தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் சிறப்பு பிரார்த்தனையை சென்னை ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில் நடத்தினார்பரத்வாஜ் ஸ்வாமிகள்குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையவும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் எதிர் காலத்தில் பாரத தேசத்தில் தேசப்பற்று மிக்க தலைவர்களாக வரவும் விஞ்ஞானம் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கி சாதிக்கவும் குழந்தைகளுக்கு சுவாசினி பூஜை பாலா பூஜை ஆகியவற்றை சென்னை அம்பத்தூர் புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ பரமஹம்ச பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில் நடத்தினார்.இதில் நிறைய குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்பூஜையில் பங்கேற்ற குழந்தைகள் நாக்கில் பாலா பீஜாட்சரம் சரஸ்வதி ஜீவாச்சரமும் குட்டி சூலாயுதத்தை தேனில் தொட்டு சுவாமிகள் எழுதினார் மேலும் அவர்களுக்கு குட்டி கதைகளைச் சொல்லி அருளாசி வழங்கினார்.குழந்தைகள் தேர்வில் எழுதுவதற்காக பேனாவும் புத்தகங்களும் அவர்களுக்கு வழங்கினார்குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு தேர்வு சமயத்தில் கூட்டு பிரார்த்தனை செய்து குழந்தைகளுக்கு பாத பூஜை செய்து அருளாசி வழங்கிய பரத்வாஜ் சுவாமிகளின் மீது பக்தர்களுக்கு பக்தியும் ஆன்மிக உணர்வும் ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.