9
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறாக ஆட்டோக்கள், 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. வேலூர் சரக டிஐஜி சென்ற மாதம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து எச்சரித்தார்.ஆனால் சில நாட்களாக சில ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில்தாறுமாறாக சென்று கொண்டுதான் உள்ளன.இந்நிலையில் நேற்று 18-ம் தேதி வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடியாக பழைய பஸ் நிலையம் சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 சக்கர வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். உடன் மேயர் சுஜாதா, மாநகராட்சிஆணையர் அசோக்குமார், துணை மேயர் சுனில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கன்னியப்பன் மற்றும் அலுவலர் இருந்தனர்.
You must be logged in to post a comment.