திருச்சி மாணவி சுகித்தாவிற்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பாராட்டு.!
பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும், சென்று தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் அசத்தி வரும் திருச்சியை சேர்ந்த மாணவி சுகித்தாவின் திறமைகளை அறிந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருச்சிக்கு வருகை புரிந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு . 10.01.2020 அன்று சிலம்பத்தில் பல்வேறு புதிய உலக சாதனைகள் மற்றும் கடந்த மாதம் சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்ற திருச்சி செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி சுகித்தாவை பாராட்டி வாழ்த்தினார்.
துணை ஜனாதிபதியை சந்தித்த சுகித்தா திருச்சி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார் அவர்கள் எழுதிய “பெரிதினும் பெரிது கேள்”என்ற புத்தகத்தையும் பரிசாக அளித்தார். இந்த புத்தகம் குறித்து கேட்டறிந்து யார் இவர், யாருடைய புத்தகம் என சுகித்தாவிடம் கேட்டறிந்து ஆசி வழங்கினார்கள்.
உடன் சுகித்தாவின் தந்தை இரா.மோகன் தாய் மோ.பிரகதா ஆகியோர் இருந்தனர்.
You must be logged in to post a comment.