திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பூமிநாதன் மகன் பாலசுப்ரமணியன் வயது 26. இவர் தனது வாகனத்தை பழுது நீக்கம் செய்வதாக மதுரைக்கு கொண்டு சென்றார் உதவிக்காக தனது நண்பர் ஆசிக் அரபாத் வயது 20 என்பவரை அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (18/06/2019) இரண்டு பேரும் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரையை நோக்கி சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆசிக் அரபாத், பாலாசுப்பிரமணி ஆகியோர் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இரண்டு பேரையும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிக் அரபாத் இதமாக இறந்து விட்டார். மேலும் பாலசுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
You must be logged in to post a comment.