பேரறிஞர் அண்ணாவின் 52 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மேலூர் திருவாதவூரில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ கே. தமிழரசன் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குலோத்துங்கன், மேலூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாகுல் ஹமீது, திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெள்ளலூர் இளங்கண்ணன், கயஸ் முகமது, வஞ்சி நகரம் வேல்மயில், தாண்டவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளலூர் கெளசிகன், ஆமூர் சந்தானம், பதினெட்டாங்குடி சுதா ஆண்டி, குறிச்சிபட்டி கனகாபாரத், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சோமசுந்தரம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பரமசிவம், காதர்மைதீன், அரிசி கண்ணன், நகர் பொருளாளர் கந்தசாமி, மற்றும் நாவினிபட்டி ரமேஷ், ராமநாதன், சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயராகவன், சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிவா, தேவர், தெற்கு ஒன்றிய மீனவரணி செயலாளர் கரும்புச் செல்வம், பேரவை நிர்வாகிகள் அருள் பாணடி, உதயசங்கர், கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.