சென்னை திருவான்மியூரில் காரில் வருபவர்களுக்கு மட்டும் போதை பொருள்கள் விற்கப்படுவதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் தலைமையிலான போலீஸார், போதைப் பொருள் விற்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிகில் திவாரி என்பவரை பிடித்து அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் போதைப் பொருள்களைக் கைப்பற்றினர். அது அனைத்தும் போதை மாத்திரைகள். ஸ்டாம்ப் வடிவத்திலிருக்கும் புதுரக போதைப் பொருள் என்று தெரியவந்தது.
அந்நபரை எவ்வாறு பிடித்தார்கள் என்பதை போலீஸ் உயரதிகாரி ஒருவர் விவரிக்கையில், “கல்லூரி மாணவ, மாணவிகள், ஐ.டி துறையில் பணியாற்றுபவர்களுக்குப் போதைப் பொருள், மாத்திரைகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். போதைப் பொருளை விற்பவரை கையும் களவுமாகப் பிடிக்க நாங்கள் ஒருவரைப் போதை மாத்திரையை வாங்க ஏற்பாடு செய்தோம். அதன்படி அந்த நபர் அங்கு காரில் சென்றார். அவரை ரகசியமாகக் கண்காணித்தோம். அப்போது லேப் டாப் பேக்குடன் திருவான்மியூர், ராஜாஜி நகரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளியில் வந்த வாலிபர், பணத்தைப் பெற்றுக்கொண்டு போதை மாத்திரைகளைக் கொடுத்தார். உடனடியாக அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த போதைப் பொருள், மாத்திரைகளைப் பறிமுதல் செய்தோம்
You must be logged in to post a comment.