5
பங்கபந்து , 100-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பங்களாதேஷ் நாட்டில் cox bazar நகரில், பங்களாதேஷ், இந்தியா, நேபால், இலங்கை ஆகிய நாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றனர் .இதில் ,தமிழகத்தில் இருந்து இந்திய அணியில், மதுரையை சேர்ந்த சச்சின் சிவா பங்குபெற்றார். இப்போடிக்கு செல்லும்போது ,மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்உதவி செய்தார். இப்போட்டியில், இந்திய அணி இரண்டாம் இடம் பெற்றது. சச்சின் சிவா நேபாலுக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆட்ட நாயகன் விருது பெற்றார்.தற்போது, தான் பெற்ற பரிசை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.