லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்சுமானுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார் போல்ட்ஸ்மேன்.அணு மற்றும் அணுத்துகள்கள் மீது தான் போல்ட்சுமேனின் முழு கவனமும் இருந்தது. ‘மேக்சுவெல் போல்ட்சுமேன் பகிர்வு’, ‘மேக்சுவெல் போல்ட்சுமேன் புள்ளிவிவரம்’ ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைக் கற்களாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. ‘தெர்மோ டைனமிக்ஸ்’ என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு.பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வெப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்தக் கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களைக் கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் அறிவியலாளர் இவரே. புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வளிமங்கள்மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்துத் தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.1885 ஆம் ஆண்டில் அவர் இம்பீரியல் ஆஸ்திரிய அகாடமி ஆஃப் சயின்ஸில் உறுப்பினரானார். 1887ல் கிராஸ் பல்கலைக்கழகத்தின் தலைவரானார். அவர் 1888 இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகவும், 1899ல் ராயல் சொசைட்டியின் (ஃபோர்மெம்ஆர்எஸ்) வெளிநாட்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான் செப்டம்பர் 05,1906ல் தனது 62வது அகவையில் இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனைப் புரிந்து கொண்டார்கள்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உலக செய்திகள்
மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).
ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஜனவரி 24, 1922ல் கர்நாடகாவில் பிறந்தார். மைசூரிலிருந்து வந்த முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவரான அவரது பாட்டி கமலாம தசப்பாவால் நிறுவப்பட்ட ஒரு “சிறப்பு ஆங்கிலப் பள்ளியில்” தனது முதன்மை கல்வியைப் பெற்றார். கல்வித் துறையில் (குறிப்பாக விதவைகள்) மிகவும் தீவிரமாக செயல்பட்டவர். பள்ளி இறுதிப் போட்டிகளுக்குப் பிறகு, வரலாற்றை எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் இறுதியில் இயற்பியல் மற்றும் கணிதத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் பெங்களூரு மத்திய கல்லூரியில் பயின்றார். கணிதத்தில் பி.எஸ்சி (ஹான்ஸ்) மற்றும் எம்.எஸ்சி பட்டங்களைப் பெற்றார். இந்த இரண்டு தேர்வுகளிலும் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்தார். அவர் மம்மாடி கிருஷ்ணராஜா வோடியார் விருதையும், எம்.டி. பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்சி தேர்வுகளில் சிறப்பாக செயல்பாடுகளுக்கு முறையே நாராயண ஐயங்கார் பரிசு மற்றும் வால்டர்ஸ் நினைவு பரிசு பெற்றார்.
1943 ஆம் ஆண்டில், தனது எம்.எஸ்சிக்குப் பிறகு, மின் தொழில்நுட்பத் துறையில் தகவல் தொடர்புத் துறையில் ஆராய்ச்சி மாணவராக, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி) சேர்ந்தார். ராஜேஸ்வரி சாட்டர்ஜி சி.வி.ராமன் அவருக்கு கீழ் வேலை செய்ய விரும்பினார். ராஜேஸ்வரி இயற்பியலில் பட்டம் இல்லை என்று கூறி ராமன் மறுத்துவிட்டதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றவர்கள் அவர் பெண் மாணவர்களைப் பெறுவதற்கான யோசனையை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்ற இந்தியாவில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இது பிரகாசமான இளம் விஞ்ஞானிகளுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்க உதவித்தொகை வழங்கியது. எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் அதன் பயன்பாடுகளிலும் அத்தகைய ஒரு உதவித்தொகைக்கு அவர் விண்ணப்பித்தார். மேலும் 1946 ஆம் ஆண்டில், டெல்லி அரசாங்கத்தால் அவர் “பிரகாசமான மாணவராக” தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் உயர் படிப்பைத் தொடர வெளிநாடு செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டது.
ராஜேஸ்வரி சாட்டர்ஜி அமெரிக்காவில் ஆன் ஆர்பர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், மேலும் படிக்கத் தேர்வு செய்தார். 1950 களில் இந்தியப் பெண்கள் உயர் கல்வியைத் தொடர வெளிநாடு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் சாட்டர்ஜி அவ்வாறு செய்ய உறுதியாக இருந்தார். ஜூலை 1947ல், இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், எஸ்.எஸ். மரைன் ஆடெர் என்ற மாற்றப்பட்ட துருப்பு கப்பலில் அமெரிக்காவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார். 30 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்றார். அமெரிக்காவில், அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, மின் பொறியியல் துறையிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் இந்திய அரசாங்கத்துடன் வைத்திருந்த ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய பணியகங்களில் ரேடியோ அதிர்வெண் அளவீடுகள் பிரிவில் எட்டு மாத நடைமுறை பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் அவர் மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகம் சென்றார். 1949ல் பார்பர் உதவித்தொகையைப் பெற்று தனது படிப்பை மீண்டும் தொடங்கினார். 1953ன் ஆரம்பத்தில் பேராசிரியர் வில்லியம் கோல்ட் டோவின் வழிகாட்டுதலின் கீழ் தனது ஆய்வுக் கட்டுரையை வெற்றிகரமாக முடித்து பி.எச்.டி பட்டத்தைப் பெற்றார்.
1953 ஆம் ஆண்டில், தனது பிஎச்டி பட்டம் பெற்ற பிறகு, அவர் இந்தியாவுக்குத் திரும்பி, ஐ.ஐ.எஸ்.சி மின் தொடர்பு பொறியியல் துறையில் ஆசிரிய உறுப்பினரானார். பின்னர் அவர் “மின்காந்தக் கோட்பாடு, எலக்ட்ரான் குழாய் சுற்றுகள், நுண்ணலை தொழில்நுட்பம் மற்றும் வானொலி பொறியியல்” ஆகியவற்றைக் கற்பித்ததார். அதே ஆண்டில், அதே கல்லூரியின் ஆசிரிய உறுப்பினராக இருந்த சிசிர் குமார் சாட்டர்ஜியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, ராஜேஸ்வரி சாட்டர்ஜியும் அவரது கணவரும் ஒரு மைக்ரோவேவ் ஆராய்ச்சி ஆய்வகத்தை உருவாக்கி, மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சியைத் தொடங்கினர். இது இந்தியாவில் முதல் ஆராய்ச்சி ஆய்வகம். அதே காலகட்டத்தில், மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் பதவிக்கு சாட்டர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது வாழ்நாளில், அவர் 20 பிஎச்டி மாணவர்களுக்கு வழிகாட்டினார். 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார், மேலும் ஏழு புத்தகங்களை எழுதினார்.
1982 ஆம் ஆண்டில் ஐ.ஐ.எஸ்.சி.யில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய மகளிர் ஆய்வுகளுக்கான சங்கம் உள்ளிட்ட சமூக திட்டங்களில் பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர். இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான இவர், அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார். மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த ராஜேஸ்வரி சாட்டர்ஜி, செப்டம்பர் 03,2010ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தென்னை – உலகத் தேங்காய் நாள் (world coconut day) (செப்டம்பர் 2)
உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது. தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான். தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.
இளநீர் குளிர்ச்சியைத் தரவல்லது. தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர் அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது. தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.
தேங்காய்ப்பால், பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.
‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான். தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது. தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நம் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்களைக் காணலாம். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதுடன், சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள் குணமாகும். காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கும். உடலின் ஆற்றல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தைராய்டு சுரப்பியை சீராக செயல்படுத்த உதவுகிறது.
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக நோய்களை குணமாக்குகிறது. தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது செரிமானம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், அது உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைத்து, பசியை கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கடுமையான தலைவலி மற்றும் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் உடல் வறட்சி பிரச்சனை தடுக்கப்படுவதுடன், உடலின் நீர்ச்சத்து அதிகமாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் தண்ணீர் உதவுகிறது.
Source By: Jayasrimahi
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீரொளி இடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்த, சீரொளி இடுக்கியின் தந்தை ஆர்தர் ஆசுக்கின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2, 1922).
ஆர்தர் ஆசுக்கின் (Arthur Ashkin) செப்டம்பர் 2, 1922ல் நியூயார்க்கின் புரூக்கிலின் பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்தார். இவருடைய பெற்றோர்கள் இசடோர் ஆசுக்கின், அன்னா ஆசுக்கின் ஆவர். தந்தை இசடோர் ஒடெசாவில் (உக்ரைனில்) இருந்து, தனது 18-வது அகவையில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். தாயார் அன்னா உக்ரைனில் இருந்து குடிபெயர்ந்தவர் ஆவார். ஆர்தர் ஆசுக்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு ஆய்வுக்கூடத்தில் தொழினுட்ப உதவியாளராகவும் இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது அமெரிக்கப் படைத்துறைக்கான இரேடார் என்னும் தொலைபொருளுணர்விக் கருவிக்கான நுண்ணலை தோற்றிவிக்கும் காந்தக் கருவியைச் செய்யப் பணித்தார்கள். இவர் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்காக இருந்தாலும், இப்பொறுப்பு இவருக்கு வழங்கப்பெற்றது. இவ்வாய்ப்பின் பயனாக மூன்று நோபல் பரிசாளர்களை அவர் சந்திக்க நேர்ந்தது.
ஆர்தர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பு முடிந்த பிறகு, கார்ணெல் பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பு படிக்கச் சென்றார். அங்கே அணுக்கருவியியல் துறையில் படித்தார். அக்காலத்தில் மான்ஃகாட்டன் திட்டம் என்னும் அணு ஆயுதத் திட்டத்திற்கான பணிகள் நடந்து வந்தன. அதில் இவருடைய உடன்பிறந்தார் சூலியசு ஆழ்சுகின் பங்களிப்பவராக இருந்தார். இத்தொடர்பால் ஆர்தர் ஆழ்சுகினுக்கு நோபல் பரிசாளர் ஃகன்சு பெத்து (Hans Bethe) அவர்களுடனும் ரிச்சர்டு ஃபெயின்மன் (Richard Feynman) அவர்களுடனும் இன்னும் கார்ணெல் பல்கலைக்கழகத்துக்கு வருவோரிடமும் தொடர்பு ஏற்பட்டது. ஆர்தர் கார்ணெல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்ற பின்னர் பெல் ஆய்வுக்கூடத்தில் இவருடைய நெறியாளராக இருந்த சிட்னி மில்மன் அவர்களின் பரிந்துரையின் பேரில் பணிக்குச் சென்றார்.
பெல் ஆய்வுக்கூடத்தில் 1960 முதல் 1961 வரை நுண்ணலைத் துறையில் பணி புரிந்தார். பின் சீரொளித் திறையில் ஆய்வை மேற்கொண்டார். இவர் ஒளிநார், நேர்சார்பிலா ஒளியியல், பராமெற்றிக்கு அலைவி, பராமெற்றிக்கு மிகைப்பி ஆகிய துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். பெல் ஆய்வுக்கூடத்தில் இருந்தபொழுது தகைவுமின்விளைவுப் படிகம் (piezoelectric crystal), ஒளிமுறிவு விளைவு ஆகிய துறைகளிலும் புது கண்டுபிடிப்புகள் செய்தார். ஆர்தர் பணியானது 1997 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இசுட்டீவன் சூ அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. சூவின் ஆய்வில் சீரொளியால் அணுக்களைக் குளிர்விப்பதும் சிக்கவைப்பதும் முக்கிய பங்கு வகித்தன. ஆசுக்கின் 1960-களின் கடைசியில் சீரொளியைக் கொண்டு சிறு துகள்களைப் பிடித்துக் கட்டுப்படுத்துவதைச் செய்தார். இதன் விளைவாக 1986 இல் சீரொளி இடுக்கிகள் அல்லது ஒளியிடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்தார். இதன் பயனாய் தனி அணுக்களையும், சிறு மூலக்கூறுகளையும் உயிரணு முதலான உயிரியப் பொருட்களையும் சீரொளி இடுக்கியில் சிக்க வைத்து அலச முடிகின்றது. இதற்கு அடிப்படையாக இருக்கும் இயற்பியல் விளைவு ஒளியின் அடர்த்தி வேறுபாட்டால் எழும் மிக நுட்பமான கதிராற்றல் அழுத்தவேறுபாடு ஆகும்.
ஆசுக்கின் இந்த உயர்நுட்ப சீரொளி இடுக்கியின் தந்தை எனக் கருதுகின்றார்கள். இக்கண்டுபிடிப்புக்காகத்தான் 2018 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. நோபல் பரிசு பெற்றவர்களிலேயே இவர்தான் அகவை (96 வயதில்) கூடியவர் ஆவார். ஆர்தர் ஒளியியல் குமுகத்தின் சிறப்பாளராகவும், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் சிறப்பாளராகவும் , ஐ.இ.இ.இ நிறுவனத்தின் சிறப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 47 புதுக்கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு யோசப்பு கீத்திலி விருதும், 2004 இல் ஆர்வி பரிசும் பெற்றார். 1984 இல் அமெரிக்க தேசியப் பொறியியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த சகோதரி மற்றும் பாப் எனும் இளைய சகோதரனும் பெர்னிஸ் எனும் இளைய சகோடதரியும் இருந்தனர். இவரது அத்தை, மாபெல் அல்வாரெஸ், கலிபோர்னியா கலைஞராக இருந்தார். அவர் நெய்யோவியத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1918 முதல் 1924 வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேடிசன் பள்ளியிலும், பின்னர் சான் பிரான்சிஸ்கோ பாலிடெக்னிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1926 ஆம் ஆண்டில், இவரது தந்தை மாயோ மருத்துவச் சிற்றில் ஒரு ஆராய்ச்சியாளரானார். பின்னர் இவரது குடும்பம் மினசோட்டாவின் ரோசெஸ்டருக்கு குடிபெயர்ந்தது. அங்கு அல்வாரெஸ், ரோசெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், ரோசெஸ்டரில் உள்ள தனது ஆசிரியர்களின் வற்புறுத்தலின் பேரில், இவர் அதற்கு பதிலாக சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவர் 1932ல் இளங்கலைப் பட்டமும், 1934ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1936ல் இவரது முனைவர் பட்டம் பெற்றார்.
1936ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, அல்வாரெஸ் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏர்னஸ்ட் லாரன்சின் கதிர்வீச்சு ஆய்வகத்தில் வேலைக்குச் சென்றார். கதிரியக்கக் கருக்களில் கே-எலக்ட்ரான் பிடிப்பைக் கண்காணிக்க அல்வாரெஸ் பல சோதனைகளை மேற்கொண்டார். இது பீட்டா சிதைவு கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்டது. 1940ம் ஆண்டில் அல்வாரெஸ் எம்ஐடி கதிர்வீச்சு ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இரண்டாம் உலகப் போரின் கதிரலைக் கும்பா திட்டங்களில் பங்களித்தார். மன்காட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹீமர்மருக்காக பணிபுரிய லாஸ் அலமோஸுக்கு வருவதற்கு முன்பு அல்வாரெஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் என்ரிகோ பெர்மிக்கான அணு உலைகளில் பணிபுரிந்தார். அல்வாரெஸ் வெடிக்கும் வில்லைகள் வடிவமைத்தல் மற்றும் வெடிக்கும் பலச் சுற்று வெடிபொருள் தயாரிப்பு ஆகியவற்றில் பணியாற்றினார்.
அல்வாரெஸ் ஜேசன் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, போஹேமியன் சங்கம் மற்றும் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார் . அல்வாரெஸ் வானியற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் முல்லரின் ஆலோசகராக இருந்தார். லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1968 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இது துகள் இயற்பியலில் அதிர்வு நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. குமிழ் அறை (bubble chamber) என்பது அயனியாக்கும் தன்மை கொண்ட துகள்களின் இயக்கத்தை, அவைகளின் பாதையை அறிய கூடிய அதிவெப்பமூட்டப்பட்ட ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட நீர்மம் (பொதுவாக நீர்ம ஐதரசன்) கொண்ட ஒரு கலன் ஆகும். முகிலறைகள் குமிழறைகளின் தத்துவத்திலேயே வேலை செய்கின்றன. ஆனால், முகிலறைகளில் அதிக வெப்பமாக்கிய நீர்மத்திற்குப் பதிலாக அதிகம் நிரம்பிய ஆவி பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் இவரைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “லூயிஸ் அல்வாரெஸ் இருபதாம் நூற்றாண்டின் மிக அற்புதமான மற்றும் உற்பத்தி சோதனை இயற்பியலாளர்களில் ஒருவர்.”எனக் கூறியது. நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் செப்டம்பர் 1, 1988ல் தனது 77வது அகவையில் பெர்க்லி, கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது ஆவணங்கள் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பான்கிராப்ட் நூலகத்தில் உள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).
எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட நீதிபதி. இதனால், பல ஊர்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தது குடும்பம். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடர்ந்து பயின்றார். 1942ல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். இளம் வயதில் தந்தையுடன் சென்று சர். சி.வி.ராமனைச் சந்தித்த பிறகு, அவரை ஆதர்ஷ நாயகனாகக் கொண்டார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை ராயல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். நிறமாலையியலில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.
டாடா ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஹோமிபாபாவின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்தார். விண்வெளிக்கு கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதுவே விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டம். 1953ல் நோபல் பரிசு பெற்ற சிசில் எஃப். பவலின் வழிகாட்டுதலின் கீழ், காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆய்வு செய்து, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். காஸ்மிக் கதிர்கள், துகள் இயற்பியல் துறையில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் காஸ்மிக் கதிர்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டார். கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் அக்கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தார்.
ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம், சிறந்த தலைமைப் பண்பும் கொண்டிருந்ததால், மிக குறுகிய காலத்தில் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பாபாவுக்குப் பிறகு வளர்த்தெடுத்தார். இவரது அயராத முயற்சியால் உயிரி அறிவியல், வானொலி விண்ணியல், திடநிலை மின்னணுவியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் டாடா நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. மனித உழைப்பு என்கின்ற விசாலமான ஸ்பெக்ட்ரத்தை, விஞ்ஞான ரீதியாகப் பயன் படுத்தினால் எவ்வளவு அழகாக எதையும் படைக்க முடியும் என்பதை பௌலினிடம் கற்றார். அதுபோல் சரியான திட்டமிடல், ஒரே கருத்துடையவர்களின் ஒத்துழைப்பு, குறிப்பிட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சரியான இடம் போன்றவற்றின் உதவியால் வெற்றிகரமான ஆராய்ச்சியை இந்தியாவில் சாத்தியமாக்கலாம் என்பதை ஹோமி பாபாவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.
நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முடிவுகளை இவரது குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்கள் மோதும்போது, உருவாகும் ‘மியான்’ என்ற புதிய நுண்துகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உலக அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. 1966ல் ஹோமிபாபா இறந்த பிறகு, அவர் வகித்த பொறுப்பில் இவர் நியமிக்கப்பட்டார். ஹோமிபாபா, ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றினார். 1972ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரானார். அங்கு 9 மாதங்களே பணியாற்றினாலும் ஆழமான முத்திரையைப் பதித்தார். மத்திய திட்டக்குழுவில் பிரதமரின் அறிவியல் ஆலோகராகவும் செயல்பட்டார். நான்கு தசாப்தங்களாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.
பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968), பத்மவிபூஷன் (1985), சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் விருது என பல விருதுகளைப் பெற்றார். 2008ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுக்கு ‘7564 கோகுமேனன்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. சக விஞ்ஞானிகளால் ‘கோகு’ என நேசத்தோடு அழைக்கப்பட்டார். 1989-90ல் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வித் துறையின் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். 1990-96ல் தில்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட எம்.ஜி.கே. மேனன் நவம்பர் 22, 2016ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 2008ம் ஆண்டில் எம்.ஜி.கே.மேனனை கௌரவிக்கும் வகையில் நூண்கோள் ஒன்றுக்கு 7564கோகுமேனன் எனப் பெயர் சூட்டப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அன்புக்கும் கருணைக்கும் புகழ் பெற்ற, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1910).
அன்னை தெரேசா (Mother Teresa) ஆகஸ்ட் 26, 1910ல் மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும். சிறுவயது முதல் ஆழ்ந்த இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்ட இவர், தனது 18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினரானார். கல்கத்தாவில் இந்திய மிஷனரிகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளின் பால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே, டுப்ளினில் சில மாதங்கள் பயிற்சி பெற்றபின் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அதன்பின் ஆன்மீகக் கற்கையைத் தொடருமுகமாக அயர்லாந்து சென்றார். 1931 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார்.அன்னை தெரசா 1931-1948 ஆண்டுவரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 1948 ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத் தாதிப் பயிற்சியைப் பெற்றார். 1949 இல் மோதிஜில் என்ற சேரிப்பகுதியை அடைந்து, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யத் தொடங்குகின்றார். 1950 அக்டோபர் 7ல் அன்னை தெரசாவின் தலைமையில், மிஷனரிஸ் ஒஃப் சாரிட்டி இல்லம் (Missionaries of Charity) தொடங்கப்பட்டது. 1965ல் இந்த அமைப்பு சர்வதேச அளவில் வியாபகம் பெற்றது. முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.சேரிவாழ் ஏழை மக்களுக்கும் அநாதைகளுக்கும் தொழு நோயாளர்களுக்கும் அவர் செய்துவந்த தொண்டுகள் அளப்பரியன. “ஏழை நோயாளர்களுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை. மாறாக, அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர். தமக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், எளிய வாழ்க்கை நடத்தியவர்.1962 ஆம் ஆண்டு பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரின் இடையுறாத சமூகத்தொண்டை கௌரவிக்குமுகமாக 1980ல் இந்தியாவின் அதிஉயர் விருதான பாரத ரத்னா விருதும், 1983 இல் பிரிட்டிஷ் மகாராணி 2ஆம் எலிசபெத் மகாராணியின் கௌரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தன. 1997 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்காவின் கௌரவ பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி அன்னை தெரசாவைக் கௌரவித்தார். சுமார் 45 வருடகாலம் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா 1983 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா செப்டம்பர் 05, 1997ல் தனது 87வது அகவையில் கொல்கத்தாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார். அன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுத் தொண்டுக்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணியான அன்னை தெரசா உலகின் சாதனைப் பெண்களில் ஒருவர் என்பதை நாம் மறுக்க முடியாது.இந்த நாளில், அன்னை தெரசாவின் அமுத மொழிகளை ஏற்று நடப்போம்.* பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளுக்கு அருகே நீங்கள் செல்வீர்கள். அதேசமயம், மக்களுக்குச் சேவை செய்து பாருங்கள். கடவுளே உங்களுக்கு அருகிலேயே வருவார்.* மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தால், ஒருபோதும் உங்களுக்கு அன்பு செய்ய வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.* இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்யுங்கள்.* இறப்பதற்காகத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்துடன் வாழ்வோம்.* அன்பு என்பது சொற்களைக் கொண்டு வாழ்வதாக நினைக்கிறோம். ஆனால் அன்பை, சொற்களால் விளக்க முடியாது. செயல்களால் உணர்த்துவதே அன்பு.* உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்களை நேசியுங்கள். உங்கள் மீது கோபம் கொண்டவர்களை இன்னும் அதிகமாவே நேசியுங்கள்.* மனம் விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.* கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை.* கொடுப்பது சிறியதுதானே என்று தயங்காதீர்கள். ஆனால் பெறுபவருக்கு அது மிகப்பெரியது. அதற்காக எடுப்பது சிறிது என்று திருடாதீர்கள். அது இழந்தவருக்கு மிகப்பெரியது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.* உனக்காக வாழ்கிறேன் என்று சொல்லுவது நமக்கு இன்பம். உன்னால்தான் வாழ்கிறேன் என்று நம்மைப் பார்த்துச் சொல்லவைக்கும்படி வாழ்வது பேரின்பம்.* வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.Source By: Wikipediaதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஃபிராங்க்-ஹெர்ட்ஸ் பரிசோதனை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1882).
ஜேம்ஸ் ஃபிராங்க் ஆகஸ்ட் 26, 1882ல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜேக்கப் ஃபிராங்க் ஒரு வங்கியாளர். ஒரு பக்தியுள்ள மற்றும் மத மனிதர், அதே நேரத்தில் அவரது தாயார் ரபீஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். ஃபிராங்க் ஹாம்பர்க்கில் ஆரம்ப பள்ளியில் பயின்றார். 1891 ஆம் ஆண்டு தொடங்கி அவர் வில்ஹெல்ம் ஜிம்னாசியத்தில் பயின்றார். அது அப்போது சிறுவர்கள் பள்ளியாக மட்டுமே இருந்தது. அப்போது ஹாம்பர்க்கிற்கு எந்த பல்கலைக்கழகமும் இல்லை. எனவே வருங்கால மாணவர்கள் ஜெர்மனியின் பிற இடங்களில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் ஒன்றில் சேர வேண்டியிருந்தது. சட்டம் மற்றும் பொருளாதாரம் படிக்க விரும்பிய ஃபிராங்க் 1901ம் ஆண்டில் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு புகழ்பெற்ற சட்டப் பள்ளியில் நுழைந்தார். அவர் சட்டம் குறித்த சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். ஆனால் அறிவியலில் ஆர்வமுள்ளவர்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தார். அங்கு இருந்தபோது, அவர் வாழ்நாள் நண்பராக மாறும் மேக்ஸ் பார்னை சந்தித்தார்.
பார்னின் உதவியுடன், இயற்பியல் மற்றும் வேதியியல் படிப்பிற்கு மாற அவரை அனுமதிக்கும்படி தனது பெற்றோரை வற்புறுத்த முடிந்தது. ஃபிராங்க் லியோ கோனிக்ஸ்பெர்கர் மற்றும் ஜார்ஜ் கேன்டர் ஆகியோரின் கணித சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். ஆனால் ஹைடெல்பெர்க் இயற்பியல் அறிவியலில் வலுவாக இல்லை. எனவே அவர் பேர்லினில் உள்ள ஃபிரடெரிக் வில்லியம் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடிவு செய்தார். பெர்லினில், ஃபிராங்க் மேக்ஸ் பிளாங்க் மற்றும் எமில் வார்பர்க் ஆகியோரின் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். ஜூலை 28, 1904 அன்று அவர் ஒரு ஜோடி குழந்தைகளை ஸ்பிரீ ஆற்றில் மூழ்கடிக்காமல் காப்பாற்றினார். வார்பர்க்கின் மேற்பார்வையின் கீழ் அவரது டாக்டர் ஆஃப் தத்துவத்திற்காக (டிர்.பில்.), வார்பர்க் கொரோனா வெளியேற்றங்களைப் படிக்க பரிந்துரைத்தார். ஃபிராங்க் இந்த தலைப்பை மிகவும் சிக்கலானதாகக் கண்டார். எனவே அவர் தனது ஆய்வறிக்கையின் மையத்தை மாற்றினார்.
அவரது ஆய்வறிக்கை முடிந்தவுடன், ஃபிராங்க் தனது ஒத்திவைக்கப்பட்ட இராணுவ சேவையைச் செய்ய வேண்டியிருந்தது. 1906 அக்டோபர் 1 ஆம் தேதி அவர் 1 வது தந்தி பட்டாலியனில் சேர்ந்தார். டிசம்பரில் ஒரு சிறிய குதிரை சவாரி விபத்துக்குள்ளான அவர் கடமைக்கு தகுதியற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். அவர் 1907 ஆம் ஆண்டில் பிராங்பேர்ட்டில் உள்ள பிசிகலிச் வெரீனில் உதவியாளராகப் பணியாற்றினார். ஆனால் அதை ரசிக்கவில்லை, விரைவில் ஃபிரடெரிக் வில்லியம் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். ஒரு இசை நிகழ்ச்சியில் ஃபிராங்க் ஸ்வீடிஷ் பியானோ கலைஞரான இங்க்ரிட் ஜோசப்சனை சந்தித்தார். 1907 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோதன்பர்க்கில் நடந்த ஒரு ஸ்வீடிஷ் விழாவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஜெர்மனியில் கல்வித் தொழிலைத் தொடர, முனைவர் பட்டம் பெற்றிருப்பது போதாது. ஒருவருக்கு வெனியா லெஜெண்டி அல்லது வசிப்பிடம் தேவை. இதை மற்றொரு பெரிய ஆய்வறிக்கை மூலம் அல்லது வெளியிடப்பட்ட படைப்புகளின் கணிசமான அமைப்பை உருவாக்குவதன் மூலம் அடைய முடியும்.
பிராங்க் பிந்தைய வழியைத் தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில் இயற்பியலில் தீர்க்கப்படாத பல சிக்கல்கள் இருந்தன. மேலும் 1914 வாக்கில் அவர் 34 கட்டுரைகளை வெளியிட்டார். 1914ம் ஆண்டில், ஃபிராங்க் ஹெர்ட்ஸுடன் இணைந்து ஃப்ளோரசன்ஸை விசாரிக்க ஒரு பரிசோதனை செய்தார். பாதரச அணுக்களின் மெல்லிய நீராவி வழியாக பறக்கும் ஆற்றல்மிக்க எலக்ட்ரான்களைப் படிப்பதற்காக அவர்கள் ஒரு வெற்றிடக் குழாயை வடிவமைத்தனர். ஒரு எலக்ட்ரான் ஒரு பாதரச அணுவுடன் மோதும்போது அது பறக்கும் முன் அதன் இயக்க ஆற்றலின் ஒரு குறிப்பிட்ட அளவை (4.9 எலக்ட்ரான் வோல்ட்) மட்டுமே இழக்கக்கூடும் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு வேகமான எலக்ட்ரான் மோதலுக்குப் பிறகு முற்றிலுமாக வீழ்ச்சியடையாது. ஆனால் அதன் இயக்க ஆற்றலின் அதே அளவை துல்லியமாக இழக்கிறது. மெதுவான எலக்ட்ரான்கள் எந்தவொரு குறிப்பிடத்தக்க வேகத்தையும் இயக்க ஆற்றலையும் இழக்காமல் பாதரச அணுக்களைத் துரத்துகின்றன.
இந்த சோதனை முடிவுகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஒளிமின்னழுத்த விளைவு மற்றும் பிளாங்கின் உறவு (E = hv) இணைக்கும் ஆற்றல் (E) மற்றும் அதிர்வெண் (v) ஆகியவற்றை பிளாங்கின் மாறிலி (h) உடன் ஆற்றலின் அளவிலிருந்து எழும். ஆனால் முந்தைய ஆண்டு நீல்ஸ் போரால் முன்மொழியப்பட்ட அணுவின் மாதிரியை ஆதரிக்கும் ஆதாரங்களையும் அவர்கள் வழங்கினர். அதன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு அணுவின் உள்ளே ஒரு எலக்ட்ரான் அணுவின் “குவாண்டம் ஆற்றல் மட்டங்களில்” ஒன்றை ஆக்கிரமிக்கிறது. மோதலுக்கு முன், பாதரச அணுவின் உள்ளே ஒரு எலக்ட்ரான் அதன் குறைந்த ஆற்றல் மட்டத்தை ஆக்கிரமிக்கிறது. மோதலுக்குப் பிறகு, உள்ளே இருக்கும் எலக்ட்ரான் 4.9 எலக்ட்ரான் வோல்ட் அதிக ஆற்றலுடன் அதிக ஆற்றல் மட்டத்தை ஆக்கிரமிக்கிறது. இதன் பொருள் எலக்ட்ரான் பாதரச அணுவுடன் மிகவும் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளது.
மே 1914ல் வழங்கப்பட்ட இரண்டாவது ஆய்வறிக்கையில், ஃபிராங்க் மற்றும் ஹெர்ட்ஸ் ஆகியோர் பாதரச அணுக்களின் ஒளி உமிழ்வு குறித்து மோதல்களில் இருந்து சக்தியை உறிஞ்சினர். இந்த புற ஊதா ஒளியின் அலைநீளம் பறக்கும் எலக்ட்ரான் இழந்த 4.9 ev ஆற்றலுடன் சரியாக ஒத்திருப்பதை அவர்கள் காண்பித்தனர். ஆற்றல் மற்றும் அலைநீளத்தின் உறவும் போரால் கணிக்கப்பட்டது. ஃபிராங்க் மற்றும் ஹெர்ட்ஸ் டிசம்பர் 1918ல் தங்கள் கடைசி ஆய்வறிக்கையை ஒன்றாக முடித்தனர். அதில், அவற்றின் முடிவுகளுக்கும் போரின் கோட்பாட்டிற்கும் இடையிலான முரண்பாடுகளை அவர்கள் சமரசம் செய்தனர், அவை இப்போது ஒப்புக் கொண்டுள்ளன. தனது நோபல் சொற்பொழிவில், ஃபிராங்க் “போரின் கோட்பாட்டின் அடிப்படை முக்கியத்துவத்தை அங்கீகரிக்கத் தவறிவிட்டோம் என்பது முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதது என்று ஒப்புக் கொண்டார். டிசம்பர் 10, 1926ல், ஒரு அணுவின் மீது எலக்ட்ரானின் தாக்கத்தை நிர்வகிக்கும் சட்டங்களை கண்டுபிடித்ததற்காக ஃபிராங்க் மற்றும் ஹெர்ட்ஸுக்கு 1925 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஃபிராங்க் இயற்பியல் வேதியியலுக்கான கைசர் வில்ஹெல்ம் கெசெல்செப்டின் இயற்பியல் பிரிவின் தலைவரானார். 1920 ஆம் ஆண்டில், ஃபிராங்க் சோதனை இயற்பியலின் பேராசிரியர் ஆர்டினாரியஸாகவும், கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சோதனை இயற்பியலுக்கான இரண்டாவது நிறுவனத்தின் இயக்குநராகவும் ஆனார். அங்கு அவர் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த மேக்ஸ் பார்னுடன் குவாண்டம் இயற்பியலில் பணியாற்றினார். அவரது படைப்பில் ஃபிராங்க்-ஹெர்ட்ஸ் பரிசோதனையும் அடங்கும், இது அணுவின் போர் மாதிரியின் முக்கியமான உறுதிப்படுத்தல் ஆகும். அவர் இயற்பியலில் பெண்களின் வாழ்க்கையை ஊக்குவித்தார், குறிப்பாக லிஸ் மீட்னர், ஹெர்தா ஸ்போனர் மற்றும் ஹில்டே லெவி.
1933ல் ஜெர்மனியில் நாஜி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, சக கல்வியாளர்களை வெளியேற்றுவதை எதிர்த்து ஃபிராங்க் தனது பதவியை ராஜினாமா செய்தார். நவம்பர் 1933ல் ஜெர்மனியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பணிநீக்கம் செய்யப்பட்ட யூத விஞ்ஞானிகளுக்கு வெளிநாடுகளில் வேலை தேட அவர் உதவினார். டென்மார்க்கில் உள்ள நீல்ஸ் போர் நிறுவனத்தில், அங்கு பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் அமெரிக்காவுக்குச் சென்றார் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஒளிச்சேர்க்கையில் ஆர்வம் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது மன்ஹாட்டன் திட்டத்தில் ஃபிராங்க் உலோகவியல் ஆய்வகத்தின் வேதியியல் பிரிவின் இயக்குநராக பங்கேற்றார். அணு குண்டு தொடர்பான அரசியல் மற்றும் சமூக சிக்கல்கள் குழுவின் தலைவராகவும் இருந்தார். இது ஃபிராங்க் அறிக்கையின் தொகுப்பிற்கு மிகவும் பிரபலமானது. இது ஜப்பானிய நகரங்களில் அணு குண்டுகளை எச்சரிக்கையின்றி பயன்படுத்தக்கூடாது என்று பரிந்துரைத்தது.
அயனி இயக்கம் பற்றிய ஆரம்பகால ஆய்வுகள் முதல் ஒளிச்சேர்க்கை குறித்த அவரது கடைசி வேலை வரை அவரது ஆராய்ச்சி கிட்டத்தட்ட ஒரு நேர் கோட்டைப் பின்பற்றியது. அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையேயான ஆற்றல் பரிமாற்றம் எப்போதும் அவரைக் கவர்ந்தது. நோபல் பரிசுக்கு கூடுதலாக. 1955 ஆம் ஆண்டில் ஃபிராங்க் டாய்ச் பிசிகலிசே கெசெல்சாஃப்ட்டின் மேக்ஸ் பிளாங்க் பதக்கத்தையும், 1955 ஆம் ஆண்டில் ஒளிச்சேர்க்கை குறித்த தனது பணிக்காக அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் ரம்ஃபோர்டு பதக்கத்தையும் பெற்றார். 1953 ஆம் ஆண்டில் கோட்டிங்கனின் கவுரவ குடிமகனாக ஆனார். ஜேம்ஸ் ஃபிராங்க் மே 21, 1964ல் தனது 65வது அகவையில் கோட்டிங்கனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1967 ஆம் ஆண்டில், சிகாகோ பல்கலைக்கழகம் ஜேம்ஸ் ஃபிராங்க் இன்ஸ்டிடியூட் என்று பெயரிட்டது. அவரது நினைவாக ஒரு சந்திர பள்ளம் பெயரிடப்பட்டுள்ளது. அவரது ஆவணங்கள் சிகாகோ பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஹெர்த்தா அயர்ட்டன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1923).
ஹெர்த்தா அயர்ட்டன் (Hertha Ayrton) ஏப்ரல் 28, 1854ல் இங்கிலாந்து, ஹேம்ப்சைர், போபி சாரா மார்க்ஸ் என்னும் இடத்தில் பிறந்தார். லிவி மார்க்ஸ் என்ற போலந்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்த கடிகாரம் செய்து வாழ்க்கை நடத்திய யூதருக்கும் அலைஸ் தெரசா மோஸ் என்னும் தாயாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். ஏழு குழந்தைகளையும் கருவுற்றுருந்த மனைவியையும் விட்டுவிட்டு இவர் தந்தை 1861ம் ஆண்டு காலமாகிவிட்டார். சாரா அதன்பின் தமது இளைய சகோதர சகோதரிகளைப் பாா்க்கும் பணியையும் செய்துவந்தார். இவருக்கு 9 வயது ஆகும் பொழுது, இவருடைய பெற்றோாின் உடன் பிறந்தோர் அழைப்பின் பேரில் லண்டன் நகரம் சென்றார். அங்கு அவர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து கல்வி கற்க முடிந்தது. இவருடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இவர் ஒரு கோபக்காரர், பண்படாதவர் என்று அறியப்பட்டார். இவர் உறவினர்கள் இவரை அறிவியலுக்கும் கணிதவியலுக்கும் அறிமுகப்படுத்தினர். தமது 16வது வயதில் இவர் குழந்தைகளுக்கு வீடுகளில் பாடம் கற்பிக்கும் பெண்ணாகப் பணிபுரியத் துவங்கினார்.
அயா்டன் வளரிளம் பருவத்தினராக இருக்கும் பொழுதே ஒடுக்கப்படும் பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியின் இணை நிறுவனர் பார்பரா போடிசனுடன் தொடா்பு கிடைத்தது. போடிசன், அயர்ட்டன் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்கு உதவி செய்ததுடன் தனது சொத்தையும் இறுதியில் அயர்ட்டனுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார். அயா்டன், கிா்டன் கல்லூரியில் கணிதவியலும், ரிச்சா்டு கிளேசு புக் அவா்களிடம் இயற்பியலும் கற்றுக் கொண்டாா். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அயா்டன், இரத்த அழுத்தமானி (ஸ்பிக்மோமேனே மீட்டரை) உருவாக்கினாா். கிா்டன் கல்லூரியின் தீயணைக்கும் படையை நிறுவியது மட்டுமல்லாமல் சாா்லட் ஸ்காட்டுடன் சோ்ந்து கணிதவியல் சங்கத்தையும் ஏற்படுத்தினாா். 1880ம் வருடம் அயா்டன் கணிதத்தில் சிறப்புப் பட்டத் தோ்வில் தோ்ச்சி பெற்ற போதும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவருக்கு பெண் என்பதால் பட்டம் வழங்காமல் நற்சான்றிதழ் மட்டும் வழங்கியது. 1881ம் ஆண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் அறிவியல் இளங்கலை வகுப்பில் ஒரு வெளி மாணவியாக பட்டம் பெற்றாா்.
லண்டன் திரும்பிய அயா்டன் துணியில் தையல் பூவேலை செய்வதை சொல்லிக் கொடுத்தும், வேலை செய்யும் பெண்களுக்காக குழு ஒன்றை நடத்தியும் பணம் ஈட்டி தமது மாற்றுத் திறனாளியான சகோதரியைக் கவனித்து வந்தாா். தாம் கற்றுக் கொண்ட கணிதத்தைப் பயன்படுத்தி பல சவால்களுக்குத் தீா்வும் கண்டு வந்தாா். இவைகளை “எஜிகேசனல் டைம்ஸ்” என்னும் பத்திரிக்கையில் ‘கணிதக் கேள்விகளும் அவற்றின் விடைகளும்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளாா். நாட்டில் ஹில் மற்றும் யேலிஸ் உயா்நிலைப் பள்ளியில் கணிதம் கற்பித்தும் வந்தாா். 1884ம் ஆண்டு அயா்டன் ஒரு நோ்கோட்டை பிரிக்கும் கருவியைக் கண்டுபிடித்து காப்புரிமையும் பெற்றாா். இக்கருவி ஒரு நோ்கோட்டை எத்துணை சம பாகங்களாகவும் பிரிக்க வல்லது. பிரித்தவற்றை பெரிதாக்கவும், சிறிதாக்கவும் இயலும். இக்கருவி ஓவியா்களுக்கும் பொறியாளா்களுக்கும் கட்டிடக் கலைஞா்களுக்கும் உதவியாக இருக்கும்.
இதுவே இவா் முதல் கண்டுபிடிப்பாகும். இவருடைய, காப்புரிமை பெரும் முயற்சிக்கு, லௌசிய கோல்ட்ஸ் மிட் என்பவரும், பெண் உாிமை முன்னோடி பாா்பரா போடிசன் அவா்களும் நிதி உதவி செய்து வந்தனா். இவருடைய இந்த கண்டுபிடிப்பு பெண்களுக்கான தொழிற்கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. அயா்டன் பெற்ற காப்புரிமைகளில் 1884 ஆம் ஆண்டு பெற்றது முதல் காப்புரிமைதான். இதனைத் தொடா்ந்து இறுதிவரை 26 காப்புரிமைகள் பெற்றுள்ளாா். இவற்றில் 5 கணிதவியல் தொடா்பானவை. 13 வட்டவில் விளக்கு மற்றும் எலக்ட்ரோடு தொடா்பானவை. ஏனைய காற்றின் உந்து சக்தி தொடா்பானவையாகும். , 1884ம் ஆண்டு மின்சார பொறியியலில் பாடத்தையும் இயற்பியல் பாடத்தையும், அயா்டன், பின்ஸ்பரி பொறியியல் கல்லூரியில் சோ்ந்து கற்று வந்தாா். மே 6, 1885ல் தனது முன்னாள் ஆசிரியரைத் திருமணம் செய்து கொண்டு இயற்பியல் மற்றும் மின்சாரம் குறித்த அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவந்தார். இதனைத் தொடா்ந்து மின்சார வட்டவில் தொடா்பான தமது ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்தாா்.
19ம் நூற்றாண்டு இறுதியில் பொது இடங்கில் மின்சார வட்டவில் விளக்கின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வந்தது. இந்த விளக்குகள் மின் மினுப்பதும் ஹிஸ் என்று ஒலி எழுப்புவதும் பெரிய சிக்கலாக இருந்து வந்தது. இதுகுறித்து, அயா்டன் வட்டவில்லை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் காா்பன் கட்டைகளுடன் பிராணவாயு தொடா்பு கொள்வதுதான் இதற்குக் காரணம் என்று தொடா்ச்சியாக கட்டுரைகள் எழுதி “எலக்டிாிசியன்” என்னும் இதழில் வெளியிட்டு வந்தாா். 1899ம் ஆண்டு மின்சார பொறியாளா்கள் நிறுவனத்தில் தாம் வெளியிட்ட கட்டுரையை தாமே வாசிக்கும் முதல் நபா் என்னும் பெருமையைப் பெற்றாா். “மின்சார வட்டவில்லின் ஹிஸ் சத்தம்” என்பது அக்கட்டுரையின் பெயா். இதனைத் தொடா்ந்து இந்த நிறுவனத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்னும் பெருமை பெற்றாா். இவருக்கு அடுத்து வேறொரு பெண்மணி தோ்ந்தெடுக்கப்பட்டது 1958ல் தான். ராயல் சங்கத்தில் இதுபோன்று தமது கட்டுரையை வாசிக்க அனுமதி கேட்டபோது, இவா் பெண் என்பதால் அது மறுக்கப்பட்டது.
1901ம் ஆண்டு “மின்சார வட்டவில்லின் இயந்திர அமைப்பும் அது வேலை செய்யும் விதமும் என்னும் இவா் கட்டுரை இவருக்காக ஜான் பொி என்பவரால் வாசிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மின்சாரப் பொறியியல் தொடா்பாக இவருடைய பங்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பொிதும் அங்கீகரிக்கப்பட்டது. 1899 ஆண்டு லண்டனில் நடந்த பன்னாட்டு பெண்கள் மகாசபையில் இயற்பியல் தொடா்பான பிரிவிற்கு இவா் தலைமை வகித்தாா். 1900 ஆண்டு பாரிசில் நடந்த பன்னாட்டு மின்சார மகாசபையில் இவா் உரையாற்றினாா். இங்கு இவருக்குக் கிடைத்த வெற்றியினால் அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரித்தானிய சங்கத்தில் பொதுக் குழு மற்றும் பிரிவுக் குழுக்களில் பெண்கள் பங்கேற்க வகை செய்தது. 1895, 1896ம் ஆண்டுகளில் தாம் வெளியிட்ட மின்சார வட்டவில் தொடா்பான கட்டுரைகளின் சாரத்தை 1902ம் ஆண்டு அயா்டன் மின்சார வட்டவில் என்று புத்தகமாக வெளியிட்டாா். இந்த வெளியீட்டினால் மின்சாரப் பொறியியலில் அயா்டன் பங்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும், ராயல் சங்கம் போன்ற செல்வாக்கும் நன்மதிப்பும் உடைய அறிவியல் அமைப்புக்களிடம் அயா்டனுக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை.
மின்சார வட்டவில் குறித்த இவா் புத்தகம் வெளியிடப்பட்ட பின், 1902ம் ஆண்டு ராயல் சங்கத்தின் உறுப்பினரும் பெருமை பெற்ற மின்சாரப் பொறியாளாருமான ஜான் பெரி, அயா்டன் பெயரை ராயல் சங்கத்தின் உறுப்பினராக முன்மொழிந்தாா். ஆனால் திருமணமான பெண்மணிகளை உறுப்பினராக ஏற்க மறுத்த ராயல் சங்கம் இவா் மனுவை நிராகரித்து விட்டது. 1904ம் ஆண்டு “அதிர்வுகள் குறியீடுகளின் தோற்றமும் வளா்ச்சியும்” என்னும் கட்டுரையை ராயல் சங்கத்தில் வாசித்ததன் மூலம், இப் பெருமை பெற்ற முதல் பெண்மணியாக அயா்டன் திகழ்ந்தாா். 1906ம் வருடம் இவருடைய மின்சார வட்டவில் குறித்தும் மணல் அதிர்வுகள் குறித்த ஆய்வுகளுக்காக ராயல் சங்கம் ‘ஹயூக்ஸ் விருதை’ அயா்டனுக்கு வழங்கி கவுரவித்தது. இந்தச் சாதனைக்கு இவா்தான் முதல் சொந்தக்காரா். மேலும் 2015ம் ஆண்டு வரை இது போன்ற பெருமை பெற்ற பெண்மணிகள் அயா்டன் உட்பட இருவா்தான்.
அயா்டன் ராயல் சங்கத்தில் 1901-1929ம் ஆண்டுகளுக்கிடையே ஏழு கட்டுரைகளைச் சமா்ப்பித்துள்ளாா். கடைசிக் கட்டுரை இவா் இறந்த பின் வாசிக்கப்பட்டது. பிரித்தானிய சங்கத்திலும் இயற்பியல் சங்கத்திலும் இவா் தமது ஆராய்ச்சிக் கட்டுரைகளின் முடிவை சமா்ப்பித்துள்ளாா். அயா்டன் நீரின் சுழற்சியிலும் காற்றின் சுழற்சியிலும் காட்டிய ஆா்வம் ‘அயா்டன் காற்றாடி’யாக உருவெடுத்தது. இவைகள் முதலாம் உலகப் போாில் பதுங்கு குழிகளில் நச்சுப் புகையைப் போக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அயா்டனின் தீவிர முயற்சியினால் 1,00,000 உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு மேற்கத்திய போா்முனையில் பயன்படுத்தப்பட்டன. அயா்டன் 1919ம் ஆண்டு பெண்கள் பல்கலைக் கழகத்தின் பன்னாட்டு கூட்டமைப்பை நிறுவுவதற்கும் 1920ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழிலாளா் சங்கத்தை நிறுவுவதற்கும் உதவியாக இருந்துள்ளாா். மின்சார வட்டவில் விளக்கு மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஹெர்த்தா அயர்ட்டன் ஆகஸ்டு 26, 1923ல் தனது 69வது அகவையில் லான்சிங், நியூகாட்டேஜ் என்னும் இடத்தில் ஒரு பூச்சி கடித்ததால் இரத்தத்தில் விசம் கலந்து, இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
1923ம் ஆண்டு, அயா்டன் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அயா்டனின் ஆயுள்கால நண்பா் ஒட்டிலி ஹேன் காக், கிாிடன் கல்லூரியில் ஹொ்த்தா அயா்டன் ஆராய்ச்சி நிதியை ஏற்படுத்தியுள்ளாா். பெட்டிங்டன் நகரம் நெட்போா்க் சதுக்கத்தில் இவா் நினைவைப் போற்றும் வண்ணம் 2007ம் ஆண்டு ஒரு நீலக் கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பேனாசோனிக் அறக்கட்டளை தமது 25 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதற்கு ஹொ்த்தா மாா்க் அயா்டன் நிதி என்ற நிதியத்தை நிறுவியுள்ளது. 2010ம் ஆண்டு ராயல் சங்கத்தின் பெண் உறுப்பினா்களும் அறிவியல் சரித்திர ஆசிரியா்களும் இணைந்து, அறிவியல் சரித்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 பெண்மணிகளில் அயா்டன் ஒருவா் என்று தோ்ந்தெடுத்துள்ளனா். 2015ம் ஆண்டு அறிவியல் சரித்திரத்திற்கான பிரித்தானிய சங்கம் அயா்டன் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தியுள்ளது. 2016ம் ஆண்டு கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகக் குழு வடமேற்கு கேம்பிரிட்ஜு மேம்பாட்டின் ஒரு பகுதிக்கு அயர்டனின் பெயரைச் சூட்ட தீர்மானித்துள்ளது. 2017ம் ஆண்டு செஃபில்டு ஹாலம் பல்கலைக் கழகம் தங்கள் ஸ்டெம் மையத்திற்கு அயா்டன் பெயரைச் சூட்டியுள்ளனா்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டைனமோவை கண்டுபிடித்த, சிறந்த சோதனையாளர், மைக்கேல் பாரடே நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 1867).
மைக்கேல் பாரடே (Michael Faraday) செப்டம்பர் 22, 1791ல் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய எலிபண்ட் அண்ட் காசில் என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது. இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, பாரடே அனுப்பினார்.
சந்தர்ப்பம் வரும்போது பரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு வேதியியற் சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் பரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ரோயல் சொசைட்டியில் அப்போதிருந்த சோதனைச்சாலை உதவியாளர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, பரடேக்குப் பெற்றுக்கொடுத்தார். அக்காலத்து வகுப்பு அடிப்படையிலான சமுதாயத்தில், பரடே ஒரு கனவானாகக் கருதப்படவில்லை. 1813 தொடக்கம் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பாரடேயும், டேவியின் அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ், பாரடேயை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந் துன்பமடைந்த பரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே பாரடே, டேவியிலும் புகழ் பெற்றவர் ஆனார்.
மைக்கேல் பாரடே ஆரம்பகாலத்தில் ஹம்ப்ரி டேவியின் உதவியாளராக பணிபுரிந்தார். பாரடே குறிப்பாக குளோரின் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் குளோரின் மற்றும் கார்பன் ஆகியவற்றை கொண்டு இரண்டு புதிய வேதியல் கலவைகளை கண்டுபிடித்தார். வாயுக்களின் பரவலைப் பற்றிய முதல் கடினமான பரிசோதனையும் அவர் நடத்தினார். இது ஜான் டால்டன் முதலில் சுட்டிக்காட்டிய ஒரு நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் முக்கியத்துவம் தாமஸ் கிரஹாம் மற்றும் ஜோசப் லோஸ்மிமிட் ஆகியோரால் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. பாரடே பல வாயுக்களை திரவமாக்கினார். எஃகின் உலோகக் கலவைகளை ஆய்வு செய்தார். மேலும் பல புதிய வகையான கண்ணாடிகளை ஒளியியல் நோக்கங்களுக்காக உருவாக்கினார். புன்சன் பர்னரின் ஆரம்ப வடிவத்தை பாரடே கண்டுபிடித்தார். இது உலகெங்கிலும் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் வெப்பத்தை உண்டாக்கும் வசதியான ஆதாரமாக நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. பாரடே வேதியியல் துறையில் விரிவாகப் பணியாற்றினார், பென்சீன் போன்ற இரசாயன பொருட்கள் (அவர் ஹைட்ரஜன் பைக்கார்புரத் என அழைத்தார்) மற்றும் குளோரின் போன்ற திரவ வாயுக்களை கண்டுபிடித்திருக்கிறார்.
வாயுக்களின் திரவமாக்குதல், வாயுக்கள் திரவங்களை மிக குறைந்த கொதிநிலை கொண்டிருக்கும் நீராவிகளாக மாற்றியமைக்க உதவியது மற்றும் மூலக்கூறு திரட்சியின் கருத்துக்கு இன்னும் திடமான அடிப்படையை வழங்கியது. கார்பன் மற்றும் குளோரின், C2Cl6 மற்றும் C2Cl4 ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கலங்களின் முதல் தொகுப்பை பாரடே 1820 ஆம் ஆண்டில் வெளியிட்டார். மேலும் அடுத்த ஆண்டு தனது முடிவுகளை வெளியிட்டார். 1810 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி டேவினால் கண்டுபிடிக்கப்பட்ட குளோரின் க்ளேரேட் ஹைட்ரேட் தொகுப்பை பாரடே நிரூபித்தார். மின்னாற்பகுப்பின் விதிகளை கண்டுபிடிப்பதற்கும், நேர்மின், எதிர்மின், மின்முனை மற்றும் அயனி போன்ற சொற்களஞ்சியங்களை பிரபலப்படுத்துவதற்கும் பாரடே பொறுப்பாளியாக உள்ளார். மின்சாரம் மற்றும் காந்தவியல் தொடர்பான அவரது ஆராய்ச்சிகளுக்கு பாரடே புகழ்பெற்றவர். அவரது முதல் பதிவு செய்யப்பட்ட பரிசோதனை ஏழு நாணயங்களைக் கொண்ட ஒரு வோல்டாக் குவியலைக் உருவாக்கியதாகும், ஏழு வட்டு துத்தநாகத் துணுக்குகள் மற்றும் உப்பு நீரில் கரைக்கப்பட்ட ஆறு காகித துண்டுகளால் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது. இந்த குவியலோடு அவர் மக்னீசியம் சல்பேட் கலந்துவிட்டார். பாரடேயின் 1831 சோதனைகள் ஒரு ஆய்வை நிரூபிக்கின்றன.
1821 ஆம் ஆண்டில், டேனிஷ் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் மின்காந்தவியல் நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, டேவி மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் ஹைட் வொல்லஸ்டன் ஒரு மின்சார மோட்டார் வடிவமைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதில் தோல்வி கண்டனர். பாரடே, இருவர்களுடனான பிரச்சனையைப் பற்றி பேசினார். அவர் “மின்காந்த சுழற்சியை” என்று அழைத்த இரண்டு சாதனங்களை உருவாக்கினார். இவற்றில் ஒன்று, ஒற்றைதுருவ மோட்டார் என அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான் வட்டபாதை கொண்ட சுழற்சியை அல்லது இயக்கத்தை உருவாக்கியது. அது ஒரு காந்தத்தை வைக்கப்படும் பாதரசத்தின் ஒரு நீளத்திற்கு நீட்டிக்கப்பட்ட ஒரு வட்டத்தை சுற்றி வட்ட சுழற்சியை காந்த விசை மூலம் உருவாக்கப்பட்டது. வேதியியல் பேட்டரி மூலம் மின்னோட்டத்தை வழங்கினால், கம்பி பின்னர் காந்தத்தை சுற்றி சுழலும். இந்த சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை அமைத்தன.
பாரடே இந்த கண்டுபிடிப்பின் உற்சாகத்தில், வொல்லஸ்டன் அல்லது டேவிடனுடன் தனது கண்டுபிடிப்பை பற்றி கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவுகளை வெளியிட்டார். ராயல் சொசைட்டிற்குள் ஏற்பட்ட சர்ச்சையால் டேவியுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக மின்காந்தவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதைத் தடுக்க மற்ற நடவடிக்கைகளுக்கு பாரடே நியமிக்கப்பட்டிருக்கலாம். 1821 ஆம் ஆண்டில் அவரது ஆரம்ப கண்டுபிடிப்பிலிருந்து, பாரடே தனது ஆய்வகப் பணியை தொடர்ந்தார். பொருட்களின் மின்காந்த பண்புகளை ஆய்வுசெய்து தேவையான அனுபவத்தை வளர்த்துக் கொண்டார். 1824 ஆம் ஆண்டில், பாரடே, ஒரு காந்த மண்டலம் தற்போதைய ஒரு ஓட்டத்தில் மின்னோட்டத்தை ஒழுங்குபடுத்த முடியுமா என்று ஆராய ஒரு படிப்பு வட்டத்தை அமைத்தார். ஆனால் அத்தகைய உறவு எதுவும் இல்லை பல கட்ட சோதனைகள் மூலம் நிருபனமானது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளி மற்றும் காந்தங்கள் மூலம் நடத்தப்பட்ட இதேபோன்ற வேலைகளைத் தொடர்ந்து இந்த சோதனையும் ஒரே மாதிரியான முடிவுகளை அளித்தது.
1832 ஆம் ஆண்டில், மின்சாரத்தின் அடிப்படைத் தன்மையைப் பற்றி ஆராயும் நோக்கில் தொடர்ச்சியான சோதனைகளை அவர் நிறைவு செய்தார். மின்னாற்பகுப்பு ஈர்ப்பு, மின்னாற்பகுப்பு, காந்தவியல் ஆகியவற்றின் நிகழ்வை தயாரிப்பதற்காக “நிலையான”, பேட்டரிகள் மற்றும் “விலங்கு மின்சாரம்” ஆகியவற்றை பாரடே பயன்படுத்தினார். அவர்து காலத்தின் விஞ்ஞான அபிப்பிராயத்திற்கு மாறாக, பல்வேறு “வகையான” மின்சக்தி மாயைகளை. அதற்குப் பதிலாக பாரடே ஒரே ஒரு “மின்சாரம்” மட்டும் இருப்பதாக முன்மொழிந்தார். மேலும் அளவு மற்றும் தீவிரத்தன்மை (தற்போதைய மற்றும் மின்னழுத்தம்) ஆகியவற்றின் மாறிவரும் மதிப்பீடுகள் வெவ்வேறு குழுக்களில் நிகழ்வுகளை உருவாக்கின. அவருடைய ஆராய்ச்சிகளின் முடிவில், பாரடே, மின்காந்தவியல் விசை கடத்தி வெற்று இடம் வரை நீட்டியது என்று முன்மொழிந்தார். இந்த யோசனை அவரது சக விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டது மற்றும் பின் வந்த அறிஞர்கள் அறிவியலில் அவரது கருத்தை இறுதியாக ஏற்றுக்கொண்டதை பார்க்க அப்போது பாரடே உயிரோடுடில்லை. மின்னூட்டங்கள் மற்றும் காந்தங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் புலன் கோடுகள் மின்சார மற்றும் காந்த புலங்களைப் பார்ப்பதற்கு வழிவகுத்தன.
பாரடே சோதனைச் சாலையில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். குறிப்பாக, மின்சாரம், காந்தம் துறைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். மின்சாரத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்துகொண்டே இருந்தார். ஏதோ ஒரு இடத்தில் ஷாக் அடிக்கிறதே அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தார். மின்சாரத்தைக் கம்பியின் மூலம் அனுப்பும்போது, பக்கத்தில் இருக்கும் திசைகாட்டி காந்தம் திரும்பிவிடுகிறது என்பதையும் ஆராய்ந்து, காந்தத்தின் மூலமும் மின்சாரத்தை இயக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். அவருடைய ஆய்வுகள் அனைத்தும் மின்சாரம், காந்தம் தொடர்புடையவையாகவே இருந்தன. எலக்ட்ரோ மேக்னட் துறையின் தந்தை என்று இவர் கருதப்பட்டார். மின்னணு என்று சொல்லப்படும் எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் புதிய தடங்களைப் பதித்தார்.
19 ஆம் நூற்றாண்டின் எஞ்சியுள்ள பொறியியல் மற்றும் தொழில்துறைக்கு ஆதிக்கம் செலுத்திய மின்மயமான சாதனங்களின் வெற்றிகரமான வளர்ச்சிக்கான பாரடேயின் கருத்தாய்வு மாதிரியானது முக்கியமானதாக இருந்தது. இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். மைக்கேல் பாரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம். மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை அமைத்த மைக்கேல் பாரடே ஆகஸ்ட் 25, 1867ல் தனது 75வது அகவையில் மிடில்செக்ஸ், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹென்றி பெக்கெரல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 1908).
அந்துவான் என்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel) டிசம்பர் 15, 1852ல் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவர் மற்றும் இவரது மகன் சீன் உட்பட நான்கு தலைமுறை அறிவியலாளர்களை இவரது குடும்பம் பெற்றுள்ளது. 1892 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் இயற்பியல் பிரிவின் தலைவராகவும், பின்னர் 1894ல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் ஆனார். பெக்கெரல் 1896ல் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence) ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்லெம் ரோண்ட்கனின் கண்டுபிடிப்புகளை ஆராயும் ஒரு சோதனையில், பெக்கெரல் ஒளிப்பாயப் பொருளான பொட்டாசியம் யூரனைல் சல்பேற்றை ஒளிப்படத் தட்டுக்களில் (photographic plates) வைத்து, தட்டுகளை கருப்புக் காகிதத்தினால் சுற்றி வைத்து சூரிய ஒளியை செலுத்தினார். வெயில் சூடேறும்படி விடப்பட்டிருந்த பொருள்களில் சில, பின்னர் இருட்டில் பளபள என்று ஒளி வீசுவதைப் பற்றிய ஆராய்ச்சியே அந்த ஒளிர்தல் என்ற தத்துவம். அவருடைய அறிவியல் ஆய்வில், யூரேனியம் அடங்கிய பொருளாகிய பிட்சு-பிலெண்ட் என்பதில் யுரேனியத்தைத் தவிர, வேறு ஏதோ ஒரு தனிமம் இருக்கிறது என்பதைக் கண்டார். ஆனாலும் பரிசோதனை தொடங்க முன்னரே புகைப்படத் தட்டுக்கள் முழுமையாகப் பாதிப்படைந்ததை (exposed) அவதானித்தார்.
யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக 1903ல் மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு (S.I Unit) இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது. 1908ல் பெக்கெரல் அறிவியல் கழகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார். ரம்ஃபோர்ட் விருது (1900), ஹெல்ம்ஹோல்ட்ஸ் விருது (1901), இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903), பார்னார்ட் விருது (1905) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹென்றி பெக்கெரல் ஆகஸ்ட் 25, 1908ல் தனது 55வது அகவையில் பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலவில் தரையிறங்கிய முதல் மனிதர், அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 2012).
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) ஆகஸ்ட் 5, 1930ல் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக பணிபுரிந்தார். அதனால் அவர் மாநிலத்திற்குள் 20 நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஆம்ஸ்ட்ராங் இரண்டு வயதாக இருந்தபோது க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங்கின் பறக்கும் ஆசைகள் இந்த நேரத்தில் வளரத் தொடங்கியது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது, ஜூலை 20, 1936ல் வாரன், ஓஹியோவில் தனது முதல் விமானப் பயணத்தை அவர் அனுபவித்தார். அவரும் அவருடைய அப்பாவும் “டின் கூஸ்” என்றும் அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடரில் சவாரி செய்தனர். அவரது தந்தை கடைசியாக மீண்டும் வாப்கோநெட்டா நகரத்திற்கு 1944 ஆண்டு திரும்பி வந்தார்.
ஆம்ஸ்ட்ராங் பூளூம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேலும் வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை பெற்றார். அவர் தனது 16 ஆவது வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் ஒட்டுனர் உரிமமும் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் ஆண் சாரண இயக்கத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவராக இருந்தார். அதனால் அவருக்கு கழுகு சாரணர் என்ற பட்டம் கிடைத்தது. அமெரிக்காவின் பாய்ஸ் ஸ்கவுட்ஸ் ஆப் அமெரிக்கா அதன் புகழ்பெற்ற ஈகிள் ஸ்கவுட் விருது மற்றும் சில்வர் பஃபேலா விருது ஆகியவற்றால் அவரை அங்கீகரித்தது. 1947 ஆம் ஆண்டில், 17 வயதில், ஆம்ஸ்ட்ராங் பர்டீ பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலைப் படிக்கத் தொடங்கினார். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு சென்று படிக்கும் இரண்டாவது நபராக இருந்தார். அவருக்கு மாஸாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) படிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. அவருக்கு தெரிந்த MITயில் படித்த நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அவர் MIT சேரவில்லை.
ஜனவரி 26, 1949ல் கடற்படையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அவரது 18 ஆம் வயதில் விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவுக்கு அவர் நேரில் ஆஜாராக வேண்டும் என்று அந்த அழைப்பு வந்திருந்தது. இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட 18 மாதங்கள் நீடித்தது. அப்போது அவர் USS Cabot (கபோட்) மற்றும் USS Wright (ரைட்) ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமான இயங்குவதற்கு தகுதி பெற்றார். ஆகஸ்ட் 16, 1950ல் அவரது 20 வது பிறந்தநாளில் இருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் கடற்படை விமானிக்கான முழுத் தகுதியும் பெற்று விட்டார் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. தனது முதல் பணியாக கப்பல் விமானப் படை ஸ்கோட்ரான் 7ல், NAS சான் டியாகோவில் (NAS வட தீவு) ஆரம்பித்தார். இரண்டு மாதங்கள் கழித்து அவர் ஃபெடரல் ஸ்கோட்ரான் 51 (VF-51), அனைத்து ஜெட் விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார். ஜனவரி 5, 1951ல் அன்று ஒரு F9F-2B பாந்தர் விமானத்தில் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார்.
ஜூன் மாதம், அவர் தனது முதல் ஜெட் விமானத்தை USS Essex (எசெக்ஸ்) விமானம் தாங்கி கப்பல் மீது தரையிறக்கினார். அந்த மாத இறுதியில், எசெக்ஸ் கப்பல் தனது VF-51 விமானங்களுடன் கொரியாவுக்கு புறப்பட்டது. ஆகஸ்ட் 29, 1951ல் சோஞின் மீது ஒரு புகைப்பட உளவுத் திட்டத்தின் துணை விமானியாக கொரிய யுத்தத்தில் ஆம்ஸ்ட்ராங் முதலில் பணி செயதார். ஐந்து நாட்களுக்கு பின்னர் செப்டம்பர் 3ல் வொன்சனின் மேற்குப் பகுதியான மஜோன்-நியின் தெற்கே பிரதானப் போக்குவரத்து மற்றும் சேமிப்பக வசதிகள் மீது ஆயுதமேந்திய விமானதுடன் அவர் பறந்தார். சுமார் 350 mph (560 km/h) வேகத்தில் சென்று சிறிய குண்டு வீசும் போது, ஆம்ஸ்ட்ராங்கின் F9F பாந்தர் விமானம், விமான எதிர்ப்பு ஏவுகனையால் தாக்கப்பட்டது. கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றபோது, அவரின் பாந்தர் விமானத்தின் வலது இறக்கை மூன்று அடி (1 m) துண்டிக்கப்பட்ட சுமார் 20 அடி (6 m) உயரத்தில் ஒரு முனையில் மோதியது. ஆம்ஸ்ட்ராங் விமானத்தை நட்பு பிரதேசத்திற்கு பறந்து சென்று அவர் தண்ணீரில் விமானத்தை இறக்க திட்டமிட்டார். ஏனென்றால் கடற்படை ஹெலிகாப்டர்களால் காப்பாற்றப்படுவார் என்று நினைத்தார். இதுவே அவரின் ஒரே பாதுகாப்பான விருப்பமாக இருந்தது.
அதனால் போஹங்கிற்கு அருகே ஒரு விமானநிலையத்திற்கு பறந்தார். அவர் ஆபத்துக் கால தப்பிக்கும் வழிமுறையை பயன்படுத்தி வெளியேற முயன்று மீண்டும் நிலத்தில் இருக்கையுடன் தூக்கி வீசிப்பட்டார். அவரது விமான பள்ளியில் இருந்து அறைத்தோழர் ஒருவர் ஒரு ஜீப்பில் வந்து ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்றினார். 125122 F9F-2 என்ற விமான அழிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொரியா மீது 78 முறை பறந்தார். மொத்தம் 121 மணி நேரம் காற்றில் பறந்தார். அவர் முடித்த 20 போர் முயற்சிகளுக்கான விமானப் பதக்கம், அடுத்த புதிய 20 முயற்சிகளுக்கான தங்க நட்சத்திரம் மற்றும் கொரிய சேவை பதக்கம் மற்றும் என்கேஜ்மன்ட் நட்சத்திரம் ஆகியவற்றைப் பெற்றார். ஆகஸ்ட் 23, 1952ல் 22 ஆம் வயதில் ஆம்ஸ்ட்ராங் கடற்படை சேவையில் இருந்து ராஜினாமா செய்தார்.
கடற்படை சேவைக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் பர்டீ திரும்பினார். கொரியாவில் இருந்து திரும்பிய பிறகு வந்த நான்கு பருவ தேர்வுகளில் அவர் சிறந்த மதிப்பெண்களை பெற்றார். அவர் முன்பு சராசரி மதிப்பெண்கள் பெற்றார். அவர் திரும்பிய பிறகு ஃபை டெல்டா தீட்டா சகோதரத்துவம் பங்களிக்க உறுதியளித்தார். மேலும் அனைத்து மாணவர்களின் எழுச்சியின் ஒரு பகுதியாக தனது பங்களிப்பாக ஒரு சக இசை இயக்குனராக இசை அமைத்தார். அவர் கப்பா கப்பா சை தேசிய விருது பெற்ற பேண்ட் சகோதரத்துவத்தின் உறுப்பினராகவும், பர்டீ அனைத்து அமெரிக்க அணிவகுப்புப் பேண்டில் ஒரு பாரிடோன் வீரராகவும் இருந்தார். ஆம்ஸ்ட்ராங் 1955 ஆம் ஆண்டில் வானூர்தி பொறியியல் படிப்பில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
ஆம்ஸ்ட்ராங் அப்போலோ 8 விண்வெளித் திட்டத்தில் ஒரு மாற்றுத் தளபதியாக செயல்பட்ட பின்னர் டிசம்பர் 23, 1968ல் அப்போலோ 11 விண்வெளித் திட்டத்தில் செயல்படும் தளபதியாக பதவி ஏற்றார். அப்போது அப்போலோ 8 சந்திரன் சுற்றுப்பாதையில் இருந்தது. 2005 ஆம் ஆண்டில் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரிதையை வெளியிடும் வரை இந்தச் சந்திப்பைப் பற்றி வெளியிடப்படவில்லை. செலேடன், திட்டமிடப்பட்ட குழுத் தளபதியாக ஆம்ஸ்ட்ராங் இருந்த போதிலும், சந்திரப் பயணத் திட்டத்தில் விமானியாக பஸ் அல்டரினும் மற்றும் செயல்படுத்தும் விமானியாக மைக்கேல் காலின்ஸ்னும் தான் இருந்தனர். அவர் ஆல்ட்ரினை மாற்றுவதற்கான வாய்ப்பை ஜிம் லோவெல்க்கு வாய்ப்பை கொடுத்தார். ஒரு முழு நாள் சிந்தனைக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரினுக்கு மாற்றாக செயல் பட ஒப்புக்கொண்டார். ஏனென்றால் லோவெல் ஏற்கனவே ஜெமினி 12 திட்டத்தில் செயல்படும் விமானியாக இருந்தார்.
ஜூலை 20,1969ல் அமெரிக்காவின் அப்போலோ – 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அங்குள்ள பாறைத் துகள்களை சேகரித்தனர். தங்களது காலடித் தடங்கள் உட்பட பல புகைப்படங்களை எடுத்தனர். அமெரிக்க தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் நிலாவில் கழித்தனர். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹீரோவாகப் புகழப்பட்டார். உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 7, 2012ல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இருதயத்தின் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்பை சரிசெய்ய அவருக்கு மாற்றுப்பாதை (bypass) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் நலத்தில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் திடீரென்று அவர் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகியதால் ஆகஸ்ட் 25,2012ல் அன்று தனது 82வது அகவையில் சின்சினாட்டி, ஒகைய்யோ, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர்- அவருடைய காலத்தில் மட்டுமல்ல, ஆனால் எல்லா காலத்திலும்” என்ற அறிக்கை வெளியிட்டு கெளரவப் படுத்தியது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய இந்திய இயற்பியலாளர், அன்னா மாணி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 23, 1918).
அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, அவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். அவர் நடனத்தைத் தொடர விரும்பினார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார். 1939 ஆம் ஆண்டில், மெட்ராஸில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரியில், இயற்பியல் மற்றும் வேதியியலில் பி.எஸ்சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை பெற்றார்.
மாநிலக் கல்லூரி, சென்னையில் படிப்பை முடித்த பிறகு, அவர் பேராசிரியர் ச.வெ.இராமன் கீழ், மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார். அவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும், இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால், முனைவர் பட்டம் அவருக்கு மறுக்கப்பட்டது. அவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும், அவர் இம்பீரியல் காலேஜ் லண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார். அவர் வானிலை கருவிகளில் நிபுணத்துவம் பெற்றார். 1948 ல் இந்தியா திரும்பிய பிறகு, அவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார். அவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார்.
அன்னா மாணி 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றார். 1980ல் ‘The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981 ல். Solar Radiation over India இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் 1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார். அவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார். அவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். அவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார். அன்னா மாணி 1994ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்டு 16, 2001ல் தனது 82வது அகவையில் திருவனந்தபுரத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22).
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.[3] முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் (சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7 கோடியே 1 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது. சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது. செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. 1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.
Source By: Wikipedia, Dinamalar.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறிய நட்சத்திரம் வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 21, 1995).
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல் பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார். இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர். சி. வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.
1928 இல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார். அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் 19ஆவது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே மேலும் இரு கட்டுரைகளும் பதிப்பாயின. 1930 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார்.
பேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்து, அங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர், மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
சந்திரசேகர்க்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான் இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு ‘அணுகுண்டு’ போல வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார். பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல், இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும், வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டு, இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதே, நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார். நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகஸ்ட் 21, 1995ல் தனது 84வது அகவையில், அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924).
வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று அகவை இருக்கும் பொழுது இவர் பெற்றோர்களுடன் இவர் கியூபெக் மாநிலத்துக்கு இடம் மாறினார். இவர் தன் 14 ஆம் அகவை வரை வீட்டிலேயே தன் தாயாரால் பயிற்றுவிக்கப்பட்டு பின்னர் மான்ட்ரியாலில் உள்ள கீழக கனடா கல்லூரியில் (Lower Canada College) சேர்ந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் படிப்பு 1943ல் சற்று தடைபட்டு பின்னர் இரண்டாம் உலகப்போரின் பொழுது அரசக் கனடிய கடற்படையில் (ராயல் கனடிய நேவியில்) சேர்ந்தார். பின்னர் இவர் பிரித்தானிய அரச கடற்படைக்கு மாற்றப்பட்டு அதில் வானூர்தி தாங்கிக் கப்பலில் சுபிட்ஃவையர் (Spitfire) என்னும் வானூர்தி ஓட்டியாக இருந்தார். இவர் 1947ல் அறிவியலில் இளநிலைப் பட்டமும், 1948ல் அறிவியல் முதுநிலைப் பட்டமும், 1950ல் மெக்கில் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பாயில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஓராண்டு கனடாவின் கதிரியக்க ஆய்வகத்தில் (Radiation Lab) பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் ராயல் மிலிட்டரிக் கல்லூரியில் இரண்டாண்டு இயற்பியல் படிப்பித்தார். 1953ல் பாயில் பெல் ஆய்வகத்தில் (Bell Labs) சேர்ந்து அங்கு 1962ல் டான் நெல்சன் (Don Nelson) என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து இயங்கும் சிவப்புக்கல் (ரூபி) ஒளிமிகைப்பியைக் கண்டுபிடித்தார். குறைக்கடத்தி ஒளிமிகைப்பி பற்றிய முதல் காப்புரிமத்தில் இவர் பெயர் சுட்டப்பட்டிருந்தார். பின்னர் பெல் ஆய்வகத்தின் கீழியங்கும் பெல்க்காம் (Bellcomm) என்னும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த விண்வெளி புதுப்புலத் தேடுதல் அறிவியல் ஆய்வுகள் துறையின் (Space Science and Exploratory Studies) இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்வழி அப்போலோ விண்வெளித் திட்டத்துக்கு உதவிகள் செய்தார், குறிப்பாக நிலாவில் இறங்குதளங்கள் தேர்வில் உதவினார். பின்னர் 1964ல் பெல் ஆய்வகத்துக்குத் திரும்பி வந்து நுண்மின் தொகுசுற்று ஆய்வு வளர்ச்சியில் பங்கு கொண்டார்.
1969ல் பாயிலும் சியார்ச்சு இ.சுமித்தும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973ல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974ல் ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும் (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006ல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள். பாயில் 1975 முதல் அவருடைய ஓய்வு பெற்ற ஆண்டாகிய 1979 வரை பெல் ஆய்வகத்தின் ஆய்வுக்கான செயல்வடிப்பு இயக்குநராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் கனடாவில் நோவா இசுக்கோசியாவில் உள்ள வால்லசு (Wallace, Nova Scotia) என்னும் இடத்தை உறைவிடமாகக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து உதவி ஒரு கலைக் காட்சியகத்தைத் துவக்கினார். நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் மே 7, 2011ல் தனது 86வது அகவையில், கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய அன்னா மாணி நினைவு தினம் இன்று (ஆகஸ்டு 16, 2001).
அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, அவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். அவர் நடனத்தைத் தொடர விரும்பினார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார். 1939 ஆம் ஆண்டில், மெட்ராஸில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரியில், இயற்பியல் மற்றும் வேதியியலில் பி.எஸ்சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை பெற்றார்.
மாநிலக் கல்லூரி, சென்னையில் படிப்பை முடித்த பிறகு, அவர் பேராசிரியர் ச.வெ.இராமன் கீழ், மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார். அவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும், இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால், முனைவர் பட்டம் அவருக்கு மறுக்கப்பட்டது. அவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும், அவர் இம்பீரியல் காலேஜ் லண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார். அவர் வானிலை கருவிகளில் நிபுணத்துவம் பெற்றார். 1948 ல் இந்தியா திரும்பிய பிறகு, அவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார். அவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார்.
அன்னா மாணி 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றார். 1980ல் ‘The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981 ல். Solar Radiation over India இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் 1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார். அவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார். அவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். அவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார். அன்னா மாணி 1994ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்டு 16, 2001ல் தனது 82வது அகவையில் திருவனந்தபுரத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு செயல்படுத்தி காட்டிய, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16,1845).
காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஆகஸ்ட் 16,1845ல் பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய குடும்பம் பாரிசில் குடியேறியது. இவர் சிறு வயதில் வீட்டில் இருந்த படியே தன்னுடைய ஆரம்பக்க் கல்வியைப் பெற்றார். 1858ல் லைசி நெப்போலியன் என்ற இடத்தில் தன்னுடைய படிப்பை ஆரம்பித்த இவர் பத்து வருடங்களுக்குப் பின் நார்மலே என்ற ஊரில் தன்னுடைய மேற்படிப்பைத் தொடர்ந்தார். சிறு வயதில் இவருடைய கல்வி சிறப்பாக அமையவில்லை. கட்டுப்பாடற்ற மாணவராகவும் இருந்தார். தனக்குப் பிடித்த விவரங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தினார். அதனால் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தோல்வியடைந்தார். ஆனால் ஆர்வம் காட்டிய துறைகளில் அனைவரையும் விட சிறந்து விளங்கினார்.
1873ல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அறிவியல் குழு ஒன்று ஜெர்மனியில் ஆய்வுகள் நடத்தச் சென்றது. அறிவியல் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றி ஆய்வு நடத்த இவரும் அக்குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அப்போது ஹெய்டல்பர்க்கில் வில்ஹெம் குனே, கிர்க்காஃப் என்ற அறிவியல் அறிஞர்களுடனும் பெர்லினில் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியல் அறிஞருடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்புப் பெற்றார். 1878ல் பாரிசில் அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கான தேர்வில் தோல்வியடைந்ததால் தகுதிச் சான்றிதழ் பெறாத போதும் இவருடைய திறமை கருதி சார்போன் பல்கலைக் கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். மூன்று வருடங்கள் கழித்து ‘ஆய்வியல் இயற்பியல்’ (Experimental Physics) பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அதன் பிறகு சார்போனுக்கு இடம் பெயர்ந்த லிப்மன் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றின் இயக்குநராக அமர்த்தப்பட்டார். இவருடைய இறுதிக்காலம் வரை இந்தப் பணியில் நிலையாக இருந்தார்.
லிப்மனின் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல், இயற்பியலில் மின்னியல், வெப்பவியல், வெப்ப இயக்கவியல், ஒளியியல், ஒளிப்பட வேதியியல் ஆகியவற்றில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு உதவியது. இயற்பியலில் பல பிரிவுகளைல் பயன்படுத்தப்பட்டு வந்த பல திட்ட அளவுக் கருவிகளின் புனைதிறன் மற்றும் சீர்திருத்தங்களுக்கு இவர் காரணமாக இருந்தார். உடலியல் பேராசிரியர் வில்லெம் குனே என்பவர் இவருக்கு ஓர் ஆய்வினைச் செய்து காண்பித்தார். ஒரு துளி பாதரசத்தை வைத்து அதன் மேல் நீர்த்த கந்தக அமிலத்தை சிறிதளவு விட்டார். ஒரு சிறிய மெல்லிய இரும்புக்கம்பியால் பாதரசத்தைத் தொட்ட போது அது சற்று சுருங்கி விரிந்தது. இந்த ஆய்வைக் கவனித்த லிப்மன் இதற்கான விளக்கத்தை அளித்தார். பாதரசத்திற்கும் அமிலத்திற்கும் இடையே கம்பியைச் செலுத்தும் போது மிகச் சிறிய அளவு மின்னோட்டம் அந்தக் கம்பியில் ஏற்படுகிறது என்றும் அதன் காரணமாக அது சுருங்குகிறது. கம்பியை எடுத்ததும் மின்னோட்டம் இல்லாததால் அது பழைய நிலைக்கு விரிகிறது என்றும் கண்டறிந்தார்.
ஹெய்டல்பர்க்கில் இவர் ஆய்வுகள் நடத்தியபோது, நுண்புழைத்தன்மைக்கும், மின்சாரத்திற்குமுள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்தார். மிக நுண்மையான, மிகச் சிறப்புபெற்ற ‘நுண்புழை மின்னழுத்த மானி’ ஒன்றை உருவாக்கினார். இது மிகக் குறைவான மின்னழுத்தத்தை அளக்க உதவியது. அதனால் இது இதயத்துடிப்பை வரை படமாக அளவிடும் (Electro Cardio Graph) கருவியில் பயன்பட்டது. வெப்ப இயக்கவியல் ஆய்வுகளை மேற்கொண்ட லிப்மன் எந்த ஒரு வெப்ப இயக்க முறைக்கும், மீள்செயல் முறையும் உண்டு என்பதையும் அவ்வாறு மீள் செயல் முறை நடைபெறும் போது உண்டாகும் மாற்ற அளவைக் கணக்கிடப் பொதுவான தேற்றம் ஒன்றை லிப்மன் உருவாக்கினார். 1886ல் ஒளிப்படங்களை உருவாக்குவது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அதிலும் வண்ணப் புகைப்படங்களை எப்படி உருவாக்குவது என்று ஆராய்ந்தார். ஆனால் அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதால் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் தளராமல் மிகவும் பொறுமையாக ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து ஒளியின் நிறங்களைக் கொண்டு குறுக்கீட்டு விளைவு முறையில் வண்ணப் புகைப்படங்களை உருவாக்க முடியும் என நிரூபித்தார். இதை அறிவியல் சங்கத்திற்கு 1893ல் முறையாக அறிவித்தார். தன்னால் எடுக்கப்பட்ட புகைப் படங்களையும் வழங்கினார். 1894ல் தன்னுடைய ஆய்வு முழுவதையும் ஆய்வுக்கட்டுரையாகத் தொகுத்து வெளியிட்டார்.
1895ல் ஒளிப்படங்களைப் பதிவு செய்யும் போது அவை தாமே நிர்ணயித்துக்கொள்கின்ற கால அளவிற்கான சமன்பாட்டை நீக்குவதற்கு ஒரு முறையை உருவக்கினார். இவர் கண்டுபிடித்த முறையில் வண்ணப்படம் எடுப்பது சிறப்பு என்றாலும் அதற்கான ஒளியை எடுத்துக்கொள்ளும் நேரம் (Exposure Time) அதிகமாக இருந்தது. ஊசல் கடிகாரம் ஒழுங்கற முறையில் இயங்குவதைத் தவிர்ப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினர். வானவியலில் கொயலோஸ்டாட் என்ற கருவியைக் கண்டறிந்தார். ஒரு நட்சத்திரத்தையும் அதைச் சுற்றியுள்ள நட்சத்திரத்தையும் புவியின் சுழற்சியினால் மாறுதல் ஏற்படாதவாறு அசைவற்ற நிலையில் அவற்றை ஒளிப்படமாக எடுக்க இக்கருவி உதவியது. வானத்தைப் புகைப்படம் எடுக்கும்போது, தானாகவே அதில் தீர்க்க ரேகை பதியும்படி ஒரு கருவியை இவர் வடிவமைத்தார். தந்தி அலைகளைப் பயன்படுத்தி நில நடுக்கத்தைப் பதிவு செய்வதோடு அது எவ்வாறு பரவிச் செல்கிறது என்பதையும் இவர் கண்டுபிடித்த கருவி பதிவு செய்தது.
சார்போனில் இவர் பணியாற்றிய போது அங்கு பயின்ற மேரி கியூரிக்கு இவர் ஆலோசகரகவும் செயல்பட்டார். தன்னுடைய ஆய்வகத்தை பயன்படுத்த அவருக்கு அனுமதி அளித்தார். பியர் கியூரி இவருடைய சிறந்த மாணவராக விளங்கிய போது மேரிக்கு, பியர் கியூரியை அறிமுகம் செய்து வைத்ததும் இவர்தான். இவர் ஆய்வு செய்துவந்த ‘படிக மின்னழுத்த ஆய்வினைத்’ தான் பியர் கியூரி தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார். பாரிஸிலுள்ள அறிவியல் சங்கத்தில்தான் இவருடைய ஆய்வு முடிவுகள் கட்டுரைகளாக அளிக்கப்பட்டன. வண்ணப் படம் எடுப்பது பற்றிய இவருடைய ஆய்வுக்கு 1908 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. ஜெர்மனியில் பல்வேறு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை பிரெஞ்சு நாட்டுப் பத்திரிக்கைகளில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1886ல் பாரிஸ் அறிவியல் சங்கத்தில் உறுப்பினரானார். 1912ல் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீர்க்கரேகைக் குழுவில் உறுப்பினராயிருந்தார். லண்டனில் உள்ள ராயல் கழகம் இவரை அயல்நாட்டு உறுப்பினராக அமர்த்தியது.
வெள்ளொளியில் அடங்கிய பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டிய காபிரியேல் லிப்மன் ஜூலை 13, 1921ல் தனது 75வது வயதில் வட அமெரிக்காவிற்கு ஒரு குழுவினருடன் கப்பலில் பயணம் சென்று கனடா விலிருந்து பிரான்ஸ் திரும்பும்போது எதிர் பாராமல் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவருடைய மதிப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துகள்களின் இருமைப் பண்பைப் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 15, 1892).
லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914ல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் இராணுவத்திற்கு தனது சேவைகளை வழங்கினார்.
இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.
லூயிஸ் டி ப்ரோக்லி 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி ப்ரோக்லி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும், அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட “m” திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் “v” இல் சென்றால், “λ” என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார். ( λ=h/p; p – உந்தம், h – பிளாங்க்கு மாறிலி)
பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி ப்ரோக்லி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது. டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கலிங்கா விருது வழங்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி மார்ச் 19, 1987ல் தனது 94வது அகவையில் லவ்சினீஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 75வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)
1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே. இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர்.
சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த சூழலில் நாடு தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிக முக்கியமான தருணம். பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை 1757ஆம் ஆண்டு கட்டமைத்தனர். இந்நிறுவனம் சுமார் 100 ஆண்டுகள் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இந்நிலையில் 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் வெடித்தது. ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வேண்டும் என்ற வேட்கை இந்த சிப்பாய்ப் புரட்சியின் மூலம் தான் உதயமானது. இதனை வெற்றிகரமாக முறியடித்து இந்தியர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்தனர். பின்னர் பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியா வந்தது. இங்கிலாந்தில் இருந்து கொண்டே உரிய பிரதிநிதிகளை நிர்ணயித்து ஆட்சி செய்து வந்தனர். இந்தியர்களை மிகுந்த ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினர். ஒருகட்டத்தில் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. இதற்கு ஏராளமான தலைவர்களின் கலகக் குரல்களும் காரணமாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், மங்கள் பாண்டே, மகாத்மா காந்தி, ராணி லக்ஷ்மிபாய், சரோஜினி நாயுடு, சந்திர சேகர் ஆசாத், பாபா சாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மிகவும் தைரியமாக புரட்சிக் கனலை பற்ற வைத்தனர். இதில் அகிம்சை வழியிலான மகாத்மா காந்தியின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆங்கிலேயர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது. இத்தகைய புரட்சிகள், போராட்டங்கள், உயிர் தியாகங்கள் உள்ளிட்டவற்றின் விளைவாக 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று தனி நாடாக பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது தனிக்கதை.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீராரும் விவசாயியுமான பிங்காலி வெங்கய்யா அவர்கள். இந்தியாவின் தேசியக் கொடி நாட்டின் அனைத்து குடிமக்களின் பெருமையும், நம்பிக்கைகளையும், பிரதிபலிக்கிறது. அப்படிப்பட சிறப்பு வாய்ந்த நமது தேசிய கொடி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள். ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயா ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு, 1947 ஜூலை 22 அன்று மூவர்ணக்க் கொடி இந்தியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் இந்தியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது, வெள்ளை நிறம் உண்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. கொடியில் உள்ள பச்சை நிறம் செழிப்பைக் குறிக்கிறது. நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்ம விதிகளை குறிக்கிறது.
தேசியக் கொடியில் நடுத்தர வெள்ளை நிறத்தில் நீல நிறத்தில் அசோக சக்கரம் உள்ளது. இந்தியாவின் தேசியக் கொடி சட்டப்படி, காதி, ஒரு சிறப்பு வகை கையால் நெய்யப்பட்ட பருத்தி அல்லது பட்டினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கொடியை தயாரிப்பதற்கான உரிமை காதி அபிவிருத்தி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்திடம் உள்ளது. டென்சிங் நோர்கே இந்திய தேசியக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறையாக 29 மே 1953 அன்று ஏற்றினார். 2002 க்கு முன்னர், இந்தியாவின் சாதாரண குடிமக்கள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைத் தவிர, வேறு சந்தர்ப்பப்க்களில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. 2002 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் கொடி சட்டத்தை திருத்தி, உரிய நெறிமுறைகளை கடைபிடித்து, எந்த நேரத்திலும் கொடியை ஏற்றலாம் என அனைத்து குடிமக்களுக்கும் உரிமைகளை வழங்கியது. கொடி ஏற்றுதல் தொடர்பான நெரிமுறைகளின் படி, கொடி பகல் நேரத்தில் ஏற்றப்பட வேண்டும். தேசிய கொடிக்கு மேல் வேறு எந்த அடையாளமோ அல்லது வேறு எந்த கொடியோ இருக்கக்கூடாது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சுதந்திர தினம், தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவராலும் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டும். தன்னலமற்ற தியாகிகளை நினைத்து பார்க்க வேண்டிய அவசியம். அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி சுதந்திரத்தைக் கட்டி காப்பது நமது கடமை. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் அரங்கேறும். தியாகிகள் கவுரவிக்கப்படுவர். சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தேசிய நலனுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டு மக்களை உற்சாகமூட்டும் வகையிலான உரைகளை தலைவர்கள் நிகழ்த்துவர். குறிப்பாக சுதந்திர தினத்தன்று டெல்லியின் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதேபோல் நாடு முழுவதும் முதலமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தேசியக் கொடிய ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்வர். நடப்பாண்டில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source By: itstamil, samayam, zeenews.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.