Home செய்திகள் திருப்பதி; தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பதி; தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

by mohan

தெலுங்கானா மாநிலம் வரங்கால் மாவட்டம் அனுமகொண்டாவில்  ஜெகன் ரட்சனா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் ஒன்பது மாத குழந்தை சிரிஷாவுடன் வீட்டின் மாடியில் கடந்த ஜுன் மாதம் 18 தேதி   இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு முழிப்பு வந்து பார்த்தபோது பால் பாட்டில் மட்டும் உள்ள நிலையில் குழந்தை காணவில்லை . இதனால் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்.  . அந்த பகுதியில் குழந்தையை இளைஞர் ஒருவர் எடுத்து செலவதை ஜெகன் பார்த்து சத்தம்போட்டார். இதையடுத்து குழந்தையை தூக்கி வீசிவிட்டு அந்த வாலிபர் தப்பி செல்ல முயன்ற நிலையில் பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்தனர். குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது குழந்தைக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பதும் மது போதையில் குழந்தையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.பிரவீனை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து அனுமகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . இந்த வழக்கு விசாரணை வாரங்கல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பிரவீனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!