மதுரை பந்தடி 5வது தெருவில் வசித்து வரும் விஜயகுமார் அவரது மனைவி வாணி மற்றும் இவர்களது ஒரே குழந்தை ஹாசினி. இவர் மதுரை நகைக்கடை பஜாரில் உள்ள கடைகளுக்கு விஜயகுமார் நகைகள் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இதற்காக அவர் பல இடங்களிலும் லட்சக் கணக்கில் கடன் வாங்கி தொழிலில் போட்டுள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே விஜயகுமாரிடம் நகை வாங்கியவர்கள் அதற்கான உரிய பணத்தை சரிவர கொடுக்கவில்லை எனவும் இதனால் விஜயகுமாருக்கு சுமார் 20 லட்சம் வரை கடன் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து உள்ளதும், இதனால் மனை உளைச்சலில் விஜயகுமார் இருந்துள்ளதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விஜயகுமார் முதலில் வில்லாபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க வே பந்தடி ஐந்தாவது தெருவுக்கு கடந்த மாதம் தான் குடி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் நேரடியாக தற்போது குடிவந்த வீட்டுக்கும் வீட்டுக்கு வந்து மிரட்டி விட்டுச் சென்றதாக தெரிகிறது
இந்தநிலையில் விஜயகுமார் கடுமையான மன உளைச்சலில் இந்த உலகில் நாங்கள் வாழ தகுதி இல்லாதவர்கள் என ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து குழந்தைக்கு கொடுத்துவிட்டு கணவன் – மனைவி இருவரும் தூக்கில் தொங்கினார். காலையில் வெகுநேரமாகியும் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் உறவினருக்கு தகவல் கொடுத்தனர் உறவினர்கள் போலீஸ் துணையுடன் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர் குழந்தையும் இவர்கள் அருகே பிணமாக கிடந்தது இதையடுத்து 3 பேரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.