மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (50).இவர் வேலை விஷயமாக உசிலம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு இரு சக்கர சென்றுள்ளார்.உசிலம்பட்டி அருகே பொட்லுப்பட்டி அருகில் செல்லும் போது தனது கிராமத்திற்கு செல்ல வலது பக்கம் திருப்பிய போது இவரது பின்னால் வந்த கார் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதி கார் கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் தலை கீழாக கவிழ்ந்தது.இதில் காரில் பயணம் செய்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த தாமோதரன் (43) அமுதா (38) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.இவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். .தகலறிந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையப் போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெருமாள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மணைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
உசிலை சிந்தனியா 18
You must be logged in to post a comment.