9
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்ந லாரியும் நேருக்கு நேர் மோதி கொடூரமான விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் தப்பியோடினார். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.