Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விருதுநகர் அருகே மதுபாட்டில் விற்றவர் கைது.. பணம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்..

விருதுநகர் அருகே மதுபாட்டில் விற்றவர் கைது.. பணம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்..

by ஆசிரியர்

விருதுநகர் அருகே கடம்பன்குளம் கிராமத்தில் கண்மாயில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த ஒருவர் கைது.அவரிடமிருந்து மது விற்ற தொகை 1 லட்சம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல். விருதுநகர் அருகே கடம்பன்குளம் கிராமத்தில் கண்மாயில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த செந்நெல்குடியைச் சேர்ந்த ஜெயமணிகண்டன் என்பவரை கைது செய்த விருதுநகர் போலீசார் அவரிடமிருந்து மது விற்ற தொகை 1 லட்சம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கு நேரத்திலும் தமிழக அரசு கடந்த மே 7 ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்தன. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. ஆன்லைனில் மட்டுமே மது விற்பனை செய்ய அறிவுறுத்தியது. .நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு உள்ளன.ஆனால் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் அருகே கடம்பன்குளம் கிராமத்தில் கண்மாயில் வைத்து மது விற்பனை செய்வதாக விருதுநகர் சூலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் நிகழ்வு இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு விருதுநகர் அருகே செந்நெல்குடியை சேர்ந்த ஜெயமணிகண்டன் என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மது விற்ற தொகை ரூபாய் 1லட்சம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விருதுநகர் சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!