இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு ஜூலை 18 இரவு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தியதில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் மேலும் அவதி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துரித ஆய்வு செய்து, நோய் எதிர்ப்பு மருந்து தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பி.கே.ஜவகர்லால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜகான் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
Category:
மாவட்ட செய்திகள்
தலைநகர் டில்லியில் சமீபத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக கீழக்கரை, வாலிநோக்கம் பகுதிகளில் தலா ஒருவர், ராமநாதபுரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள், நான்கு பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா என இன்று (20/07/2019( காலை விசாரித்தனர்.
மேலும், உள்துறை அமைச்சகம் தடை செய்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தோர் ஊடுருவி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரின் பின்புலம், பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. தலா 5 பேர் வீதம் 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை நிறைவு செய்தனர். இந்த நால்வரது பெயரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தேசவிரோத வழக்குகள் பதிவாகி உள்ளது எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் ராமநாதபுரம் அண்ணா நகர், சந்தன மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட திமுக., தகவல் தொழில் நுட்ப
பிரிவு துணை அமைப்பாளர் கே.ஜே.பிரவீன் தலைமையில் திமுக., இளைஞரணியினர் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களின் வழங்கினர். காவிரி பாசன பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரும் பேரழிவிற்கு எதிரான பேரியக்க போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனது மகனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக பொருளாளர் துரைமுருகன்
by mohan
written by mohan
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் (திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன்) வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததையெடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வருமான வரித்துறையினர் பணத்தை கைப்ற்றிபனர்.நிறுத்தப்பட்ட தேர்தல் மீண்டும் வரும் 5ம் தேதி நடைபெறுகின்றது. அதிமுக சார்பில் ஏசி, சண்முகமும் திமுக சார்பில் பணபட்டுவாடா புகழ் கதிர் ஆனந்தும் நேரடியாக போட்டியிடுகின்றனர்,தேர்தல் பணி துவக்கம் துரைமுருகனே நேரடியாக தனது மகனுக்காக (தொகுதி மக்களுக்கு அல்ல ) களத்தில் குதித்து உள்ளார், யார் யாரை எப்படி வளைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பம்பரமாக சுழன்று வரும் துரைமுருகன் தனது தேர்தல் நடிப்பை நடிக்க துவங்கி விட்டார்.ஆம்பூர் பிரச்சாரத்தில் துரைமுருகன் பேசும் போது வருமான வரித்துறையினர் வந்து Uணத்தை வைத்தார்கள் எடுத்து சென்றார்கள் எங்களை ஒழிக்க சதி நடக்கிறது. எனது மகனை ( கதிர் ஆனந்த்) லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தார்கள் மகனின் வெற்றியை தடுக்கிறார்கள் இந்த மாவட்டத்தில் எல்லாவற்றையும் செய்து விட்டேன் எனது மகன் வெற்றி பெற்றால் அவரும் செய்வார் எனது உயிர் மூச்சி இருக்கும் பாடுuடுவேன் என்று அழுது கண்ணீர் விட்டு கதறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 15 ஷேர் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல்
by mohan
written by mohan
உசிலம்பட்டியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 15 ஷேர் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 1 மாதங்களாக ஷேர் ஆட்டோக்களினால் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சென்ற நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 15ஷேர் ஆட்டோக்களை உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி – மதுரை வைகை நதியின் புனிதத்தை போற்றி பாதுகாக்க அழைப்பு விடுத்து அம்மன் தேர் ரத வாகனத்தில் துறவியர் சங்கத்தினர் வீதி உலா .
by mohan
written by mohan
மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் வருகின்ற 24ம் தேதி அகில இந்திய துறவியர் சங்கம் சார்பில் வைகைப் பெருவிழா 12 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உள்ள வைகை நதியின் நிலையை மாற்றி வைகை நதியின் புனிதத்தை போற்றி பாதுகாக்க கூறி இந்த பெருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்து அம்மன் தேர் ரத வாகனம் மதுரை மாவட்டத்தில் ரத யாத்திரையாக வலம் வருகின்றது. இந்நிலையில்
உசிலம்பட்டிக்கு வந்த இந்த ரதயாத்திரை வானகம் மற்றும் அதில் உள்ள அம்மன் சாமியை ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்பு முக்கிய வீதிகளின் வழியே உலாவாக சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்பு பேரணி நடத்தினர் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பஸ்நிலையம் எம்.ஜி.ரோடு ஸ்தூபிமைதானம் காவல்நிலையம் வரை மழைநீர் சேமிப்பு குளம் குட்டைகளை பாதுகாத்தல் ஏரிகளை பராமரித்தல் வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்தல்
உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்முன்னதாக பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி கொடியசைத்து துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர் செண்பகராஜா தலைமை வகித்தார் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கினைப்பாளர்கள் ஆரிமுத்து செல்வராஜ் ஆகியார் முன்னிலை வகித்து மாணவர்களை வழி நடத்தி சென்றனர் கல்லூரி துனை முதல்வர் ரவி நன்றி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புனித ஜெயின் ஜோசப் பள்ளி வளாகத்தில் பள்ள மாணவ,மாணவிக ளுக்கான விழிப்புணர்வுகூட்டம் நடத்தப்பட்டது,தேனி மாவட்ட குடற்பூச்சி ஒழிப்பு வல்லுனர் தேவேந்திரன் தலைமையில், கொசு ஒழிப்பது பற்றியும் அதை வளரவிடாமல்தடுப்பது பற்றியும் ஆலோசணைகள் வழங்கப்பட்டன.கோம்பை வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் வசந்தி பரிபூரணம், தலைமையில் மருத்துவ உதவியாளர் முருகேசன் மருத்துவசெவிலியர்களும், பேரூராட்சி சார்பாக சுகாதாரஆய்வாளர், கருணாகரன்.கணேr சன், மேற்பார்வையாளர், ராஜாமற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர், காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் பாதுகாப்பு
பணியை மேற்கொண்டார்,
சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியைச் சேர்ந்தவர் இன்னாசி முத்து. இவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் பாக்கியம், காட்வின், ஜெர்சன், டென்னிஸ்டன், பரக்கத் , ஐய்டன், பகுருதீன் உள்பட எட்டு பேர், நேற்று முன் தினம் (17.7.19) கடலுக்குச் சென்றனர். மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது நடுக்கடலில் சூறைகாற்று வீசியது. இதனால் தனுஷ்கோடி ஏழாம் மணல் திட்டு அருகே தண்ணீரில் படகு மூழ்கியதால் 8 மீனவரும் கடலில் தத்தளித்தனர்.
அந்த வழியாக ரோந்து பணி மேற்கொண்டிருந்த இலங்கை
கடற்படையினர் மீனவர்களை, படகுடன் மீட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்கு பதிந்தனர். மீனவர்களை மீட்க சென்ற, மண்டபம் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட், மீனவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை கடற்படையினரிடம் கோரினர். இது குளித்து இந்திய அரசு சார்பில், கொழும்பு கடற்படை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் விரைவாக அனுப்பபட்டதையடுத்து இலங்கை கடற்படையினர் மீட்ட பாம்பன் மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர் 8 பேரும் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவர்களை மீட்ட இந்திய கடலோரக் காவல் படை வீரர்களை க மாண்டிங் அதிகாரி வெங்கடேஷன் பாராட்டினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை மஞ்சகரிச்சான் கண்மாய்க்குள் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு ஜூலை 14 ஆம் தேதி பிணமாக கிடந்தார். அந்த உடலை, தொண்டி போலீசார் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், முகிழ்தகம் கருப்பையா மகன் ஆட்டோ டிரைவர் அஜித்குமார் , 22 என தெரிந்தது. இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அஜித்குமார் உடலை வைக்கப்பட்டது. கொலைளிகளை கைது செய்யக் கோரி அஜித்குமார்
உடலை வாங்க மறுத்து அவரது உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . போலீசாரின் சமரசத்தையடுத்து கலைந்து சென்றனர். திருவாடானை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். போலீசாரின் பல்வேறு கோண விசாரணையில் , தலைமறைவாக இருந்த நய்னா முகமது 22, திருத்துறைபூண்டி ராஜகுரு 21 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து தங்க செயின் கைப்பற்றினர். கொலை தொடர்பாக குற்றவாளிகள் கூறுகையில் நகைக்காக கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் இவர்கள் தொடர்புடையவர்களாக எனவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துணை முதல்வர்ஓபிஎஸ்ஸின், விசுவாசிகள் அமமுகட்சிக்குமாறி வருகிறார்கள்,சின்னமனூர் ஒன்றியத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்அவர்கள்தர்மயுத்தம்நடத்திய போது, தமிழகத்திலே முதல் ஆதரவு குரல் கொடுத்தது.சின்னமனூர் ஒன்றிய தொண்டர்கள் தான்,தற்பொழுது அதிமுகவிலிருந்து விலகி, டிடிவிதலைமையில், ஓடைப்பட்டி சத்தியமூர்த்தி உட்பட ஏராளமான தொண்டர்கள் அமமுவில் தங்களைஇணைத்துக் கொண்டனர்,
சாதிக் பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகர் காமராஜபுரம் வினோத்குமார் 25 சோலையழகுபுரத்தை சேர்ந்த ராம்பாபு 31 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி“குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், எப்எஸ் ஏ – 2 வேதாளைமீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2018 ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு செ.ஹபீப், ந.களஞ்சியம்,
செ.காளிமுத்து, மு. முகமது அயூப்கான், மு.முஜிபுர் ரஹ்மான், வீ.நாகரத்தினம், செ.சீனி அகமது கபீர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக முடிவு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தங்களது விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்ட மு.செல்லச்சாமி (காங்கிரஸ் மூத்த உறுப்பினர்) ச.கோவிந்தன் (வேதாளை ஊராட்சி திமுக கிளை செயலாளர்) சீ.முகமது இப்ராஹிம் ஷா (அதிமுக, முன்னாள் மேல மைப்பு பிரதிநிதி), சமூக ஆர்வலர் சு.முருகேசன் (நடு மனைக்காடு கிளை திமுக செயலாளர்) ஆகியோர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். போட்டியின்றி தேர்வு செய்தாக அறிவிக்கப்பட்ட 7 பேருடன், வழக்கு தொடர்ந்த பேரையும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2,229 உறுப்பினர்களில் இறப்பு உள்பட இதர காரணங்களுக்காக 316 உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். எஞ்சிய 1,913 உறுப்பினர்கள் இன்று நடந்த தேர்தலில் சுதந்திரமாக வாக்கு அளித்தனர். இராமநாதபுரம் கூட்டுறவு சார் பதிவாளர் கி.நா.பாலமுருகன் தேர்தல் அலுவலராகவும், . முத்துப்பேட்டை சேதுநகர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் அந்தோணி கிரிமினாலி, கடல் முதல்வர் மாரிச்சாமி, கடல் மேற்பார்வையாளர் ம.முருகன் ஆகியோர் தேர்தல் உதவியாளர்களாக பணியாற்றினர். மீனவர் அடையாள அட்டையை உறுப்பினர்கள், சான்று ஆவணமாக காண்பித்து வாக்களித்தனர். வாக்குப் பதிவு வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் நாளை (20.7.19) எண்ணப்படுகின்றன. தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 24/7/19ல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு நாளை (20.7.19) அறிவிக்கப்படுகிறது. மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக இரத்த தான கொடையாளர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வி அலுவலர், தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர்,
மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்,அரிமா டவுண் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜூனியர் ரெட்கிராஸ் JRC கவுன்சிலர்கள் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் சிறந்த முறையில் செய்திருந்தார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பேரிடர் மேலாண்மைச் செயலி (TN SMART APP) அறிமுக விழா
by mohan
written by mohan
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை உதவிக் குழுவும் இணைந்து பேரிடர் மேலாண்மைச் செயலி TN SMART APP அறிமுக விழா நடைபெற்றது.கலைப்புல முதன்மையர் முனைவர் ச. மகாதேவன் வரவேற்புரையாற்றினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு. அயூப்கான் அறிமுகவுரையாற்றினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் எஸ்.ஹெச். முஹம்மது அமீன் தலைமையுரையாற்றினார்.
பாளையங்கோட்டை வட்டாட்சியர் பி. பாலசுப்பிரமணியன் பேரிடர் மேலாண்மைச் செயலியை வெளியிட்டு அறிமுகவுரையாற்றும்போது…“TN SMART APP எனும் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியின் மூலம் புயல், மழை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த முன்னெச்சரிக்கை விவரங்கள், மழை அளவு, அவசர காலச் செய்திகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். வெள்ளம், புயல், மற்றும் பேரிடர் ஏற்படுகிற போது முன்கூட்டியே எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது? எனும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். இச்செயலியை கூகுள் பிளேஸ்டோர் மூலமாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் இச்செயலியில் பதிவுசெய்துகொண்டால் பேரிடர் மேலாண்மை உதவிக்குழுவின் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடியும்” என்று பேசினார்.
இந்நிகழ்வில் பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர் ஆர். பாபு, பாளையங்கோட்டை வருவாய் ஆய்வாளர் டி. ராஜ், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். ஜெ. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அ.சே. சேக் சிந்தா நன்றி கூறினார்.விழா முடிவில் இச்செயலி குறித்து மாணவர்களுக்குச் செயல் விளக்கம் தரப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“தமிழ் நம் பண்பாட்டின் அடையாளம்”, பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் துபாய் கலையாசிரியர் பேச்சு
by mohan
written by mohan
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த்துறையின் (அரசுதவி பெறாப் பாடப்பிரிவு) தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா கல்லூரி உரையரங்கில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் (அரசுதவிபெறாப் பாட வகுப்பு) தலைவர் சாதிக் அலி அனைவரையும் வரவேற்றார்.கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் எஸ்.ஹெச். முஹம்மது அமீன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். அரசுதவிபெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் அப்துல் காதர் வாழ்த்துரையாற்றினார். கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசேன் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கலைப்புல முதன்மையர் முனைவர் ச. மகாதேவன் நோக்கவுரையாற்றினார்.
துபாய் டிவொய்ட் பன்னாட்டுப் பள்ளியின் ஓவியர் மற்றும் கலை ஆசிரியர் ராஜகிருஷ்ணன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “கலை நாடும் மனம்” எனும் பொருளில் சிறப்புரையாற்றும்போது …“வழக்கமான சிந்தனைப் போக்கிலிருந்து நாம் நகர்கிறபோது தான் நம்மால் படைப்பாளியாக மாற முடியும். எனக்குப் பிடித்தமானவற்றை நான் செய்யத் தொடங்கினால் படைப்பு மனம் வெளிச்சமடையும்.பல நேரங்களில் இயற்கையின் ஓர் அங்கம் நாம் என்பதை மறந்து விடுகிறோம். எதைச் செய்தாலும் முழுமையாக இரசித்து முழு ஈடுபாட்டுடன் செய்தால் அதுவும் கலைதான். அந்தந்தக் காலத்தின் புதுமையைக் கலைஞர்கள் உள்வாங்கிப் படைப்பாக மாற்றுகிறார்கள்.
டாவின்சி உலக புகழ்பெற்ற ஓவியர் மோனலிசா ஓவியம், அந்தக் காலகட்டத்தின் இரண்டரை ஆண்டுகள் வரைந்த படைப்பு. இன்றுள்ள தாமிரம் சார்ந்த ஐம்பொன் சிலைகள் 1000 ஆண்டுக்கால சோழர் காலத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.கேள்விகள் சார்ந்த புதுமைச் சிந்தனைகளை மையமிட்ட பன்னாட்டுக் கல்விமுறையில் கலை இன்று முதலிடம் பிடித்துள்ளது. தினமும் புதுப்புது விஷயங்களை அறிவதும் அதைப் படைப்பில் கொண்டு வருவதும் கலைதான்.
வாழ்வின் பல ஆங்கிலச் சொற்கள் கலந்ததாக நம் உரையாடல் மாறிவிட்டது. தமிழ்ச் சமூகத்திற்கு இது நல்லதல்ல. சினிமாவின் மொழிநடை நம் வாழ்வைப் பெரிதும் பாதிக்கிறது. நம் தாய்மொழியை நாம்தான் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.ஆங்கில மொழி அறிதல் திறன்தானே தவிர அது அறிவல்ல. நம் தமிழகத்தில் அருங்காட்சியத்தைவிடப் பழமையான பதிவுகள் உடைய இடம் அதிகம். நம் ஆதிச்சநல்லூர் குறித்து உலகம் பேசுகிறது. ஆனால் நாம் அது குறித்துப் பேசுகிறோமா? மாணவப் பருவத்தில் நிறைய படைப்பு குறித்து உரையாடலாம். புதுமையாகத் தமிழை உள்வாங்குங்கள். எல்லாக் காலகட்டத்திலும் புதுமையைச் செய்பவர்களே மிளிர்கிறார்கள்” என்று அவர் பேசினார்.நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்த்துறை (அரசுதவி பெறாப் பாட வகுப்பு) உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. அனுசுயா நன்றி கூறினார். இறுதியில் கலை குறித்து தமிழ் மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு ராஜகிருஷ்ணன் பதிலளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை செய்திருந்தது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தெற்கு வெளி வீதி அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள கிரைம் பிரான்ச் பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தத்தில் பழைய டயர்களை அடுக்கி வைத்து சாலையிலேயே பஞ்சர் பார்ப்பதும் லாரி மற்றும் கார் வேன்கள் பஸ்களை நிறுத்தி பழுது பார்ப்பது நடுரோட்டில் கிரீஸ் கண் வைத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் பஸ்ஸ்டாப்பில் பழைய டயர்களை அடுக்கி வைப்பதால் பஸ்ஸ்டாப்பில் அமர முடியாமல் வெயில் நேரங்களில் மழை நேரங்களிலும் வெளியிலேயே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்வதை தடுத்தல், அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்றுவதை தவிர்த்தல், அதிக சத்தத்துடன் ஆட்டோவில் ஸ்பீக்கர் பயன்படுத்துவதை தவிர்த்தல், சாலை விதிகளை மதித்தல், வன்முறையை தூண்டும் வகையில் ஆட்டோக்களில் வாசகங்கள் எழுதுவதை தவிர்த்தல், சாதியவெளிப்பாட்டின் அடிப்படையில் ஆட்டோக்களில் வர்ணம், மற்றும் Stickerஒட்டுவதை தவிர்த்தல், அதிக கட்டணம் வசூலிப்பதை கைவிடுதல், மது அருந்தி விட்டு ஆட்டோ ஒட்டுவதை கைவிடுதல், அடைமொழி பெயர்களை எடுத்தல் உள்ளிட்ட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். உடன் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதிச்சியம் போக்குவரத்து காவல்துறையினர் அப்போலோ மருத்துவமனை பகுதிகளில் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகள், முறையற்ற வாகன நிறுத்தங்கள் அனைத்தையும் அகற்றினர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் சிரமமின்றி சாலையில் பயணம் செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த 14.07.2019 ம் தேதி வாடிப்பட்டி நீரேத்தானை சேர்ந்த ராக்கையா மகன் பாண்டித்துரை தனது இரு சக்கர வாகனத்தில் அவரது அப்பாவுடன் மதுரை மாநகர் சிவகங்கை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தாா்.அப்போது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில் ராக்கையா சம்பவ இடத்திலேயே பலியானாா்.பாண்டித்துரை காயங்களுடன் உயிா்தப்பினாா்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் போலிசாா் காவல் நிலைய ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் வாகன விபத்தை ஏற்படுத்திய நபரை தேடியதில் மதுரை சிவகங்கை ரோடு சோதனைச்சாவடியில் உள்ள CCTV கேமிரா பதிவுகள் மற்றும் மேலூர் ரோடு சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் உள்ள CCTV கேமிரா பதிவுகளை பார்வையிட்டதில் விபத்தை ஏற்படுத்தியது காரைக்குடி முத்துமாணிக்கம், என தெரியவந்தது .போலிசாா் அவரை கைது செய்தனா்.CCTV கேமிராக்கள் மூலமே மேற்படி குற்றவாளியை கண்டுபிடிக்க முடிந்தது. காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் தனிப்படையினரை பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.