15
டிசம்பர் மாதம் என்றாலே கீழக்கரையில் அதிகமான திருமணம் மற்றும் விசேஷ நிகழ்வுகள் நடைபெறும் என்பது உலகறிந்த விசயம். இம்மாதத்தில் வழக்கத்தை விட அதிகமாக வெளியூரிலும், வெளிநாட்டில் இருந்தும் ஊருக்கு வருவதால் முக்கிய சாலைகளில் வழக்கத்திற்கு மாறான நெரிசல் உண்டாவது வழக்கம்.
ஆனால் வருடம் தோறும் இப்பிரச்சினையை கண்டு வரும் காவல்துறையினர், வாகன நெரிசல்களை முறைப்படுத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய தவறி விடுகிறது. இந்த வருடமும் இந்த நிலையே தொடர்கிறது. பிரதான சாலைகளில் நெரிசல் என மாற்று சாலைகளில் சென்றால் அதிலும் திருமணம் என பொது பாதைகளை பல பகுதிகளில் அடைத்து வைக்கப்படுகிறது. என்று முடிவுக்கு வரும் இப்பிரச்சினைகள்??
You must be logged in to post a comment.