மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து டூவீலரில் ஆரப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் பாலசுப்ரமணியன் (வயது 22) (ஹெல்மெட் அணியவில்லை) என்பவர் பைக்கில் வந்து பைக்கரா அருகே குண்டும் குழியுமான சாலையில் பிரேக் போட்ட போது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணியன் மரணமடைந்தார்.
இதுகுறித்து மதுரை தெற்கு நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலுத்தாய் மற்றும் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்ரமணியன் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு உடற் கூறு ஆய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து சம்பவம் குறித்து ஆனையூரை சேர்ந்த லாரி டிரைவர் விஜயபாண்டியை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை படு மோசமாக உள்ளது எனவும் உடனடியாக செய்து சரி செய்து தாருங்கள் என சொல்லியும் இர தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல கண்டுகொள்ளாமல் இருந்தது இந்த விபத்துக்கு காரணம்” என்றனர்.
அடுத்த பலி ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ,??????
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.