Home செய்திகள் மதுரை பைபாஸ் சாலையில் பட்டபகலிலேயே திருடு போன சம்பவம்… சிசிடிவி காட்சிகள்..

மதுரை பைபாஸ் சாலையில் பட்டபகலிலேயே திருடு போன சம்பவம்… சிசிடிவி காட்சிகள்..

by ஆசிரியர்

கடந்த 8ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பைபாஸ் சாலை பொன்மேனியை சேர்ந்த சேர்ந்த பாலாஜி என்பவர் தன்னுடய இருசக்கர வாகனத்தை   பொன்மேனியில் உள்ள தனியார்  நிறுவனத்துக்கு  எதிரே  உள்ள மதுபான கடை அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

ஆனால் அடுத்த 10 நிமிடம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது எண்.TN59BM 1413.Hero Glomour. வாகனம் திருடு போயுள்ளது.  இது குறித்து பாதிக்கப்பட்டவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் இருவர் அந்த வாகனத்தை காலால் தள்ளி கொண்டு செல்வது தெளிவாக தெரிகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!