பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் 10 நிமிட வாகன நிறுத்தப் போராட்டம் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வை கண்டித்தும்,அதனை வாபஸ் பெறக்கோரியும் வலியுறுத்தி வாகனம் நிறுத்த போராட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆலங்குளம் தாலுகா செயலாளர் பாலு,பீடி தொழிலாளர் சங்க தலைவர் பால்ராஜ்,பீடி தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பரமசிவன், பொருளாளர் சண்முகம்,விவசாய சங்க செயலாளர் வெற்றிவேல்,பீடி சங்க துணைத்தலைவர் லிங்கராஜ்,ஸ்டீபன் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்ற திராவிட கழக பொறுப்பாளர்கள் பெரியார் குமார், புதுப்பட்டி முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.