Home செய்திகள் மதுரை யானைமலை ஒத்தக்கடையில் மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க.சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்நிகழ்வு.

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க.சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்நிகழ்வு.

by mohan

மதுரை புறநகர் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி,மணிமாறன், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கே.என்.நேரு,பொன். முத்துராமலிங்கம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சேடப்பட்டி முத்தையா,பெரியகருப்பன் ஏ.வ.வேலு, பெ.குழந்தைவேலு,வேலுச்சாமி, எஸ்.ஆர்.கோபி, ஜெயராமன்,MLAக்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், டாக்டர்.சரவணன் உள்ளிட்டோர் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.மதுரை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ஆரம்பம்

மேடையில் ஸ்டாலின் பேசுகையில்,

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் – திருவண்ணாமலையில் 29ம் தேதி துவங்கி 3 கட்டங்களாக 110 சட்டமன்ற தொகுதிகளில் நிகழ்ச்சியை நடத்தி முடித்து 4ம் கட்டமாக மதுரையில் துவங்கி உள்ளோம் 6 நாள்கள் 4ம் கட்ட சுற்றுபயணம் நடைபெற உள்ளது,நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் டோல்கேட் வரைமுறைப்படுத்த படாததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதிப்பு ஏற்படுவதால் பல உயிர்கள் காப்பாற்ற முடியவில்லை பல பேர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்ல முடியாததால் பல உயிர்கள் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது இந்த நிலை மாறுவதற்கு மிக விரைவில் தி.மு.க.போராட்டங்களை முன்னெடுக்கும் அதற்கும் தீர்வு ஏற்படாவிட்டால் தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும்,தற்போதைய தமிழக அரசு பழைய கட்டிடங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து இது தான் மினி கிளினிக் என திறந்து வருகிறது,இது கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போன்று உள்ளது.மதுரை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மேடையில் நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தேன்,காரணம் மதுரை சிம்மக்கல்லில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை திறக்கப்பட்டதால் தான்நம்முடன் உயிராக இருந்தவர் இன்று சிலையாக உள்ளார்.நமக்கு ஊக்கமாக இருந்தவர் இன்று சிலையாக உள்ளார்.மதுரை மண்ணில் 7 மைல் தூரம் ஊர்வலம், 9 மணி நேரம் நடந்தே சென்ற ஊர்வலம் போன்ற சாதனைகளை மதுரையில் படைத்தது தி.மு.க.

மதுரையில் தி.மு.க.வை வளர்த்த மேயர் முத்து,SS.தென்னரசு, தா.கிருஷ்ணன், PTR பழனிவேல் ராஜன், காவேரி மணியம்,தீப்பொறி ஆறுமுகம் ஆகியோரை நினைவு கூர்வதில் பெருமை படுகிறேன்.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அமைத்து கொடுத்தவர் கலைஞர்.மானம் காத்த மாமன்னர் மருதுபாண்டியருக்கு சிலை, பரிதிமாற் கலைஞர் சிலை, மதுரையில் பல்வேறு மேம்பாலங்கள், 120 கோடி ரூபாய் செலவில் சர்வதேச விமான நிலையம் அமைத்தது தி.மு.க. தலைவர் கலைஞர் அரசு.ஆனால் அ.தி.மு.க. அரசால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கூட கொண்டு வர முடியவில்லை.தமிழகத்தின் எய்ம்ஸ்க்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ள தொகை வெறும் 12 கோடி ரூபாய்.ஆனால் மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் எய்ம்ஸ்க்கு நூற்றுகணக்கான கோடி ஒதுக்கீடு.மதுரை எய்ம்ஸ்க்கு ஜப்பான் நிதி உதவி கிடைத்தால் தான் கட்ட படுமா.மதுரை இந்தியாவில், தமிழ்நாட்டில் தான் உள்ளதா இல்லை ஜப்பானில் உள்ள தா என ஸ்டாலின் கேள்வி.மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல ஊழல்களை அமைச்சர்கள் செல்லூர் ராஜீவும், ஆர்.பி.உதயகுமாரும் செய்துள்ளார்கள்.வைகை ஆற்று நீரை தெர்மா கோல் போட்டு மூடியதிலிருந்து நமக்கெல்லாம் கொரோனா வருமா என கூறி ஏமாற்றிய அமைச்சர் செல்லூர் ராஜு.தேர்தல் முடிந்ததும் மதுரை அமைச்சர்கள் தலைமறைவாகி விடுவார்கள்.மதுரை மண்ணில் இருந்து தமிழக மக்களின் பாதுகாப்புக்கு ஸ்டாலின் உறுதி தருகிறேன்.சட்டவிரோத விஷயங்களை என்றும் எதிர்ப்பேன்

கழக ஆட்சி விரைவில் வரும், மக்கள் கவலை யாவும் தீரும்.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் மக்களின் கோரிக்கைகளை கேட்டுவிட்டு மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.இதுவரை நடந்த நிகழ்ச்சியை விட இந்த முறை நடத்தக்கூடிய நிகழ்ச்சியானது மிக மிக முக்கியமானது என நான் கருதுகிறேன்.மிக மிக உணர்ச்சி வசப்பட்டு நான் இன்று காணப்படுகிறேன். அதற்கு காரணம் தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்து விட்டு நான் இங்கே வந்துள்ளேன்.தலைவர் கலைஞர் இன்னும் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஒரு தமிழர் சமுதாயத்தில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.மதுரை மண்ணில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இறங்கும் பொழுது மதுரை மன்னில் புதிய உதய சூரியன் உதிக்கிறது என்று அர்த்தம்

1991ம் ஆண்டு மதுரையில் திமுகவின் மாநட்டை நடத்தினார்கள்.கருணாநிதி எந்த அடக்குமுறைக்கும் அஞ்சியது கிடையாது.பாண்டிய ராணி உசிலம்பட்டியில் இருந்து வந்தவர் கேள்வி எழுப்புகிறார்.கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்.எனது இல்லத்தில் மூன்று பெண்களும் மாற்று திறனாளிகளை உள்ளனர் தற்சமயத்துக்கு உதவி செய்ய யாரும் இல்லை ஒரு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.அதற்கு பதிலளித்த ஸ்டாலின்அரசு வேலை வாய்ப்பு அல்லது ஒரு வீடு ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.ஆதரவுக்கு யாரும் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம் திமுக என்றும் உங்களுக்கு துணையாக நிற்கும் ஆட்சி வந்தவுடன் அரசின் திட்டத்தின் கீழ் உங்களுக்கு உறுதியாக வீடு ஒதுக்கி தரப்படும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!