Home செய்திகள் பழமையான கட்டிடங்கள் விபத்து உயிரிழப்புகள் கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

பழமையான கட்டிடங்கள் விபத்து உயிரிழப்புகள் கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

by mohan

மதுரைபெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம்போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாடுக்கு கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த இடிபாடுகளை எடுத்து சென்ட்ரிங் போடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ராமர் ,சந்திரன் ஜெயராமன் அழகர் வாசன் முனியசாமி ஆகிய 6 பேர் இந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.திடீரென கட்டிடம் இடிந்து கட்டட விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை தல்லாகுளம் மதுரை அனுப்பானடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் 50க்கும் மீட்பு பணியில் ஈடுபட்டனர் இதில் சம்பவ இடத்திலேயே விழுந்ததில் ராமர், சந்திரன், ஜெயராமன் ஆகிய 3 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளனர்.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது .மீதி மூன்று பேர் சிறு சிறு காயங்களுடன் தப்பி ஓடி வந்துவிட்டனர்.இறந்த உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முறையான அனுமதி பெறாமல் வேலை நடைபெற்றதே இந்த விபத்திற்கு காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது, மதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்தொடர்ந்து மீட்பு பணியில் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் அகற்றினர் கட்டிட விபத்து குறித்து காவல்துறையில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பழமையான கட்டிடங்கள் மதுரை நகர் பகுதியில் இடிந்து விழுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது இதனை களைய மதுரை மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!