24
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வடமதுரை நாடுகண்டனூரை சேர்ந்த முருகன் என்பவர் (வயது 40) வீட்டில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக தகவலறிந்து வேடசந்தூர் டிஎஸ்பி சிவகுமார் ஆலோசனையின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
பின்னர் தனிப்படை சோதனையில் முருகன் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு தனிப்படை போலீசார் முருகனை கைது செய்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
You must be logged in to post a comment.