வேலூர் கேரளா சமாஜத்தில் வேலூர் ம.நாராயணன் எழுதிய அன்றும் இன்றும், வேலூர் பி.ராதாகிருஷ்ணன் எழுதிய வாழ்க்கை பதிவுகள், பூங்கொத்து ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.வேலூர் காட்பாடிசன்பீம் பள்ளி தாளாளர் அரிகோபாலன், தலைமை பொறியாளர் ரங்கநாதன், கவிஞர் இலட்சுமிபதி,கவிஞர் பாரிதாசன், கவிஞர் பெர்னாட்ஷா, கேரள சமாஜ் செயலாளர் சி.பி.பிரபாகரன், பொருளாளர் சேதுமாதவன், மற்றும் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நன்றியுரையை நாடக சிற்பி வேலூர் பி.ராதாகிருஷ்ணன் கூறினார். கவிஞர் சாரதாதிருமலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
செய்திகள்
கொடைரோட்டில் அனைத்து ரயில்களும் நிற்க வேண்டும்
பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமையில் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் விமல் , பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு சொந்தமான அரண்மனை குலத்தின் எல்லையை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை,மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட கோடை ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இருப்பினும் ஏராளமான ரயில்கள் கொடைரோட்டில் நிற்பது இல்லை. எனவே அனைத்து ரயில்களும் நிற்க மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சரும் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை அனுப்ப கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதேபோன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்தக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம் இன்று (மார்ச் 22, 1868).
இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868ல் பிறந்தார். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில் மில்லிகன் பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன. 1893ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இத்துறையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான்.
ஒளிமின்னழுத்த விளைவை விவரிக்க 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய சமன்பாட்டின் சோதனை சரிபார்ப்பை 1914 ஆம் ஆண்டில் மில்லிகன் இதே போன்ற திறனுடன் எடுத்துக் கொண்டார். பிளாங்கின் மாறிலியின் துல்லியமான மதிப்பைப் பெற அவர் இதே ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். 1921 ஆம் ஆண்டில் மில்லிகன் சிகாகோ பல்கலைக்கழகத்தை விட்டு கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜில் (கால்டெக்) இயற்பியலின் நார்மன் பிரிட்ஜ் ஆய்வகத்தின் இயக்குநரானார். இயற்பியலாளர் விக்டர் ஹெஸ் விண்வெளியில் இருந்து வருவதைக் கண்டறிந்த கதிர்வீச்சு குறித்து அங்கு ஒரு பெரிய ஆய்வை மேற்கொண்டார். இந்த கதிர்வீச்சு உண்மையில் வேற்று கிரக தோற்றம் கொண்டது என்பதை மில்லிகன் நிரூபித்தார், மேலும் அவர் அதற்கு “அண்ட கதிர்கள்” என்று பெயரிட்டார்.
மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமையாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். தனியாகவும் பிற வல்லுநர்களுடன் இணைந்தும் ஏராளமான புத்தகங்களை எழுதினார். ஒளிமின் விளைவு தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள், கூற்றுகள் ஆகியவை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தன. எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார். பல கல்வி நிறுவனங்கள், இயற்பியல் ஆராய்ச்சி மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஏறக்குறைய 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். அறிவியலறிஞர் மட்டுமல்லாமல் சிறந்த மதவாதியாகவும், தத்துவஞானியாகவும் விளங்கிய மில்லிகன் இறுதிமூச்சு வரை இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். டிசம்பர் 19, 1953ல் தனது 85வது அகவையில் சான் மாரினோ, கலிபோர்னியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அமெரிக்காவில் பல பள்ளிகள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீரின்றி அமையாது உலகு – உலக தண்ணீர் தினம் (world water day) இன்று (மார்ச் 22).
நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்குகளின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1993ம் ஆண்டு முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் பல்வேறு சிக்கல்களில் கவனம் செலுத்தி வருகிறது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் கல்வித் திட்டங்களின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கிறது, நமது பாரம்பரிய சொத்தான நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாத்து நிர்வகிக்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.இயற்கை சமநிலையற்று சீர்குலைந்த சுற்றுச்சூழல் மனிதனுக்கு கிடைக்கின்ற நீரின் அளவையும் தரத்தையும் பாதிக்கிறது. இன்று உலகில் இருபத்து ஐந்து பில்லியன் மக்கள் வீட்டில் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வருடத்தில் மாதத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். சுகாதாரமான குடிநீர் கிடைக்காதவர்களில் என்பது சதவீதத்தினர் கிராமப்பகுதிகளில் வசித்துவருகின்றனர். இதே நிலை நீடித்தால் 2030ம் ஆண்டிற்குள் குடிநீர் தட்டுப்பாடினால் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை எழுபது கோடி ஆக இருக்கும் என ஐ.நா சபை கணித்துள்ளது. பூமியில் வாழும் மூன்றில் ஒருவர் முறையான சுகாதார வசதி இல்லாமல் உள்ளனர். நான்கில் ஒரு மாணவருக்கு பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்பதால் சுகாதாரமற்ற குடிநீரை அருந்தும் அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.பூமியில் முப்பது சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள எழுபது சதவீதம் நீர்ப்பரப்புதான். எழுபது சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலகமக்கள் விவசாயத்திற்கும் தங்களுடைய தேவைக்கும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இன்று முப்பது விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது. இந்நாளின் முக்கியத்துவம் என்னவென்றால், நீர்வளத்தின் ஒட்டு மொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி, நீர்வளப்பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் கடுமையாகி வரும் நீர் பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதும் .மேலும் நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவதைக் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் ஆகும். மேலும் இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த பஞ்சபூதங்களையும் மாசு படுத்துகின்றனர்.ஆண்டுதோறும் நாற்பது ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தினமும் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம்.இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம், போதிய மழையின்மையும், ஏரிகள் வறண்டு வருவதுமே ஆகும். இன்று நகரமயமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சத்திற்கு காரணம். முன்பெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்திலோ அல்லது பானையிலோ தண்ணீர் வைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் பானையில் உள்ள நீரை அருந்தி தனது தாகத்தைத் தணித்துக்கொள்வர். இன்றைய நிலையில் அதுபோன்ற காட்சிகளை எங்கும் காணமுடிகிறதில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் கலக்கப்பட்டும் மாசுகள் நிறைந்தும் காணப்படுகின்றன. இதற்கெல்லாம் பல கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் திட்டம் முழுமையாக நடந்து வளமடைந்ததா என்பது கேள்விக்குறிதான்.கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு தண்ணீருக்காக இன்று அண்டையில் இருக்கும் மூன்று மாநிலங்களை சார்ந்து இருக்கவேண்டிய நிலையைத்தான் காண்கிறோம். தண்ணீருக்குத் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி என்ற சொல்லைக் காட்டி இயற்கை எரிவாயுவையும் அணு உலையையும் தீர்வாகத் தந்துள்ளது, மத்திய அரசு. இந்த வளர்ச்சி என்ற சொல் தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீரின்றி வறட்சியால் உயிர்விடும்போது எங்கே போனது என்று உணரவில்லை. இந்த ‘உலக தண்ணீர் தினம்’ என்பது கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. ‘தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்’ என்பதை ஒவ்வொரு குடிமகனும், அந்நாட்டு அரசும் புரிந்துகொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது. தமிழ்நாட்டில் வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரை இப்போதிருந்தே சேமித்துப் பயன்படுத்த ஆரம்பிப்போம்.விஞ்ஞானிகள் கூற்றுப்படி, சுற்றுச்சூழல் முன்னோக்குடன் பசுமை திட்டங்களை அமைத்து மறுபரிசீலனை செய்யாவிட்டால் இந்தியா 2050ல் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையும் அதனால் மிகப்பெரிய பாதிப்புகளும் பக்கவிளைவுகளும் ஏற்படுத்தும். “நமது உடல் நலம் பாதிக்கபடுமாயின், நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற கூற்றினை நாம் அனைவரும் அறிவோம்”. ஆனால் வளமான சுற்றுச்சூழலை நாம் இழக்க நேரிடுமாயின் நமது அடிப்படையான வாழ்வே இழக்கப்பட்டுவிடும் என்ற உண்மையினை நாம் இன்னமும் அறிய வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது மாறிவரும் சுற்றுச்சூழலை உணரும் நெருக்கடியான காலம் வந்துவிட்டது. மக்கட்தொகை பெருக்கம், மிதமிஞ்சிய நகரயமயமாகுதல், பயிரிடும் நிலங்கள் குறைந்துவருதல், சாலையில் ஓடும் வாகனப்பெருக்கம், உலகளாவிய வெப்பநிலை, காடுகள் அழிதல், தொழிற்சாலை மயமாகுதல், மக்களிடையே மாறிவரும் நுகர்வுத் தன்மை, மனிதர்களின் செயல்களால் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயற்கைவளங்கள் போன்றவைகள் அனைத்தும் நாம் பூமியில் வாழும் அடிப்படை வாழ்க்கையையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.நமது சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துவருவதை இத்தகைய தருணத்திலாவது நாம் உணா்ந்து எச்சரிக்கையுடன் இருக்காவிடில் அனைத்து வளங்களையும் நாம் இழக்க நேரிடும். உலகின் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் குறிப்பாக கீழ்காணும பத்து காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.1. மிகப்பெரிய அளவில் பனிமலைகள் உருகும்.
2. கடல் மட்டம் உயரும் அல்லது கடல் உள்வாங்கும். இதனால் மிகப்பெரிய நிலப்பரப்புகள் நீருக்குள் மூழ்கடித்து கோடிக்கணக்கான மக்கள் இறக்கவும் நேரிடும்.3. மழை பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் உலக தானிய மற்றும் உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்து விடும்.4. வறட்சி அதிகரிக்கும். இதனால் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகரிக்கும்.5.புயல்களும் சூறாவளிக்காற்றுகளும் அதிகரித்து எண்ணிலடங்கா நாசமோசங்களை ஏற்படுத்தும்.6. நீர்வள பாதிப்புகள் அதிக அளவில் நிகழும்.7. உயிர்ச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பல உயிரினங்கள் மறைந்து விடும்.8. வேளாண் உற்பத்தி குறையும். இதனால் மக்கள் இயற்கை உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும்.9. நோய்கள் அதிகரிக்கும். மருத்துவ சிகிட்சைகள் பலன் அளிக்காமல் போகும்.10. 2050-ஆம் ஆண்டுடன் பூமியின் தண்ணீரின் அளவு மூன்றில் ஒரு பகுதியாக குறையும்.“மரங்களை நாசம் பண்ணு, அப்போது மண்வளம் அழியும்,மண்ணை நாசம் பண்ணு, நீர்வளம் அழியும்,நீரை நாசம் பண்ணு, அப்போது தேசம் அழியும்.அப்போது நீ பாலைவனத்தை உடைமையாக்கி கொள்வாய்”.ஆகையால் ஒரு தேசத்தின் பலம் அதன் மண்ணை சார்ந்திருக்கிறது என்ற உண்மையை அறிந்து செயல்படுவோம்.நான் இயற்கைக்கும் அதன் வளத்திற்க்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காமல் பாதுகாப்பேன் என்றும் என்னையோ அல்லது மற்றவர்களையோ சூழலுக்கு எதிரான யாதொரு செயல்களிலும் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் மாசுபடல், இயற்கைவளம் குன்றல், உயிரின் பன்மய இழப்பு, அடிப்படை வசதிகள் போன்ற சூழ்நிலை பிரச்சினைகளை இயற்கையோடு சேர்ந்து தீர்வு காண்பேன் என்றும் நாட்டின் வளம் குன்றாத வளர்ச்சிக்கு என்னுடனிருப்பவர்கள் இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலைப் பற்றி அறியும்படி செய்வேன் என்றும் நான் இதன் மூலம் உளமார உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு துளி நீரையும் காப்போம்.பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு துலக்க வேண்டும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் குழாயை அடைத்து விட வேண்டும். வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை நாம் கண்டிப்பாக அடைக்க வேண்டும். ஷவரில் குளிக்கும்போது அதிக நேரம் நின்றுகொண்டு தண்ணீரை வீணாக்கக் கூடாது. ‘ஷவரில் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது முழு கொள்ளளவு துணிகளை பயன்படுத்த வேண்டும். வீட்டில் மினரல் வாட்டர் பிளான்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்படுத்தும்போது, வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதனை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம். தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் போது, தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவேன்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சி 99வது மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா ஏற்பாட்டின் பேரில் வேலம்மாள் மருத்துவமனை சிறப்பு கண்சிகிச்சை முகாம் .
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாம்பன் நகரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சன்மதி தலைமையில் 4 மருத்துவர்களும் 13 செவிலியர் உள்பட 17 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். கண்சிகிட்சை முகாமிற்கான ஏற்பாடுகளை சந்தனகுமார் செய்திருந்தார்.சிறப்பு கண்சிகிச்சை முகாமில் மொத்தம் 267 பேர் கலந்து கொண்டனர். கண்புரை நோய் ஏற்பட்டுள்ள 69 பேருக்கு வேலம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக , அரசு நலத்திட்ட உதவிகளை மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற விழாவில்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், ”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக 486 பயனாளிகளுக்கு ரூ.59.75 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.விழாவிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், தலைமை வகித்தார்.மாநகராட்சி மேயர்இந்திராணி பொன்வசந்த், முன்னிலை வகித்தார்.இவ்விழாவில்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசு, ஆதரவற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், வாய்ப்புகள் குறைந்தோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் மனிதநேயத்துடன் பல்வேறு அரசு திட்டங்களையும், பாதுகாப்பு சட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக, சமூக நீதி, மகளிர் மேம்பாடு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் நடப்பாண்டிற்கான வரவு – செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சமுதாய பற்று, பொதுமக்கள் மீது கொண்ட பற்றுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள, முற்றிலும் ”திராவிட மாடல்” பட்ஜெட். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கு உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாகபெயரளவில் மட்டுமே திட்டமாக இருந்து வந்துள்ளது.
அதனை, நிர்வாக ரீதியாக சீர்செய்து தொடர்ந்து செயல்படுத்துவது சிரமமான காரியமாகும். மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.அந்தவகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையில் இதனை கல்வி உதவித்தொகை திட்டமாக நடைமுறைப்படுத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும். கல்வி வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேறுகின்ற சமுதாயமே அனைத்து நிலைகளிலும் உயர்ந்த சமுதாயமாக அமையும் என, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.முன்னதாக,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை மதுரை மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 6 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாவட்டத்தில், ஏற்கனவே 38 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் 44 எண்ணிக்கை 108 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல் படுத்தப்பட்டுள்ளன.இவ்விழாவில், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் .சுகி.பிரேமலதா , மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.வெங்கடாசலம் , சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சௌந்தர்யா , 108 ஆம்புலன்ஸ் கிட்ட மண்டல மேலாளர் ஆர்.பிரசாத் உட்பட மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை நகரில் பல இடங்களில் சாலைகளில் கால்நடை தெரிவதால் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. மதுரையில் கால்நடை வளர்ப்போர் தினசரி கால்நடைகளை சாலைகளில் திரியவிடுவதால், அப்பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. கால்நடைகள், ஆங்காங்கே சானங்களைப் போட்டு, அசிங்கப்படுத்துவதால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என, சமூக ஆர்வலர் மாநகராட்சி மீது புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஆணையர் தரப்பில், கால்நடைகளை சாலைகளை திரியவிட்டால், கால்நடை உரிமையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், தினமும் மதுரை நகரில், அண்ணாநகர் கேகே நகர், திருப்பாலை, புதூர், கருப்பாயூரணி, வண்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் கால்நடை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன .இதனால், அப்பகுதி மக்கள் பரவலாக பாதிக்கப்படுகின்றனர் என, குற்றச்சாட்டு எழுகிறது. இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ,சமூக ஆர்வலர் விரும்புகின்றனர்.மதுரையில் சாலை திரியும் கால்நடைகள் போக்குவரத்து இடைஞ்சல் மதுரை நகரில் பல இடங்களில் சாலைகளில் கால்நடை தெரிவதால் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுகிறது மதுரையில் கால்நடை வளர்ப்போர் தினசரி கால்நடைகளை சாலைகளில் தெரிவித்த விடுவதால் அப்பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிறப்புடன் கால்நடைகள் ஆங்காங்கே சாதனங்களைப் போட்டு அதிகப்படுத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என சமூக ஆர்வலர் மாநகராட்சி மீது புகார் தெரிவிக்கின்றனர் மாநகராட்சி ஆணையர் தரப்பில் கால்நடைகளை சாலைகளை தெரியாவிட்டால் கால்நடை உரிமை உரிமையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து தினமும் மதுரை நகரில் அண்ணாநகர் கேகே நகர் திருப்பாலை புதூர் கருப்பாயூரணி வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கால்நடை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன இதனால் அப்பகுதி மக்கள் பலத்த பகுதி மக்கள் பரவலாக பாதிக்கப்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழுகிறது இதுகுறித்து மதுரை மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையாளர் புதிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் விரும்புகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்பியலில் வெப்பவியல், கிரீன் ஹௌஸ் விளைவு மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர் ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் பிறந்த தினம் இன்று (மார்ச் 21, 1768).
இவர், கணிதவியலில் ஃபூரியே தொடர் என்னும் கருத்துக்களை உருவாக்கி புகழ்பெற்றவர். இந்த சமன்பாடு, பரிமாண பகுப்பாய்வுக்கு பொருந்தும் என்றால், ஒரு சமன்பாடு சரியானதாக இருக்கும் என்றும் கருதினார். 1820 ஆம் ஆண்டில், பூமியின் அளவு மற்றும் சூரியனின் தூரம் போன்றவற்றை கணக்கிட்டு கூறினார். வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுங்குடில் விளைவு அவசியம். பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக்கொள்ளும். இதுதான் கிரீன் ஹௌஸ் விளைவு என்றார்.
இந்த வேலையில் மூன்று முக்கியமான பங்களிப்புகள் இருந்தன, ஒன்று முற்றிலும் கணிதம், இரண்டு அடிப்படையில் உடல். கணிதத்தில், தொடர்ச்சியான அல்லது இடைவிடாத ஒரு மாறியின் எந்தவொரு செயல்பாடும் மாறியின் பெருக்கங்களின் தொடர்ச்சியான சைன்களில் விரிவாக்கப்படலாம் என்று ஃபோரியர் கூறினார். கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் இந்த முடிவு சரியானதல்ல என்றாலும், சில இடைவிடாத செயல்பாடுகள் எல்லையற்ற தொடரின் கூட்டுத்தொகை என்று ஃபோரியரின் கவனிப்பு ஒரு திருப்புமுனையாகும். ஃபுரியர் பல்லுறுப்புக்கோவைகளின் உண்மையான வேர்களைத் தீர்மானிப்பதும் கண்டுபிடிப்பதும் ஒரு முடிக்கப்படாத வேலையை விட்டுவிட்டார். இது கிளாட்-லூயிஸ் நேவியர் என்பவரால் திருத்தப்பட்டு 1831ல் வெளியிடப்பட்டது. இந்த படைப்பில் மிகவும் அசல் விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, 1820ல் வெளியிடப்பட்ட பல்லுறுப்புறுப்பு உண்மையான வேர்கள் பற்றிய ஃபோரியரின் தேற்றம். 1807 மற்றும் 1811 ஆம் ஆண்டுகளில் பிரான்சுவா புடான் தனது தேற்றத்தை சுயாதீனமாக வெளியிட்டார். இது ஃபோரியரின் தேற்றத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது (ஒவ்வொரு தேற்றமும் மற்றொன்றுக்கு இணையானது). 19 ஆம் நூற்றாண்டில், சமன்பாடுகளின் கோட்பாடு குறித்த பாடப்புத்தகங்களில் வழக்கமாக வழங்கப்பட்ட ஒன்றாகும்.
1830 ஆம் ஆண்டில், அவரது உடல்நிலை குறைந்துவிட்டது. ஃபோரியர் ஏற்கனவே எகிப்து மற்றும் கிரெனோபில், இதயத்தின் அனூரிஸத்தின் சில தாக்குதல்களை அனுபவித்திருந்தார். பாரிஸில், அவர் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கான முதன்மைக் காரணத்தை தவறாகப் புரிந்து கொண்டார். மே 16 25, 1830ல் தனது 62வது அகவையில் பாரிஸ், பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1849 ஆம் ஆண்டில் ஆக்செரில் ஒரு வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால் அது இரண்டாம் உலகப் போரின்போது ஆயுதங்களுக்காக உருகப்பட்டது. கிரெனோபில் உள்ள ஜோசப் ஃபோரியர் பல்கலைக்கழகம் அவருக்கு பெயரிடப்பட்டது. ஈபிள் கோபுரத்தில் பொறிக்கப்பட்ட 72 பெயர்களில் இவருடைய பெயரையும் பொறித்து சிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள்- உலக வன நாள் இன்று (மார்ச் 21).
புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம். வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் 21ல் உலக வன நாளாக கொண்டாடப்படுகின்றது. இயற்கை பல வகையான உயிரினங்களும், மரங்களும், செடிகளும், அதில் விதவிதமான மலர்கள், காய்கள், கனிகள் உயிரினங்கள், என்று காலகாலமாக பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை என்று சொன்னாலே மனம் மகிழ்ச்சி அடைய கூடிய வகையில் இயற்கைக் காட்சிகள் நமது உள்ளத்தை பூரிப்படைய வைக்கும் திறன் கொண்டது. இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரினாம் வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு. மனிதர்கள் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலசி செயற்கையாக வாழ்வதே ஆகும்.
உலகில் 4 பில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பரப்பிற்கு காடுகள் காணப்படுகின்றன. அதாவது, புவி மேற்பரப்பில் 31% காடுகள் சூழ்ந்துள்ளன. உலகில் அதிக பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் தென் அமெரிக்க கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் காணப்படுகின்றன. உலகில் குறைந்த பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் ஆசியாக் கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் 20% காடுகள் காணப்படுகின்றன. உலகில் அதிகளவில் வன வளங்களைக் கொண்ட நாடுகள் ரஷ்யா, பிரேசில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆசியனவாகும். உலசில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் இந்த நாடுகளிலேயே காணப்படுகின்றன. உலக வனங்களில் 20% ரஷ்யாவிலேயே காணப்படுகின்றன.
புவி மேற்பரப்பில் 6% ஈரவலயக் காடுகள் சூழ்ந்துள்ளார். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை இக்காடுகளிலேயே காணப்படுகின்றன. அண்டாடிக்கா கண்டம் தவிர்ந்த எனைய அனைத்து கண்டங்களிலும் ஈரவயைக் காடுகள் காணப்படுகின்றன. தென் அமெரிக்க ஈரவலயக் காடுகளில் 2000கும் அதிகமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றனவாம். மத்திய ஆபிரிக்க ஈரவலயக் காடுகளில் 8,000 இற்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றனவாம். உலகத்திற்கு தேவையான 20% ஆக்சிஜன் அமேசான் ஈரவலயக் காடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது உலகில் 15 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்வாரத்திற்கு காடுகளிலேயே தங்கியுள்ளனர். உலகில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளில் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் தமது எரிபொருள் தேவையினை விறகுகள் மூலமே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
இப்படி பட்ட இயற்கையை மனிதன் எப்படி சிதைக்கிறான் என்றால், உலகில் ஒவ்வொரு நிமிடமமும், கால்பந்தாட்ட மைதானத்தின் அளவான ஈரவலயக் காடுகள் அழிக்கிறான், உலகில் வருடாந்தம் 6 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலான இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன. இது இங்கிலாந்து நாட்டின் பரப்பளவினை விடவும் பெரிதாகும். காசிதாதி உற்பத்திற்காக உலகில் 50% ஆன மரங்கள் அழிக்கப்படுகின்றன. உலசில் அதிகமான காட்டுக் க மனிகனாலேயே உருவாக்கப்படுகின்றன. நேற்றைய மரங்களை பாதுகாப்போம் இன்றைய மரங்களை பராமரிப்போம் நாளைய மரங்கண பதியமிடுவோம் – மரமொழி
நம்மை நம் சந்ததியினரை பாதுகாக்க இயற்கை நமக்கு தந்திருக்கும் பரறே மரங்கள், மரங்கள் வாய்மை கேட்டை குறைக்கும் தன்மை உடையன. நமது வாயு மண்டலத்தில் சுமார் 95 சதவிக் காற்று பமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் உயரம் வரை வியாபித்துள்ளது இந்த காற்று சூரிய கதிர்களின் தாக்கத்தால் எடை குறைந்து மேலும் உயரச் செல்லும். நமது சற்றுப்புற சீர்கேட்டால் காற்றில் கலந்துள்ள பலவகையான அசத்த வாயுக்களின் அடர்த்தியாலும் மாசுபடிவதாலும் காற்றினால் உயர எழும்பி செல்லும் நிலை குறைந்து வருகிறது. இதனால் தமியின் மேற்பரப்பு எளிதில் சூடாக வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான பசுந்தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அரிய வாய்ப்பு உள்ளது. சுமார் ஆயிரம் கண்டுகளாக உருவான ஒரு அங்குல வளமான மேல்மன், சில ஆண்டுகளிலேயே வளம் குன்றிவிடுகிறது இயற்க்கையை நாம் அழித்தால் இயற்க்கை நய்மை அழித்துவிடும். இயற்கையை பாதுகாப்போம் நம் சங்கதியின் உயிருக்காக
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.தமிழக பட்ஜெட்டை பொறுத்தவரை வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட்.தமிழக அரசின் கடன் தொகை 6 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது.உள்நாட்டு உற்பத்தி அளவீடு 26% கடன் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழகம் மட்டும் தான் அதிக கடன் வாங்கி உள்ளது.7000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக காட்டுகிறார்கள்.இப்படியே இருந்தால் அடுத்தடுத் வருடங்களில் அரசு 80,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.தமிழக மக்களை கடுமையான கடன் சுமையில் ஆழ்த்துகிறார்கள்.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு இப்படியொரு பட்ஜெட்டை தாக்கல் செய்வது நியாயமா?தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு 1000 ரூபாய் கொடுப்போம் என கூறியது அரசு,தற்போது அரசு கல்லூரி மாணவிகளுக்கு 1000ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். தில் எந்த தவறு கிடையாது.ஆனால் ஏற்கனவே சொன்ன ஆயிரம் ரூபாயை கூட கொடுக்க முடியவில்லை.36 மாதங்களுக்கு 5 லட்சம் பேருக்கு 1000ரூபாய் கொடுக்க முடியுமா.தாலிக்கு தங்கத்தை நிறுத்திவிட்டு வேறு திட்டத்திற்கு நிதியை மாற்றி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.இரண்டையும் குழப்புகிறார்கள்.தெளிவில்லாத புரிதல் இல்லாத தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட்.மத்திய ரசு தமிழக அரசுக்கு நிலுவைத்தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளது.மத்திய அரசு யாருக்குமே நிலுவைத்தொகையை நிறுத்த மாட்டார்கள்.எந்த மாநிலத்திற்கும் மத்திய அரசு பாரபட்சம் காட்ட மாட்டார்கள்.எதற்கெடுத்தாலும் மத்திய அரசுச மீது பழிபோடும் நிலையில் பட்ஜெட்டில் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு நிலுவைத்தொகை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்கள்.நிறைய மத்திய அரசு திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டி திட்டங்களை அறிவித்துள்ளனர்.எந்த பெயர் சூட்டினாலும் தமிழக மக்கள் பயன் பெற வேண்டும்.கடன்சுமையில் இருந்து தமிழகத்தை வெளியே கொண்டு வந்து புதிது புதிதாக வருவாயை பெருக்க வழி ஏற்படுத்த வேண்டும்.பகல் கனவு காண்கின்ற பட்ஜெட்.சம்மந்தமில்லாத பொய்யை சொல்லி தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்ஜெட்.நிதியமைச்சர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.பிஜிஆர் எனர்ஜிக்கு முதலில் ரெய்டு விட வேண்டும்.பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக திங்கள் கிழமை ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். தொடர்ந்து புகார்களை கொடுக்க வேண்டும்.கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கல் எறியக்கூடாது.தயவு செய்து ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை நிருபிக்கட்டூம்.உங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்களுக்கு நம்பிக்கை அளியுங்கள்.ப.சிதம்பரம் என்ன அர்த்தத்தில் சொன்னார் எனத்தெரியவில்லை.நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் துணை பிரதமர் ஆக ஏராளமானோர் கனவு காண்கின்றனர்.தமிழக முதல்வரும், மம்தா, பினராயி உள்ளிட்ட ஏராளமானோர் கனவு காண்கின்றனர்.போட்டி போடும் கூட்டம் அதிகமாக உள்ளது.400 எம்பிக்களை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்போம்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் படைசூழ, தாரை தப்பட்டையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மதுரை ஆணையூர் அருகே பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைக்க சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் படைசூழ, தாரை தப்பட்டையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து இங்கிருந்து கார் மூலம் ஆணையூர் புறப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை என்பது வருத்தமளிக்கிறது நெல்லை முபாரக் பேட்டி.
மதுரையில் எஸ்டிபிஐ சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பேசினார் தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்டங்கள் இல்லாதது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் மேம்பாட்டு நலத் துறை சார்பாக இளைஞர்களுக்காக இந்தியாவில் இளைஞர் நலன் மற்றும் சாதனைகளை நேர்த்தியாக கையாளுதல் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு இன்று 18 3 2020 தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.மேலும் ,மாணவர்கள் சைபர் குற்றங்களிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் இணைய வழி குற்றங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மாணவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மூலம் இணைய குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் குற்றங்கள் மாணவர்களை தவறான வழிக்கு எடுத்துச்செல்லும் அதனை அறவே தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் நவீன சாதனங்களை நல்லமுறையில் கையாளுதல் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள்.நவீன சாதனங்களை நல்வழிகளில் பயன்படுத்தி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மாணவர்கள் தங்களின் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி .
தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவும், கிழக்கு கடற்கரை சாலையை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆறு வழி சாலை அமைக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி..சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் தற்போது தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வு உயரக் கூடிய நிலையிலும், ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்காக கொண்டு செல்லும் நிதிநிலை அறிக்கையை தற்போது முதலமைச்சர் தந்துள்ளார்.விளையாட்டு துறைக்கு தேவையான நிதியை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார்.ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் முக்கியமான பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒலிம்பிக் தமிழக வீரர் வீராங்கனைகளை தயார் படுத்தும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.சதுரங்க ஒலிம்பிக் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான அனுமதியை முதலமைச்சர் பெற்று தந்துள்ளார். குறிப்பாக அகில இந்திய சதுரங்க கூட்டமைப்போடு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தையும் முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு..தமிழக முதல்வர் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் முழு கவனம் செலுத்தி வருகிறார்.சுற்றுச்சூழல் துறை என்ற பெயரை மாற்றி சுற்றுச்சூழல் காலநிலை மற்றம் என்ற பெயர் மாற்றம் செய்து கொண்டு செல்கிறார். கடந்த 10கால ஆட்சியில் மண்ணை மணல் ஆகும் என்ற எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்தாமல் தமிழகத்தை பாதுகாக்கும் ஒரு முதல்வர் கிழக்கு கடற்கரை சாலையை அமைக்கும்போது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அறிவியல் புரட்சியில் முக்கியமான கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்ட தத்துவஞானி ஐசக் நியூட்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 20, 1727).
ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton) டிசம்பர் 25, 1642ல் கிரிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார். இவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் இருந்தது. தனது 12வது வயதில் பள்ளியில் சேர்ந்தார். இவர் பள்ளி படிப்பில் மிகவும் பின்தங்கி சாதாரண மாணவராக இருந்தார். பள்ளியில் பாடம் படிப்பதற்கு பதிலாக படம் வரைதல், பட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஆர்வமாக இருந்தார். ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது.
தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்தார். அங்கு கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் தனித் திறமை பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார். பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கணித சூத்திரங்களையும், ஈருறுப்பு தொடர் தேற்றங்களையும் கண்டுபிடித்தார். இயற்கையை அறிந்து கொள்ள ஆற்றல் வாய்ந்த கணித முறையான வகையீட்டு எண் கணிதம், தொகையீட்டு எண் கணிதம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியலில் கணித முறையை பயன்படுத்த உதவியது. அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.
மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். இவர் பட்டம் பெற்றதும், பெருங்கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே. இவர் தனது ஆராய்ச்சிகளை வானவியல் பக்கம் 1664ம் ஆண்டில் திருப்பினார். அதாவது வானில் உள்ள கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். சந்திரனைச் சுற்றிலும் உள்ள மெல்லிய கீற்றுகள் எவ்வாறு உண்டானது என்பது பற்றித் தீவிரமாக சிந்திக்கலானார். இந்த ஒளிக்கற்றைக்கும், வானவில்லில் ஒளிரும் ஒளிச் கற்றைகளுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை சோதனைகள் மூலம் ஆராய்ந்தார். இவரது கண்டு பிடிப்புகளைக் கண்டு பலரும் வியந்து பாராட்டினர். இவரது ஆராயும் அறிவைக் கண்ட அதிகாரிகள் இவருக்கு உபகார சம்பளம் அளிக்க முன்வந்தனர். இவர் கிரகங்களைப் பற்றி ஆராய்ந்த கெப்ளரின் வாதங்களின் படியே அவரது கருத்துக்களை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார். ஆனால், நியூட்டனுக்கு முன்பே கிரகங்களின் நிலை பற்றி பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டனர். அவர்களின் ஆராய்ச்சிகளைப் பின் பற்றிய நியூட்டனும் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
பூமியின் புவி ஈர்ப்புத் தன்மையைப் பற்றி முதன் முதலில் கண்டறிந்தவர் நியூட்டன் என்றே பலர் எண்ணினாலும், அதற்கு முன்பாகவே, பலர் பூமியின் தன்மை இழுப்பதாலேயே பொருள்கள் கீழே விழுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், கிரகங்களின் இயக்கத்துக்கு இந்த புவி ஈர்ப்பு விசையே காரணம் என்றும், கிரகங்கள் சூரியனிடமிருந்து எவ்வளவு தூரமுள்ளனவோ அவ்வளவுக்கு மாறாக வேகம் சலன கதியில் வித்தியாசப் படுகிறது என்றும் முதன் முதலாகக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டனே. நியூட்டன் பற்றிய குறிப்புகளை அவரது நண்பர் வால்டோ எழுதி வைக்கவில்லையென்றால், நியூட்டனின் ஆப்பிள் பழச் சம்பவம் நமக்குத் தெரியாமலே போயிருக்கும். ஒருநாள் நியூட்டன் தன் தோட்டத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுந்தது. அதைப் பார்த்த நியூட்டனின் சிந்தனை ஆப்பிள் மரத்தின் மீது சென்றது. அப்போது அவர் ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள் நேராக பூமியில் வந்து விழக் காரணம் என்ன? அந்தக் கனி மரத்தின் மீது ஏன் செல்லவில்லை என்று சிந்தித்தார். ஆக, பூமி சாதாரண பொருட்களை மட்டுமின்றி கிரகங்களையும் தன் வசம் இழுக்கிறது என்பதை உணர்ந்தார். அன்று அவர் சிந்தையைத் தூண்டச் செய்யக் காரணமாயிருந்த சம்பவமே அவர் கண்டுபிடித்த இயக்கம் மற்றும் புவி ஈர்ப்பு விதிக்குக் கட்டுப்பட்ட கிரகச் சுழற்சி நியதிக்கும் காரணமாக அமைந்தது.
சூரியனைச் சுற்றிய பாதையில் கோளின் இயக்கத்துக்குக் காரணமான விசை மரத்திலிருந்து ஆப்பிள் கனியை விழச் செய்யும் என்ற முடிவிற்கு வந்தார். இவர் தம் 24வது வயதில் 1666ம் ஆண்டில் ஈர்ப்பியலைப் பற்றிய விதியை வெளியிட்டு மிகப்பெரும் புகழ் பெற்றார். 1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. இவருக்காக இவரது நண்பர் டாக்டர் பாரோ என்பவர் தன் பதவியை விட்டுக் கொடுத்தார். அப்போது கணித சம்பந்தமான ஒரு விவாதம் எழவே, நியூட்டன் தான் ஏற்கனவே எழுதி வைத்த குறிப்புகளைக் கண்ட டாக்டர் பாரோ பெரிதும் வியப்படைந்தார். அதில், கலிலியோ பாதியிலேயே விட்ட அரும் பெரும் விஷயங்களைத் தெளிவாக விளக்கியிருந்தார். கிரகங்களின் தொலைவிற்கேற்ப, தொலைவின் மடங்குகள் மாறுபட்டு, அந்தச் சக்தியானது அவற்றை எப்படி இழுக்கிறது என்ற ஆராய்ச்சியிலேயே நியூட்டன் இரவும், பகலும் தன் பொழுதைக் கழித்தார். இந்த ஆராய்ச்சியை அவர் லிங்கன் ஷைரில் நடத்திக் கொண்டிருந்தார். அந்த இடம் அசவுகரியமாக இருந்தபடியால் அவரால் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பூமியின் உருவத்தைப் பற்றியும், அதன் சுற்றளவை பற்றியும் தெரிந்து கொண்ட அவர், கிரகங்களைப் பற்றியும் கணக்கிட்டுக் கொண்டார். இரண்டு வருட காலமாக வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருந்தார்.
“சிந்திப்பதில் பொறுமையும், செயலில் விடா முயற்சியுமே என் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். இதைத் தவிர எனக்கு வேறு எந்தச் சிந்தனையுமே கிடையாது” என்று அவர் குறிப்பிடுகிறார். கணித சம்பந்தமான மற்றும் டெலஸ்கோப், பூமியின் புவிஈர்ப்பு விசை, கோள்களைப் பற்றி, பூமியின் உருவம், கன அளவு போன்ற விதிகள், சூத்திரங்கள் என்று எல்லாவற்றையும் உலகிற்கு உணர்த்திய நியூட்டன், அறிவியல் உலகில் மிகப் பெரும்சாதனையை நிகழ்த்திக் காட்டினார். ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது. ஒரு பொருளின் இயக்கத்தை மாற்ற, சக்தி என்பது மிக முக்கியம். வேறு எந்த சக்தியும் இல்லாத நிலையில் இயக்கத்தோடு கூடிய ஒரு பொருள் அதே வேகத்தோடு, அதே திசையில் நேராகச் சென்று கொண்டிருக்கும் என்பதே நியூட்டனின் முதல் விதியாகும். ஒரு பொருள் தன் நிலையிலிருந்து மாறும்போது, அந்தச் சக்தியினுடைய அளவுக்கு ஏற்ப அதே திசையில் அந்தப் பொருளும் வேகத்திலோ, திசையிலோ மாறும் என்பது இரண்டாவது விதியாகும்.
ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும். ஒன்றுக்கொன்று மாறாக இயங்குவதாகப் புலப்படும் இருவகைக் சக்திகளும் சம அளவாய் நின்று பொருளின் போக்கை நிர்ணயிக்கும். ஒரு சக்தி தனித்து அமையாதாகையால் எப்போதும், அது இரு திறப்பட்டே அமையும் என்பதை மூன்றாவது விதி விளக்குகிறது. ஒரு வகைச் சக்தியால் ஒரு பொருளை நாம் தள்ளும்போது அந்தச் சக்திக்கு எதிராக இன்னொரு சக்தி அதில் அமைந்து நமது சக்திக்குத் தடையை உண்டாக்குகிறது. 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார். நியூட்டனின் பிரின்சிப்பியாவிலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது.
பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூட்டன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே. வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. அதன் விளைவாக நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.
ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அலை-துணிக்கை இருமைத்தன்மை இரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும், அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஆறு அங்குல நீளமும், ஒரு அங்குல சுற்றளவும் கொண்ட தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்றையும் செய்தார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. அவர் கண்டுபிடித்த அக்கண்ணாடி லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் இன்றும் உள்ளது.
டிரினிடி கல்லூரியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்கு வயது 51. அவர் தனது குறிப்புகள் அத்தனையையும் புத்தகமாக வெளியிடலாம் என்ற நோக்கில் அதையெல்லாம் மேஜை மீது வைத்திருந்தார். அப்போது அந்தக் குறிப்புகளை எலியொன்று கடித்து நாசமாக்குவதைப் பார்த்து நியூட்டனின் நாய், எலியுடன் போராடியது. அப்போது அதனருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி அக்குறிப்பின் மீது விழுந்து அத்தனையும் எரிந்து சாம்பலாகிவிட்டது. கோவிலுக்குச் சென்று திரும்பிய நியூட்டன் நாயின் மீது எவ்வித கோபமும் கொள்ளாமல், “உன்னால் எவ்வித செயல் நடந்துவிட்டது என்று பார்த்தாயா?’ என்று கேட்டார். வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்த குறிப்புகள் முற்றிலும் அழிந்துவிட்டதைக் கண்ட நியூட்டனின் மனம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு “Mathematical Principles of Natural Philosophy” என்ற புத்தகம் வெளியானது. “Principia” என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கேம்ப்ரிட்ஜில் 1705ம் ஆண்டு நடந்த சிறப்பு விழாவில் நியூட்டனுக்கு, அரசி அன்னி, “சர்’ எனும் பட்டத்தை வழங்கி கவுரவித்தார். ஐசக் நியூட்டன் இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தபோதும் தம் சாதனையைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். “நான் இவ்வுலகிற்கு எவ்வாறிருப்பினும் என்னில் பொருத்தமட்டில் நானொரு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன், மென்மையான கூழாங்கல்லையும் அழகிய சங்கையும் கண்டுள்ளேன். ஆனால் விரிந்து பரந்துள்ள பெருங்கடலோ என் கண்முன்னே காணப்படாமல் உள்ளது.” ராயல் சங்கத்தின் கூட்டத்தில் தலைமை வகிக்க லண்டன் சென்ற நியூட்டன், வீட்டிற்குத் திரும்பி வருகையிலேயே உடல் நலமின்றி திரும்பி வந்தார். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஆய்வுகள் மேற்கொண்ட தத்துவஞானி ஐசக் நியூட்டன் மார்ச் 20, 1727ல் தனது 85வது அகவையில் இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு மறைந்தார். லண்டனில் புகழ்பெற்ற “Westminster Abbey”-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! “இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்… நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது”.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களுடன் கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகளை காத்திடுவோம்! இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று (மார்ச் 20).
சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அவை, 2010 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக (World House Sparrow Day – WHSD) அறிவித்தது. தில்லி அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிட்டுக்குருவியைத் தங்கள் மாநிலப் பறவையாக அங்கீகரித்தது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. உலக அளவில் அதிக அளவு பறவை இனங்கள் அழிந்து வரும் நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் 141 பறவை இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன. ஏழாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 88 பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.
அலாரம் சப்தத்திற்கு அரக்கப் பறக்க எழுந்திருக்காமல் கீச் கீச் என்ற பறவைகளின் சப்தத்தால் கண்விழித்த நம் முன்னோர்கள் பாக்கியம் செய்தவர்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட பறவைகளைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. சின்னச் சின்னச் சிட்டுக்குருவிகளும் உலகளவில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்துவிட்டது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையைப் பெற்றுள்ளன. ஆனால் மனிதனின் சுயநலத்திற்காக விலங்குகளையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம். ஒரு சிட்டுக்குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி என்ற சிறுவன்தான், பின்னர் தனது வாழ்க்கையையே பறவைக்காக அர்ப்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார். சிட்டுக்குருவிதானே என சாதாரணமாக எண்ணாமல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் செல்போன் சிக்னல்களால் இந்த இனம் அழிந்து வருவதை 2.0 என்ற படத்தில் நடிகர்கள் ரஜினி மற்றும் அக்ஷய் குமாரை வைத்து சிட்டுக் குருவியின் முக்கியத்துவத்தை இயக்குநர் சங்கர் கூறியிருந்தார்.
சிட்டுக்குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சார்ந்தவை. தமிழகத்தில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலாங் குருவிகள், ஊர்க் குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இதனைச் சங்க இலக்கியங்களில் மனையுறைக் குருவி, உள்ளுறைக் குருவி மற்றும் உள்ளூர்க் குருவி என்றும் குறிப்பிடுகின்றனர். இவை கிராமங்களிலும், நகரங்களிலும், மக்களோடு சேர்ந்து வாழ்பவை. காடுகளில் தன்னிச்சையாக வாழ்பவை அல்ல. சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. இதன் அலகுகள் கூம்பு வடிவமாக இருக்கும். இதன் எடை 27 முதல் 39 கிராம் வரையில் காணப்படும். இதன் நிறம் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் பறவை நிறத்தில் வேறுபட்டு காணப்படும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல கண்டங்களில் சிட்டுக்குருவிகள் உள்ளன. இவற்றின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகள்.
செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்கிறார்கள் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள். தொழிற்சாலைகள் அதிகரிப்பு மற்றும் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட காரணத்தால் சிட்டுக்குருவிக்கான வாழ்விடமும் இரை தேடும் இடமும் சுருங்கிவிட்டன. வயல்வெளிகளில் இரசாயனத் தெளிப்பு அதிகரிப்பதால் சிட்டுக்குருவிகளின் உணவான புழு பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. சிட்டுக்குருவிகள், பெரும்பாலும் வனப்பகுதியில் வாழ்வதைவிட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும். சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இட வசதியில்லை. சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. நாம் இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் வேண்டும். இவை வீடுகளிலும், வயல்வெளிகளிலும் சிதறிக் கிடக்கின்ற தானியங்களையும் பயிர்களில் காணப்படும் புழு பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன.
பண்டைய காலங்களில் வீட்டிற்குத் தேவையான உணவு தானியங்களை வீட்டு முற்றத்திலும், மொட்டை மாடிகளிலும் வெய்யிலில் காய வைப்பார்கள். இவற்றைச் சிட்டுக்குருவிகள் கொத்தித் தின்னும். தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உணவு தானியங்களையும் நேரடியாக நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் வாங்கி, சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்துகின்றனர். விவசாயம் செய்த தானியங்களை அறுவடைக்குப் பின்னர் வீடுகளுக்கு கொண்டு வந்து சுத்தம் செய்வர். சிதறிய நெல்மணிகள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகப் பயன்படும். அறுவடைக்கான எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தானியங்களை வீடுகளுக்கு கொண்டு வரும் முறையே கைவிடப்பட்டுவிட்டது. முதலில் சிட்டுக்குருவிகளை அழிவு நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற பொது அறிவு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். வீடுகளில் சிறிய கிண்ணங்களில் தானியங்களை நிரப்பி பறவைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். பெரிய தொட்டிகளில் நீரை நிரப்பி சிட்டுக்குருவிகள் நீர் அருந்தவும், இறங்கிக் குளிக்கவும் ஏற்ற வகையில் நீர்த்தொட்டிகள் அமைக்க வேண்டும். வீட்டில் சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து வைத்து வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ அல்லது மரக்கிளைகளிலோ தொங்கவிட்டால்கூட சிட்டுக் குருவிகளுக்குப் போதுமானது. இக்கூடுகளை மழை நீர் படாமலும், பகை விலங்கினங்கள் தொந்தரவு இல்லாத வகையிலும் அமைக்க வேண்டும். சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஓர் உயிரினமும் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல்படி என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது.
சீன நாட்டில் பயிர்கள் அழிய சிட்டுக் குருவிகளும் ஒரு காரணம் என கோடிக்கணக்கில் அதனை அழிக்க 1958-ம் ஆண்டு மாவோ உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோடிக்கணக்கான சிட்டுக் குருவிகள் கொடூரமாக கொல்லப்பட்டன. இதனால், அடுத்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று பார்த்தால், அதற்கு மாறாக வெட்டுக்கிளிகளின் இனம் பெருகி விளைச்சல் பாதியாக குறைந்தது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையை பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் சுயநலத்துக்காக மிருகங்களையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம். ஒரு சிட்டுக் குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி, அதனால் தனது வாழ்க்கையையே பறவைகளுக்காக அர்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையை பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் சுயநலத்துக்காக மிருகங்களையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம்.
தகவல்:இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனிதநேய மக்கள் கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கே புதூர், ஒத்தக்கடை உட்பட 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது கவுஸ் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் சீனிஅகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சையது ராஜா, காஜா மைதீன், ஊடக அணி மாவட்ட செயலாளர் தாகாமைதீன், தெற்கு மாவட்ட ச் செயலாளர் மகபூப் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கலாச்சார மையம் பணிகளை மேயர் ஆய்வு.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கலாச்சார மையம் மற்றும் தமுக்கம் மைதானம் எதிரில் வாகன காப்பகத்தில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் ஆகிய பணிகளை,மேயர்வ.இந்திராணி, ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன்ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.மதுரை மாநகரில் அமைந்துள்ள தமுக்கம் மைதானம் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தென் மாவட்டங்களை இணைக்கும் மையமாக திகழ்கின்றது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கலையரங்கத்தினை ரூ.47.72 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து, கலாச்சார மையமாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டு கீழ் தளத்தில் 240 நான்கு சக்கர வாகனங்களும், 215 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், மேலும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக பொருட்காட்சி நிகழ்ச்சிகள் சுமார் 3500 நபர்கள் பங்கு பெறும் வகையில் நவீன வசதிகளுடன் அரங்கமும், சுமார் 800 நபர்கள் ஒரே நேரத்தில்அமர்ந்து உணவருந்தும் வகையில் உணவகமும் மற்றும் இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையில் இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.மேலும், தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள வாகன காப்பகத்தை தற்போது சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டு வரும் பணிகளை மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இக்கட்டிடத்தின் தரை தளத்தில் பொது வாசிப்புஅறைகள், புத்தக அலமாரிகள், சிறுவர்களுக்கென தனி பகுதி, முதல் தளத்தில் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த ஆய்வில், நகரப்பொறியாளர் (பொ) அரசு,அரசு, உதவி செயற்பொறியாளர்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்ஆரோக்கிய சேவியர், சுகாதார அலுவலர்வீரன், மாமன்ற உறுப்பினர் வே.முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் ஆட்சியர் எச்சரிக்கை.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறாக ஆட்டோக்கள், 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. வேலூர் சரக டிஐஜி சென்ற மாதம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து எச்சரித்தார்.ஆனால் சில நாட்களாக சில ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில்தாறுமாறாக சென்று கொண்டுதான் உள்ளன.இந்நிலையில் நேற்று 18-ம் தேதி வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடியாக பழைய பஸ் நிலையம் சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 சக்கர வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
உடன் மேயர் சுஜாதா, மாநகராட்சிஆணையர் அசோக்குமார், துணை மேயர் சுனில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கன்னியப்பன் மற்றும் அலுவலர் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ரயில்பாதையில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து இருப்பதாக காட்பாடி ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் முரளி மனோகர், இறந்த வாலிபரின் பிரேதத்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த வாலிபர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஜனை கோயில்தெருவில் வசித்த கார்க்கி என்பவரின் மகன் அரசு(45) என்று தெரியவந்தது. இவர் சிறியளவில் இசை கச்சேரி நடத்திவந்தார்.நேற்று காலை ரயில்வே பாதையில் சென்றபோது சென்னையிலிருந்து காட்பாடி சென்ற ரயில் மோதி பலியானது தெரியவந்தது.
இறந்த அரசுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
You must be logged in to post a comment.