மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது.இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் கிறிஸ்மஸ் குடில் பொம்மைகள் தயாரிப்பு வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது.கடந்த காலங்களில் கொரான தொற்று காரணமாக விற்பனை சரிவிலிருந்தது.பொம்மை தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தற்பொழுது கொரான தொற்று கட்டுப்பாடுகளில் தளர்வு கிடைத்ததையடுத்து விற்பனைகள் சுமாராக நடைபெற்று வருவதாகவும் தயாரித்த பொம்மைகள் தடையில்லாமல் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.30 ரூபாய் பொம்மை முதல் ஐந்தாம் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொம்மைகள் வரை இங்கு தயார் செய்யப்படுகிறது.கிறிஸ்துமஸ் குடில் 18 பொம்மைகள் கொண்ட ஒரு செட் 250 ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கிறிஸ்மஸ் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மும்பை போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கிறிஸ்மஸ் பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.