10
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்ததை சேர்ந்த கூலுச்சாமி வயது 57. நிலக்கோட்டை சுற்றுப்புற கிராம பகுதிகளில் சைக்கிளில் தினந்தோறும் தக்காளி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது கிராமத்திலிருந்து வியாபாரம் செய்வதற்காக தமிழ் சைக்கிளில் அனைப்பட்டி நிலக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டை பகுதியில் வந்தபோது பின்னாடி வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி பின்புற சக்கரத்தில் உடலில் ஏறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். உடல் நசுங்கி இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.