Home செய்திகள் 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் உட்பட நான்கு நபர்கள் கைது

17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் உட்பட நான்கு நபர்கள் கைது

by mohan

திருப்பரங்குன்றம் மகளிர் ஊர் நல அலுவலர் யோகம்மாள் அவர்கள் மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கொடுத்த புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்து சம்பவ இடமான சுப்பிரமணியபுரம் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கு சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. எனவே சிறுமியை திருமணம் செய்த முத்துக்குமார், முத்துக்குமார் தாயார் கவிதா சிறுமியின் தந்தை கதிரேசன் சிறுமியின் தாயார் கருப்பாயி ஆகிய நான்கு நபர்களையும் ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி அவர்கள் கைது செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!