4
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரில் பேரையூரைச் சேர்ந்த வினோத்குமாா் மற்றும் அவருடைய நண்பர்கள் மணிராஜ், கார்த்திக், முத்து, வினோத், ஆகியோர் சாப்டூருக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பேரையூரைச் சேர்ந்த வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 3 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றிருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேரையூர் முருகன்
You must be logged in to post a comment.