13
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சார்ந்தவர் ஹரிபிரசாத். இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரிக்கு சென்றுவிட்டு இரு சக்கரத்தில் வாகனத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மூவரை வென்றான் விளக்கு பகுதியில் இரு சக்கர வாகனம் சாலையில் தவறி விழுந்ததில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அரித்து வந்த நத்தம்பட்டி காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.