனிலுள்ள வேந்தியக் குமுகத்தின் சிறப்புப்பேராளர் (இராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப்பு) பெருமை 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பிரித்தானிய அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் “நைட்டுஃகூடு” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது. இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான “மேட்யூச்சி” பதக்கம் வழங்கப்பட்டது. மைசூர் அரசர் “இராசபாபூசன்” பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார். பிலிடெல்பியா நிறுவனத்தின் “பிராங்கிளின்” பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் அகில “உலக இலெனின் பரிசு” அளிக்கப்பட்டது. ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற தமிழர், சர் சி.வி.இராமன் நவம்பர் 21, 1970ல் தனது 82வது அகவையில் பெங்களூரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உலக செய்திகள்
ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்த, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற, மேரி கியூரி பிறந்த தினம் இன்று (நவம்பர் 7, 1867).
மரியா மேரி ஸ்லொடஸ்கா கியூரி (Marie Salomea Skłodowska-Curie) நவம்பர் 7, 1867ல் போலாந்தின் வார்சாவில் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்பட்டனர். மரியாவின் தந்தை வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பித்தார். அவர் இரண்டு வார்சா பள்ளிகளுக்கு இயக்குனராக இருந்தார். ரஷ்ய அதிகாரிகள் செயல்முறை கற்பித்தலை பள்ளிகளிலிருந்து நீக்கியபின் தனது ஆய்வுக்கூடத்தின் கருவிகளை வீட்டிற்கு எடுத்துவந்து தனது குழந்தைகளுக்கு அவைகளின் செயல்பாட்டை விளக்கினார். மரியாவின் தாயார் பிரோநிஸ்லாவா ஒரு உறைவிடப் பள்ளியை நடத்தி வந்தார். ஆனால் மரியா பிறந்தவுடன் அவர் தனது இப்பணியை கைவிட்டார். மரியாவின் பன்னிரெண்டாவது அகவையில் காசநோயால் அவர் இறந்தார்.
தனது பத்தாவது அகவையில் மரியா ஜே.சிகொர்ச்கா என்னும் உறைவிட பள்ளியில் சேர்ந்தார். அதிலிருந்து ஜூன் 12, 1883ல் தங்கப்பதக்கத்தோடு வெளியேறினார். அடுத்த ஆண்டை தனது தந்தையின் குடும்பத்தினருடன் கிராமத்தில் கழித்தார். பிறகு வார்சாவில் தனது தந்தையுடன் வாழ்ந்தார். அப்போது சிறிதாக பயிற்சி வகுப்பு நடத்தினார். பெண் என்பதால் மேற்படிப்பிற்கு அங்குள்ள நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளப்படாததால் பிளையிங் பல்கலைகழகம் என்னும் போலிஷ் பாடத்திட்டம் நடத்தும், ரஷ்ய அதிகாரிகளை எதிர்க்கும் மற்றும் பெண்களை சேர்த்துக்கொள்ளும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மரியா தனது அக்கா பிரோநிஸ்லாவாவுடன் ஒரு உடன்படிக்கை போட்டுக்கொண்டார். அதன்படி பிரோநிஸ்லாவாவின் மருத்துவப் படிப்பிற்கு தன்னால் முடிந்த அளவிற்கு மரியா பணம் கொடுப்பார். மாறாக பிரோநிஸ்லாவா இரு வருடங்களுக்கு பிறகு மரியாவிற்கு பண உதவி அளிப்பார். இதற்காக மரியா வார்சாவில் ஒரு வீட்டு ஆசிரியராக பணிபுரிந்தார்.
1890ன் தொடக்கத்தில், திருமணமடைந்த பிரோநிஸ்லாவா மரியாவை தன்னோடு பாரிசில் வந்து இணைந்துகொள்ள அழைத்தார். ஆனால் அப்போது பல்கலைகழகத்திற்கு பணம் செலுத்த தன்னோடு போதிய பணம் இல்லாததால் மரியா அங்கு செல்லவில்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மரியாவிற்கு போதிய பணம் திரட்ட தேவைப்பட்டன. இக்காலத்தில் மரியாவின் தந்தை அவருக்கு உதவி செய்து வந்தார். இந்த காலங்களில் எல்லாம் மரியா நிறைய படித்தார். 1891 வரை தனது அப்பாவுடன் மரியா இருந்தார். இக்காலங்களில் மரியா பயிற்சி வகுப்பு நடத்தினார். பிளையிங் பல்கலைகழகத்தில் படித்தார், தனது செயல்முறை அறிவியல் பயிற்சியை அங்குள்ள தொழிற்சாலை மற்றும் விவசாய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் தொடங்கினார். இந்த ஆய்வுக்கூடம் மரியாவின் அத்தை மகன் ஜோசெப்பால் நடத்தப்பட்டது. ஜோசப் புகழ்பெற்ற ரஷ்ய வேதியியலாளர் மேண்டெலீவின் கீழ் பணிபுரிந்தவராவார்.
1891 முடிவில் மரியா போலாந்தை விட்டு பிரான்சிற்கு சென்றார். பாரிசில் சிறிது காலம் தன் அக்காவின் வீட்டில் தங்கினார். பின்பு பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினார். சோர்போன் பல்கலைகழகத்தில் அவர் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பயின்றார். அங்கு தனக்கு கிடைக்கும் சிறிதளவு பணத்தோடு அவர் குளிர்காலத்தில் குளிரில் வாழ்ந்தார். மேலும் சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார். மேரீ காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார். 1893ல் அவர் இயற்பியலில் ஒரு பட்டம் பெற்றார். அதன்பின் பேராசிரியர் காப்ரியலின் ஆய்வுக்கூடத்தில் அவர் வேலை பார்த்தார். இந்த சமயத்தில் அவர் சோர்போனில் தனது படிப்பைத் தொடர்ந்தார். தனது இரண்டாவது பட்டத்தை 1894ல் பெற்றார். மேரீ தனது ஆய்வுகளை பாரிசில் தொடங்கினார். முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதே வருடம் பியரி குயுரி மேரீயின் வாழ்க்கையில் வந்தார். இருவருக்கும் ஒத்தாக உள்ள அறிவியல் ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளியில் பியரி ஓர் ஆசிரியராக இருந்தார். பேராசிரியர் ஜோசப் கொவால்ஸ்கி இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் மேரீ ஒரு பெரிய ஆய்வுக்கூடத்தை வேண்டுவதை அறிந்திருந்ததாலும் பியரி அத்தகைய ஓர் ஆய்வுக்கூடத்தை அணுகக்கூடிய வாய்ப்பு பெற்றிருந்தவர் என்பதை அறிந்திருந்ததாலும் இவ்வாறு செய்தார்.
இருவருக்கும் இடையே இருந்த அறிவியல் மீதான அதீத ஆர்வம், இருவரையும் நெருக்கமாக கொண்டுவந்தது. பியரி மேரீயிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளக் கேட்டுக்கொண்டார். மேரீயோ தான் தன் தாய்நாட்டிற்கு திரும்பிவிடத் திட்டமிட்டிருப்பதாக கூறினார். பியரி தானும் அவருடன் போலாந்து வரத் தயாராக உள்ளதாக கூறினார். இச்சமயத்தில் மேரீ வார்சாவிற்கு வந்து தன் குடும்பத்தை பார்வையிட்டார். அதுவரை அவர் தனது துறையில் போலாந்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் அப்போதுதான் அது ஒரு மாயை என்று அறிந்தார். ஏனெனில் க்ரோகௌ பல்கலைகழகத்தில் தான் ஒரு பெண் என்பதால் அவருக்கு அங்கு வேலை தரப்படவில்லை. பியரியிடமிருந்து மேரீக்கு இச்சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. அது அவரை பாரிசிற்கு திரும்பத் தூண்டியது. மேரீயின் தூண்டுதலால் பியரி காந்தவியலில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அது அவருக்கு ஒரு முனைவர் பட்டத்தை அளித்தது. மேலும் அது அவரை தனது பள்ளியில் ஒரு பேராசிரியராக உயர்த்தியது. 26 ஜூலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இரண்டு பொழுதுபோக்கு கொண்டிருந்தனர், நெடிய மிதிவண்டி பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள். இவை இருவரையும் மேலும் நெருக்கமாக கொண்டு வந்தது.
1895ல் ரோன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். ஆனால் அது எப்படி உருவாகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. 1896ல் பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்-ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார். மேலும் அவர் இக்கதிர்கள் வெளியிலிருந்து வரும் ஆற்றலால் அல்லாமல் யுரேனியத்திலிருந்தே வருவதை கண்டார். மேரீ ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக எக்ஸ்-ரே கதிர்களை ஆராய்ந்தார். மேரீ ஒரு புத்தாக்கமான திறமையை பயன்படுத்தி யுரேனியத்தை ஆராய்ந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பியரியும் அவரது சகோதரரும் எலேக்ட்ரோமீட்டர் என்னும் ஒரு கருவியை மேம்படுத்தியிருந்தனர். இது மின்சாரத்தை மிக நன்றாக கண்டறியும். இதனை பயன்படுத்தி யுரேனியக்கதிர்கள் சுற்றியுள்ள காற்றில் மின்சாரத்தை உண்டாக்குகின்றன என்று மேரி கண்டார். இதை பயன்படுத்தி யுரேனியத்தின் அளவைப் பொறுத்தே அதன் கதிர் வெளிப்பாடு இருப்பதாக மேரீ கண்டறிந்தார். மேலும் அவர் இக்கதிரியக்கம் அனுக்களிலிருந்தே வரவேண்டும் என்ற ஹைபாதசிசின் கீழ் செயல்பட்டார்.
1897ல் மேரீக்கு ஐரீநே என்னும் மகள் பிறந்தாள். குயுரிகள் ஒரு நல்ல ஆய்வுக்கூடத்தை கொண்டிருக்கவில்லை. இவர்கள் தங்கள் ஆய்வுகளை பெரும்பாலும் இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு கூடத்தில் நடத்தினர். அக்கூடம் நன்றாக காற்றோட்டமோ அல்லது நீர்புகா அமைப்போ கொண்டிருக்கவில்லை. அவர்கள் கதிரியக்கத்தை கையாளுவதால் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவில்லை. ஆதலால் பிற்காலத்தில் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்பள்ளி அவர்களுக்கு எந்த நிதியும் அளிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுரங்க நிறுவனங்கள் மற்றும் மற்ற பிற நிறுவனங்கள் சிலவும் பண உதவி அளித்தன. மேரீயின் கதிரியக்க ஆய்வுகள் இரண்டு யுரேனிய மினெரல்களைக் கொண்டிருந்தன, பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட். அவரது எலேக்ட்ரோமீட்டர் ஆய்வுகள் மூலம் பிட்ச்பிளென்ட் யுரேனியத்தைவிட நான்கு மடங்கும், சாள்கோலைட் இரண்டு மடங்கும் அதிக கதிரியக்க செயல்பாடு கொண்டிருப்பதை மேரீ கண்டார். இதன் மூலம் இவ்விரு மிநேரல்களும் யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தார். இதனால் அவர் கதிரியக்க ஆற்றல் கொண்ட பிற தனிமங்களை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தார். 1898ல் தோரியமும் கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டார்.
மேரீக்கு அவரது கண்டுபிடிப்பை ஒரு கட்டுரையாக பதிப்பிக்க வேண்டிய தேவை தெரிந்திருந்தது. ஆதலால் அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரையை அவரது பேராசிரியர் லிப்மான் ஏப்ரல் 12, 1898ல் ‘அகாடமி’க்கு அளித்தார். அச்சமயத்தில் மேரீ அவரது கட்டுரையில் எவ்வளவு முக்கியமான ஒரு வாக்கியத்தை பதிவு செய்திருந்தார் என்பதை எவரும் கவனிக்கவில்லை. அது என்னவெனில் பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட் ஆகியவற்றின் கதிரியக்க செயல்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதாகும். இது அவை யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டின. ஜூலை 1898ல் மேரீயும் அவரது கணவரும் ஒரு கட்டுரை வெளியிட்டனர். அதில் அவர்கள் ஒரு புதிய தனிமத்தை கண்டுபிடித்ததை தெரிவித்தனர். அதற்கு மேரீ ‘பொலோனியம்’ என்று தன் தாய்நாட்டை பெருமைப்படுத்துவதற்காக பெயரிட்டார். டிசம்பர் 26, 1898ல் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்து அதற்கு ரேடியம் என பெயரிட்டனர். மேலும் radioactivity என்ற சொல்லை கதிரியக்கத்திற்கு பெயராக இட்டனர். தங்கள் கண்டுபிடிப்பை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்க பொலோனியம் மற்றும் ரேடியத்தை முழுமையாக பரிசுத்தமாக பிரித்தெடுக்க மேரீகள் களமிறங்கினர். பிட்ச்பிளென்ட் நிறைய தனிமங்களை கொண்ட ஒரு மினெரலாகும். போலோனியத்தை கண்டுபிடிப்பது சிறிது சுலபமாக இருந்தது. ஏனெனில் வேதியியல் ரீதியாக அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. மேலும் பிஸ்மத்தை ஒத்த தனிமமாக பிட்ச்பிளென்டில் இது மட்டுமே இருந்தது. ஆனால் ரேடியத்தை கண்டுபிடிப்பதோ கடினமாக இருந்தது. ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. மேலும் பிட்ச்பிளென்டில் பேரியமே இருக்கிறது. இறுதியாக 1902ல் ஒரு டன் பிட்ச்பிளென்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குலோரைடை பிரித்தெடுத்தனர். 1900ல் மேரீ ‘‘இகோலே நார்மொலே சுபீரியூரீ’’யில் முதல் பெண் பேராசிரியரானார். ஜூன் 1903ல் மேரீ தனது முனைவர் பட்டத்தை பாரிஸ் பல்கலைகழகத்திலிருந்து பெற்றார். இதற்கிடையில் ஒரு புதிய தொழிற்சாலை ரேடியத்தை மேம்படுத்தி எடுக்க ஆரம்பித்தது. குயுரிகள் இதை பேடேன்ட் செய்யாததால் இந்த வணிகத்தில் எந்த லாபத்தையும் ஈட்டிக்கொள்ளவில்லை.
டிசம்பர் 1903ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் ச்சிஎன்செஸ் மேரீ, பியரி மற்றும் பெக்குறேல் ஆகியோருக்கு இயற்பியல் நோபெல் பரிசை, அவர்கள் கதிரியக்கத்தின் மீது நடத்திய மிக முக்கியமான ஆராய்ச்சிகளுக்காக அளித்தது. ஏப்ரல் 19, 1906ல் பியரி ஒரு சாலை விபத்தால் மரணமடைந்தார். இது மேரீக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மே 13, 1906ல் சொர்போன் பல்கலைகழக இயற்பியல் கழகம் பியரி அங்கு கொண்டிருந்த பதவியை மேரீக்கு வழங்கியது. ஒரு உலகத்தரமான ஆய்வுக்கூடத்தை பியரியின் ஞாபகத்தில் உருவாக்கலாம் என்று மேரீ அப்பதவியை ஏற்றுக்கொண்டார். மேரீ சோர்போன் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியரானார். 1911ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் மேரீக்கு இரண்டாம் நோபெல் பரிசை, இம்முறை வேதியியலில் வழங்கியது. இப்பரிசு மேரீ ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து, ரேடியத்தை பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் அந்த பரிசை பெற்ற முதல் பெண் மேரி கியூரி தான். அதே போல முதன் முறையாக நோபல் பரிசை இரண்டு முறை அதுவும் வெவ்வேறு துறைகளில் வென்றவரும் அவர் தான்.
மேரி 1934ன் முற்பகுதியில் கடைசி முறையாக போலந்து சென்றார். இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற மரியா ஸ்லொடஸ்கா மேரி கியூரி ஜூலை 4, 1934ல் தனது 66வது அகவையில் மேரி பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானடோரியத்தில் ஆண்டாண்டு காலமாக கதிரியக்க வெளிப்பாடோடு பழகியதால் வந்த அப்பிலாச்டிக் இரத்த சோகையால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் பையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் கொண்ட சோதனை குழாய்களை வைத்திருக்கிறார். மேலும் அவைகளை தனது மேசையிலும் வைத்திருக்கிறார். யுத்தத்தின் போது மருத்துவமனைகளில் ஒரு கதிரியக்கராக பணியாற்றியபோது ஒழுங்கான உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை. அதனாலும் அவருக்கு ஆபத்து நேர்ந்தது. மேரீ தனது கணவர் பியரியுடன் ச்கேயுக்ஸில் புதைக்கப்பட்டார். அறுபது வருடங்களுக்கு பிறகு, 1995 ஆம் ஆண்டில், தங்கள் சாதனைகளின் நினைவாக, பாரிஸ் பாந்தியனுக்கு இருவரின் கல்லறைகளும் மாற்றப்பட்டன. இதுவரை இப்படி மரியாதைபடுத்தப்பட்டிருக்கும் ஒரே பெண் மேரீதான். 1890 காலத்து அவரது ஆவணங்கள் கையாள மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகள் கதிரியக்க வெளிப்பாடு கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட அதிக கதிரியக்க வெளிப்பாடு கொண்டதாகும்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932).
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் (Francois, Baron Englert) நவம்பர் 6, 1932ல் பெல்ஜிய யூத குடும்பத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரில் பெல்ஜியத்தை ஜெர்மன் ஆக்கிரமித்தபோது, அவர் தனது யூத அடையாளத்தை மறைத்து அனாதை இல்லங்கள், ஸ்டூமோன்ட் மற்றும் இறுதியாக, அன்னேவோய்-ரவுல்லன் நகரங்களில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் வீடுகளில் வாழ வேண்டியிருந்தது. இந்த நகரங்கள் இறுதியில் அமெரிக்க இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன. பிரான்சுவா 1955 ஆம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு எலக்ட்ரோ மெக்கானிக்கல் இன்ஜினியராக பட்டம் பெற்றார். அங்கு அவர் 1959ல் இயற்பியல் அறிவியலில் பிஎச்டி(Ph.D) பெற்றார். 1959 முதல் 1961 வரை, கார்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். முதலில் ராபர்ட் ப்ரவுட்டின் ஆராய்ச்சி கூட்டாளராகவும் பின்னர் உதவி பேராசிரியர்.
பின்னர் அவர் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகம் திரும்பினார். அங்கு அவர் ஒரு பல்கலைக்கழக பேராசிரியரானார். அங்கு ராபர்ட் ப்ரவுட் உடன் சேர்ந்தார். 1980ல், எங்லெர்ட்டுடன் கோட்பாட்டு இயற்பியல் குழுவின் தலைவராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில் எங்லெர்ட் பேராசிரியர் எமரிட்டஸ் ஆனார். 1984 ஆம் ஆண்டில் டெல்-அவிவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் பள்ளியில் சிறப்பு நியமனம் மூலம் பேராசிரியர் எங்லெர்ட் முதன்முதலில் சாக்லர் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். எங்லெர்ட் 2011ல் சாப்மேன் பல்கலைக்கழகத்தின் குவாண்டம் ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் ஒரு சிறப்பு வருகை பேராசிரியராக பணியாற்றுகிறார். ப்ரவுட் மற்றும் எங்லெர்ட் 1964 ஆம் ஆண்டில் அளவீட்டு திசையன் புலங்கள், அபெலியன் மற்றும் அபேலியன் அல்லாதவை, வெற்று இடம் ஒரு குறிப்பிட்ட வகை கட்டமைப்பைக் கொண்டிருந்தால் பொருள் அமைப்புகளில் ஒருவர் சந்திக்கும் பட்சத்தில் நிறையைப் பெற முடியும் என்பதைக் காட்டியது.
பாதை புலங்களுக்கான கோல்ட்ஸ்டோன் தேற்றத்தின் தோல்வியை மையமாகக் கொண்டு, ஹிக்ஸ் அடிப்படையில் அதே முடிவை அடைந்தார். இந்த ஆண்டின் மூன்றாவது கட்டுரை ஜெரால்ட் குரால்னிக், சி. ஆர். ஹேகன் மற்றும் டாம் கிப்ல் ஆகியோரால் எழுதப்பட்டது. இந்த போசான்(Boson) கண்டுபிடிப்பில் ஹிக்ஸ், எங்லெர்ட் மற்றும் ப்ரவுட், மற்றும் குரால்னிக், ஹேகன், கிப்ல் ஆகியோரால் எழுதப்பட்ட மூன்று ஆவணங்கள் ஒவ்வொன்றும் இந்த கண்டுபிடிப்பிற்கான மைல்கல் ஆவணங்களாக இயற்பியல் மறுஆய்வு கடிதங்கள் 50 வது ஆண்டு விழாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த புகழ்பெற்ற ஆவணங்கள் ஒவ்வொன்றும் இதேபோன்ற அணுகுமுறைகளை எடுத்திருந்தாலும், 1964 பிஆர்எல் சமச்சீர் முறிவு ஆவணங்களுக்கு இடையிலான பங்களிப்புகளும் வேறுபாடுகளும் குறிப்பிடத்தக்கவை.
கட்டமைப்பை விளக்குவதற்கு, ஒவ்வொன்றும் ஒரு சிறிய காந்தத்துடன் பொருத்தப்பட்ட அணுக்களால் ஆன ஒரு ஃபெரோ காந்தத்தைக் கவனியுங்கள். இந்த காந்தங்கள் வரிசையாக இருக்கும்போது, ஃபெரோ காந்தத்தின் உட்புறம் வெற்று இடத்தை கட்டமைக்கக்கூடிய வழிக்கு வலுவான ஒப்புமையைக் கொண்டுள்ளது. வெற்று இடத்தின் இந்த கட்டமைப்பிற்கு உணர்திறன் கொண்ட பாதை திசையன் புலங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட தூரத்திற்கு மேல் மட்டுமே பரப்ப முடியும். இதனால் அவை குறுகிய தூர இடைவினைகளுக்கு மத்தியஸ்தம் செய்து நிறையைப் பெறுகின்றன. கட்டமைப்பை உணராத அந்த புலங்கள் தடையின்றி பரப்புகின்றன. அவை நிறையற்றவை மற்றும் நீண்ட தூர இடைவினைகளுக்கு காரணமாகின்றன. இந்த வழியில், பொறிமுறையானது ஒரு ஒருங்கிணைந்த கோட்பாட்டிற்குள் குறுகிய மற்றும் நீண்ட தூர இடைவினைகளுக்கு இடமளிக்கிறது.
ஹிக்ஸ், ஜெரால்ட் குரால்னிக், ப்ரவுட் மற்றும் எங்லெர்ட் மேலும் அளவிடக்கூடிய புலம் ஒரு ஃபெர்மியன் மின்தேக்கி போன்ற மிகவும் கட்டமைக்கப்பட்ட முகவரால் மாற்றப்பட்டால் பொறிமுறை செல்லுபடியாகும் என்பதைக் காட்டியது. அவர்களின் அணுகுமுறை கோட்பாடு மறுசீரமைக்க முடியாதது என்று ஊகிக்க வழிவகுத்தது. இருபதாம் நூற்றாண்டின் இயற்பியலின் ஒரு முக்கிய சாதனையான மறுசீரமைப்பின் இறுதி சான்று, ஜெரார்டஸின் ஹூஃப்ட் மற்றும் மார்டினஸ் வெல்ட்மேன் ஆகியோருக்கு 1999 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ப்ரவுட்-எங்லெர்ட்-ஹிக்ஸ்-குரல்னிக்-ஹேகன்-கிபிள் பொறிமுறையானது அடிப்படை துகள்களின் எலக்ட்ரோவீக் கோட்பாட்டின் சாதனை ஆகும். மேலும் இயற்கையின் அடிப்படை விதிகளின் ஒருங்கிணைந்த பார்வைக்கு அடித்தளத்தை அமைத்தது.
எங்லெர்ட்க்கும், பீட்டர் ஹிக்ஸ்ற்கும் இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் 2010ஆம் ஆண்டின் சாகுராய் பரிசு, 2004ஆம் ஆண்டின் வுல்ஃப் பரிசு முதலிய பல பரிசுகளை வென்றுள்ளார். அண்டவியல், சரக்கோட்பாடு, புள்ளியியல் இயற்பியல் முதலிய பல துறைகளில் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார். 2013ஆம் ஆண்டின் ஆதூரியா இளவரசர் விருதினை பீட்டர் ஹிக்ஸ் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இவர் பெற்றுள்ளார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுக்கரு இயற்பியல் வல்லுநர் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டி பயிற்சியாளர் யொகானசு சூர்யா பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1963).
யொகானசு சூர்யா (Yohanes Surya) நவம்பர் 6, 1963ல் யகார்த்தாவில் பிறந்தார். யொகானசு சூர்யாவின் தந்தையார் ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர். தாயார் ஒரு பாரம்பரிய இனிப்புணவு விற்பனையாளர். இவர்களுக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் யொகானசு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் யோகனேசுக்கு இருந்தனர். கிழக்கு யகார்த்தாவில் உள்ள எசு.டி புலோகாதுங் பெடாங் II தொடக்கப் பள்ளியில் இவர் கல்வி கற்றார். தொடர்ந்து இவர் யாகார்த்தாவில் உள்ள எசு.எம்.பி.என் 90 மற்றும் எசு,எம்.ஏ.என் 12 இல் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். யோகனேசின் பெற்றொரால் இவரை பல்கலைக்கழகக் கல்வி பெறும் வாய்ப்பை அளிக்க இயலவில்லை. இருப்பினும், அவருடைய மூத்த சகோதரர்களின் உதவியால் இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் இவர் கணக்கு மற்றும் இயற்கை அறிவியல் பள்ளியில் இயற்பியல் துறையில் சேர்ந்தார். 1986ல் யோகனேசு தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் உள்ள வர்கீனியாவில் வில்லியம் மற்றும் மேரி கல்லூரியில் சேர்ந்து முது அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
முனைவர் பட்டம் பெற்ற யோகனேசு சூர்யா வர்சினியாவிலேயே ஒரு இயற்பியல் ஆலோசகராகப் பணிபுரிந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராக விளங்கினாலும் தனதுநாட்டில் இயற்பியலை வளர்க்கும் எண்ணம் மிகுந்தவராய் இந்தோனேசியாவிற்கு திரும்ப முடிவு செய்தார். இவரது பணியில் ஒரு பகுதியாக அனைத்துலக ஒலிம்பியாடு போட்டிகளில் பங்குகொள்ளும் இந்தோனேசிய இயற்பியல் அணிக்கு பயிற்சியளிக்கும் தலைவராக 1993ல் ஒரு பயிற்சி மையத்தை தொடங்கினார். போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு இங்கிருந்து பயிற்சியளித்தார். இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புப் பிரிவில் அணுக்கரு இயற்பியல் துறையில் பேராசிரியர் மற்றும் ஆய்வாளராகவும் கூடுதலாகப் பணிபுரிந்தார். இந்தோனேசியாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் 30000 முனைவர்களை உருவாக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையுடன் யோகனேசு 2006 ஆல் ஆண்டில் சூர்யா நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்தின் மூலமாக அறிவியைல் மற்றும் கணிதக் கல்வியில் சீர்திருத்தங்களை உருவாக்க எண்ணம் கொண்டு செயலாற்றினார்.
சமகாலத்திலேயே பேராசியர் சூர்யாவும் அவரது நிறுவனப் பயிற்சியாளர்களும் இந்தோனேசிய சமூகத்தில் அறிவியலை பிரபலப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். பயிற்சி மையத்தின் மூலம், கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாடு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்குப் பயிற்சியளித்தனர். சூரியா கல்வியியல் கல்லூரியும் கிராமப்புற மாணவர்களும், வசதியற்ற எளிய குடும்பத்து மாணவர்களும் இத்தகைய போட்டிகளில் வெற்றிபெற பயிற்சியளித்தது. மேலும், யோகனேசு சூர்யா 2013 ஆண்டில் சூர்யா பல்கலைக்கழகம் ஒன்றையும் தொடங்கினார். இந்தோனேசியாவில் ஆய்வு அடிப்படையில் அமைக்கப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமை இதற்கு உண்டு. 2030 ஆம் ஆண்டில் ஒரு வளமான இந்தோனேசியாவை உருவாக்குவது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இப்பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. நூற்றுக்கணக்கான முனைவர்களும் ஆய்வாளர்களும் உள்ள நாடாக இந்தோனேசியா மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்ற சிந்தனை இவருடையது. இதனால் சூரியா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான பல்துறை ஆய்வு மையங்கள் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன.
1993 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பியாடு போட்டிகளில் பங்கு கொள்ளும் இந்தோனேசிய இயற்பியல் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவருடைய வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டிகளில் இந்தோனேசிய அணி 54 தங்கப் பதக்கங்கள், 33 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 42 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. `வேடிக்கை மற்றும் ஏற்புடைய இயற்பியல்’ என்ற இவருடைய பயிற்சித் திட்டத்தினால், நாடறிந்த இயற்பியல் வல்லுநராக மிளிர்ந்தார். 68 நூல்களை எழுதியுள்ள இவர் ஆர்ச்சி $மெய்டி என்ற நகைச்சுவை நூலையும் எழுதியுள்ளார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூரியனின் நிறமாலைகள் (கொரோனா) பன்மடி இரும்பு மின்னணுக்களால் (Fe-XIV) உருவாகின்றன என்பதை கண்டறிந்த பெங்கித் எட்லேன் பிறந்த தினம் இன்று (நவம்பர் 2, 1906).
பெங்கித் எட்லேன் (Bengt Edlen) நவம்பர் 2, 1906ல் ஸ்வீடனின் குஸூமில் பிறந்தார். 1926ல் நோர்கோப்பிங்கில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அதே ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். மூன்று செமஸ்டருக்குப் பிறகு அவருக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது. கால இடைவெளியின் தொடக்கத்தில் உள்ள உறுப்புகளின் நிறமாலை மற்றும் ஆற்றல் பற்றிய தனது ஆய்வறிக்கையுடன் 1934ல் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார். சூரியனின் ஸ்பெக்ட்ரமில் அடையாளம் காணப்படாத நிறமாலை கோடுகளைக் கண்டறிந்த பின்னர் அவர் சர்வதேச புகழ் பெற்றார். இது கொரோனியம் எனப்படும் இதுவரை அடையாளம் காணப்படாத ரசாயனக் கூறுகளிலிருந்து தோன்றியதாக ஊகிக்கப்படுகிறது.சூரியனின் நிறமாலைகள் கரோனியம் என்ற இனந்தெரியாத வேதித்தனிமத்தில் இருந்து வருவதாக முன்பு கருதியதை மறுத்து அவை பன்மடி இரும்பு மின்னணுக்களால் (Fe-XIV) உருவாகின்றன எனத் தெளிவுபடுத்தினார். அயனியாக்கத்திற்கு மில்லியன் கணக்கான டிகிரி வெப்பநிலை தேவைப்படுவதால், அவரது கண்டுபிடிப்பு உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் இதுபோன்ற சூரிய கொரோனா வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது. ஓநாய்-ராயட் நட்சத்திரங்களின் நிறமாலைகளை பகுப்பாய்வு செய்வதிலும் அவர் ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.எட்லன் 1944 முதல் 1973 வரை லண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். இவர் 1947இல் சுவீடிய அரசு அறிவியற் புலங்களின் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். எட்லேன் உல்ஃப்-இரேயத் விண்மீன்களின் கதிர்நிரலைப் பகுப்பாய்வு செய்து சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். பெங்கித் எட்லேன் 1945ல் சூரிய ஒளிமுகட்டு புதிர்த் தீர்வுக்காக சுவீடிய அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். 1946ல் அப்பாலைப் புற ஊதாக்கதிர் ஆய்வுகளுக்காக ஓவார்டு என். போட்சு பதக்கத்தைப் பெற்றார். மேலும் 1968ல் தேசிய அறிவியற் புலங்களின் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கத்தைப் பெற்றார். சூரியனின் நிறமாலைகள் பன்மடி இரும்பு மின்னணுக்களால் (Fe-XIV) உருவாகின்றன என்பதை கண்டறிந்த பெங்கித் எட்லேன் பிப்ரவரி 10, 1993ல் தனது 86வது அகவையில் சுவீடன் நாட்டின் லுண்டில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சர், இரும்பு மனிதர் பாரத ரத்னா, சர்தார் வல்லப்பாய் படேல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31, 1875).
சர்தார் வல்லப்பாய் படேல் (Sardar Vallabhbhai Jhaverbhai Patel) அக்டோபர் 31, 1875ல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.1909ம் ஆண்டு படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது படேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார். சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தவர். அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது. பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப்போனது. வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் டிசம்பர் 15, 1950ல் தனது 75வது அகவையில் மும்பையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1991ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதா நதிக்கரையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் (182 அடி).
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகின் மிகவும் மிகவும் சக்திவாய்ந்த பெண், பெப்சியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), பத்ம விபூசண் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1955).
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi) அக்டோபர் 28, 1955ல் சென்னையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். அவர் தன் பள்ளிப்படிப்பைச் சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் AIHSSல் நிறைவு செய்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBA பட்டம் பெற்றார். இந்தியாவில் நூயியின் தொழில் வாழ்க்கை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் மேட்டூர் பியர்டுசெல் என்ற ஆடை நிறுவனத்திலும் தயாரிப்பு மேலாளர் பதவிகளை வகித்ததன் மூலம் தொடங்கியது. 1978 ஆம் ஆண்டு அவர் யேல் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பொது மற்றும் தனியார் மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1980 ஆம் ஆண்டு பட்டம் பெற்று, நூயி போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் (BCG) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். மேலும் மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவரி ஆகியவற்றில் திட்டம் தொடர்பான பதவிகளை வகித்தார்.
நூயி பெப்சிகோ இயக்குநர்கள் குழுமத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். நூயி சர்வதேச மீட்புக் குழு, கேட்டலிஸ்ட் மற்றும் லிங்கோலன் சென்டர் பார் தி பெர்பார்மிங் ஆர்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் உறுப்பினராகவும் சேவை புரிகின்றார். அவர் யாலே கார்பரேஷனின் தொடர் ஆய்வாளராகவும், டிரஸ்ட்டீஸ் ஆப் ஐசென்ஹோவர் பெலோஷிப்ஸின் போர்டு உறுப்பினராகவும் இருக்கின்றார், மேலும் தற்போது அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சிலின் தலைவராகவும் சேவையாற்றுகின்றார். 2007 ஆம் ஆண்டு, அவர் இந்திய அரசாங்கத்தால் பத்ம விபூசண் விருதை பெற்றுக் கொள்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு, அவர் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் பெலோஷிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூயி பெப்சிகோநிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO ஆக பதவியேற்றார்.
நூயி அவர்கள் நிறுவனத்தின் உலகளாவிய திட்டத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கின்றார். மேலும் 1997 ஆம் ஆண்டு அதன் உணவுவிடுதிகள் விற்பனையை டிரைகானுக்கு மாற்றியது உள்ளிட்ட பெப்சிகோவின் மறுகட்டமைப்பில் முன்னிலை வகித்தார். டிரைகான் இப்போது யூம் பிராண்ட்ஸ் என அழைக்கப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டில் டிரோபிகானா நிறுவனத்தைக் கையகப்படுத்தி குவாக்கர் ஓட்ஸ் நிறுவனத்துடன் இணைத்ததில் முதன்மைப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். இந்நிறுவனமும் கடோரேட் இடமிருந்து பெப்சிகோவிற்கு வாங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் அவர் பெப்சிகோவின் 44 ஆண்டுகால வரலாற்றில் ஐந்தாவது தலைமை நிர்வாக அதிகாரி ஆனார். வணிக அதிகாரிகள் அவரது ஆழமாக வழிநடத்தும் திறன் மற்றும் இதயப்பூர்வமான உழைப்பு மற்றும் வேடிக்கை ஆகியவற்றைக் கண்டு வியப்படைகின்றனர். பிசினஸ்லீக் பத்திரிக்கையின் படி, அவர் 2000 ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரி பதவி ஏற்றதிலிருந்து, நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 72 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. அதன் நிகர லாபம் 2006 ஆம் ஆண்டில் இருமடங்குக்கும் அதிகமாக $5.6 பில்லியனாக இருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் வெளிவந்த கவனிக்கத்தக்க 50 பெண்கள் பட்டியலில் நூயியின் பெயர் இடம்பெற்றது. மேலும் டைம் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த உலகில் 100 மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் பட்டியலிலும் இடம் பெற்றார். போர்பஸ் பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 3 ஆவது பெண் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டிருந்தது. குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் குரூப், இந்திரா நூயியின் பெயரை 2009 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆகக் குறிப்பிட்டிருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கையில், இந்திரா நூயி $14,917,701 ஐ மொத்த சம்பளமாகப் பெற்றார். அதில் அடிப்படைச் சம்பளமான $1,300,000, போனஸ் $2,600,000, வழங்கப்பட்ட பங்குகள் $6,428,538 மற்றும் விருப்பமாக வழங்கப்பட்டவை $4,382,569 ஆகியவை உள்ளடங்கும். 2009 ஆம் ஆண்டின் போர்பஸ் ஆய்வறிக்கையின் படி இந்திரா நூயி உலகின் 3 ஆவது மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாகக் குறிப்பிடப்பட்டார்.
ஜனவரி 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது, இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றது. நூயி USIBC இன் போர்டு இயக்குநர்களை வழிநடத்துகின்றார். இது அமெரிக்க தொழில்துறையைப் பிரதிபலிக்கும் 60க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளின் கூட்டமைப்பு ஆகும். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். ] பார்ச்சுன் பத்திரிகை அதன் 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதலிடத்தில் வைத்திருந்தது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).
ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி பெற்றார். மேலும் அவரது 30 வயது வரை ஒரு வாட்ச் டீலராக பணிபுரிந்தார். பெல்டியர் பாரிஸில் ஆபிரகாம் லூயிஸ் ப்ரெகுவேட்டுடன் பணிபுரிந்தார். பின்னர், எலக்ட்ரோடைனமிக்ஸ் குறித்த பல்வேறு சோதனைகளுடன் அவர் பணியாற்றினார். ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது, ஒரு மின்னணு உறுப்பில், ஒரு வெப்பநிலை சாய்வு அல்லது வெப்பநிலை வேறுபாடு தற்போதைய ஓட்டத்தில் உருவாகிறது என்பதைக் கவனித்தார். 1836 ஆம் ஆண்டில் அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். 1838 ஆம் ஆண்டில் அவரது கண்டுபிடிப்புகள் எமில் லென்ஸ் உறுதிப்படுத்தினார். மேலும், பெல்டியர் வளிமண்டல மின்சாரம் மற்றும் வானிலை ஆய்வு தொடர்பான தலைப்புகளைக் கையாண்டார். 1840 ஆம் ஆண்டில், சூறாவளிகளின் காரணங்கள் மற்றும் உருவாக்கம் குறித்த ஒரு படைப்பை அவர் வெளியிட்டார்.பெல்ட்டியரின் ஆவணங்கள், ஏராளமானவை, வளிமண்டல மின்சாரம், நீர்வழிகள், சயனோமெட்ரி மற்றும் வான ஒளியின் துருவமுனைப்பு, கோள நிலையில் உள்ள நீரின் வெப்பநிலை மற்றும் பெரும் உயரத்தில் கொதிநிலை ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இயற்கை வரலாற்றின் ஆர்வமுள்ள புள்ளிகளுக்கு அர்ப்பணித்த ஒரு சிலரும் உள்ளனர். ஆனால் அவரது பெயர் எப்போதுமே ஒரு வால்டாயிக் சுற்று சந்திப்புகளில் வெப்ப விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்கும். இது சீபெக் மற்றும் கம்மிங் ஆகியோருடன் ஒப்பிடக்கூடிய முக்கியத்துவத்தின் கண்டுபிடிப்பு. இரண்டு வெவ்வேறு உலோகங்களின் சந்தி வழியாக மின்சார மின்னோட்டத்தின் கலோரிஃபிக் விளைவை பெல்டியர் கண்டுபிடித்தார். இரு வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது, உலோகங்களின் ஒரு சந்தியில் வெப்பம் உமிழப்படும், மற்றொன்றில் வெப்பம் உட்கவரப்படும் எனக் கண்டறிந்தார். இது இப்போது பெல்டியர் விளைவு (அல்லது பெல்டியர்-சீபெக் விளைவு) என்று அழைக்கப்படுகிறது.மின்னோட்டத்தின் திசையை மாற்றுவதன் மூலம், வெப்பம் அல்லது குளிரூட்டல் அடையப்படலாம். இரண்டு வெவ்வேறு உலோகங்கள் இரண்டு புள்ளிகளில் இணைக்கப்படுவதால், சந்திப்புகள் எப்போதும் ஜோடிகளாக வருகின்றன. இதனால் வெப்பம் ஒரு சந்தியிலிருந்து மற்றொன்றுக்கு நகர்த்தப்படும். அவரது சிறந்த சோதனை கண்டுபிடிப்பு, ஒரு மின்சாரம் மின்னோட்டத்தை சுற்றிலும் கடந்து செல்லும்படி செய்யப்படும் திசைக்கு ஏற்ப உலோகங்களின் ஒரு பன்முக வட்டத்தில் சந்திப்புகளை வெப்பமாக்குதல் அல்லது குளிரூட்டுதல் ஆகும். இந்த மீளக்கூடிய விளைவு மின்னோட்டத்தின் வலிமைக்கு நேரடியாக விகிதாசாரமாகும். ஒரு வெளிப்புற மூலத்திலிருந்து இரண்டு உலோகங்களின் சுற்று வழியாக ஒரு மின்னோட்டம் சென்றால், அது ஒரு சந்தியை குளிர்வித்து மற்றொன்றை வெப்பப்படுத்துகிறது. அந்தச் சந்தியை நேரடியாக வெப்பமாக்குவதால் ஏற்படும் தெர்மோஎலக்ட்ரிக் மின்னோட்டத்தின் அதே திசையில் இருந்தால் அது சந்தியை குளிர்விக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு வெளிப்புற மூலத்திலிருந்து ஒரு மின்னோட்டத்தை கடந்து செல்வது சுற்று சந்திப்புகளில் வெப்பநிலையின் விநியோகத்தை உருவாக்குகிறது. இது எதிர் திசையில் இயங்கும் ஒரு தெர்மோ-மின்சார மின்னோட்டத்தின் சூப்பர் பொசிஷனால் மின்னோட்டத்தை பலவீனப்படுத்த வழிவகுக்கிறது.இரண்டு கடத்திகள் இடையே ஒரு மின்னணு சந்தி வழியாக எலக்ட்ரோமோட்டிவ் மின்னோட்டம் பாயும் போது, சந்தியில் வெப்பம் அகற்றப்படுகிறது. ஒரு பொதுவான பம்ப் செய்ய, இரண்டு தட்டுகளுக்கு இடையில் பல சந்திப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பக்கம் வெப்பமடைகிறது, மறுபக்கம் குளிர்ச்சியடைகிறது. குளிர்ந்த பக்கத்தில் குளிரூட்டும் விளைவை பராமரிக்க சூடான பக்கத்தில் ஒரு சிதறல் சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பெல்டியர் விளைவை வெப்ப விசையியக்கக் கருவியாகப் பயன்படுத்துவது தொடரில் பல சந்திப்புகளை உள்ளடக்கியது. இதன் மூலம் ஒரு மின்னோட்டம் இயக்கப்படுகிறது. சில சந்திப்புகள் பெல்டியர் விளைவு காரணமாக வெப்பத்தை இழக்கின்றன, மற்றவை வெப்பத்தை பெறுகின்றன. தெர்மோஎலக்ட்ரிக் குளிரூட்டல் குளிர்சாதன பெட்டிகளில் காணப்படும் பெல்டியர் தொகுதிகள் தெர்மோஎலக்ட்ரிக் பம்புகள் இந்த நிகழ்வில் பயன்படுத்துகின்றன.பெல்டியர் விளைவை சீபெக் விளைவின் பின்-செயல் எண்ணாகக் கருதலாம் ஒரு எளிய தெர்மோஎலக்ட்ரிக் சுற்று மூடப்பட்டால், சீபெக் விளைவு ஒரு மின்னோட்டத்தை இயக்கும், இதன் விளைவாக (பெல்டியர் விளைவு வழியாக) எப்போதும் வெப்பத்திலிருந்து குளிர் சந்திக்கு வெப்பத்தை மாற்றும். தெர்மோஎலக்ட்ரிக் நீரோட்டங்களின் விளக்கத்தில் இந்த “பெல்டியர் விளைவு” இன் உண்மையான முக்கியத்துவம் முதலில் ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் சுட்டிக்காட்டினார். சர் வில்லியம் தாம்சன் கோட்பாட்டளவில் மற்றும் சோதனை ரீதியாக, பெல்டியர் விளைவுக்கு நெருக்கமாக ஒத்த ஒன்று இருப்பதைக் காண்பிப்பதன் மூலம் இந்த விஷயத்தை மேலும் விரிவுபடுத்தினார். பன்முகத்தன்மை காரணமாக, பொருளின் தரத்தின் வேறுபாட்டிற்கு அல்ல, மாறாக வெப்பநிலையின் வேறுபாட்டிற்கு ஒரே பொருளின் பகுதிகள். பெல்டியரின் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, பிஸ்மத்-ஆண்டிமனி சந்திப்பில் உருவாக்கப்பட்ட குளிரால் சிறிய அளவிலான தண்ணீரை உறையவைக்க லென்ஸ் இந்த விளைவைப் பயன்படுத்தினார். பெயரிடப்பட்ட வரிசையில் உலோகங்கள் வழியாக ஒரு மின்னழுத்த மின்னோட்டம் அனுப்பப்பட்டது. பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் அக்டோபர் 27, 1845ல் தனது 60வது அகவையில் பாரிசு, பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25, 1789).
சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) அக்டோபர் 25, 1789ல் டெசாவ் ஜெர்மனியில் தேசாவு என்னுமிடத்தில் பிறந்தார். இவர் முதலில் இறையியலாளராக இருந்த இவர் பின்னர் வானியலில் கவனம் செலுத்தலானார். 1826ல் சூரியக் கரும்புள்ளிகளை நோக்கிடலானார். இவர் வல்கான் எனும் கருதுகோள்நிலைக் கோள் ஒன்றைச் சூரியனுக்கும் அறிவன் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார். அது சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளதால் அதை நோக்குதல் அரிதெனக் கருதினார். என்றாலும் அது சூரியனுக்கு முன்னால் கடக்கும்போது கரும்புள்ளியாகத் தோன்றும் என நம்பித் தன் ஆய்வைத் தொடர்ந்தார். இவர் 1826 முதல் 1843 வரை 17 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் சூரியனை நோக்கி அதன் கரும்புள்ளிகளைப் பதிவு செய்யலானார். இவர் வல்கானைக் காணாவிடினும் சூரியக் கரும்புள்ளி வட்டிப்பைக் கண்டுபிடித்து “1843 இல் சூரியனின் நோக்கீடுகள் (Solar Observations during 1843)” எனும் ஆய்வுக் கட்டுரையில் தன் முடிவுகளை வெளியிட்டார். அதில் இக்கரும்புள்ளிகள் 10 ஆண்டுகளில் பெரும அளவை அடைகின்றன என முன்மொழிந்தார்.இந்த ஆய்வை முதலில் எவரும் கண்டுகொள்ளவில்லை. என்றாலும், அப்போது பெர்ன் வான்காணக இயக்குநராக இருந்த உருடோல்ஃப் வுல்ஃப் , மிகவும் ஆழ்ந்துணரவே சூரியக் கரும்புள்ளிகளின் ஆய்வை முறையாகவும் ஒழுங்காகவும் மேற்கொண்டார். சுகுவாபேயின் நோக்கீடுகள் பின்னர் 1851ல் அலெக்சாந்தர் வான் அம்போல்டால் தனது அண்டம் (Kosmos) எனும் நூலின் மூன்றாம் தொகுதியில் பயன்படுத்தப்பட்டன. இப்போது சூரியக் கரும்புள்ளிகளின் அலைவுதன்மையும் நேரமும் துல்லியமாக அறியப்பட்டுள்ளன. எனவே வானியலின் ஓர் அரிய கண்டுபிடிப்புக்குச் சுகுவாபே சொந்தக்காரர் ஆனார். இவருக்கு 1857ல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் வழங்கப்பட்டது. சூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே ஏப்ரல் 11, 1875ல் தனது 85வது அகவையில் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1804).
வில்கெம் எடுவர்டு வெபர் (Wilhelm Eduard Weber) அக்டோபர் 24, 1804ல் ஜெர்மனியின் விட்டென்பர்கில் இறையியல் பேராசிரியர் மைக்கேல் வெபருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மக்களில் இரண்டாவதான வெபர், தனது மற்ற உடன்பிறப்புகளைப் போலவே அறிவியலில் நாட்டம் கொண்டார். விட்டென்பர்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதையொட்டி இவரது தந்தையாருக்கு 1815ல் ஹால் என்ற நகருக்கு மாற்றலாயிற்று. அங்கு முதலில் தந்தையிடமும் பின்னர் அனாதை இல்லம் மற்றும் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் பல்கலைகழகத்தில் இணைந்து இயற்பியலில் ஆழ்ந்தார். தமது வகுப்புகளில் சிறந்து விளங்கிய வெபருக்கு முனைவர் பட்டத்துடன் பேராசிரியராகப் பணியும் அதே பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. 1831ல், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் பரிந்துரையில், தமது 27வது அகவையிலேயே கொட்டிஞ்சென் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிக்கமர்த்தப்பட்டார். தமது மாணவர்களை தாம் விளக்கும் பாடங்களையும் சோதனைகளையும் கல்லூரி ஆய்வகத்தில் கட்டணமேதுமின்றி அவர்களே சோதனைகளை மேற்கொள்ள ஊக்குவித்தார்.தமது இருபதாவது அகவையிலேயே தம் உடன்பிறப்பான எர்னஸ்ட் வெபருடன் இணைந்து அலைக் கோட்பாடும் பாய்மத்தன்மையும் என்ற நூலை எழுதினார். இது மிகவும் புகழ்பெற்றது. ஒலியியல் இவருக்கு மிகவும் விருப்பமான அறிவியல்துறையாக இருந்தது. இத்துறையில் பல நூல்களை எழுதினார். தமது தம்பி எடுவர்டு வெபருடன் இணைந்து மனிதர்கள் நடப்பதின் இயக்கவியல் என்ற நூலை எழுதினார். இந்த நூல்கள் 1825க்கும் 1838க்கும் இடையே எழுதப்பட்டன. 1833ல் வெபரும் காஸும் இணைந்து முதல் மின்காந்த தந்தியை தங்கள் ஆய்வகத்திலிருந்து கொட்டிஞ்சென் இயற்பியல் கழகம் வரை நிறுவினர். டிசம்பர் 1837ல் அரசியல் காரணங்களுக்காக அனோவர் அரசு வெபரை பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்தது. சிலகாலம் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளுக்குச் சென்றிருந்த வெபர் லைப்சிக்கில் இயற்பியல் பேராசிரியராக 1843 முதல் 1849 வரை பணிபுரிந்தார். 1849ல் கொட்டிஞ்சென் மீண்டும் இவரை பணிக்கமர்த்தியது.கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் மற்றும் கார்ல் பெஞ்சமின் கோல்ட்ஸ்மிட்டுடன் இவர் எழுதிய புவியின் காந்தப்புலத்தின் நிலப்படத் தொகுப்பு கோட்பாடுகளின் படி வடிவமைக்கப்பட்டது மிகவும் முக்கிய ஆக்கமாகும். இவரது முயற்சியாலேயே காந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. காஸுடன் இணைந்து காந்தவியலில் ஆய்வுகள் மேற்கொண்டார். 1864ல் மின்னியக்க விகிதசம அளவைகள் என்ற நூலில் மின்னோட்டத்தை அளப்பதற்கான நெறிமுறைகளை விவரித்திருந்தார். 1855ல் அரச சுவீடிய அறிவியல் கழக வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1856ல் ருடோல்ஃப் கோல்ரோச்சுடன் இணைந்து நிலை மின்னியலுக்கும் மின்காந்தவிசைக்கும் இடையேயான விகிதம் அப்போது கண்டறிந்திருந்த ஒளியின் வேகத்திற்கு இணையான எண்ணாக அமைந்திருந்ததை நிரூபித்தார். இந்த நிரூபணமே பின்னர் ஒளியும் மின்காந்த அலைகளே என்ற மக்சுவல்லின் உய்த்துணர்விற்கு காரணமாயிற்று. மேலும் இது மின்னியக்கவியலுக்கும் வித்திட்டது. மேலும் 1856இல் வெபரும் கோல்ரோச்சும் தங்கள் ஆயவுக்கட்டுரை ஒன்றில் முதன்முதலாக ஒளியின் வேகத்திற்கு “c” என்ற குறியீட்டைப் பயன்படுத்தினர்.கார்ல் காசுடன் இணைந்து முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த வில்கெம் எடுவர்டு வெபர் ஜூன் 23, 1891ல் தனது 86வது அகவையில் கொட்டிஞ்செனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். காந்தப்பாயத்திற்கான அனைத்துலக அலகு வெபர் (Wb) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வெபர் கொட்டிஞ்செனில் மரணமடைந்த போது மேக்ஸ் பிளாங்க், மாக்ஸ் போர்ன் புதையுண்டிருந்த அதே கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற பதத்தை பயன்படுத்தி லிஸ்ப் (Lisp) கணினி மொழியைக் அறிமுகப்படுத்திய ஜான் மெக்கார்த்தி நினைவு தினம் இன்று (அக்டோபர் 24, 2001).
ஜான் மெக்கார்த்தி (John McCarthy) செப்டம்பர் 4, 1927ல் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் ஒரு ஐரிஷ் குடியேறிய தந்தை மற்றும் லிதுவேனியன் யூத குடியேறிய தாய் ஆகியோருக்கு பிறந்தார். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒருங்கிணைந்த ஆடைத் தொழிலாளர்களின் அமைப்பாளராக மெக்கார்த்தியின் தந்தை வேலை பெறும் வரை, குடும்பம் பெரும் மந்தநிலையின் போது அடிக்கடி இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அவரது தந்தை அயர்லாந்தின் கவுண்டி கெர்ரியில் உள்ள குரோமேன் என்ற மீன்பிடி கிராமத்திலிருந்து வந்தவர். அவரது தாயார் 1957ல் இறந்தார். மெக்கார்த்தி விதிவிலக்காக புத்திசாலி, பெல்மாண்ட் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆரம்பத்தில் பட்டம் பெற்றார். மெக்கார்த்தி 1944ல் கால்டெக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.மெக்கார்த்தி கணிதத்திற்கான ஆரம்பகால திறனைக் காட்டினார். தனது இளம் வயதிலேயே அருகிலுள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (கால்டெக்) இல் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களைப் படிப்பதன் மூலம் கல்லூரி கணிதத்தை கற்றுக் கொண்டார். இதன் விளைவாக, கால்டெக்கில் கணிதத்தின் முதல் இரண்டு ஆண்டுகளை அவர் தவிர்க்க முடிந்தது. உடற்கல்வி படிப்புகளில் கலந்து கொள்ளத் தவறியதற்காக மெக்கார்த்தி கால்டெக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். மேலும் பி.எஸ். 1948 இல் கணிதத்தில் கால்டெக்கில் தான் ஜான் வான் நியூமன் ஆற்றிய சொற்பொழிவில் கலந்துகொண்டது அவரது எதிர்கால முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது.மெக்கார்த்தி ஆரம்பத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு கால்டெக்கில் பட்டப்படிப்பு படிப்பை முடித்தார். 1951ல் பிரின்ஸ்டனில் இருந்து கணிதத்தில் ஸ்பென்சரின் மேற்பார்வையின் கீழ் “ப்ரொஜெக்ஷன் ஆபரேட்டர்கள் மற்றும் பகுதி வேறுபாடு சமன்பாடுகள்” என்ற தலைப்பில் பி.எச்.டி. ஆய்வுக் கட்டுரையை முடித்தார்.பிரின்ஸ்டன் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் குறுகிய கால நியமனங்களுக்குப் பிறகு, மெக்கார்த்தி 1955 இல் டார்ட்மவுத்தில் உதவி பேராசிரியரானார். ஒரு வருடம் கழித்து, மெக்கார்த்தி 1956 இலையுதிர்காலத்தில் ஒரு ஆராய்ச்சி சக ஊழியராக எம்ஐடிக்கு சென்றார். 1962 ஆம் ஆண்டில், மெக்கார்த்தி ஸ்டான்போர்டில் ஒரு முழு பேராசிரியரானார். அங்கு அவர் 2000ல் ஓய்வு பெறும் வரை இருந்தார். எம்ஐடியில் தனது ஆரம்ப நாட்களின் முடிவில், அவர் ஏற்கனவே தனது மாணவர்களால் “மாமா ஜான்” என்று அன்போடு குறிப்பிடப்பட்டார். செயற்கை நுண்ணறிவுக்கான கணித தர்க்கத்தை மெக்கார்த்தி வென்றார்.ஆலன் டூரிங், மார்வின் மின்ஸ்கி, ஆலன் நியூவெல் மற்றும் ஹெர்பர்ட் ஏ. சைமன் ஆகியோருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவின் “ஸ்தாபக பிதாக்களில்” ஜான் மெக்கார்த்தி ஒருவர். மெக்கார்த்தி, மின்ஸ்கி, நதானியேல் ரோசெஸ்டர் மற்றும் கிளாட் ஈ. ஷானன் ஆகியோர் 1956 ஆம் ஆண்டு கோடையில் புகழ்பெற்ற டார்ட்மவுத் மாநாட்டிற்கு எழுதிய ஒரு திட்டத்தில் “செயற்கை நுண்ணறிவு” என்ற வார்த்தையை உருவாக்கினர். இந்த மாநாடு AI ஐ ஒரு துறையாகத் தொடங்கியது. மெக்கார்த்தி 1950 களின் பிற்பகுதியில் லிஸ்பைக் கண்டுபிடித்தார். லாம்ப்டா கால்குலஸின் அடிப்படையில், 1960 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்னர் லிஸ்ப் விரைவில் AI பயன்பாடுகளுக்கான நிரலாக்க மொழியாக மாறியது. 1958 ஆம் ஆண்டில், மெக்கார்த்தி மொழிகள் குறித்த ACM தற்காலிகக் குழுவில் பணியாற்றினார், இது ALGOL 60 ஐ வடிவமைத்த குழுவின் ஒரு பகுதியாக மாறியது. ஆகஸ்ட் 1959 இல் அவர் மறுநிகழ்வு மற்றும் நிபந்தனை வெளிப்பாடுகளைப் பயன்படுத்த முன்மொழிந்தார். இது ALGOL இன் பகுதியாக மாறியது. அல்காரிதமிக் மொழிகள் மற்றும் கால்குலி பற்றிய சர்வதேச தகவல் கூட்டமைப்பு (IFIP) IFIP பணிக்குழு 2.1 இன் உறுப்பினராக, நிரலாக்க மற்றும் தகவல்தொடர்புகளில் சர்வதேச தரங்களை வளர்ப்பதில் அவர் ஈடுபட்டார்,1961 ஆம் ஆண்டில், எம்ஐடியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக வழங்கப்பட்ட உரையில், பயன்பாட்டு கம்ப்யூட்டிங் என்ற கருத்தை பகிரங்கமாக பரிந்துரைத்தவர் அவர்: கணினி நேர பகிர்வு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கம்ப்யூட்டிங் சக்தியையும் குறிப்பிட்ட பயன்பாடுகளையும் கூட விற்கக் கூடியதாக இருக்கும். பயன்பாட்டு வணிக மாதிரி (நீர் அல்லது மின்சாரம் போன்றவை). கணினி அல்லது தகவல் பயன்பாட்டின் இந்த யோசனை 1960 களின் பிற்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் 1990 களின் நடுப்பகுதியில் மங்கிவிட்டது. இருப்பினும், 2000 ஆம் ஆண்டிலிருந்து, யோசனை புதிய வடிவங்களில் மீண்டும் தோன்றியது. 1966 ஆம் ஆண்டில், ஸ்டான்போர்டில் உள்ள மெக்கார்த்தியும் அவரது குழுவும் சோவியத் யூனியனில் உள்ள சக வீரர்களுடன் தொடர்ச்சியான சதுரங்க விளையாட்டுகளை விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கணினி நிரலை எழுதினர். 1982 ஆம் ஆண்டில், விண்வெளி நீரூற்று என்ற கருத்தை அவர் உருவாக்கியதாகத் தெரிகிறது, இது ஒரு வகை கோபுரம் விண்வெளியில் விரிவடைந்து, பூமியிலிருந்து உந்தப்பட்ட ஒரு துகள்களின் வெளிப்புற சக்தியால் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. பேலோட்கள் கன்வேயர் பெல்ட்டை மேல்நோக்கி சவாரி செய்யும்.செயற்கை நுண்ணறிவிற்காக தாம் ஆற்றிய பங்களிப்பிற்காக 1971 ஆம் ஆண்டு, டியூரிங் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற டார்த்மோத் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வறிக்கையில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவிற்கு பொருத்தமான ஆங்கிலப்பதமான Artificial Intelligence என்ற பதத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார். லிஸ்ப் (Lisp) என்ற கணினி மொழியைக் கண்டுபிடித்த ஜான் மெக்கார்த்தி அக்டோபர் 24, 2001ல் தனது 84வது அகவையில் ஸ்டான்போர்ட், கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).
கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (Dr. Krishnaswamy Kasturirangan) அக்டோபர் 24, 1940ல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஸ்ரீஇராம் வர்மா அரசு உயர் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மத்திய மும்பையின், மாதுங்காவில் உள்ள ராம்நரைன் ரூயா கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அகமதாபாத், பெசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி, 1971 இல், உயர் ஆற்றல் வானியலில் தனது டாக்டர் பட்டம் பெற்றார். வானியல், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் 244 க்கும் மேற்பட்ட ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.இந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள் (இன்சாட் வரிசை செயற்கை கோள்கள்), இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் வரிசை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள், ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி), என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். 1993 முதல் 2003 வரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்தார். மாநிலங்களவை உறுப்பினராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியுள்ளார். 2004 ஏப்ரல் முதல் 2009 வரை பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் இயக்குநராகவும் இருந்தார். தற்போது ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். டாக்டர் கஸ்தூரிரங்கன் 16 பல்கலைக் கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.இந்திய அரசால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய பத்மஸ்ரீ (1982), பத்ம பூஷன் (1992) மற்றும் பத்ம விபூஷன் (2000) ஆகிய மூன்று முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாரா பாய் ப்ரெரிட் விருது, எம்.பி. பிர்லா நினைவு விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.Source By: Wikipediaதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23, 1873).
வில்லியம் டி கூலிட்ஜ் (Willaim D. Coolidge) அக்டோபர் 23, 1873ல் மாசாசூசெட்சிஸின், ஹட்சனுக்கு எனும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பிறந்தார். 1891 முதல் 1896 வரை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி) மின் பொறியியல் பயின்றார். இரு ஆண்டுகள் அங்கு ஆய்வகத் துணைவராகப் பணிபரிந்தார். ஒரு வருடம் கழித்து, மேலதிக படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்று லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி 1899 முதல் 1905 வரை எம்ஐடியில் வேதியியல் துறையின் ஆர்தர் ஏ. நொயஸின் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார்.கூலிட்ஜ் 1905ல் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக வேலைக்குச் சென்றார். அங்கு அவர் சோதனைகளை மேற்கொண்டார். இழை மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான மெல்லிய கம்பியினைப் பயன்படுத்தினார். டங்ஸ்டன் ஆக்சைடை சுத்திகரிப்பதன் மூலம், இழைகளாக எளிதில் இழுக்கக்கூடிய ‘டக்டைல் டங்ஸ்டன்’ ஐ உருவாக்கினார். 1911 ஆம் ஆண்டு தொடங்கி, ஜெனரல் எலக்ட்ரிக் புதிய உலோகத்தைப் பயன்படுத்தி விளக்குகளை சந்தைப்படுத்தியது, அவை விரைவில் GE இன் முக்கியமான வருமான ஆதாரமாக மாறியது. அவர் 1913 ஆம் ஆண்டில் இந்த ‘கண்டுபிடிப்புக்கு’ காப்புரிமைக்கு (அமெரிக்க # 1,082,933) விண்ணப்பித்துப் பெற்றார். இருப்பினும், 1928 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க நீதிமன்றம் தனது 1913 காப்புரிமை ஒரு கண்டுபிடிப்பாக செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது.1913 ஆம் ஆண்டில் அவர் கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தார். எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்த மேம்பட்ட கேத்தோடு கொண்ட எக்ஸ்ரே குழாய். இது ஆழமான அமர்ந்த உடற்கூறியல் மற்றும் கட்டிகளை இன்னும் தீவிரமாக காட்சிப்படுத்த அனுமதித்தது. கூலிட்ஜ் குழாய், டங்ஸ்டன் இழைகளைப் பயன்படுத்தியது. அப்போதைய புதிய மருத்துவ சிறப்பு கதிரியக்கவியலில் ஒரு பெரிய வளர்ச்சியாக இருந்தது. அமெரிக்க காப்புரிமை 1913 இல் தாக்கல் செய்யப்பட்டது மற்றும் 1916 இல் அமெரிக்க காப்புரிமையாக 1,203,495 வழங்கப்பட்டது. அதன் அடிப்படை வடிவமைப்பு இன்னும் பயன்பாட்டில் உள்ளது. முதல் சுழலும் அனோட் எக்ஸ்ரே குழாயையும் கண்டுபிடித்தார்.அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் 1914 ல் கூலிட்ஜுக்கு தி ரம்ஃபோர்ட் பரிசை வழங்கியது. கூலிட்ஜுக்கு 1927 ஆம் ஆண்டில் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் எடிசன் பதக்கம் வழங்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் இந்த மதிப்புமிக்க விருதை அவர் நிராகரித்தார். அவருக்கு 1926ல் ஹோவர்ட் என். பாட்ஸ் பதக்கமும், 1927ல் லூயிஸ் ஈ.லெவி பதக்கமும் வழங்கப்பட்டது. கூலிட்ஜுக்கு 1939ல் ஃபாரடே பதக்கம் வழங்கப்பட்டது. அவருக்கு 1944ல் பிராங்க்ளின் பதக்கம் வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சூடான கேத்தோடு எக்ஸ்ரே குழாயைக் கண்டுபிடித்ததற்காக ரெம்ஷெய்ட் நகரம் அவருக்கு ரோன்ட்ஜென் பதக்கத்தை வழங்கியது.தேசிய புகழ்பெற்றக் கண்டுபிடிப்பாளர் அரங்கிற்கும் தேர்ந்து எடுக்கப்பட்டார். மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் பிப்ரவரி 3, 1975ல் தனது 101வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1975 ஆம் ஆண்டில் அவர் நியூயார்க்கின் ஷெனெக்டேடியில் 101 வயதில் இறப்பதற்கு சற்று முன்னர் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்று கண்டுபிடித்த, நோபல் பரிசை வென்ற கிளிண்டன் ஜோசப் டேவிசன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 22, 1881).
கிளிண்டன் ஜோசப் டேவிசன் (Clinton Joseph Davisson) அக்டோபர் 22, 1881ல் அமெரிக்கா, இல்லினாய்ஸின் ப்ளூமிங்டனில் பிறந்தார். அவர் 1902ல் ப்ளூமிங்டன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். மேலும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்றார். ராபர்ட் ஏ.மில்லிகனின் பரிந்துரையின் பேரில், 1905 ஆம் ஆண்டில் டேவிசனை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் இயற்பியல் பயிற்றுவிப்பாளராக நியமித்தது. அவர் தனது பி.எஸ். 1908ல் சிகாகோவிலிருந்து பட்டம் பெற்றார். முக்கியமாக பிரின்ஸ்டனில் கற்பிக்கும் போது, கோடைகாலங்களில் பணியாற்றுவதன் மூலம், ஓவன் ரிச்சர்ட்சனுடன் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அவர் தனது பி.எச்.டி. 1911ல் பிரின்ஸ்டனில் இருந்து இயற்பியலில் பெற்றார். அதே ஆண்டில் அவர் ரிச்சர்ட்சனின் சகோதரி சார்லோட்டை மணந்தார்.டேவிசன் பின்னர் கார்னகி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1917 ஆம் ஆண்டில், வெஸ்டர்ன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் (பெல் தொலைபேசி ஆய்வகங்கள்) பொறியியல் துறையுடன் போர் தொடர்பான ஆராய்ச்சி செய்ய கார்னகி நிறுவனத்தில் இருந்து விடுப்பு எடுத்தார். போரின் முடிவில், டேவிசன் வெஸ்டர்ன் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு நிரந்தர நிலையை ஏற்றுக்கொண்டார். கார்னகி இன்ஸ்டிடியூட்டில் அவரது கற்பித்தல் பொறுப்புகள் பெரும்பாலும் ஆராய்ச்சி செய்வதிலிருந்து அவரைத் தடுத்தன என்பதை அவர் கண்டறிந்தார். டேவிசன் 1946ல் முறையாக ஓய்வு பெறும் வரை வெஸ்டர்ன் எலக்ட்ரிக்ல் (பெல் டெலிபோன்) இருந்தார். பின்னர் அவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியர் நியமனத்தை ஏற்றுக்கொண்டார். அது 1954ல் இரண்டாவது ஓய்வு பெறும் வரை தொடர்ந்தது.ஒரு அலை ஒரு துளை அல்லது ஒரு ஒட்டுதல் மீது நிகழ்ந்தால் வேறுபாடு என்பது ஒரு சிறப்பியல்பு விளைவு ஆகும். மேலும் அலை இயக்கத்தின் அர்த்தத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. 19 ஆம் நூற்றாண்டில், ஒளி மற்றும் திரவங்களின் மேற்பரப்பில் சிற்றலைகளுக்கு மாறுபாடு நன்கு நிறுவப்பட்டது. 1927 ஆம் ஆண்டில், பெல் லேப்ஸில் பணிபுரியும் போது, டேவிசன் மற்றும் லெஸ்டர் ஜெர்மர் ஒரு பரிசோதனையை நிகழ்த்தினர். நிக்கல் ஒரு படிகத்தின் மேற்பரப்பில் எலக்ட்ரான்கள் வேறுபடுகின்றன என்பதைக் காட்டுகின்றன. இந்த புகழ்பெற்ற டேவிசன்-ஜெர்மர் பரிசோதனையானது டி ப்ரோக்லி கருதுகோளை உறுதிப்படுத்தியது. இது பொருளின் துகள்கள் அலை போன்ற தன்மையைக் கொண்டிருக்கின்றன. இது குவாண்டம் இயக்கவியலின் மையக் கொள்கையாகும். குறிப்பாக, அவற்றின் மாறுபாட்டைக் கவனிப்பது எலக்ட்ரான்களுக்கான அலைநீளத்தின் முதல் அளவீட்டை அனுமதித்தது. அளவிடப்பட்ட அலைநீளம் லாம்ப்டா டி ப்ரோக்லியின் சமன்பாட்டை நன்கு ஏற்றுக்கொண்டார். லாம்ப்டா = h / P, h என்பது பிளாங்கின் மாறிலி மற்றும் p என்பது எலக்ட்ரானின் உத்வேகமாகும் (momentum).பிரின்ஸ்டனில் தனது பட்டதாரி வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, டேவிசன் தனது மனைவி மற்றும் வாழ்க்கைத் தோழர் சார்லோட் சாரா ரிச்சர்ட்சனைச் சந்தித்தார். அவர் தனது சகோதரர் பேராசிரியர் ரிச்சர்ட்சனைப் பார்வையிட்டார். ரிச்சர்ட்சன் ஒரு முக்கிய கணிதவியலாளர் ஓஸ்வால்ட் வெப்லனின் மைத்துனர் ஆவார். மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன, என்ற இவரது கண்டு பிடிப்பிற்காக 1937ல் கியார்கு பாகே தாம்சன் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார். நோபல் பரிசை வென்ற கிளிண்டன் ஜோசப் டேவிசன் பிப்ரவரி 1, 1958ல் தனது 76வது அகவையில் வர்ஜீனியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனின் வெகு தொலைவில் உள்ள ஒரு தாக்கம் பள்ளம் 1970ல் டேவிசனுக்கு IAU ஆல் பெயரிடப்பட்டது.Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் மற்றும் நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 21, 1833).
ஆல்ஃபிரட் நோபல் (Alfred Bernhard Nobel) அக்டோபர் 21, 1833ல் கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும், கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும், நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர். தனது தந்தை வழியாக, ஆல்பிரட் நோபல் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒளுஸ் ருட்பெகின் சந்ததியில் இருந்து வந்தவராகிறார். ஆல்பிரட் நோபல் இளம் வயதில் பொறியியலில், குறிப்பாக வெடிபொருட்களில் ஆர்வம் காட்டினார். தொழில்நுட்பத்தின்மீது அவர் கொண்ட ஆர்வமானது ஸ்டாக்ஹோமின் ராயல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னால் மாணவராகிய தனது தந்தையால் அவருக்கு வாய்க்கப்பெற்றதாகும்.பல்வேறு வர்த்தக தோல்விகளை தொடர்ந்து, நோபலின் தந்தை 1837 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாக வளர்ந்து வந்தார். அவர் நவீன ஒட்டு பலகையை (plywood) கண்டுபிடித்தார். மேலும் “டார்பிடோ” சம்பத்தப்பட்ட பணியை தொடங்கினார். வளமான அவரது பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்ப முடிந்தது. அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். சிறுவனாக அவர் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், மற்றும் ரஷிய மொழிகளில் சரளம் அடைந்தார். 1841-1842 காலத்தில், 18 மாதங்கள், நோபல் அவர் வாழ்நாளில் சென்ற ஒரே பள்ளியான, ஸ்டாக்ஹோம் ஜேக்கப்ஸ் அபோலோகிச்டிக் பள்ளிக்கு சென்றார். இளமையில், நோபல், வேதியியலாளர் நிகோலாய் ஜினின் உடன் படித்தார். பின்னர், 1850 ஆம் ஆண்டில், மேற்படி வேலைக்கு பாரிஸ் சென்றார். 18 வயதில், கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் ஒரு குறுகிய காலம் ஒத்துழைத்து, அவர் வேதியியல் ஆய்வுகளை நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் மேற்கொண்டார்.ஜான் எரிக்சன் அமெரிக்க உள்நாட்டு போர்க்கான ஐயன்க்லட் USS மானிட்டரை வடிவமைத்தார். நோபல் 1857ல், ஒரு எரிவாயு மீட்டரைப் பற்றிய, தனது முதல் காப்புரிமையை தாக்கல் செய்தார். குடும்பத்தின் தொழிற்சாலை க்ரிமியன் போர்க்காக ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. 1859 ஆம் ஆண்டில், நோபலின் தந்தை தனது இரண்டாவது மகனான, லுட்விக் நோபலிடம், தனது தொழிற்சாலையை விட்டுச் சென்றார். அவன் பெரிதும் வணிக முன்னேற்றத்தை பெற்றான். பிறகு நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். நோபல் வெடிபொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக நைட்ரோக்லிசெரினின் (டுரின் பல்கலைக்கழகத்தில் தியோபில் ஜூல்ஸ் பிலோசின் மாணவரான அச்கானியோவால், சொப்ரீரோவால் 1847ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி கண்டுபிடித்தார். மேலும் 1865 ஆம் ஆண்டு, அவர் வெடிக்கும் தொப்பியை வடிவமைத்தார்.செப்டம்பர் 3, 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடிவிபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆனால், நோபெல், சிறிய விபத்துக்களை சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகள் கட்ட சென்றார். நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய , டைனமைட்டை 1867ல் கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது. மேலும் இது சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு நோபல் மேலும் நிலையான மற்றும் டைனமைட்டை விட சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை கண்டுபிடித்தார். நோபல், பிற்காலத்தில் இரண்டு நோபல் பரிசுகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனமான அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் 1884ம் ஆண்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1893 ஆம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார்.நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார் மேலும் 350 காப்புரிமைகளை சர்வதேச அளவில் வெளியிட்டார். நோபல் சமாதானத்தை விரும்புகிறவராக இருந்தாலும், அவரின் மரணத்திற்கு முன்னால் 90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார். 1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் ஆல்பிரட்டின் இரங்கலை தவறாக வெளியிட்டன. ஒரு பிரஞ்சு இரங்கல் செய்தி குறிப்பிட்டதாவது மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார் (Le Marchand De La mortest Mort) என்பதாகும். 1891 ஆம் ஆண்டில், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரர் லுட்விக்கின் மரணத்திற்குப் பிறகு நோபல் பாரிஸில் இருந்து இத்தாலியின் சான் ரெமோக்கு, சென்றார். பிரெஞ்சு செய்தித்தாளில் “மரணத்தின் வியாபாரி இறப்பு” என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு’ பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார் (2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார். அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் “நோபல் அறக்கட்டளை” அமைக்கப்பெற்றது.நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (ஜூன் 7), சுவீடன் சங்கம் (ஜூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (ஜூன் 11), எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது.உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஆல்ஃபிரெட் நோபல் டிசம்பர் 10, 1896 1896ல் தனது 63வது அகவையில் பெருமூளை ரத்தக் கசிவு காரணமாக சான்ரெமோ, இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது சக மாணவர்களுக்கு தெரியாமலேயே, அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு தனது செல்வத்தை விட்டு சென்றார். அவர் ஸ்டாக்ஹோமில் நோராவில் புதைக்கப்பட்டார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium) என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20, 1891).
சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) அக்டோபர் 20, 1891ல் செஷெயரில் அமைந்துள்ள பொலிங்டனில், ஜோன் ஜோசப் சாட்விக்குக்கும் ஆன் மேரி நௌல்ஸ் சாட்விக்குக்கும் பிறந்தார். இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து ஆரம்பப் பாடசாலைக்கும் மான்செஸ்டரிலுள்ள ஆண்களுக்கான இலக்கணப் பாடசாலைக்கு கல்வி கற்கச் சென்றார். மேலும் மான்செஸ்டரிலுள்ள விக்டோரியாப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கல்வி கற்றார். 1913ல், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். அங்கு ஹான்ஸ் கெய்கர் மற்றும் ஏர்னஸ்ட் ரூதர்போர்டின் கீழ் கல்வி கற்றார். முதலாம் உலகப்போரின் ஆரம்பத்தில் சாட்விக் ஜெர்மனியில் இருந்தார். அங்கு அவர், ரூல்பென் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மேலும், ஓர் ஆய்வுகூடத்தை அமைத்துக்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாள்ஸ் D.எல்லிசின் துணையுடன், பொசுபரசின் அயனாக்கம் பற்றியும், காபனோரொட்சைட்டினதும் குளோரினினதும் ஒளியிரசாயனத் தாக்கம் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார்.கெய்கரின் ஆய்வுகூடம் அவரது விடுதலைக்காக முயற்சி செய்யும்வரை அவர் ரூல்பென்னிலேயே தமது வாழ்நாட்களைக் கழித்தார். 1932ல் சாட்விக், அணுக்கருவில் அதுவரை அறியப்பட்டிராத துணிக்கையொன்றைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவான விளக்கங்களை வெளியிட்டார். இத் துணிக்கை முதன்முதலில் எட்டோர் மஜோரனாவால் எதிர்வு கூறப்பட்டிருந்தது. இதன் மின் நடுநிலை காரணமாக இது நியூட்ரான் எனப் பெயர் பெற்றது. சாட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பு யுரேனியம்-235ன் கருப்பிளவைப் புரிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆல்பாத் துணிக்கைகள் நேரேற்றம் கொண்டவையாதலால் அவை அணுக்கருவிலுள்ள நேரேற்றத்தால் தள்ளப்பட்டன. ஆனால் நியூட்ரான்கள் ஏற்றமற்றவையாதலால் அவற்றுக்கு கூலோமின் தடையைத் தாண்டவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் அவற்றால் பாரமான அணுக்கருக்களான யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம் கருக்களினுள்ளும் ஊடுருவக்கூடியதாயிருந்தது.1932ல் நியூட்ரான் பற்றுய சாட்விக்கின் கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1932ல் ரோயல் சங்கத்தின் ஹக்ஸ் பதக்கமும், 1935ல் பௌதிகவியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. சாட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பினால் ஆய்வுகூடங்களில், யுரேனியத்திலும் பாரமான மூலகங்களை உருவாக்கக்கூடியதாயிருந்தது. பீட்டா சிதைவினால் உருவாகும் நியூட்ரான்களை மோதச்செய்வதன் மூலம் இது சாத்தியமானது. இவரது கண்டுபிடிப்பு இத்தாலிய பௌதிகவியலாளரும் நோபல் பரிசாளருமான என்ரிகோ ஃபெர்மியைக் கவர்ந்தது. இதனால் அவர் நியூட்ரான்களை அணுக்கருக்களுடன் மோதச் செய்வதன்மூலம் ஏற்படும் இரசாயனத் தாக்கங்களை ஆராயத் தொடங்கினார். ஃபெர்மியால் வெளியிடப்பட்ட ஆய்வுகளும், ஒட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் ஆகிய ஜெர்மன் கதிரியக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் காரணமாக முதல் வகை அணுக்கருப் பிளவு கண்டுபிடிக்கப்பட்டது.1935ல், சாட்விக் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலுக்கான பேராசிரியர் ஆனார். 1940ல் அணுகுண்டைத் தயாரிக்க ஆணையிடும் ஃப்ரிச் பியேல்ஸ் குறிப்பாணை காரணமாக, MAUD குழுவில் நியமிக்கப்பட்டார். அக் குழு சடப்பொருளைப் பற்றி மேலும் ஆராய்ந்தது. 1940ல் டிசார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார். அங்கு அமெரிக்கர்களைனதும் கனேடியர்களினதும் அணுக்கரு ஆராய்ச்சியை ஒன்றிணைப்பதில் ஈடுபட்டார். நவம்பர் 1940ல் இங்கிலாந்து திரும்பிய வேளை, போர் முடியும் வரையில் இந்த ஆய்வில் எதுவும் வெளிவராது என்றே அவர் கருதினார். டிசம்பர் 1940ல் MAUD நிறைவேற்றதிகாரியான ஃபிரான்ஸ் சைமன், யுரேனியம்-235 சமதானியைப் பிரித்தெடுக்க முடியும் என அறிவித்தார். சைமனின் அறிக்கை, பாரிய யுரேனியம் செறிவூட்டல் நிலையமொன்றுக்கான செலவுகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளையும் உள்ளடக்கியிருந்தது. “அணுகுண்டு என்பது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல. அது மிகவும் இன்றியமையாததும் ஆகும்.பின் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் மன்காட்டன் திட்டத்தில் இணைந்து கொண்டார். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரு அணுகுண்டுகள் ஜப்பானியப் பேரரசின் மீது போடப்பட்டன. இதனால் ஆகஸ்ட் 1945ன் நடுப்பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்தது. 1940ல், சட்விக் காம்பிரிட்சில் ஆய்வுகளில் ஏடுபட்ட ஹான்ஸ் வொன் ஹால்பன் மற்றும் லியூ கொவர்ஸ்கி ஆகிய இரு ஃபிரெஞ்சு விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிக்கைகளை ரோயல் சங்கத்துக்கு அனுப்பினார். போரின்போது அவற்றை வெளியிடுவது உசிதமானதல்ல என்பதால் அவ்வாய்வறிக்கைகளை இரகசியமாக வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2007ல், ரோயல் சங்கத்தின் ஊழியர்கள், கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இவ்வறிக்கைகளைக் கண்டுபிடித்தனர்.இரண்டாம் உலகப்போரின் போது ஐக்கிய அமெரிக்காவில் நடாத்தப்பட்ட மான்காட்டன் திட்டத்தில் பங்குபற்றிய ஒரு முன்னணி பிரித்தானிய விஞ்ஞானியுமாவார். இயற்பியலில் இவரது அடைவுகளுக்காக 1945ல் இவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் ஜுலை 24, 1974ல் தனது 82வது அகவையில் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்த, நோபல் பரிசை வென்ற பால் அட்ரியென் மாரிசு டிராக் நினைவு தினம் இன்று (அக்டோபர் 20, 1984).
பால் அட்ரியென் மாரிசு டிராக் (Paul Adrien Maurice Dirac) ஆகஸ்டு 8,1902ல் பிரிஸ்டல், இங்கிலாந்தில் பிறந்தார். அவரது தந்தை, சார்லஸ் அட்ரியன் லேடிஸ்லாஸ் டிராக், சுவிட்சர்லாந்தின் செயிண்ட்-மாரிஸில் இருந்து குடியேறியவர், அவர் பிரிஸ்டலில் பிரெஞ்சு ஆசிரியராக பணிபுரிந்தார். பிஷப் சாலை ஆரம்பப் பள்ளியில் பயின்றார். சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார். பின்னர் தந்தை வேலை பார்த்த மெர்சன்ட் வென்சர்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி உள்ளிட்ட பல மொழிகளை அறிந்திருந்தார். கல்வி உதவித்தொகை பெற்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார். பொது சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் களங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகக் கிடைத்த கல்வி உதவித்தொகை குறைவாக இருந்ததால் அங்கு சேர முடியவில்லை. எனவே பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திலேயே இலவசமாகப் படிக்க கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கணிதத்தில் இளங் கலைப் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தார். அதிலும் முதல் வகுப்பில் தேறினார். இதனால் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சித் துறையின் உதவித்தொகையைப் பெற்றார். கேம்பிரிட்ஜ் சென்று, தான் ஆர்வம் கொண்டிருந்த விஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். 1926-ல் குவாண்டம் விசையியல் குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் தனது ஆராய்ச்சிகளைக் கோபன்ஹேகனில் உள்ள கோடிங்கன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.எர்வின் ஷ்ரோடிங்கர் அலைவிசையியல் வெர்னர் ஐசன்பர்கில் அணி விசையியலை உள்ளடக்கிய குவாண்டம் விசையியலை உருவாக்கினார். கதிர்வீச்சின் குவாண்டம் கோட்பாட்டை மேம்படுத்தினார். 1928ல் சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியலுக்கான தொடர்பை விளக்கும் டிராக் சமன்பாட்டைக் கண்டறிந்தார். மேலும் பருப்பொருளுக்கு (matter) எதிரான பருப்பொருளின் (antimatter) இருப்பை முன்கணித்துக் கூற இவரது இந்தச் சமன்பாடு வழிகோலியது. ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் குவாண்டம் மெக்கானிக்ஸ்’, ‘டைரக் ஷன்ஸ் இன் ஃபிசிக்ஸ்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும் ‘லெக்சர்ஸ் ஆன் குவாண்டம் மெக்கானிக்ஸ்’ மற்றும் ‘குவான்டிசேஷன் ஆஃப் தி கிராவிடேஷனல் ஃபீல்ட்ஸ்’ உள்ளிட்ட கட்டுரைகளை வெளியிட்டார்.பகுப்பாய்வு இயக்கவியல் துகள்கள் மற்றும் உறுதியான உடல்கள் வெளிச்சம் தருவதைக் கண்டார். தனது புதிய புரிதலில் இருந்து, அவர் பயணிக்காத இயக்கவியல் மாறிகள் அடிப்படையில் ஒரு குவாண்டம் கோட்பாட்டை உருவாக்கினார். இது இன்றுவரை குவாண்டம் இயக்கவியலின் மிக ஆழமான மற்றும் குறிப்பிடத்தக்க பொது உருவாக்கத்திற்கு அவரை இட்டுச் சென்றது. இவர், குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். பருப்பொருளுக்கு எதிரான எதிர்ப் பருப்பொருளின் இருப்பை முன்கணித்துக் கூற டிராக் சமன்பாடு இவருக்கு வழிகொடுத்தது.குவாண்டம் இயக்கவியலுடனான பொது சார்பியல் ஒப்புரவாக்கல் (reconciliation of general relativity) களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளார். குவாண்டம் விசையியல், சுழற்சி சார்புத் தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். அணுவியல் கோட்பாட்டின் புதிய உற்பத்தி வடிவங்களைக் (new productive forms) கண்டறிந்தமைக்காக ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கருடன் இணைந்து 1933-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். ராயல் பதக்கம், காப்ளே பதக்கம், மாக்ஸ் பிளாங்க் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.1932 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும்வரை இவர் கேபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் 1972 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராகவும் பணியாற்றினார். அமெரிக்கன் இயற்பியல் கழகம் மற்றும் லண்டன் இயற்பியல் கழகங்களில் கவுரவ ஃபெலோஷிப்பும் பெற்றார். அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இவரது பெயரில் அறிவியல் விருதுகள் வழங்கப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க இயற்பியலாளர்களுள் ஒருவராகப் போற்றப்பட்ட பால் அட்ரியன் டிராக் அக்டோபர் 20, 1984ல் தனது 82வது அகவையில் புளோரிடா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia and Hindutamil.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுக்கருவை ஆல்பா சிதறல்களினால் கண்டுபிடித்தத, அணுக்கரு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்றஎர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) ஆகஸ்ட் 30, 1871ல்ஜேம்ஸ்ரூதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர்.பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாது அவருடைய தந்தையின் பணியைப் பொறுத்து குடும்பம் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது குடி பெயர்ந்து பல பணிகளில் ஈடுபட்டதுடன் அங்கங்கே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரூதர்ஃபோர்டு தன்னுடைய தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கினார். பள்ளி சென்று வந்ததும் அவர்களுடைய வேலை பசுமாடுகளிடம் பால் கறப்பது, சுற்று வட்டாரங்களில் அலைந்து திரிந்து சுள்ளி பொறுக்குவது.ரூதர்ஃபோர்டு தனது பத்தாவது வயதில் ஃபாக்சுஹில் என்ற இடத்தில் பள்ளியில் பயிலும்போது முதன் முதலாக அறிவியல் புத்தகத்தைப் பெற்றார். அப்புத்தகத்தில் கண்ட ஆய்வுகளை உடனுக்குடன் செய்து குடும்பத்தினரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இவருக்குப் பயிற்சி அளித்த ஆசிரியரோ கிராமத்துப் பள்ளி ஆசிரியர். ஓரளவிற்கே பயிற்சி பெற்றவர். அப்பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.பின்னர் 1887ல் உதவித் தொகை பெற்று நெல்சனில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். இங்கு மூன்றாண்டுகள் பயின்றார். இங்கு இரண்டாம் முறையாக இவருக்கு மீண்டும் உதவித் தொகை கிடைத்தது.நெல்சன் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், 1890 இலிருந்து 1894 வரை நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கான்ட்டர்பரி கல்லூரியில் படிக்க படிப்பூதியம் பெற்றார். 1892ல் கணிதம், இலத்தீன், இயற்பியல், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பாடங்கள் அடங்கிய பி. ஏ. இளங்கலைத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார்.நியூசிலாந்தில் கணிதத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை இவருடைய கணிதத்திறமையினால் இவருக்குக் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு எதிர்மின்கதிர்களைக் கண்டறிந்த ஜெ. ஜெ.தாம்சன் என்பவரின் மாணவரானார். இங்கு இயற்பியலில் சில ஆய்வுகளைச் செய்தார். இரண்டு மின்சுற்றுகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறி இயங்கக் கூடிய கருவி ஒன்றை உருவாக்கினார். டெஸ்லா என்பவர் உருவாக்கிய மின்கந்தச்சுருள் இவரைக் கவர்ந்தது.1893ல் முதுகலை பட்டங்கள் பெற்றார். கணிதம், இயற்பியல், கணித இயற்பியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக முயன்றார். ஆனால் இயலவில்லை.1894ல் பொருட்காட்சித் துறையின் சார்பாக அறிவியல் உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது. கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கு கேவண்டிஷ் ஆய்வுச் சாலையில் ஜெ.ஜெ. தாம்சனின் கீழ் ஆய்வு மாணவராகப் பயிற்சி பெற்றார்.1897ல் சிறப்புத் தகுதி பெற்ற ஆய்வு மாணவராக முனைவர் பட்டம் பெற்றார். கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் ‘இயற்பியலின் மெக்டொனால்டு’ என்ற இயற்பியல் துறைத் தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்ப்பட்டது. 1898ல் அப்பொறுப்பை இவர் ஏற்றார். 1900ல் மேரி நியூட்டன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். 1907ல் இங்கிலாந்த்து திரும்பிய ரூதர்ஃபோர்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். இவருடைய முதல் ஆய்வு நியூசிலாந்தில், இரும்பின் காந்தப் பண்புகளை ஆய்ந்ததுதான். அதிக அதிர்வெண் அலைவில் உள்ளபோது, அதிக அதிர்வெண் இறக்கத்தில் இரும்பின் காந்தப் பண்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான். அடுத்து ‘மேக்னடிக் விஸ்கோசிட்டி’ என்ற இவரது நூல் நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் மூலம் வெளியிடப்பட்டது. அடுத்த ஆய்வு கால இடைவெளியைப் பற்றி அளப்பதான கருவியைப் பற்றியது. இவர் மின்காந்த அலைகளைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார்.வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை பற்றி தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். எக்ஸ் கதிர்களைச் செலுத்தும் போது அவை அடையும் மாறுதல்களை ஆராய்ந்தார்.அக்காலத்தில் பல நாடுகளில் கதிர் வீச்சு மூலக்கூறுகளைப் பற்றிய ஆய்வு, அதனைத் தனிமைப்படுத்தும் முறை இவற்றில் பல அறிஞர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ரூதர்ஃபோர்டும் அது போன்ற ஆய்வினில் ஈடுபட்டார். யுரேனியத்தின் கதிர்வீச்சுப் பற்றி ஆராயத் தொடங்கினார். மின்புலத்தின் வலிமைக் கேற்ப அயனிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி ஆராய்ந்தார். யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்பா பீட்டா கதிர்கள் வெளிவருவதைக் கண்டறிந்து அவற்றின் பண்புகளை ஆராய்ந்தார்.மாண்ட்ரீயேலில் இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தார். ஆல்பா கதிர்கள் வெளிப்பாடு பற்றித் தீவிரமாக ஆராய்ந்தார். தோரியம் என்ற தனிமத்தின் கதிர்வீச்சைப் பற்றி ஆராயும்போது அவற்றை ‘ரேடான்’ என்ற வாயுவின் மூலம் அனுப்பும் போது ரேடானின் ஐசோடோப்பான ‘தோரான்’ என்பதைக் கண்டுபிடித்தார். பிரெடரிக் சோடி (Frederick Soddy) என்பவர் ரூதர்போர்டுடன் சேர்ந்து ரேடியக் கதிரியக்கச் சிதைவைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.அணுவின் தன்மைகள் குறித்து, மூலக்கூறுகளின் அடிப்படையில் அல்லாமல் அணுக்கருப் பிளவைக் கண்டறிந்த ‘ஆட்டோ ஹான்’ என்பவரும் ரதர்ஃபோர்டுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார்.இந்த ஆய்வின் போது ஓர் ஆல்பாத் துகளைக் கண்டுபிடிக்கவும், ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களைக் கணக்கிடவும் கெய்கர் என்பவருடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கினார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்ட பின்னர் அணுவிற்கு ஓர் உட்கரு உண்டு என்பதையும், அதில் ஆல்பாத் துகள்கள் பொதிந்துள்ளதையும் கண்டறிந்தார்.இதுவே பின்னர் புரோட்டான் எனப் பெயரிடப்பட்டது. இவர் தொடங்கி வைத்த இந்த ஆய்வுகள், இவருடனும் இவருக்குப் பின்னரும் நீல்சு போர், மாக்ஸ் பிளாங்க், மோஸ்லி, பிளாக்கெட், காக் கிராப்ட், வால்டன், ஜி. பி. தாம்சன், பவெல், ஆஸ்டன், எல்லிஸ் என்று பல்வேறு அறிஞர்களால் தொடரப்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கூறுகளின் உருமாற்றம் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகள் இவருடைய புகழுக்கு மேலும் சிறப்பை அளித்தது.வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும் 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார். கதிரியக்கம் தரும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்து அதன் பாதியாகக் குறைய ஒரே அளவுக் காலம்தான் எடுக்கின்றன என்று அறிந்தார். இதன் பயனாகக் கதிரியக்க அணுவின் வாழ்வு அரைக்காலம் என்னும் கருத்தை நிறுவினார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை ‘அணுக்கரு இயற்பியலின் தந்தை’ எனப் போற்றுவர்.1914ம் ஆண்டு இவருக்கு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.1925ல் இவருக்கு மதிப்பாணை (Order of Merit) வழங்கப்பட்டது.ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அதன் தலைவராக 1925 முதல் 1930 வரை பணிபுரிந்தார்.ரம்போர்டு பதக்கம், காப்ளி பதக்கம், ஆல்பர்டு பதக்கம், பாரடே பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு சிறப்பு முனைவர் பட்டம் அளித்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன.அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற உண்மையை ஆல்பா சிதறல்களினால் கண்டுபிடித்ததஎர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டுஅக்டோபர் 19, 1937ல் தனது 66வது அகவையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.இவருடைய உடல் மறைந்த அறிஞர்கள் லார்டு கெல்வின், சர். ஐசக் நியூட்டன் இவர்களுடைய சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறிய நட்சத்திரம் வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910).
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார்.இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர்.சி.வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.1928 இல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார்.அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் 19ஆவது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயேமேலும் இரு கட்டுரைகளும்பதிப்பாயின. 1930 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார்.பேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்து, அங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர், மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.சந்திரசேகர்க்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான் இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு ‘அணுகுண்டு’ போல வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல், இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும், வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டு, இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதே, நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார்.நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர்ஆகஸ்ட் 21, 1995ல்தனது 84வது அகவையில், அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர் பத்ம பூஷண்வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1888).
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19, 1888ல்நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை மோகனூரில் காவல்துரையில் பணிபுரிந்து வந்தார். இவரது தயார் ஒரு பக்கதியுள்ள பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்பதூரில் பள்ளி கல்வி பயின்றார். 1909ல் பி.ஏ. திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் பயின்றார். இவர் அரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுதாளராகவும் பின்னர் தொடக்க பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.’கத்தி யின்றி ரத்த மின்றியுத்த மொன்று வருகுதுசத்தி யத்தின் நித்தி யத்தைநம்பும் யாரும் சேருவீர்’என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.புகழ்பெற்ற மேற்கோள்கள்:’கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’தமிழன் என்றோர் இனமுன்றுதனியே அதற்கோர் குணமுண்டு”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.நாமக்கல் கவிஞர் பத்ம பூஷண் வெ. இராமலிங்கம் பிள்ளைஆகஸ்ட் 24, 1972ல்தனது 83வது அகவையில், இவ்வுலகை விட்டு பிரிந்தார். கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.