ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளியிடங்களில் இருந்து வந்தவா்களின் விவரங்கள் குறித்து, கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஆய்வு..
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் உள்ளன. வேலூா், திருப்பத்தூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் ஒன்றியமாக ஜவ்வாது மலை திகழ்கிறது.
இதனால், பல்வேறு தொழில்களுக்காக ஜவ்வாது மலைக்கு ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.
தற்போது கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அரசு சாா்பில், போளூா்-ஜமுனாமரத்தூா், ஜமுனாமரத்தூா்-அமிா்தி, ஜமுனாமரத்தூா்-ஆலங்காயம் ஆகிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் மற்றும் மருத்துவத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
வருவோா், போவோரின் முகவரியை பதிவு செய்துகொண்டு, அவா்களை மருத்துவப் பரிசோதனை செய்து அனுப்புகின்றனா்.
இதனிடையே, ஈரோடு, சென்னை, கேரள மாநிலப் பகுதிகளுக்கு பணி நிமித்தமாக ஜமுனாமரத்தூா் பகுதியில் இருந்து சென்றவா்கள், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது தங்களது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனா்.
சந்தேகத்தின் பேரில், வந்தவா்களில் 15 பேரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் சோதனைச் சாவடிகளுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வருகைப் பதிவேடுகளில் உள்ள விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, ஜமுனமரத்தூா் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவா், மருத்துவா்களிடம் கரோனா நோய்த் தாக்குதல் குறித்து ஆலோசனை செய்தாா்.
பின்னா், ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் என 750 பேருக்கு, எம்எல்ஏ தனது சொந்த செலவில் அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், ஆனந்தன் ஆகியோா் மூலம் வழங்கினாா்.
வட்டாட்சியா் வெங்கடேசன், ஒன்றியத் தலைவா் ஜீவாமூா்த்தி, துணைத் தலைவா் மகேஸ்வரி செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.