Home செய்திகள் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by mohan

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பா.ஜ.க அரசு தனது அரசியல் மற்றும் அடக்குமுறை நோக்கங்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காக ஆதரவு கொள்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் சட்ட விரோதமான அம்சங்களை சட்டத்திருத்தம் என்கிற பெயரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும், மக்கள் விரோத நடவடிக்கைகளை சட்டமாக்க முயற்சிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தேசிய புலனாய்வு சட்டம், முத்தலாக் சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், தேசிய மருத்துவகவுன்சில் சட்டம், தொழிலாளர் சட்டங்கள், அணைகள் பாதுகாப்பு சட்டம், மோட்டார் வாகன சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை உருவாக்குவதையும், திருத்தங்கள் செய்வதையும் உரிய விவாதங்கள் இன்றி அவசர, அவசரமாக நிறைவேற்றி வருவதாக கூறி மத்திய மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!