வேலூர் மாவட்டம் திருவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரெட் ரெட் கிராஸ் தினத்தினை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சார்பில் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் நான்காயிரம் ஊசியிலை ஊசிகளை நிகழ்ச்சிக்கு கிளாஸ் அவைத்தலைவர் சேனா ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் பொருளாளர் பழனி வரவேற்றார் துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் ராணி இந்த கமலாவிடம் நிர்மலாவிடம் ஊசிகளைஇதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் மருந்தாளர் சாமுண்டீஸ்வரி பழைய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Category:
செய்திகள்
வேலூர் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழா மத்திய அமைச்சர், ஆளுநர் பங்கேற்பு.
by mohan
written by mohan
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவில் நாராயணி பீடத்தின் 30 -ம் ஆண்டு விழா முன்னிட்டு ஸ்ரீமங்கல நாராயணியாகம், நாராயணி பீடத்தின் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.நேற்று 8-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நாராயணி பீடத்தில் நாராயணி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.பகலில் நடந்த விழாவில் சக்தி அம்மா பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக தங்க கோவில் இயக்குநர் சுரேஷ்பாபு, மேலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடு வேலூர் எஸ்.பி.தலைமையில் செய்யப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி பஞ்சாயத்சை; சார்ந்தது சமத்துவபுரம்.இப்பகுதியிலுள்ள நரிக்குறவ காலணியில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஊராட்சி சார்பில் ஒரேயொரு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.அக்குழாயிலும் கடந்த ஒரு மாதமாக குடிநீh வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.இது குறித்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவ மக்கள் சமத்துவபுரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவமறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கறிக்கோழி வளர்ப்போர் விவசாய சங்கம் சார்பில் நடந்து வரும்.காலவரையற்ற தொடர் போராட்டம் காரணமாக கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளதாக வாடிப்பட்டி அருகே மாநில தலைவர் பேட்டிமதுரை மாவட்டம் சோழவந்தான்தமிழகம் முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்கப் பண்ணைகள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டதுஉள்ளதுஇவர்களுக்கு தமிழகத்தின் நாமக்கல் ஈரோடு கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து கோழி குஞ்சு உருவாக்கும் நிறுவனத்தின் மூலம் கோழிக்குஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறதுஅவ்வாறு இறக்கும் கோழி குஞ்சுகளுக்கு ஒரு கோழிக்குஞ்சுக்கு ரூபாய் ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை தற்போது வரை தரப்பட்டு வருகிறதுசமீபத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு காரணமாக தமிழகத்தில் உள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்கத்தினர் ஒரு கோழிக்குஞ்சுக்கு வளர்த்து தருவதற்கு ரூபாய் 12 முதல் 15 ரூபாய் வரை தர வேண்டும் என்றும் அதுவரை கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் கூறி கடந்த 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்இதுகுறித்து கோரிக்கை மனுவினை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து கொடுத்துள்ளனர் மேலும்.தமிழக அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார்650க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன இந்தப் பண்ணைகளில் உரிமையாளர்கள் சிலர் கடந்த ஐந்தாம் தேதி வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்திருந்தனர்இதற்கிடையில் கறி கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யும் நிறுவனத்தை சேர்ந்த சிலர் கறிக்கோழி வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் ரகசிய உடன்பாடு செய்து ரகசியமாக கோழிக்குஞ்சுகளை இறக்கி விட்டு சென்று வந்துள்ளது தெரிந்து மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்க நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நேற்று இரவு 12 மணி அளவில் கறி கோழிக் குஞ்சுகளை இறக்க வந்த வேனை முற்றுகையிட்டு திரும்பிப் போகச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர்இதனால் இருதரப்பினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது முடிவில் கறி கோழிக்குஞ்சுகளை ஏற்றிவந்த நிறுவன டிரைவர்கள் மேலாளர்கள் வேனை திருப்பி கொண்டு சென்று விட்டனர்இது குறித்து கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்க மாநில தலைவர் கூறும்போதுதமிழகம் முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு விவசாய பண்ணைகள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளது மதுரை மாவட்டத்தில் மட்டும் 650 பண்ணைகள் உள்ளது கடந்த சில தினங்களாக விலைவாசி உயர்வால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது ஆகையால் இதுவரை ரூபாய் ஐந்து முதல் ஆறு ரூபாய் கொடுத்து வந்த விலையை 12 முதல் 15 ரூபாய் தரவேண்டும் என்று கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யும் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லைஎங்களின் கோரிக்கை நியாயமானது ஆறு ரூபாய்க்கு ஒரு கோழி குஞ்சு வாங்கி அதை 40 நாள் பராமரிப்பதற்கு 7 முதல் 8 ரூபாய் வரை செலவு ஆகிறது ஆகையால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது ஆகையால் கறி கோழி குஞ்சு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு குஞ்சுக்கு 12 முதல் 15 ரூபாய் வரை தரவேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்தோம் ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லைஇதனால் கடந்த 4ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றோம் மேலும் இதற்கு பின்பும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் 9.5 2022 முதல் எங்களின் பண்ணையை பூட்டி சாவியை நிறுவனத்திடம் ஒப்படைக்க இருக்கிறோம்இதற்கிடையில் எங்கள் பண்ணையை சேர்ந்த சிலரிடம் ரகசிய உடன்பாடு செய்து கோழிக்குஞ்சுகளை இறக்க வந்த வேனை மறித்து திருப்பி அனுப்பி இருக்கிறோம்மேலும் இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்து இருக்கிறோம் ஆகையால் அரசு எங்களை அழைத்து பேசி இதற்கு ஒரு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கூறினார்மேலும் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருவதால் அடுத்து வரும் காலங்களில் கறிக்கோழி விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் ஆகையால் இதனை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருக்கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயிலில் நேற்று இரவு சுற்றுச்சுவர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கே இருந்த உண்டியல் மற்றும் பீரோ ஆகியவற்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் உண்டியலில் இருந்த ரூபாய் 10 ஆயிரம் வரையிலான பணம், மற்றும் பீரோவில் இருந்த திருக்கோவில் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக மேலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல்துறையினர் கொள்ளை தொடர்பாக தடங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுதொடர்பாக திருக்கோயில் நிர்வாக டிரஸ்டி முருகன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரைக்கு வந்த சோதனை! மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 6 மாதமாக அகற்றப்படாத கழிவுகள் பா.ஜ.க மாவட்ட தலைவர் ஆய்வு.
by mohan
written by mohan
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பல மாதமாக கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதை மதுரை மாவட்ட பா.ஜ.க’வினர் நேரில் சென்று பார்வையிட்டு வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அதன் போது,மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும்தான். ‘மதுரை மல்லியின் மணம் மதுரையில் மட்டும் மணக்கவில்லை, உலக அளவில் மணம் வீசிக்கொண்டுள்ளது. சங்க காலம் முதல் உலக பிரசித்தி பெற்ற மதுரையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ‘பூ மார்கெட்’ நிலைமை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது .6 மாதமாக அகற்றப்படாத கழிவுகள் :மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டின் கழிவுகள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக அகற்றப்படாமல் ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளது . அதனால் மிக மோசமான சுகாதார கேடு அமைய காரணமாய் இருக்கிறது. மருத்துவ ரீதியாக துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை மூலமாய் அங்கே தினமும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய் பரவ அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. அது போக கழிவுகள் மிகுதியாக உள்ள இடத்தில் பாம்பு தொல்லை இருப்பதால் உயிர் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.கட்டணம் செலுத்தியும் நடவடிக்கை இல்லை:கழிவுகளை அகற்ற வியாபாரிகள் மாதம் ரூபாய் 2 லட்சம் வரை கட்டணம் செலுத்தியும், பலமுறை புகார் அளித்தும் மதுரை மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சர்யப்படவைக்கிறது .போக்குவரத்து நெரிசல்:பூ மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் அனைவரும் வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். அதனால் மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் மிக அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சுகாதாரமற்ற கழிப்பிட வசதி:மேலும், பூ மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து சென்றாலும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இருக்கும் கழிவறைகளும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.மதுரை சுகாதார ஆய்வாளர்கள் வீடு தோறும் ஆய்வு செய்து சுகாதார முறைகேடு என்று கூறி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பூ மார்க்கெட்டினை முறையாக பராமரிக்காமல் இருப்பதற்கு யார் அபராதம் விதிக்கப்போவது?இவ்வாறு, மதுரை மாநகர் மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர்.சரவணன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடர்ந்து ஒரே பகுதியில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் செல்போன் செயின் பறிப்பு.
by mohan
written by mohan
மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த 3 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை அருள் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் 30. இவர் பைபாஸ் ரோடு கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.அப் போது ஒரே பைக்கில் வந்த 3 ஆசாமிகள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் ஒன்று செல்போன், பணம் ரூபாய்5 ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜசேகர் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பைக் ஆசாமிகளை மூவரையும் தேடி வருகின்றனர்.இதே பகுதியில் இதேபோன்று மற்றொரு சம்பவத்தில்பைபாஸ் ரோட்டில்சிறுவனிடம் கத்திமுனையில் செல்பறிப்புமதுரை பொன்மேனி 2வது தெரு சேர்ந்தவர் செண்பகமூர்த்தி மகன் கோபிநாத் 16.இவர் பைபாஸ் ரோட்டில் சென்ற போது இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூபாய் 5ஆயிரம் மதிப்புள்ள செல்போனை சிறுவனிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோபிநாத் எஸ் எஸ் காலனி போலீசார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த ஆசாமிகளை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜெய்ஹிந்த்புரத்தில்
தமிழ்நாடு அரசு பள்ளி தலைமையாசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
by mohan
written by mohan
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு நியமனம் செய்தல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள அருணாச்சலம் பள்ளியில் தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில தலைவர்ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் மாநிலச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார் மாநில பொருளாளர் ராஜன் வரவேற்புரை கூறினார் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் நாகலிங்கம் மற்றும் மாநில அமைப்புச் செயலர் சென்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்இதில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர் தென் மண்டல அமைப்புச் செயலாளராக நிலையூர் பள்ளி தலைமையாசிரியர் விநாயகமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார் மேலும் கூட்டத்தில்1, சிபிஎஸ் கொண்டுவருவதை கைவிடக் கோரியும் ஜிபிஎப் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும்2,புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை அதை உடனடியாக வழங்க கூறுதலும்3,அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் கம்ப்யூட்டர் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோறுதல்4.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே மாவட்ட கல்வி அலுவலர் பதவி வழங்கிட கோறுதல்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்த இரு சக்கர வாகனங்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவற்றை அரசுடமையாக்கப்பட்டு அவை ஏலம் விடுவது வழக்கம். தற்போது அரசுடமையாக்கப்பட்ட 74 இருசக்கர வாகனங்களை ஏலம் விட காவல்துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலையம் அருகில் உள்ள வெண்ணிமலை முருகன் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் 13.05.2022 அன்று காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 13.05.2022 அன்று காலை 9.00 மணியளவில் ரூ.2000 செலுத்தி காப்பு தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்ளவும். காப்பு தொகை செலுத்தியவர்கள் வாகனத்தின் ஏலம் எடுக்கவில்லை எனில் தொகை செலுத்தியதற்கான காப்பு தொகை திருப்பி ஒப்படைக்கப்படும். ஏலம் விடப்படும் 74 வாகனங்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையம் முன்பு உள்ள வெண்ணி மலை முருகன் கோவில் முன்புள்ள மைதானத்தில் உள்ளது. ஏலதாரர்கள் வாகனங்களை பார்வையிட்டு வாகன ஏலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கான ஏலத்தொகை அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை, வரியுடன் சேர்த்து ரொக்கம்மாக அன்றைய தினமே செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனங்கள் தொகையை செலுத்திய உடன் ஏலதாரர்கள் வசம் ஒப்படைக்கப்படும். மேலும் ஏலம் எடுக்க வரும் ஏலதாரர்கள் கொரானா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினம் சாலையில் கார் பைக் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் உள்பட 4 பேர் பலியாகினர். இக்கோர விபத்தில் மண்டபம் யாதவர் தெரு வாசுகி நாதன் மகன் ஜெகன் ( சென்ட்ரிங் தொழிலாளி), இவரது அக்கா மகன் ஜெகதீஸ்வரன், மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கார் மோதி காயமடைந்த ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடையம் வாசுகி மலை அருகே அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் மினி கலாச்சார விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசி தலைமை விருந்தினர்களை கவுரவித்தார். கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், துணைத்தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை தூண்டும் வகையில் உரை நிகழ்த்தினர். அதில் மாணவர்கள் நாளைய இந்தியாவின் தூண்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.பின்னர் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் ஆங்கில துறை ஆசிரியை J.P. லோஷனா நன்றி கூறினார். இதனை தொடர்ந்து விழா நாட்டுப் பண்ணுடன் முடிவுற்றது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மூன்று நாட்களுக்கு மேலாக திறந்து கிடக்கும் தெரு விளக்கு மீட்டர் பொருத்தப்பட்ட டைமர் சுவிட்ச் பாக்ஸ் விபரீதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுப்பார்களா.
by mohan
written by mohan
மூன்று நாட்களுக்கு மேலாக திறந்து கிடக்கும் தெரு விளக்கு மீட்டர் பொருத்தப்பட்ட டைமர் சுவிட்ச் பாக்ஸ் விபரீதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71வது வார்டு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு கணபதி நகர் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மீட்டர்உடன் டைமர் அமைத்துள்ள தெரு விளக்கு தானாக அணைந்து எரியும் டைமர் சுவிட்ச் பாக்ஸ் ஒன்று உள்ளது இது கடந்த 3 நாட்களுக்கு மேலாக திறந்தே கிடக்கிறது இப்பகுதியில் குழந்தைகள் அதிக அளவில் விளையாடுகின்றன விளையாட்டாக சென்று குழந்தைகள் யாரேனும் அதில் கை வைத்து விட்டு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறது என ஐயம் ஏற்படுகிறது மேலும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடிக்கடி மழை பெய்வதால் திறந்து கிடக்கும் பெட்டியில் தண்ணீர் புகுந்து மின்சாரம் பாய்ந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என குற்றச்சாட்டும் வைக்கின்றன மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றன மேலும் பல இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் பல இடங்களில் எரியவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் விபரீதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி மின் வாரிய அதிகாரிகள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சசிகலா ஆன்மீக சுற்றுபயணமாக திருச்செந்தூர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் .
by mohan
written by mohan
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி வி கே சசிகலா ஆன்மீக சுற்றுபயணமாக திருச்செந்தூர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த சசிகலாவை அதிமுக கட்சி கொடியுடன் வரவேற்றனர்.மதுரை விமான நிலையம் வந்த பிகே சசிகலாவிற்கு அதிமுக சார்பில் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பளித்தனர்கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின் விமான நிலையம் சென்று அடைந்தார்.அதிமுக கொடியுடன் காரில் சசிகலா தொடர்ந்து பயணம் செய்கிறார் என்பது குறிப்படதக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
,PF I பற்றிய கருத்தை உளவு துறையில் 50 ஆண்டுகள் பணியில் இருந்த ஆளுநரின் கருத்தை அரசியாலக்க கூடாது.பாஜக தலைவர் அண்ணாமலை.
by mohan
written by mohan
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நேரடியாக திமுகவுக்கு வாக்களித்தனர்.பழைய பென்சன் திட்டத்தை பாஜக ஆரம்பத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லாதது என கூறினோம்.நாங்கள் சொன்னதை தான் தற்போது நிதியமைச்சர் சட்ட பேரவையில் சொல்லியுள்ளார்.இன்று திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன மற்றொரு பொய்யை பொய் என்று சட்டப்பேரவையில் ஒத்துக்கொண்டுள்ளனர்.கேரளா மாநிலம் கோழிக்கோடு, ஆழப்புழா பாலக்காடு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில்நடந்த 66 கொலைகள் நடந்துள்ளது. கடந்த மாதம் நடந்த 2 கொலைகளில் பிஎப்ஐ நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளது.தமிழக கவர்னர் பேசியது அவரின் உளவுத்துறை அறிவில் பேசி உள்ளார்.கடந்த 50 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஒருவர் அவ்வாறு பேசி உள்ளார்.இதனை அரசியல் ஆக்க கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் சொல்லியுள்ளார்.கோல் இந்தியாவின் 2.2டன் நிலக்கரி உள்ளது. நிலக்கரி தமிழகத்திற்கு கூடுதல் தேவை உள்ளது. அதை சமாளிக்க முடியவில்லை என கூறுகின்றனர்.தமிழக அரசு கோல் இந்தியா நிலக்கரி மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.கோல் இந்தியாவை பொறுத்தவரை குறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் 3 யூனிட் பராமரிப்பில் உற்பத்தி செய்தால் 1100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.எனவே கோல் இந்தியாவில் பற்றாக்குறை எனச்சொல்வது மற்றும் ஒரு பொய்.தற்போது மின்தடையை சீராக்க யூபிஎஸ் தேவை. இனி தமிழ்நாட்டுக்கு ஜெனரெட்டேர். வரும் காலத்தில் ஒரு ஒரு வீட்டிலும் நாமே மின்சாரத்தை தயார் செய்யும் நிலை உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் செயல்படும் டயாலிசிஸ் பிரிவில் ரெண்டு மிஷின்களை கொண்டு 14 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.கடந்த 2019ல் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு துவக்கப்பட்டது. அப்போதிருந்து நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடுமையான கொரோனா பாதிப்பு இருந்த காலகட்டத்தில் கூட இங்கு இந்த டயாலிசிஸ் சிகிச்சை தடையின்றி நடைபெற்றது தான் சிறப்பம்சம். இங்கு பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் முறையான பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால் அவர்களால் இந்த சிகிச்சை அளிப்பதிலும் கவனம் செலுத்த இயலாது .காரணம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பது தான் . அதனால் இங்கு பயிற்சி பெற்ற ஒரு டெக்னிசியன் மற்றும் இரண்டு மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள்தான் தொடர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியும் சராசரியாக மாதத்திற்கு எட்டு முறை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நோயாளியின் சிகிச்சைக்கு 4 மணி நேரம் தேவைப்படும். அதன்பின் அடுத்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முன்பு அந்த மிஷினை சுத்தப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் இரண்டு பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி செய்தால் நாளொன்றுக்கு நான்கு நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். கூடுதலாக ஓரிரு நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தால் பணியாளர்கள் பாடு திண்டாட்டம் தான். தொடர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை தவிர்க்க முடியாது என்பதால் இவர்கள் கூடுதலாக பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் இவர்களுக்கு மன சோர்வு ஏற்பட்டால் அது நோயாளிகளை தான் பாதிக்கும். இப்படி வேலை பார்க்கும் இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தான் சிகிச்சை பெற முடியும். அப்படி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக அரசு தரும் நிதியைக் கொண்டு தான் சிகிச்சைக்காக தேவைப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்களை வாங்க வேண்டும் . மேலும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் இந்த நிதியிலிருந்து தான் சம்பளம் வழங்கப்படுகிறது. நீரழிவு நோயாளிகள் நேரடியாக இங்கு வந்து சிகிச்சை பெற முடியாது. முதல் கட்ட சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களுடன் இந்த சிகிச்சையை ஏற்றுக்கொண்ட பிறகு அந்த நோயாளிகள் மற்ற அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 5 மெஷின்கள் உள்ளன. அதில் ஒன்று வேறு நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மற்ற நான்கும் நெகட்டிவ் மிஷின்கள் இது வேறு நோய் தொற்று இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது . இந்த அடிப்படையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் 2 மிஷின்கள் திருமங்கலத்தில் 2 மேலூரில் 2 மெஷின்கள் உள்ளன . ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் மேலூர்அரசு மருத்துவமனையில் நான்கு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் 27 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 14 நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகக்குறைவாக நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளுக்கும் ரெண்டு மிஷின் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் இரண்டு மிஷின் என்பது என்ன நியாயம். ஆகவே நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு மருத்துவத்துறை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக இரண்டு டயாலிசிஸ் மிஷின்களை வழங்க வேண்டும். அந்த மிஷின்களை நிறுவுவதற்கு தேவையான இடவசதி அந்தப் பிரிவில் உள்ளது. மேலும் இந்த மருத்துவமனைக்கு கூடுதலாக இரண்டு மிஷின்கள் வழங்கினால் அதற்காக இரண்டு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கிடைப்பதால் இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். அதனால் அவர்கள் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அக்கறையோடு சிகிச்சை அளிக்க முடியும் . மாவட்ட மருத்துவ நிர்வாகம் கருணையுடன் இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.
செய்தியாளர்
வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் அருகே திருநகர் சொர்ணம் காலனியில் 10 ஆண்டுகள் வசித்து வரும் பொது மக்கள திருநகர் காவல் நிலையம் முற்றுகை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர் கரண்ட் பில் மற்றும் வீட்டு வரி ஆகியவை செலுத்தி வரும் நிலையில் கடந்த ஓராண்டாக பொதுப்பணித்துறையினர் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆக்கிரமிப்பு எனக்கூறி காலி செய்ய வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பொதுப்பணித்துறை சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது இதனை கண்டித்து பொதுமக்கள் திருநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.மேலும் தங்கள் வீட்டு வரி .கரண்ட் பில் குழாய் வரி செலுத்துவதாகவும், மேலும் தங்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றிருப்பதால் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.பொது மக்கள காவல நிலையத்தில் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பாக காணப்பட்டது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
15 வயது சிறுமி பாலியல் தொல்லையில் 5 மாத கர்ப்பம்: இரண்டு முதியவர் மீது அனைத்து மகளிர் காவல் வழக்குப் பதிவு. ஒருவர் கைது.
by mohan
written by mohan
மதுரை அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியோர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 15 வயது சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தில் சிறுமியின் வீட்டு அருகே உள்ள பாலமுருகன் (எ) முருகேசன் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சிறுமி குடியிருக்கும் வீட்டிற்கு பின்புறம் உள்ள ரமேஷ் என்பவர் இதனை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பாலமுருகனை கைது செய்து தலைமறைவாக இருக்கும் ரமேசை தேடி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பொது பாதையை மறைத்து இரும்பு கேட் அமைத்த விவகாரம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் விரகனூர் அருகே பாலாஜி நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் பொதுப் பாதையை மறைத்து இரும்பு கேட் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் கடந்து செல்வதில் சிரமம் இருந்தாக புகார் எழுந்தது இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அதிகாரி ராமர், ஊராட்சி மன்ற தலைவர் அடங்கிய குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைக்கப்பட்ட 10 அடி உயரம் கொண்ட இரும்பு கேட்டை அப்புறப்படுத்தினார், மேலும் இனிவரும் காலங்களில் இரும்பு கேட் அமைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என வீட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே கஞ்சா மற்றும் மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து அராஜகம் டிரைவரை தாக்க முயனறதால். பரபரப்பு .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி பகுதியில் அதிக அளவு இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.நேற்று இரவு.அரசு பேருந்தை டூவீலர் கொண்டு மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை.தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டிலை உடைத்து குத்த முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர் கூறியதாவதுகருப்பட்டி இரும்பாடி பகுதியில் அதிக அளவில் இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்றனர் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் செல்ல பயப்படுகின்றனர்இதனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் இந்த வழித்தடத்தில்.பணிபுரிய பயப்படுகின்றனர்கஞ்சா மற்றும்.மது போதையில் உள்ளவர்கள் அடிக்கடி ரோட்டின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாகவும் இதனால் உயிர் பயம் ஏற்படுவதாகும் கூறுகின்றனர்.இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லைஎனவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு காலை மாலை என இருவேளைகளிலும் நிரந்தரமாக காவல் பணியில் ஆட்களை நியமிக்க வேண்டும்மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்இளைஞர்களை நல்வழிப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011).
by mohan
written by mohan
வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று அகவை இருக்கும் பொழுது இவர் பெற்றோர்களுடன் இவர் கியூபெக் மாநிலத்துக்கு இடம் மாறினார். இவர் தன் 14 ஆம் அகவை வரை வீட்டிலேயே தன் தாயாரால் பயிற்றுவிக்கப்பட்டு பின்னர் மான்ட்ரியாலில் உள்ள கீழக கனடா கல்லூரியில் (Lower Canada College) சேர்ந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் படிப்பு 1943ல் சற்று தடைபட்டு பின்னர் இரண்டாம் உலகப்போரின் பொழுது அரசக் கனடிய கடற்படையில் (ராயல் கனடிய நேவியில்) சேர்ந்தார். பின்னர் இவர் பிரித்தானிய அரச கடற்படைக்கு மாற்றப்பட்டு அதில் வானூர்தி தாங்கிக் கப்பலில் சுபிட்ஃவையர் (Spitfire) என்னும் வானூர்தி ஓட்டியாக இருந்தார். இவர் 1947ல் அறிவியலில் இளநிலைப் பட்டமும், 1948ல் அறிவியல் முதுநிலைப் பட்டமும், 1950ல் மெக்கில் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பாயில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஓராண்டு கனடாவின் கதிரியக்க ஆய்வகத்தில் (Radiation Lab) பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் ராயல் மிலிட்டரிக் கல்லூரியில் இரண்டாண்டு இயற்பியல் படிப்பித்தார். 1953ல் பாயில் பெல் ஆய்வகத்தில் (Bell Labs) சேர்ந்து அங்கு 1962ல் டான் நெல்சன் (Don Nelson) என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து இயங்கும் சிவப்புக்கல் (ரூபி) ஒளிமிகைப்பியைக் கண்டுபிடித்தார். குறைக்கடத்தி ஒளிமிகைப்பி பற்றிய முதல் காப்புரிமத்தில் இவர் பெயர் சுட்டப்பட்டிருந்தார். பின்னர் பெல் ஆய்வகத்தின் கீழியங்கும் பெல்க்காம் (Bellcomm) என்னும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த விண்வெளி புதுப்புலத் தேடுதல் அறிவியல் ஆய்வுகள் துறையின் (Space Science and Exploratory Studies) இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்வழி அப்போலோ விண்வெளித் திட்டத்துக்கு உதவிகள் செய்தார், குறிப்பாக நிலாவில் இறங்குதளங்கள் தேர்வில் உதவினார். பின்னர் 1964ல் பெல் ஆய்வகத்துக்குத் திரும்பி வந்து நுண்மின் தொகுசுற்று ஆய்வு வளர்ச்சியில் பங்கு கொண்டார்.
1969ல் பாயிலும் சியார்ச்சு இ.சுமித்தும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973ல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974ல் ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும் (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006ல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள். பாயில் 1975 முதல் அவருடைய ஓய்வு பெற்ற ஆண்டாகிய 1979 வரை பெல் ஆய்வகத்தின் ஆய்வுக்கான செயல்வடிப்பு இயக்குநராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் கனடாவில் நோவா இசுக்கோசியாவில் உள்ள வால்லசு (Wallace, Nova Scotia) என்னும் இடத்தை உறைவிடமாகக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து உதவி ஒரு கலைக் காட்சியகத்தைத் துவக்கினார். நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் மே 7, 2011ல் தனது 86வது அகவையில், கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.