10
சென்னை காட்டுபாக்கத்தை சேர்ந்த சத்யநாராயணா என்பவரின் மகள் ரீஹிதா 3ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையுடன் காவல் அதிகாரிகளை சந்தித்த ரீஹிதா தனது சேமிப்பு பணத்திலிருந்து ரூ.1¸50¸000/- பணத்தை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
சிறுமியிடம் விசாரித்தபோது¸ சிசிடிவி கேமராவால் காவல்துறையில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தனது தந்தை கூறியதாகவும்¸ ஆகவே காவல்துறைக்கு தன்னால் முடிந்த தனது சேமிப்பிலிருந்து ரூ.1.5 லட்சம் பணத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.
இதனை அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.அ.கா.விஸ்வநாதன்¸ இ.கா.ப சிறுமியை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.
You must be logged in to post a comment.