Home செய்திகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக லைசென்ஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் விழா : S.P .முரளி ரம்பா துவக்கி வைத்தார்..

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக லைசென்ஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் விழா : S.P .முரளி ரம்பா துவக்கி வைத்தார்..

by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக லைசென்ஸ் வழங்கும் விழாவுடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் விழா தூத்துக்குடி பனிமய மாதா கோவில் அருகில் உள்ள லசால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவலதுறை மறறும வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன் மேற்பார்வையில் பனிமய மாதா கோவில் அருகில் உள்ள லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் லைசென்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா துவக்கி வைத்தார். இவ்விழாவில் லைசென்ஸ் பெறுவதற்கு பொதுமக்கள் சுமார் 500பேர் வரை கலந்து கொண்டனர். இதில் முதலில் வாகனம் ஒட்டுவதற்கு பயிலக்கூடிய லேனர் லைசென்ஸ் வழங்கப்பட்டது, பின் 30 நாட்கள் கடந்த பிறகு நிரந்தர ஒட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முரளி ரம்பா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு தந்தை லயோலா கலந்து கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1000 பேருக்கு வருகிற 2019ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிய உணவு விருந்தாக வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன் மறறும் ஆயுதப்படை ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆயவாளாகள தென்பாகம் காவல் நிலையம் திரு. முத்து, மத்திய பாகம் திரு. ரேணியல் ஜேசுபாதம், வடபாகம் திரு. பார்த்திபன், தெர்மல் நகர் திருமதி. கோமதி, தென்பாகம் குற்றப்பிரிவு திருமதி. வனிதா, சார்பு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!