Home செய்திகள் காதல் திருமண தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் மீது தாக்குதல்.போலீஸ் விசாரணை

காதல் திருமண தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் மீது தாக்குதல்.போலீஸ் விசாரணை

by mohan

மதுரை ஜெய்ஹிப்துரத்தில் காதல் திருமண தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரை ஜெயந்திபுரம் சோலை அழகுபுரம் மூன்றாவது தெரு ஆட்டு மந்தை சந்து பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் 47 .இவரது உறவுக்காரப் பெண் சில தினங்களுக்கு முன்பு செய்துகொண்டார். பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடந்துள்ளது .திருமணத்திற்கு பின் மாப்பிள்ளை மட்டும் பெண்ணை தனது வீட்டில் ஹரிஹரன் தங்க வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார் அழகுமுத்து, கோமதி உள்பட 5 பேர் ஹரிஹரன்மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக ஹரிஹரன் ஜெய்ஹிந்த்புரம்போலீசில் புகார் செய்தார்.போலீசார் அழகுமுத்து கோமதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!