8
மதுரை தெப்பக்குளத்தை அடுத்த பழைய குயவர் பாளையம் சேர்ந்த கணவன் ,மனைவிநாகராஜன் (46) மற்றும் இவருடைய மனைவி லாவண்யா (34) ஆகிய இருவர் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தெப்பக்குளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பங்கு சந்தை முதலீடு பிரச்சனை நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிகிறது.தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.