4
மதுரை சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகே இரவு அதிகமாக தேங்காய் ஏற்றி வந்த லாரி ரோட்டின் குறுக்கே சென்ற மின்சார வயர் மீது மோதி நின்றது இதனால் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டதால் இப்பகுதி ஒரு மணி நேரம் இருளில் மூழ்கியது மற்றும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது மின்சார வாரிய பணியாளர்கள் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மின் வயரை சரி செய்து மின் சப்பளை கொடுத்தனர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.