மதுரை நகரில் அனுமதி இல்லாமல் இயங்கும் பைக் கால் டாக்ஸி தற்போது மதுரை நகரின் முழுவதும் விளம்பரமும் படுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் பல பகுதிகளில் பைக் கால் டாக்ஸி இயக்கப்படுகின்றன இதனால் அனுபவம் இல்லாத ஓட்டுனர்களால் விபத்துக்களும் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கேட்ட பொழுது பைக் கால் டாக்ஸி நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை . கடந்த மாதம் சுமார் ஒரு பத்து வாகனங்களை பறிமுதல் செய்தோம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒருவர் தெரிவித்தார் தொடர்ந்து அனுமதி இல்லாமல் இயங்கும் பைக் கால் டாக்சியை காவல்துறையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.