Home செய்திகள் விவசாய பகுதிகளில் தனியார் கல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்-தமிழ் விவசாயிகள் சங்கம் வட்டாட்சியருக்கு கோரிக்கை

விவசாய பகுதிகளில் தனியார் கல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்-தமிழ் விவசாயிகள் சங்கம் வட்டாட்சியருக்கு கோரிக்கை

by mohan

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா எரிச்சநத்தம் கிராமத்தில் தனியார் கல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சிவகாசி வட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.இப்பகுதியில் தனியார் கல்குவாரி அமைந்தால் 100 ஏக்கர் சுற்றியுள்ள விவசாய நிலங்களும், விவசாய குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கரும்பு நெல் காய்கறிகள்,பூக்கள் இங்கு மிகவும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.கல் குவாரி அமைப்பதை தடுத்திட வலியுறுத்தி கோரிக்கை மனு சிவகாசி வட்டாட்சியர்டம் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத்தலைவர் நாராயணசாமி,மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 09.09.19 இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் தனியார் கல் கோரி அமைப்பதை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமென தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!