Home செய்திகள் பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் பிரேதம்.! கொலையா.? என போலீசார் விசாரணை.

பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் பிரேதம்.! கொலையா.? என போலீசார் விசாரணை.

by mohan

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத் என்பவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரயில்வே தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று மாலை முயல் பிடிப்பதற்காக திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோமசுந்தரம் காலனி பகுதியில் பழைய பாழடைந்த கட்டடத்திற்கு காட்டு முயல் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது பாழடைந்த கட்டடத்தின் நடுவே சென்ற போது அங்கு முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற பிரசாத் உடனடியாக திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் மற்றும் திருப்பரங்குன்ற சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து., உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் இறந்த நபர் கொலை செய்யப்பட்டாரா.? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!