8
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து..
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிடு..
சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிடு..
21மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்கிடு…
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசாணை 56 ஐ ரத்து செய்…
3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை – மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம் தொடக்கக் கல்விக்கு மூடுவிழா நடத்தாதே..
போன்ற கோரிக்களை முன்வைத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் அலுவலம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பை சார்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்
You must be logged in to post a comment.