9
ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினார்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த கருத்துகளுக்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. மேலும், ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவமதிப்பு மனுவை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொன்ன தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாகவும், எனினும் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.