Home செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தலைமை காவலர்களை பாராட்டிய மதுரை காவல் கண்காணிப்பாளர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தலைமை காவலர்களை பாராட்டிய மதுரை காவல் கண்காணிப்பாளர்

by mohan

21-ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் அதெலடிக் சம்பியன்ஷிப்-2019 தடகள போட்டியில் மலேசியா நாட்டின் சரவாக் குச்சின் நகரில் கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது.தடகளப் போட்டியில் மதுரை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமை காவலர்களான .சந்துரு மற்றும் .ராஜா ஆகியோர்கள் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சந்துரு 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும்.ராஜா  ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு 4ம் இடமும் பிடித்துள்ள இருவரையும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் .மணிவண்ணன், நேரில் வரவழைத்து பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!