8
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 91. வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பிரச்சார விளக்க தெருமுனைக் கூட்டம் 91,வது வார்டு பொறுப்பாளர் தோழர்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் குடிநீரை தனியார்க்கு தாரை வாா்க்கும் செயலை கண்டித்தும், வீட்டுவரி,குப்பை வரி உயர்வை கைவிடக் கோரியும் ஜீவாநகர் ராமையா தெரு மெயின் வீதிமற்றும் குறுக்குத் தெருவில் பழுதடைந்த சாலையை சரி செய்து புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைத்திட வேண்டியும்,குடும்ப அட்டையுள்ள அனைவருக்கும் ரேஷன் பொருள்களை கூடுதல்படுத்தி வழங்கிடவும்,மனு கொடுத்த அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கிட வேண்டியும், 91 வது வார்டு ராமையா தெரு பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் சிறு தொழில், பள்ளி கூடங்கள், கோயில்களும் நிறைந்த பகுதியில் டாஸ்மார்க் கடை வைக்க அனுமதி அளித்ததை கண்டித்தும் பொதுமக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டியும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் விஜயராஜன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், பகுதி செயலாளர் செந்தில் குமார்,சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் தெய்வராஜ் மற்றும் குரோனிசெந்தில், குருசாமி, பாண்டியராஜன், பாலாஜி,ராஜா, முனிஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.